#யானை_கொடி_ஊர்வலமும் #கொடிய_நரகமும்- வாட்ஸப்பில் வந்தது.


இன்று மேலப்பாளையத்தில் யானைக்கொடி ஊர்வலம் தெருதெருவாக வந்தவண்ணம் உள்ளன உண்மையில் இந்த யானைஊர்வலத்துக்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று  சிந்தித்தால் எமாற்றமே மிஞ்சுகிறது

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இதை வணக்கமாக ஆக்கவேஇல்லை
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_11.html

.இது அன்றைய சுயநல ஆலிம்களால் வயிற்றுப்பிளைப்பிற்க்காக உருவாக்கி கொண்டது . 

ஆனால் இது தீமை என நன்கு தெரிந்த உலமாசபை ஆலிம்கள் நம் ஊரில் இருக்கத்தான் செய்கிறார்கள்  ஆனால் அவர்கள் இந்த கொடிய பாவத்தை தவறு என்று இதைமார்கமாக நம்பிய மக்களுக்கு இது தீமை என  சொல்லி விளக்குவது இல்லை .


#இதனால்தான் கேட்கிறோம் நீங்கள் ஆலிம் படிப்பு படித்தது எதற்காக மேலப்பாளையத்தில் தோராயமாக 50 பள்ளிகள் இருக்கின்றன அங்கு ஜூம்ஆவில் இதை கண்டித்து பேசகூடாதா? ஏன்அந்த அளவிற்கா ஆற்றல் இல்லாமல் இருக்குறீர்கள். தீமையை தடுக்க முடிய வில்லைஎன்றால்  ஆலிம் தொழிலை விட்டுப்போகவேண்டியது தானேகேட்டால் பள்ளி நிர்வாகம் எங்களை பேசவிடுவது இல்லை என்று கோழைதனமாக முகநூலில் முழங்குகிறீர்கள். 

அல்லாஹுவிற்க்கு அஞ்சாமல் மனிதனுக்கு அஞ்சி மார்க்கத்தை தொழிளாக்கி கொண்டீர்கள் இனியாவது திருந்துங்கள்  தீமையை தடுத்து  அல்லாஹுவுக்கு அஞ்சி மறுமைக்கு பயந்து உண்மையை எடுத்துரையுங்கள் எற்கனவே காட்சி போருள் ஆலிம்களாக ஊரில் வளம்வருகுறீர்கள் நாளைகேளிப்பொருள் ஆலிம்களாக ஆகிவிடாதீர்கள் மக்கள் உங்களை நம்புகின்றனர் அவர்களுக்கு துரோகம் செய்துவிடாதீர்கள். வார்த்தைகளில் கடுமைகாட்டுவது நரகத்தை அஞ்சியே!

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன்  66:6 

 நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்  3:104


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.