கொடுங்கையூர் வழக்கிற்கும் பீ.ஜே.க்கும் என்ன சம்பந்தம்? நயவஞ்சகன் பிஜெ என்று காமில் சொல்வது ஏன்


1997ல் இருந்து நடந்த வந்த கொடுங்கையூர் வழக்கில் 22  ஆண்டுகளுக்குப் பிறகு 28.12.2018 வெள்ளியன்று தீர்ப்பு ஆகி உள்ளது. இதில் கொடுங்கையூர் நஸ்ருத்தீன் அவர்களும் முஹம்மது காமில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். விடுதலையான முஹம்மது காமில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில். தமிழகத்தில் நடந்த பல குண்டு வெடிப்புகள் மற்றும் கொலைகளுக்கு யார் காரணம், அதன் பின்னணியில் நடந்தவற்றை பற்றி இன்ஷாஅல்லாஹ் பகிரங்கமாக பதிவு செய்வேன். நயவஞ்சகன் பிஜெவுக்கு எதிராக (ஏன்) களமாடுகிறேன் என்றும் எழுதி உள்ளார். அதன் பின்னணி என்ன?
1997 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்க சதி.  வெடிக்குண்டுகள் தயாரிக்கும் வேலை கொடுங்கையூரில் நடக்கிறது. இதை முறியடிக்க ஒரு நாள் இரவு சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில். கொடுங்கையூர் செல்ல தயாரானார்கள்.  வெடிக்குண்டுகள் தயாரிக்கும் வீட்டிற்க்கு  செல்ல உள்ளதால் அதற்கு கொடுங்கையூர் ஆபரேஷன் என்று பெயரிட்டிருந்தார்கள்.

இந்த ஆபரேஷன் பற்றி மிக மிக ரகசியமாக வைத்திருந்தார்கள். கொடுங்கையூரை சுற்றியுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களையும் தயாராக இருக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே மாதிரி கொடுங்கையூரை சுற்றியுள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் அவசர சிகிச்சை பிரிவினரும் பெட்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உத்தர போடப்பட்டது.


ஆபரேஷனுக்கு செல்லுபவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புவார்கள் என்று தெரியாது என்ற நிலை. டக் டக் என மணித்துளிகள் நகர டிக் டிக் என இதயங்கள் துடிக்க ஆபரேஷன் நேரம் நெருங்கியது. வெடி குண்டுகள் தயாரிக்கும் வீட்டை காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்தார்கள். எளிதாக அத்தனை பேர்களையும் மடக்கிப் பிடித்தார்கள்.


அதைத் தொடர்ந்து நாளிதழ்களும் மெகாசின்களும் இதைப் பற்றியே பரபரப்பாக எழுதின, கொடுங்கையூரில் பிடிக்கப்பட்ட ஆயுதங்களை அன்று முதல்வராக இருந்த முஸ்லிம்களின் நண்பர் என்று சொல்லப்பட்ட கருணாநிதி சட்ட மன்றத்தில் உறுப்பினர்களின் பார்வைக்கு வரிசையாக வைத்தார்.  


1970களில் கருணாநிதி ஆட்சியை கலீபாக்களின் ஆட்சி என்று புகழ்ந்தவரும் 1989ல் கருணாநிதி நட்புக்காக மு.லீக்கை உடைத்தவருமான M.A. அப்துல் லத்தீப் ஸாஹிப் MLA கேட்டார். ஸ்குரு டிரைவர், கட்டுச் சோறு வைக்க பயன்படுத்தும் டிபன் பாக்ஸ், சமையல் அறையில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் சிறு கத்தி, சைக்கிள் டைனமோ இவைதான் LIC கட்டிடத்தை தகர்க்க பயன்படுத்த இருந்த ஆயுதங்களா? என்று நாக்கை பிடுங்ககுகிற மாதிரி அவருக்கே உரிய பாணியில் கர்ஜித்தார்.


இப்படிப்பட்ட பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றபட்டதை ஒட்டி பதிவு செய்யப்பட்ட வழக்குதான் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு ஆகி உள்ளது. அதை ஒட்டித்தான் முஹம்மது காமில் அவர்கள் நயவஞ்சகன் பிஜெ என்று எழுதி இருந்தார். அதற்கு நாம் எப்படி பதில் போட்டு இருந்தோம்?

ஜிஹாதை தூண்டி பேசி விட்டு ஒதுங்கிக் கொண்ட ஒவ்வொரு அயோக்கிய ஆலிம்ஸாக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழியட்டுமாக. ஆமீன். நாங்கள் ஜிகாதை சொன்னோம் உங்களுக்கு மூளை எங்கே போனது என்று கேட்ட ஆலிம்ஸா மீதும். சிறைவாசிகள் தான் பீஜேக்கு எதிராக பொய் சொன்ன பொய்யர்கள் என்று 21  ஆண்டுகளாக பேசி வந்து விட்டு இப்போது சந்தர்ப்பத்திற்காக விடுதலை கோஷமிடுபவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக ஆமீன்  என்று  எழுதி இருந்தோம்.


துபை வந்துள்ள முன்னாள் IAC தலைவர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார் அவர்களை 25.12.2018 அன்று சந்தித்தோம். அப்பொழுது தவ்ஹீதால் ஒன்றிணைவோம் என்று ஜாக் சார்பில் கூட்டங்கள் நடத்துகிறார்களே பார்த்தீர்களா? என்று கேட்டார். ஜாக்கிலிருந்து 1994ல் பீ.ஜெ.யும் அவருடனிருந்த மவுலவிகளும் ஜிஹாது செய்ய என்றுதான் ஜாக்கை விட்டு ஒதுங்கிப் போனார்கள் என்ற உண்மையை கமாலுத்தீன் மதனி போட்டு உடைக்காமல் அரசியலுக்காக போனார்கள் என்று மூடி மறைத்துப் பேசுகிறார். ஜிஹாது செய்ய என போனார்கள் என்ற  உண்மையை சொல்லாதவரை தவ்ஹீதால் ஒன்றிணைவோம் என்பது எடுபடாது என்றேன்.


ஆக ஜிஹாது செய்யப் போவதாகக் கூறி பீ.ஜே. தலைமையில் ஜாக்கிலிருந்து ஒதுங்கிப் போன லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற கோழை மவுலவிகளுக்கு ஆபத்து என்று வந்ததும் அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர்களை காட்டிக் கொடுத்து மாட்டி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். 


ஒப்படைக்க முடிந்த வல்லநாடு மேலப்பாளையம் என்றிருந்த (மதுரை ராஜா உசேன் போன்ற) கிதாபுகளை ஒப்படைத்தார்கள். ஒப்படைக்க முடியாத கிதாபுகள் இருக்கும் ராஜ முந்திரி போன்ற இடத்தைக் காட்டி எடுத்துக் கொண்டு போக வைத்தார்கள். அதில் ஒன்றுதான் கொடுங்கையூர்.


அங்கு தங்கி இருந்தவர்களில் மாயாவி நாகூர் அபுபக்கர் சித்தீக்கை த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபா காப்பாற்றி விட்டார் எப்படி? 

குணங்குடி ஹனீபா வீட்டிற்கு அருகில் தான் இந்த வீடு இருந்தது. மாயாவி நாகூர் அபுபக்கர் சித்தீக் குணங்குடி ஹனீபா அவர்கள் சைக்கிளுடன் நிற்பதைப் பார்க்கிறார். ஆஹா ஜெயலலிதாவிடம் 2 லாரியும் ப்ளஸ் டூ கூட படிக்காத (மைதீன் ரஸாக், சுல்தான் ஆகிய) 2 பையன்களுக்கு டாக்டர் சீட்டும் பெற்றவர் இவர் என்று சொன்னார்களே!. இவர் நம்மை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று எண்ணி அங்கிருந்து கிளம்பி லெப்பைக்குடிக்காடு, இளையான்குடி என போய் துபை வந்து விட்டார்.


மேலப்பாளையம் புகாரி என்பவர் TNTJ தாஇ காஜா என்பவர் மூலம் என்னிடம் விஸா பெற்று அவரும் துபை வந்து விட்டார். பின்னாளில் அவரது தாய்மாமாமார்களின் நண்பரான IB அதிகாரி மூலம் இந்த மாதிரி வழக்கிலிருந்து விடுபட்டார்.  


பல இடங்களில் தலைமறைவாக தங்கி இருந்தவர்களை ஒரே இடத்தில் கொடுங்கையூரில் வந்து தங்கி விடும்படி பீ.ஜே. சொல்கிறார். இதில் பீ.ஜே. மீது பக்தி இல்லாதவர்கள் சிந்திக்கிறார்கள். 

பல இடங்களில் இருக்கும் போது ஏதாவது ஒரு இடம் பிடிபட்டால் அந்த ஒரு இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே பிடிபடுவார்கள். ஒரே இடத்தில் கொடுங்கையூரில் வந்து தங்கி விடும்படி பீ.ஜே. சொல்வதில் சதி இருக்குமோ என்று சிந்தித்து கொடுங்கையூரில் அசெம்பள் ஆகாமல் இருந்து விடுகிறார்கள். 

கொடுங்கையூரில் இருந்தவர்களில் சிந்தித்த சிலரும் வெளியேறி விடுகிறார்கள். ஆகவே தவ்ஹீது விபார ஆலிம்களின் சதியிலிருந்து இவர்கள் தப்பி விட்டார்கள்.


பி.ஜே. மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் கொடுங்கையூரிலேயே இருந்து மாட்டிக் கொள்கிறார்கள்.  நயவஞ்சகன் பிஜெ என்று காமில் போன்றவர்கள் எழுதுவதற்கு இது போன்ற சம்பவங்களே காரணம். 


சிறைவாசிகள் பீ.ஜே.யை மாட்டி விட நினைத்தார்கள். நபிமார்களை பாதுகாத்தது போல் பீ.ஜே.யை அல்லாஹ் பாதுகாத்தான். இப்படியாக மைசூர் தர்பியா உட்பட பல நிகழ்ச்சிகளில் பேசிய கூலிக்கு மாரடிக்க வந்த தவ்ஹீது மவுலவிகள்தான் பீ.ஜெ.யின் பின்னால் இருந்து காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தில் துாபம் போட்ட சண்டாளப்பாவிகள் என்பது காமில் போன்றவர்களுக்குத் தெரியாது.

ஆகவே அவர்கள் மனக்குமுறல் பீ.ஜே.க்கு எதிராக மட்டுமே இருக்கும். அவர்கள் பீ.ஜே.க்கு எதிராக மட்டுமே துஆச் செய்தாலும் அந்த துஆவின் தாக்கமும் பாதிப்பும் அத்தனை கள்ள தவ்ஹீது மவுலவிகளின் மீதும் இறங்கும் இறங்க வேண்டும். 

பீ.ஜே.யை வைத்து வருமானம் பார்க்கலாம் என்றிருந்தவரை அவரை கெடுத்து குட்டிச் சுவராக்கிய டாபர் மாமாக்களான அத்தனை பிராடு தவ்ஹீது வியாபார மவுலவிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! ஆமீன்.

பீ.ஜே.க்காக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன ஒவ்வொரு தவ்ஹீது வியாபார மவுலவிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக ஆமீன்.



https://www.youtube.com/watch?v=59iKZ3Fzoas&feature=youtu.be&fbclid=IwAR1J_eRWCr_6rd_fj_L1gtWguvLt3RciZOryWsFIyRW23x2en6dTBkH_Ogo

சென்னை கொடுங்கையூரில் 1997 ஆம் ஆண்டு வீட்டில் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்கு தீர்ப்பு.


வழக்கை விசாரித்த வெடிகுண்டு வாழ்க்கை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம்  குற்றசாட்டப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு 5 ஆண்டு சிறை.2 பேர் விடுதலை செய்து உத்தரவு.


கைது செய்யப்பட்ட 

1. முகமது காண் @சிராஜுதீன்
2. சாகுல் அமித் @அப்தர்
3. ராஜா ஹுசைன் @ சைபுல்லா
4. சாகிர் ஹுசைன் @ இஸ்மாயில்
5. அப்துல் அஜிஸ்
6. காஜா நிஜமுதீன் @உமர்
7. சயீத் இப்ராஹிம் @ மசூட்
8. ஷெய்க் மொய்தீன் @நஜிருதீன்
9. முஹம்மது காமில்
ஆகிய 9 பேரில் ஷேய்க் மொய்தீன், முகமது காமில் ஆகிய இருவர் விடுதலை.

குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேரும் இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு மேல் முன்பே சிறையில் இருந்ததால் சிறையில் அடைக்க வேண்டாம் என  நீதிபதி செந்தூர் பாண்டியன் உத்தரவு.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.