மேலப்பாளையம் பாஷா கான் போன்றவர்களை என்ன செய்ய வேண்டும்?

மன்னிப்புக் கேட்ட பாஷா கானை  மன்னிக்கலாமா? இறைமறையும் நபி வழியும் என்ன கூறுகின்றன?

அல்லாஹ்வின் துாதரை இழிவுபடுத்திய  பாஷா கானை கைது செய்யாத போலீஸ். முற்றுகையிட்ட ஒருவரின் மனைவியை பிடித்து கொண்டு போய் விட்டது. இப்படி ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. 

நாம்  சென்னையில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு கேட்டோம். விசாரித்து சொல்வதாக சொன்ன அவர். அது உண்மை இல்லை என்றார்  

அவர் மனைவியிடம் இருந்த செல் போனை மட்டும் வாங்கிச் சென்றதாக அறிந்தோம்.  குறிப்பிட்டவரின் மனைவியை போலீஸ் பிடிக்கவில்லை என்று  மேலப்பாளையத்திலும் உறுதி செய்து  கொண்டோம்.


15 பேர் மீது வழக்கு என்று 20 -07-2020  நாளிதழ்களில் செய்தி வந்தது. நாம் விசாரித்ததில் அன்றைய (20 -07-20) தேதி வரை யார் மீதும் FIR  போடவில்லை என்றார்கள்.  இப்படித்தான் செய்திகள் உள்ளன.

அல்லாஹ்வின் துாதரை இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சிக்காரன்  மேலப்பாளையம் செல்வக்காதர் தெரு பாஷா கான்   மன்னிப்புக் கேட்டு விட்டான் என்று பதிவு போட்டேன்.  இதற்கு பதில் அளித்தவர்கள்

18/07, 10:28 pm] ..... எல்லாம் பதிவிட்டுட்டு  மன்னிப்புக் கேட்டால் சரியாகிவிடுமா? கை கால் ஒன்னு எடுத்தால் தான்  மத்தவனுக்கும் ஓர் படிப்பினை வரும்.  என்று ஒருவர் போட்டு இருந்தார்.

அவன் மன்னிப்பை ஏற்க வேண்டியதில்லை.  அவனிடம் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்த கள்ளிச் செடியை ஆரம்ப கட்டத்திலே புடுங்கி எறிந்து விடவேண்டும். இவ்வாறாக ஒவ்வொருவரும் அவரவர் உணர்வு ரீதியான  கருத்தை வெளியிட்டனர். 

[19/07, 9:22 am] +91 70924 60194: இவ்வுலகில் தண்டனை கிடைக்கவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் இவரை தண்டிப்பான் 😡😡😡




[19/07, 10:05 am] +91 70924 60194: இன்று இவன் பேசிட்டு மன்னிப்பு கேக்குறான் நாளைக்கு வேற ஒருத்தன் பேசுவான் மன்னிப்பு கேப்பான் இப்படியே எல்லோரும் பேசுவார்கள்...


[19/07, 11:27 pm] +91 70924 60194: இவன் நல்லவன் இவன் தகப்பன் அதுக்கும் மேல் ஊரில் உள்ள எல்லோரையும் அநியாயமாக பேசுனிர்கள்... இவன் பொண்டாடியோட வாழ்த் தெரியாதவன் முதல் பொண்டாடிய தலாக் செய்தவன் இந்த நாய் என் தூதரை அவதூறாக பேசுகிறான்...

[19/07, 11:30 pm] +91 70924 60194: இந்த நாயின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்க வேண்டும் ஊர் ஜமாத்தார்களுக்கும் ஊர் மக்களுக்கும் வேண்டுகோள்.


[20/07, 5:51 am] +91 85080 30006: *பேசிவிட்டு யோசிப்பதை விட யோசித்துவிட்டுப் பேசுங்கள்..!*
*வாழ்க்கையில் ஏற்படும் அநாவசியமான பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளியாய் அது அமையும்*

 ஏரல் மகபூப்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நம்மவர் ஒருவர் நாம் தமிழ் கட்சியில் இருக்காரம் ஒரிருநாளுக்கு முன் நபியவர்களை விமர்சித்து முகநூலில் பதிவிட்டார் அதை கண்டித்து அவர் வீட்டை முற்றுகையிட்டதால் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என பதிவுகள் வந்தவண்ணம் இருக்கிறது அவர் மீண்டும் கலங்கப்படுத்த மாட்டாா் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை #மா்ஹூம்_அபுல்_ஹஸன் ஷாதலி  #ஸலாஹூதீன்_ரியாஜி ஆகியவர்கள் 1991ல் பீ.ஜே.யை வெட்ட  முறையிட்டனர். வரலாறு திரும்பும் in shaa allah  Kottur kaleel - Abdul hameed


இந்த மாதிரி உணர்ச்சிகள் ஏற்படத்தான் செய்யும். நாம்  உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடக் கூடாது.   நமக்கு வழி காட்டி அல்லாஹ்வின் துாதர் முஹம்மது  நபி(ஸல்) அவர்கள்  தான்.

என்ன தான் உணர்ச்சி பொங்கினாலும் இந்த மாதிரி  விஷயங்களில் இறைவனின்  துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளை இட்டுள்ளான்? இறைத் துாதர்  எப்படி நடந்து கொண்டார்கள் என்று தான் பார்க்க வேண்டும்.

இறைமறையும் இறைத்  துாதது அளித்த   தீர்ப்பே  இறுதியானது. அந்த வழியிலேயே நாம் நடக்க வேண்டும்.

அல்லாஹ்வின் துாதரை இழிவுபடுத்தியவர்களை போட்டுத் தள்ள வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ் சொல்வதாக அந்த ஆலிம்ஸா சொன்னார் இந்த ஆலிம்ஸா சொன்னார் என்ற வதந்திகளும் பரவி உள்ளன. அரைகுறைகள் சொல்லலாம்   ஆலிம்கள்  இப்படி சொல்லவே  மாட்டார்கள்.

அல்லாஹ்வின் துாதர் காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக போர்க் களத்துக்கு வந்தவர்கள் யார்? கடும் எதிரிகள். அந்த எதிரிகள்  நோக்கம் என்ன?

இஸ்லாத்தை அழிக்க வேண்டும்.  அல்லாஹ்வின் துாதரையும் அவரது தோழர்களையும் கொன்று சாய்க்க வேண்டும்.  இதுதானே.

அவர்களை கொல்ல வந்தவர்  போர்க் களத்தில் கழுத்துக்கு நேராக வாள் வந்ததும்  கலீமா சொல்லி விடுகிறார். ஆனால் அவர் கொல்லப்பட்டு விடுகிறார்  இதை அறிந்த அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அதை கடுமையாகக் கண்டித்தார்கள்.

மரணத்திற்கு பயந்துதான் கலிமா சொன்னார் என்றார்கள்.  அதற்கு நீ  அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தாயா என்று கேட்ட சம்பவங்கள் உண்டு.  இதைத்தான்  உண்மை  ஆலிம்கள்  சொல்லி  இருப்பார்கள்.

ஒரு போர்க் களத்தில் ‘ஸபஃனா, ஸபஃனா’ - மாறி விட்டோம்.  மாறிவிட்டோம்” என்று சொன்னவர்களில்  சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் செய்தார்கள்.

இதை அறிந்த  இறைத்த துாதர் முஹம்மது   நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி‘இறைவா! இன்னவர் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை கூறினார்கள்.   புஹாரி  


இன்னொரு போர்க் களத்தில் ‘அல்லாஹ்வின் தூதரே ஆயுதத்துக்குப் பயந்துதான் கலிமா சொன்னார்.’ என்று கூறியதற்கு நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான்  கூறினார்  என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’  என்று கூறினார்கள்……………’  (முஸ்லிம்)  இதுதான் கருணை நபி  காட்டிய வழி.

ஏக இறைவனின் துாதர்  முஹம்மது   நபி(ஸல்)  அவர்களது கால் துாசிக்கு  சமம் ஆவோமா நாம்? அவர்கள் அளித்த தீர்ப்புகளுக்கு மாற்றமாக தீர்ப்பு கூறவும் செயல்படவும்.  நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டால் அவனை கொலை  செய்து விட வேண்டும்.  இப்படி  குர்ஆன் ஹதீஸ் சொல்வதாக  தப்பான இந்தக் கருத்தை  நீண்ட நெடுங்காலமாக  சொல்லி வருகிறார்கள். குர்ஆனை படிக்காமல் குப்பைகளை படித்து  பரப்பும் இந்த பொய்யர்களுக்கு   4:137. வசனம் கொடுக்கும் செருப்படியை பாருங்கள்.


.ஈமான் (நம்பிக்கை) கொண்டு, பின்னர் காபிராகி (மறுத்து), 

.பிறகு ஈமான் (நம்பிக்கை)  கொண்டு, பின்னர் (நிராகரித்து) காபிராகி

பிறகு  காபிராவதையே (நிராகரிப்பையே)  அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

ஒரு முறை காபிராகி விட்டாலே கொலை செய்து விட வேண்டும் என்று இஸ்லாம் சொல்வதாக  சொல்பவர்கள்  மகா பொய்யர்கள் என்பதற்கு இந்த வசனம்  ஆதாரமாக உள்ளது. ஒரு முறை அல்ல தும்ம கபரூ தும்ம ஆமனுா  எத்தனை  முறை வருகிறது பாருங்கள்.

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا

மூன்று முறை    (நிராகரித்து) காபிராகி விட்டவனை  கொலை செய்ய சொல்லி ஒரு வார்த்தை உள்ளதா? 

முபாரக் அலி, பாஷா கான்கள் மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் உருவாக யார் காரணம்? என்ன காரணம்? அதையும் சிந்திக்க வேண்டும்.

நாத்திகத் தலைவர்களை  தேவை இல்லாமல் அளவுக்கு அதிகமாகப் புகழோ புகழ் என புகழ்ந்து. குர்ஆன் ஹதீஸ்களைப் பேசாமல் அவர்களைப் பற்றியே  பேசித் திரிந்து அவர்கள் பற்றிய இமேஜை முஸ்லிம் இளைஞர்கள் மண்டையில் ஏற்றியது ஒரு காரணம். இதை செய்தவர்கள் முஸ்லிம் பிரமுகர்கள்தான். இனியாவது  அவர்கள் சிந்திப்பார்களா?

அறிவுப்பூர்வமான உண்மை இஸ்லாத்தைக்  கூறாமல் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம் மூட நம்பிக்கைகள் உடையதாக இருந்தது இன்னொரு  காரணம். 

இஸ்லாத்தின் பெயரால்  உள்ள கட்டுக் கதைகளை கபுருக்குள்  அனுப்புங்கள். முடை நாற்றமடிக்கும் மூடப் பழக்க வழக்கங்களை விட்டொழியுங்கள். முபாரக் அலி, பாஷா கான்கள் மாதிரியானவர்கள் உருவாக மாட்டார்கள்.









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.