மஹ்ழரிகள் புரிந்ததோடு சும்மா இருந்தார்களா?

இலங்கை மவுலவி எனது பேச்சு புரியவில்லை என்று கூறி உள்ளார். ஆகவே அவருக்கான பதிலை எழுத்து மூலம் தருகிறேன். 

இரு அறிஞர்கள் இருவேறு கருத்துக்கள் சொல்வது தப்பு இல்லை. மாறுபட்ட இரண்டு கருத்துக்களையும் கேட்பதும் தப்பு என்று சொல்ல முடியாது. ஆரோக்கியமானதுதான். 

இலங்கை மவுலவி சொன்ன மாதிரி அரிதான ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வந்து விட்டது  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பிரச்சனையான  அந்த விஷயத்தில்  நமக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 


அப்போது  இலங்கை மவுலவியும் அவரது கருத்தை ஆதரிப்பவர்கள் சொல்படியும் பார்த்தால் நாம் உடனே ஒரு  முடிவுக்கு வந்து விடக் கூடாது. தீர்ப்பு சொல்லி விடக் கூடாது.

இவர்கள் சொல்படி மூமின்களுடைய வழியை தேடிப் போக வேண்டும். அவர்கள் இந்த விஷயத்தில் எந்த மாதிரி பயணம் செய்து இருக்கிறார்கள். என்று தேடிப் பார்த்து கண்டு பிடிக்க வேண்டும். பிறகு அதையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

ஒப்பீடு செய்து பார்த்தால், அவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக சொல்லி இருந்தாலும் அந்த வழியை நாம் பின் பற்ற வேண்டும்  என்கிறார்களா?  அல்லது மாற்றமே வராது என்கிறார்களா?

அறிஞர்களில் மூமினானவர்கள் யார் என்று எப்படி தேடி அடையாளம் காண்கிறார்கள்? அவர்களுக்கு என்று ஒரு சில தோற்றங்கள் வெளிப்புற அடையாளங்கள்  என்று நிர்ணயித்து இவர்கள் முடிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.  அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்பார்கள்.

பிரச்சனையான விஷயத்தில் மூமின்களுடைய வழியை தேடிப் பார்த்துதான் அவர்கள் கருத்தை தெரிந்து கொண்டுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று இருந்தால். 

மாலிக் இமாமுடைய கருத்தை அபு ஹனீபா அப்படியே ஏற்று இருக்க வேண்டும். அவருடைய கருத்துக்கு மாறுபட்டு இருக்கக் கூடாது.


அபு ஹனீபா  உடைய கருத்துக்கு மாற்றமாக  ஷாபி கருத்து சொல்லி இருக்கக் கூடாது.

ஷாபி  உடைய கருத்துக்கு மாற்றமாக  ஹன்பலி கருத்து சொல்லி இருக்கக் கூடாது.

ஏனெனில்  ஹன்பலிக்கு  முந்தைய நல்ல மூமின் யார் என்றால் ஷாபி.  அவர் வழியில் போய் அவர் கருத்தை ஒப்புக் கொண்டு  மாற்றுக் கருத்து சொல்லாமல் போய் இருக்க வேண்டியதுதானே.

அதே மாதிரி ஷாபி, அதே மாதிரி ஹனபி என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதானே. அவர்கள் ஏன் முன் சென்ற மூமின்களான இமாம்களுக்கு அவர்கள், உஸ்தாதாக இருந்தவர்களுக்கு  மாற்று கருத்து சொன்னார்கள்?

சுயமாக சிந்தித்து ஆய்ந்து முடிவு எடுக்க முடியாதவர்களெல்லாம். தெளிவாக சொல்வது என்றால் அறிவு ஆற்றல் இல்லாதவர்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். என்ன முடிவு? 

இஜ்திஹாத் - சிந்திக்கிற வாசல் அடைக்கப்பட்டு விட்டது என்று ஏகோபித்த  (இஜ்மா) முடிவுக்கு வந்தார்கள். ஏன்?

சுயமாக சிந்திக்கிற அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. நேரம் இருந்தாலும் சோம்பேறித்தனம் மிகைத்து இருந்தது. சும்மா இருந்தாலும் கைக்கு இரண்டு தலையணை இல்லாமல் இருக்க முடியாது. இதுதான் கண் கண்ட  காரணம்.

சோம்பேறித்தனம் இருந்தது என்றால் கோபித்துக் கொள்வார்கள். இது கடுமையான விமர்சனம் என்று எண்ணினால். அவர்களுக்கு வேறு வேறு வேலைகள் இருந்தது என்று மாற்றி படித்துக் கொள்ளுங்கள்.

வேறு வேறு வேலைகளில் அவர்கள் கவனத்தை செலுத்தி அதில் ஈடபாடுடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் இஜ்திஹாத் - சிந்திக்கிற விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஆராய்வதற்கு அவகாசம் இல்லை.

அதனால் முன்னால் ஒருத்தர்  சொன்னதை பின்பற்றி விட்டு போகிறோம் என்று சொன்னால் அது ஈசியாக முடிந்து விடும். என்று இருந்து விட்டார்கள்.

இந்த அடியோவை நமக்கு அனுப்பியவர் கூட நீங்கள் இன்னும் நன்கு சிந்தியுங்கள் என்று பொறுப்பை எமது தலையில் தான் வைத்துள்ளார்.
வயத்தபிஃ   ஃகைர ஸபீலில் மூமினீன
وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْ

இந்த வார்த்தைக்கு இரு பொருள் கொள்ள இடம் இருக்கிறது.  அப்படியானால் அதை அறிந்து தெளிவு பெற்று சரியானதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால். அரபு மொழி ஞானம் வேண்டும்.  அரபு மொழி இலக்கணம்  படித்து இருக்க வேண்டும்.  அரபு மொழிக்கு  அர்த்தம்  தெரிந்து இருக்க வேண்டும்.

ஸபீலில் மூமினீன என்பதற்கு மூமின்கள் சென்ற வழி அல்லது மூமின்கள் கடைபிடிக்க வேண்டிய வழி. இப்படி இரண்டு விதமாகவும் அதற்கு பொருள் கொள்ள முடியும்.

முந்தைய பொருள் கொடுத்தால் அது சரிபட்டு வராது மூமின்கள்  யார் என்று தேடி பிடிப்பதும் கண்டு பிடிப்பதும் மகா கஷ்டம் மிக மிக சிரமம்.

இவர்களை தேடி பிடிப்பதை விட குர்ஆன் கையில் உள்ளது. அதன் வசனங்களும் உள்ளங்கை நெல்லிக் கனியாக உள்ளன.

அந்தக் குர்ஆனில் உள்ள மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டாவது பொருளான மூமின்கள் செல்ல வேண்டிய வழி - மூமின்கள் கடைபிடிக்க வேண்டிய வழி.  என்று பொருள் கொடுப்பதுதான் சரியானது என்று தெளிவாகிறது.

குர்ஆனில் உள்ள மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் விளக்கத்தை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால். சுயமாக அரபு மொழி ஞானம் வேண்டும்.  அரபு மொழி இலக்கணம்  படித்து இருக்க வேண்டும்.  அரபு மொழிக்கு  அர்த்தம்  தெரிந்து இருக்க வேண்டும். அல்லது  படித்தவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அருள் வேண்டும்.

மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது  (2 ;93)என்பதுபோல் ஆகி விடக் கூடாது.

முஃமினீன்கள் என்று நம்பப்பட்டவர்கள் பாதையில் போய் தான். அவர்கள் எழுதிய எல்லா வகையான கிதாபுகளை பிடித்து தொங்கியதால் தான் பெரும்பாலான மவுலவிகள் ஷிர்க்குக்கும் பித்அத்துக்கும் வக்காலத்து வாங்கினார்கள், வக்காலத்து வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஏழு வருஷமும் காயல் பட்டிணம் மஹ்ழராவிலேயே ஓதி ஒட்டு மொத்த ஷிர்க்குக்கும் ஏஜெண்ட் எடுத்து மேலப்பாளையத்தில் கூட்டங்களும் மாநாடுகளும் போட்டார்கள். 

அவர்கள் இதோ எங்கள் உஸ்தாது பெருந்தகைகள். காயல் பட்டிணம் மஹ்ழரா வார்த்தெடுத்த ஸபீலில் முஃமினீன்கள்  என்று அவர்களை கொண்டு வந்து தப்லீக்காரர்களை திட்டோ திட்டு என்று திட்டி. வஹ்ஹாபிகள் என்று வசைபாடி சவால் விட்டார்கள்.
பருமனான - தடி தடியான பெரும் பெரும் கிதாபுகளை மேடையில் கொண்டு வந்து அடுக்கி வைத்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். வாங்கடா வந்து பாருங்கடா என்றார்கள். ஒரு பயலும் இல்லையா என்றார்கள். 

அல்லாஹ் ஸபீலில் முஃமினீன் என்று கூறி உள்ள நமது முன்னோர்கள் நமக்கு வழி காட்டி எழுதிய கிதாபுகள் ஆதாரங்களாக உள்ளன. வாருங்கள் என்றார்கள். எதற்கு? தெளிவான ஷிர்க்குக்கு வக்காலத்து வாங்கினார்கள். எப்படி? 

கபுருகளை முத்தமிடலாம், கபுருகளில் தொங்க விடப்பட்ட கொடிகளை முத்தமிடலாம்,  ஜண்டா கொடி, சந்தனக் கூடு ஊர்வலங்கள் நடத்தலாம். கொடி மரங்கள் பாய் மரங்கள் நடலாம்.  
லாம் லாம் என்று மட்டுமல்ல சுன்னத் என்றும் மேடை போட்டுப் பேசினார்கள். அடித்துப் பேசினார்கள். யாரும் பதில் சொல்ல முன் வரவில்லை. ஏன்?  

முஃமினீன் சென்ற பாதையில் எழுதப்பட்ட பரும் பரும் கிதாபுகளில் ஆதாரம் இருக்கிறது.
இப்படிப்பட்ட மஹ்ழரிகளில் ஏழு ஆண்டுகள் மஹ்ழரா போன்றவற்றில் ஓதியவர்களில் அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை கொடுக்க நாடினானோ? அவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுத்தான்.
எப்பொழுது ஹிதாயத்தை கொடுத்தான்? அவர்களது ஆசிரியர்களான மஹ்ழரா முதல்வர் ஸாஹிபு தம்பி போன்றவர்கள் ஒரு தரப்பிலும் பீ.ஜே. ஒரு தரப்பாகவும் இருந்து நாகர்கோயில் கோட்டாறு என்ற ஊரில்  மூன்று முனாழரா நடத்தினார்கள். வஸீலா.முனாழரா முதல் தலைப்பு 
வஸீலா ஆட்களை முன்னிறுத்தி கேட்கலாமா? 

அமல்களை முன்னிறுத்தி கேட்கலாமா? என்பதுதான் விவாதம்.
மஹ்ழரிகள் போன்றவர்களை வார்த்தெடுத்த உஸ்தாதுமார்கள் அணி ஆட்களை முன்னிறுத்தி கேட்கலாம் என்று வாதம் வைத்தார்கள். அதற்கு எதிராக அது கூடாது என்று பீ.ஜே.அணியினர் வாதம் வைத்தார்கள்.
அந்த விவாதம் நுால் வடிவில் வந்த பிறகுதான் மஹ்ழரா உஸ்தாதுமார்கள் முஃமினீன் சென்ற பாதையில் என்று வைத்த வாதங்களில் ஒரு ஆதாரமும் இல்லை. 

தெளிவு இல்லை. அவர்கள் கூறுவது குர்ஆன்,ஹதீஸ்களில் இல்லை. அவர்கள் தடுமாறுகிறார்கள் என்று அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை கொடுக்க நாடினானோ? அவர்கள் புரிந்தார்கள்.
அவர்கள் புரிந்ததோடு சும்மா இருந்தார்களா? ஸபீலில் முஃமினீன்களின் பாதை என்றால் சும்மாவா? ஒரு வேளை சபையில் சொல்ல முடியாமல் ஸபீலில் முஃமினீன்கள் சொன்னவை விடுபட்டு போய் இருக்கலாம். ஞாபகத்துக்கு வராமல் போய் இருக்கலாம் என்று நல் எண்ணம் வைத்து காயல்பட்டணம் மஹ்ழரா உஸ்தாதுமார்களுக்கு கடிதம் அனுப்பினார்கள்.
அன்று ஜமாஅத்துல் உலமா தலைவராக இருந்த ஷம்சுல் ஹுதா, கலீல் றஹ்மான் ரியாஜி, அபுல்ஹஸன் ஷாதலி என அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பினார்கள். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. இவர்கள் அனைவரும் அன்று ஸபீலில் முஃமினீன்கள் சென்ற பாதை என்று சொன்னவர்கள் தான்.
இவர்கள் யாரிடமிருந்தும் பதில் வராத நிலையில்தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நாம் இவ்வளவு நாட்களாக ஸபீலில் முஃமினீன்கள் சென்ற பாதை என்று சொல்லிக் கொண்டு இருந்தது பித்தலாட்டம். அது சரி இல்லை. மார்க்கம் இல்லை. மார்க்கத்துக்கு முரண் என்று. அல்லாஹ் யாருக்கு ஹிதாயத் கொடுக்க நாடினானோ அவர்கள் அல்லாஹ் அருளால் விளக்கம் பெற்றார்கள்.

எதில் சத்தியம் என்ற குழுமத்தில் இருந்து விடை பெற்ற மவுலவி உரை வரப் பெற்றேன். இவர் கூறும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅ உலமாக்கள் என்பவர்கள் யார்? யார்? இவர் எந்த எந்த கருத்து முரண்பாடான விஷயங்களில் இவர்களிடமிருந்து என்ன தெளிவு பெற்றார்? என்பதில் ஒன்றைக் கூட ஆதாரத்துக்காக தரவில்லை. அவர் கூறிய “இல்மை” உடையவர்கள் யார்? என்றும் அவர் சொல்லவில்லை. 

அவரது உரையை பலருக்கும் அனுப்பினேன். பீ.ஜே.க்கும் அனுப்பினேன். மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பு பீ.ஜேயிடம் இருந்து பதிலாக .வந்தது. அதை நான் படிக்கவே இல்லை.  காரணம்.  

1988ல் மேலப்பாளையம் அன்னபூர்ணா கல்யாண மண்டபத்தில் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்படும் மத்ஹபு சட்டங்கள்  என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. அப்பொழுது  4:115 ஆம் வசனத்தை படித்துக் காட்டி. இந்த வசனத்தில் குர்ஆன் கூறி உள்ள  ஸபீலில் மூமினீன் நான்கு இமாம்களே என்று அ.தி.மு.க. மவுலவி நரவன் மீரான் மைதீன் மன்பஈ என்பவர் கூறினார்.

அப்பொழுது அதற்கு சரியான  விரிவான விளக்கம் கொடுத்தார் பீ.ஜே.  அதுதான் இதில் இருக்கும் என்று நான் படிக்கவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பினேன். படித்தவர்களில் Short and sweet விளக்கம் . அருமையாகவும் எளிதாகவும் புரிகிறது என்று பதில் தந்தவர்களும் உண்டு.


இந்த மவுலவி என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. சொல்கிற அவருக்காவது புரிந்ததா? தெரியவில்லை என்று இலங்கை மவுலவி பேச்சுக்கு பதில் தந்தவர்களும் உண்டு.


உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.