தண்டனைக்கு காரணம் விவகாரக் காமிலா? வெடிக்காத குண்டா?


பிற மத சகோதரர்கள் உட்பட 22 பேர் கொண்ட வெடிக்காத குண்டு வழக்கை இழுத்தடித்தவர்கள் யார்?

காமிலோடு சிறையில்  இருந்த முஸ்லிம் சிறைவாசிகளுக்கு காமிலால் ஏற்பட்ட நன்மைகள் யாவை?

 சிறைவாசிகளின் எதிரி யார்? 

பாய் டீம் பீ.ஜே. டீம் பற்றி விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆன காமிலுக்கு  என்ன தெரியும்?

காமில்    யார்? 

காமில் ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் சவால் என்ன தெரியுமா?

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_11.html

காமில் தனது மோசடி வழக்குகளை மறைத்தார். ஆம் காமில் ஜட்டியுடன் ரிமாண்டான விஸா மோசடி வழக்கை முழுமையாக மறைத்தாார்.  காமிலே மாட்டி விட்டு பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த வெடிக்காத குண்டு  வழக்கையும் மறைத்தார்.  

கொடுங்கையூர் வழக்கு மட்டுமே காமில் மீது இருந்தது போல் மாயையை ஏற்படுத்திக் கொண்டு அதில் காட்டிக் கொடுத்ததாகவும் உளறித் திரிந்தார். 

ராயபுரம் முஹம்மது சாதிக் அவர்கள் காமிலை ஜிகாத் காமில் என்கிறீர்கள். காமில் தன்னை ஜிகாத் காமில் என்று சொல்லவில்லை. ஜிகாத் கமிட்டி காமில் என்று தான் சொல்லி வருகிறார் என்றார் என்னிடம்.

காமில் ஜிஹாதெல்லாம் செய்யவில்லை என்ற வாதப்படி ஜிஹாது செய்யாத, ஜிஹாது  சிந்தனையே இல்லாத காமில் என்ன செய்து வெடிக்காத குண்டு வழக்கில் கைதானார்?  போலீஸின் செட்டப்பா?
காமில் தனது சட்டை இல்லா போராட்டம் பற்றி எழுதி இருந்தார். காமிலுடைய வெடிக்காத குண்டு வழக்கு பற்றி தெரியாதவர்கள், மறந்தவர்கள் காமில் சொல்லித் திரிந்த கொடுங்கையூர் வழக்கு என்றே எண்ணி இருப்பார்கள்.

ராயபுரம் முஹம்மது சாதிக் அவர்கள் எனக்கு அனுப்பித் தந்த பதிவில் உள்ள காமிலின் வாக்கு மூலம் பார்த்து இருக்கிறீர்கள். இணைப்பில் உள்ளது. மீண்டும் படித்துக் கொள்ளுங்கள். அதில் அவர் வெடிக்காத குண்டு வழக்கு என்று கூறி இருக்க மாட்டார். ஆனால் அது வெடிக்காத குண்டு வழக்குதான்.

அந்த (வெடிக்காத குண்டு) வழக்கை அரசும் புலனாய்வுத்துறையும் தான் ஐந்து ஆண்டுகள் இழுத்தடித்தன என்று காமிலே முதலில்  ஒப்புக் கொள்கிறார். 

பிறகு வழக்கில் உண்மையாக தொடர்பில் இருப்பவர்கள் தான் வழக்கை நடத்தவிடாமல் ..... தடுத்தவர்கள் என்று சக சிறைவாசிகள் மீது குற்றம் கூறி காமிலுக்கு காமிலே முரண்பட்டுள்ளார். இதன் மூலம்  காமில்  பொய்யர் என்று     காமில்தான்  உறுபடுத்தி உள்ளார்.

அரசு பிணை வழங்காமல், புலனாய்வுத்துறை வழக்கை நடத்தாமல் ஐந்தாண்டுகளுக்கு மேல் இழுத்தடித்த நிலையில் என்ற உண்மையை காமில் தான் கூறி உள்ளார். 

காமிலின் இந்தக் கூற்றுப்படி. அந்த ஜந்தாண்டுகள் உடம்பின் ஒன்பது ஓட்டைகளையும் பொத்திக் கொண்டு இருந்தவர் தானே காமில்? இப்பொழுது அந்த வழக்கை அதில் இருந்தவர்கள் இழுத்தார்கள் என்று சொல்லி உள்ளார். 

இதிலிருந்து காமில் யார்? முஸ்லிம் சிறைவாசிகளின் எதிரி யார்? என்று அறிவுள்ளவர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள்.

பிற மத சகோதரர்கள் இருவர் உட்பட நெல்லை, நாகை, கோவை, சென்னை என 22 பேர் கொண்டது வெடிக்காத குண்டு வழக்கு. 

தாழையூத்தைச் சேர்ந்த மூன்று பேர். கோவையை சேர்ந்த இருவர். ஆக ஐவர்  வழக்கை இவர்களோடு சேர்ந்து நடத்தாமல் இப்போது வரை பெண்டிங்கில் தான் வைத்திருக்கிறார்கள். வாய்தாவுக்கு போய் வருகிறார்கள்.


மீதி 17 பேரில் பலரும் 5 சிறைகளில் பிரித்து வைத்திருந்த நிலை. ஒரே நேரத்தில் சிறப்பு நீதிமன்றம். பூந்தமல்லி நீதிமன்றம். என பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. பல ஊர் சிறைகளில் இருந்தவர்கள் ஒன்று சேர்வதில் சிரமங்கள் இருந்தன. 

சென்னை, திருச்சி, கோவை என மூன்று இடங்களில் வெடிக்காத குண்டு வழக்கு நடந்தது. பிறகு அது ஒரே வழக்காக ஆனது. 

ஒரே நேரத்தில் பல வழக்கை நடத்தி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வழக்கை கவனமா நடத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்ற போலிஸின் தந்திரத்தாலும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. 

ஆனால் காமில் சொல்லி உள்ளது போல் வழக்கில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் காரணம் அல்ல. 

காமில் சிறைவாசிகளிடம் (பிஞ்ச செருப்பால்) அடிபட்டது இந்த வெடிக்காத குண்டு வழக்கிலான இந்த பிரச்சனையில் தான். இதைத்தான் நபிமார்கள் அடிபட்டது போல் தான் அடிபட்ட மாதிரி காமில் எழுதி உள்ளார்.

கொடுங்கையூர் வழக்கு மட்டுமே காமில் மீது இருந்தது. வேறு வழக்குகள் இல்லை என்பது போல் எந்தக் காமில் காட்டித் திரிந்தாரோ அந்தக் காமில் தான் வெடிக்காத குண்டு வழக்கில் அவர் இருந்ததற்கான ஆதாரத்தை அவரை அறியாமல் வெளியிட்டு விட்டார். 

இது போல் இன்னும் காமில் பற்றிய பல சமாச்சாரங்களை காமில் மூலமே அல்லாஹ் வெளிப்படுத்துவானாக ஆமீன். 

விஸா மோசடி, கொடுங்கையூர் வெடி மருந்து பதுக்கல், வெடிக்காத குண்டு என 1996ல் இருந்து பத்து ஆண்டுகள் ஜெயிலில் கிடந்தவருக்கு கீழக்கரை பணக்காரர் சம்பந்தி ஆனது எப்படி? 

டாக்டர் பெண் கிடைத்தது எப்புடி?

ரியல் எஸ்டே்ட் செய்ய பணம் வந்தது எப்படி? எப்புடி?

ராயபுரம் சாதிக் மூலம் நிரூபிக்க முடியாத வெடிக்காத குண்டை ஒப்புக் கொண்டதை சொன்ன மாதிரி் மலேசியா வழியாகவும் இது பற்றிய விபரங்கள் வரும் இன்ஷாஅல்லாஹ்  

வெடிக்காத குண்டு வழக்கில் காமில் மீது குற்றம் நிரூபிக்க முடியாது என்ற நிலையிலும், காமில் நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறினார். காமில் மீது குற்றம் நிரூபிக்க முடியாது என்றால் மற்றவர்கள் மீதும் நிரூபிக்க முடியாதுதானே.

இதன் மூலம் காமில் முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸிடம் விலைபோய் தான் விடுதலையானவர் என்று நாம் சொல்லவில்லை. காமிலின் இந்த எழுத்துக்கள் மூலம் காமிலே சாட்சி சொல்லி உள்ளார்.

எந்த ஜெயலலிதா செட்டப் வழக்கு என்று சொன்னாரோ அந்த  ஜெயலலிதா அவர்களே முதல்வராக இருந்த போதுதான். நிரூபிக்க முடியாத அந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறி காமில்  மட்டும் விடுதலை ஆகி விட்டார்.  மற்றவர்கள் விடுதலை ஆகவில்லை.   

இந்த விபரங்களை 

ஜெயலலிதா அவர்களே செட்டப் வழக்கு என்றதை உண்மை என்றது யார்?

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_3.html

என்ற தலைப்பில் பார்த்து இருப்பீர்கள்.
விடுதலை ஆகாதவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். காமில் குற்றம் உண்மை என்று ஒப்புக் கொண்டு விடுதலையாகி விட்டதால் அதைக் காட்டி மற்றவர்களின் தண்டனையை உயர்நீதிமன்றம் மூலம் உறுதி செய்துவிட்டது போலீஸ். 

அது மட்டுமா? காமிலின் இந்த வாக்கு மூலத்தால் மற்ற வழக்குகளிலும் தண்டனை அடைந்தார்கள். 

காமில் குற்றம் உண்மை என்று ஒப்புக் கொண்ட வெடிக்காத வழக்கு தீர்ப்பை மேற்கோள் காட்டி போலீஸ் மற்ற வழக்குகளிலும் முஸ்லிம்களுக்கு  விடுதலை கிடைக்காமல் செய்து வருகிறது. இது தான் காமிலோடு சிறையில்  இருந்த முஸ்லிம் சிறைவாசிகளுக்கு காமிலால் ஏற்பட்ட நன்மை.

நாம் காமில் கூட்டத்தைப் போல் திட்டவில்லை. நடந்ததை எழுதி உள்ளோம். உண்மை வரலாறு காமில் மூலமே வெளியாகி காமில்   கூட்டம்தான் காட்டிக் கொடுக்கும் கூட்டம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.


காமிலின் முதல் வழக்கு விஸா மோசடி வழக்கு. இது 1996ம் ஆண்டு மத்தியில் போடப்பட்ட வழக்கு.  ஆஷுரா இன்டர் நேஷனல் டிராவல்ஸ் மூலமான விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனதை வெளியே சொல்லவே மாட்டார். மற்றவற்றில் அவருக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுவார், போன் போட்டு மணிக் கணக்கில் பெருமையாகப் பேசுவார். 


அவருக்கு போன் பேசுவது ஒரு நோய்.  காசு போட்டு போன் பேசுகிற காலத்திலேயே போன் பூத்தை பார்த்த இடமெல்லாம் பேசிவிட்டு. போன வேலையை மறந்து  விடுவார்.  எதையாவது தொலைத்து விட்டும் வந்து விடுவார்.

காமில் மாதிரி  ஜிகாத் .... என்று சொல்லிக் கொண்டு  டிராவல்ஸ்  நடத்தி காமில் மாதிரி விஸா மோசடி வழக்கில் சிக்கியவர்கள் தான் காமிலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள்.

விஸா மோசடி வழக்கில் காமில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனது உண்மை என்றால் காமிலை ஆதரிக்கும் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று காமில் ஆதரவாளர்கள் யாராவது துஆச் செய்வார்களா? சவால்.


காமில் அல்லாத 16 பேர் தண்டனைக்கு காரணம் வெடிக்காத குண்டே. விவகாரக் காமிலின் வாக்கு மூலம் அல்ல என்று காமில் ஆதரவாளர்கள் யாராவது சாபம் கேட்டு மறுப்பார்களா?

காமில் ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் சவால் இது.

விஸா மோசடி வழக்கை மறைத்து விட்டு கொடுங்கையூர் வழக்கை  மட்டும் சொல்லித் திரிந்த காமில்  காட்டிக்  கொடுத்ததாகவும் சொல்வார். 

கொடுங்கையூரில் இருந்ததை பீ.ஜே.யும் தமுமுக தலைமையினரும் தான் காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள். 

குணங்குடி ஹனீபா தான் சைக்கிளில் நின்று பார்த்தார்.  அவர் தான்  காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று துபைக்கு வந்து  என்னிடம் சொன்னவரும் உண்டு.  அதை பொய் என்று நிரூபித்தவன் நான்.

அவர்கள் காட்டிக் கொடுக்க வேண்டும், மாட்டி விட வேண்டும் என்றால்.  எல்லாரும் மொத்தமாக இருந்தார்களே! அப்பாழுது அல்லவா காட்டிக் கொடுத்து மாட்டி விட்டிருக்க வேண்டும். 

இரண்டே  இரண்டு பேர் மட்டும் இருக்கும்போது தானே மாட்டினார்கள். அடைக்கலம் கொடுத்ததாக கொடுங்கையூரில்    தமுமுக  நஸ்ருதீனும் சேர்ந்து அல்லவா வழக்கில் ஆனார். 

அவர்களுக்குள் பாய் டீம் பீ.ஜே. டீம் என சண்டை போட்டு பிரிந்த பிறகுதானே மாட்டினார்கள். இதுவெல்லாம் விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆன காமிலுக்கு எப்படி தெரியும்? காரைக்கால் பற்றியெல்லாம் ஏதோ இவர் கண்டு பிடித்த மாதிரி எழுதி திரிகிறார். 

யா அல்லாஹ் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற ஏகத்துவ கொள்கைக்கு எதிரானவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவாயாக ஆமீன். 

ஏகத்துவம் என்று சொல்லிக் கொண்டு ஏகத்துவ கொள்கை  எதிரிகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.