முதல்வரை சந்திக்க உள்ளதாக அ.தி.மு.க.`ஹயாத் கூறியது நாடகம் என்றால் அதில் நடித்த நடிகர்கள் யார் யார்?



இன்று என் மீதும் அ.தி.மு.க.`ஹயாத் அவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் கேட்டு ஒரு பதிவு வந்தது. பார்வேடு செய்பவர்கள் யாரிடமிருந்து வந்தது. என்பது பற்றி சொல்ல மறுக்கின்றனர். கிராம்சு தெரு மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டவர்கள் பின்னணி பற்றி எல்லாம் இப்பொழுது எழுத விரும்பவில்லை.


TNTJயின் மூன்று கார்கள் எரிப்பு வழக்கில் P.A.காஜா மைதீன் பாகவி, ஜலீல் ஹஜரத்கள் உட்பட 9 சுன்னத் ஜமாஅத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இது பொய்யானது என்று மேலிடத்தில் பேச வேண்டியவர்கள் மூலம் பேசியவன் நான். ஜலீல் ஹஜரத்துக்கு இது நன்றாகத் தெரியும். நான் ஊர் வந்ததும் என்னை நேரில் கண்டு மணியாச்சி காஜா Ex M.C. அவர்கள் நன்றி சொன்னார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் பெண்கள் பள்ளியில் P.A.காஜா மைதீன் ஹஜரத் அவர்களது வழக்கமான ரமழான் பயான் வைத்தார்கள். அதை ஒட்டி ஒரு இயக்கத்திலிருந்து ஸ்கூலுக்கு. மிரட்டல் கடிதம் வந்தது, ஸ்கூல் வேனில் குண்டு வீசுவோம் என போன் மிரட்டலும் வந்தது என்று என்னிடம் என் வீட்டிற்கு வந்து நேரில் தாளாளர் முஜீப் சொன்னார். சுன்னத் ஜமாஅத்தானே என்று நான் இருக்கவில்லை. மேலிடத்துக்கு தகவல் கொடுத்தேன். நடவடிக்கைக்கு வழி வகுத்தேன். இது முஜீபுக்கு தெரியும்.

அதே ஆண்டு முஸ்லிம் ஹை ஸ்கூலில் நடந்த P.AK. பயானுக்கு அதிரடிப் படை போலீஸ் பாதுகாப்பு. மப்டியில் பெண் போலீஸ் என  ஏற்பாடுடன் கடும் பாதுகாப்பு செய்து கொடுத்தேன். ஆனால் பெருமை அடிக்கும் சார்கள் தங்கள் ஏற்பாடு என்று காட்டிக் கொண்டார்கள்.


ஜ.உ.சாவின் சார்பில் ஜின்னா திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒரு ஹஜரத்தின் ஆடியோ கேட்டேன். அது ஜலீல் ஹஜரத் குரல் போல் இருந்தது. முதல்வரை சந்திக்க ஜ.உ.சாவின் தலைவர் P.A.K. ஹஜரத் அவர்கள் அப்பாயிண்ட்மண்ட் கேட்டார்கள். குடியுரிமை பிரச்சனை என்றால் வர வேண்டாம். மற்ற விஷயம் என்றால் வாருங்கள் என்றதாக பேசி இருந்தார்.


இதை கேட்ட அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் முயற்சியால் 05-01-2020  காலை 10.35 மணிக்கு இதே விஷயத்தைப் பற்றி பேச முதல்வரிடம் அணுமதி கிடைத்தது.


1. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி,

2. P.A.K. எங்களுடைய மாநில செகரட்ரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள். P.A.K.  வேண்டுகோளை ஏற்று ஜ.உ.சாவின் மாநில செயலாளரும் சேர்க்கப்பட்டார்.

3. தமிழ்நாடு முத்தவல்லிகள் சங்க தலைவர் M.H. ஷாபி

4. முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் MKM கபீர்

5.சதக்கதுல்லா அப்பா கல்லுாரி பிரின்பால் சாதிக்

6.AKY பாலி டெக்னிக்  ஹாஜியார்

6.. 5பூ பீடி  அப்துல் ஹமீது

7. Er செய்யது அஹமது

8. T.S.M.O. மஜீத் அல்லது L.K.S. மீரான் மைதீன் 

இப்படியாக 11 பேர் முதல்வரை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக வந்து சந்திப்பார்கள் என்று கூறி டயம் வாங்கப்பட்டது.

மதுரையிலிருந்து சென்னைக்கு விமான டிகட் போட்டு விட்டு போகாதவர்கள் நடிகர்களா? உண்மையைச் சொன்ன நாமா?

05.05.2020 அன்று முதல்வரை அ.தி.மு.க.`ஹயாத் சந்திக்க உள்ளார் என்று செய்தி போட்டதால் என்னை விலை போய் விட்டதாக எழுதி சாபம் கேட்டுள்ள புண்ணியவான்கள் தங்களை அடையாளம் காட்டி சமுதாயத்துக்கு செய்த நற்செயல்களை பட்டியலிடட்டும்.


பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டு நமக்கு என்று செயல்படுபவர்கள் தான் இந்த சமுதாயத்தில் தியாகிகளாக மதிக்கப்படுகிறார்கள்.


நேற்று அ.தி.மு.க. அலுவலகத்தில் M.G.R மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பள்ளி நிர்வாகிகளாக உள்ளவர்களும் உண்டு. அவர்கள் பலருடன் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.


T.S.M.O. மஜீத் அல்லது L.K.S. மீரான் மைதீன் என்று ஆர்க்கனேசர்களிடம் சொன்னவர் தமிழ்நாடு முத்தவல்லிகள் சங்க தலைவர் M.H. ஷாபி அவர்கள்தான்.

முதல்வர் சந்திப்புக்கு ஆர்க்கனேஸ் செய்தவர்கள்  Er செய்யது அஹமது அ.தி.மு.க.`ஹயாத் ஆகியவர்கள் தான். 

எந்த V.I.P முதல்வர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாரோ அந்த V.I.Pயே மாமா நீங்க வாங்க. நாம கோரிக்கையை கொடுப்போம். நானும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன்தானே என்று MKM கபீர் அவர்களிடம் பேசினார்.

இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சமுதாய நலன் தான் முக்கியம் எனில் மேற்கண்டவர்கள் மீண்டும் அ.தி.மு.க.`ஹயாத் அவர்களை அணுகட்டும். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் முழு ஒத்துழைப்பு செய்வார்கள். விலகு விலகு என்று சொல்வதை விட கைப்பற்று கைப்பற்று என்று சொன்னால் என்ன? 

காமராஜரால் காங்ரஸை கைப்பற்ற முடிந்தது. முதல்வராக முடிந்தது. அண்ணாவுக்கு அடுத்து நாவலர் என்று இருந்ததை மாற்றி கருணாநிதி முதல்வராக முடிந்தது. M.G.R. அவர்களுக்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆனார். ஜெயலலிதா அவர்கள் இருக்கவே O.B.S. அவர்கள் இரு முறை  முதல்வராக ஆனார்.  O.B.S. இருக்க E.B.Sமுதல்வராக முடிந்தது. 

நேரு குடும்பம்தான் பிரதமராக முடியும் என்று இருந்த இமேஜை மாற்றி நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா, மன்மோகன் சிங் வர முடிந்தது. முத்தலாக் பற்றி அன்வர்ராஜா பேசியதும் தலையில் வைத்து ஆடினோம். கிரீடம் சூட்டி மகிழ்வித்தோம். அந்த அன்வர்ராஜா போன்றவர்கள் ஈமானில் என்ன சந்தேகம். மாற்றி யோசியுங்கள் ஒரு மேலப்பாளையத்துக்காரரே  முதல்வராக வர முடியும்.










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.