நான் தான் கடவுள் என்பவனை திருத்த முடியுமா? எடப்பாடியைத்தான் மாற்ற முடியுமா?


முதல் எச்சரிக்கை நண்பனை நம்பாதீர்கள். எவனாக இருந்தாலும் எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் சிம் கார்டு வாங்கி கொடுக்காதீர்கள். சிம் கார்டு விற்பவர்களே ஒரு கார்டு விற்றால் ஒரு கோடியா கிடைக்கும்? சட்டப்படி உரிய ஆவணங்களை பெற்று விற்பனை செய்யுங்கள். நற்புக்காக சிம் கார்டு கொடுத்து  உதவியவர்கள் பலர் அரபக சிறைகளில் உள்ளார்கள் என்று கடந்த ஆண்டே எழுதி விட்டேன். இப்பொழுது இந்த வாரம் மட்டும் தமிழகத்தில் நண்பனுக்கு என்று சிம் கார்டு வாங்கி கொடுத்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறையில் என அறிகிறேன்.   

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_0.html

கல்லையோ, மண்ணையோ, மிருகங்களையோ, மனிதனையோ கடவுள் என்று ஒருவன் நம்பினால், வணங்கினால். அது அவனது அறியாமை. அவனை அயோக்கியன் ஏமாற்றுப் பேர்வழி என்று சொல்ல முடியாது. சொல்ல மாட்டோம் அறியாமையில் உள்ளான் என்றே சொல்வோம், சொல்ல முடியும்.

என்னைத் தவிர உங்களுக்கு வேறு ஒரு கடவுள் (தெய்வம்- வணக்கத்துக்குரிய  நாயன் – இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை்) நான் அறியவில்லை. நானே மிகப் பெரிய இறைவன் என்று ஒருவன் சொன்னால். அது அறியாமை இல்லை அது திமிர்.  அந்த திமிர் பிடித்தவனை விட மகா கெட்டவன் யாராக இருக்க முடியும்?அவனை யாரால் திருத்த முடியும்?

அவனைப் போல் உள்ளவர்களை திருத்த முடியாது என்று முடிவு எடுத்து திருத்த போகக் கூடாது என்பார்கள். இது மனிதர்கள் நிலை.


.தி.மு.. ஹயாத்துக்கு எதிராக கம்பு சுத்துபவர்கள் என்னை கடுமையாக விமர்சிப்பதையும் இழிவுபடுத்துவதையும் இன்னும் விடவில்லை. அவர்கள் யார்? முஸ்லிம்களுக்கு மக்கா எப்படியோ அது போல் எங்களுக்கு பாளையங்கோட்டை. முஸ்லிம்களுக்கு கஃபா எப்படியோ அது போல் எங்களுக்கு பாளை சிறை என்று சொன்ன கூட்டத்தவர்கள் தான்.


இருந்தாலும் நாம் அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவர்கள் மூலம் சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியுமா? அதைச் செய்து வருகிறோம். காரணம் அவர்களுக்கு வழி காட்டி அண்ணா. நமக்கு வழி காட்டி அல்லாஹ்

அவர்கள் வங்கக் கடலோர மெரினாவில் உள்ள கபுர்கள் இருக்கும் திசை நோக்கி தொழுபவர்கள்

நாம் மக்கமா நகரில் ஹரம் இருக்கும் திசை நோக்கி தொழுபவர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அ.தி.மு.. ஹயாத் மூலம் சந்திக்க இருந்ததை விமர்சித்த எல்லா இயக்கத் தலைவர்களும் சந்தித்து விட்டு வந்து விட்டார்கள். 


இந்த நிலையில் நேற்று ஒரு சகோதரர், ஜ.உ.சாவின் தலைவர் உட்பட எல்லா இயக்கத் தலைவர்களும் முதல்வருடன் நிற்கும் போட்டோவை போட்டு ஒரு கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு நாம் வாட்ஸப்பில் அளித்த பதில். இதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை என்பதுதான்.


நானே உங்களைப் படைத்து பரிபாலித்து வளர்த்து காத்து வரும் மிக மேலான, உயர்வான, மிகப் பெரிய -மாபெரும் இறைவன் என்ற பொருள் தரும் ரப்பு (அனா ரப்புக்குமுல் அஃலா) என்று சொன்னவன். மகா அக்கிரமக்கார ஆட்சியாளன் பிர்அவ்ன். 

அந்த அக்கிரமக்கார ஆட்சியாளனிடமே அல்லாஹ் தனது இரண்டு நபிமார்களை அனுப்பி வைத்தான். அதுவும் இஸ்ரேல் மக்களின் குடி உரிமைப் பிரச்சனைகளோடுதான் அனுப்பி வைத்தான்.

இந்திய முஸ்லிம்களுக்கு  வாரிசுகள் உருவாகக் கூடாது என்பதற்காக அகதிகளாக ஆக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் இன்றைய குற்றச்சாட்டு. 

பிர்அவ்ன் என்ற கொடிய ஆட்சியாளனோ இஸ்ராயீல்களுக்கு வாரிசுகள் உருவாகக் கூடாது என்பதற்காக என்ன செய்தான்? 

ஆண்களை பிறந்த ஆண் குழந்தைகளை கொன்று பெண்களை மட்டும் அகதிகளாக்கினான்.

அந்தக் கொடிய ஆட்சியாளனான ஃபிர்அவ்ன் வரம்பு மீறி விட்டான் என்று சொன்ன அல்லாஹ் தான். இரண்டு நபிமார்களை பார்த்து நீங்கள் இருவரும் சென்று பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று கட்டளை இட்டான். ஆட்சியாளர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற படிப்பினை இதில் உள்ளது.


அது மட்டுமா? ஆட்சியாளர்களுக்கு எதிராக கோஷம் போடவோ அசிங்கமாக அர்சிக்கவோ கடும் வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள் என்று சொன்னானா அல்லாஹ்? என்ன சொன்னான்?


ஆண்களை பிறந்த ஆண் குழந்தைகளை கொன்று அந்தக் கொடிய  மாபாதக ஆட்சியாளன் பிர்அவ்னிடம் கூட  மிருதுவான - மென்மையான – சாந்தமான – நளினமான – கனிவான சொல்லை  சொல்லி இருவரும்பேச்சு வார்த்தை நடத்துங்கள். நல்லுபதேசம் செய்யுங்கள் என்றுதான் அல்லாஹ் கட்டளை இட்டான்.


முக்காலமும் அறிந்த அல்லாஹ்வுக்குத் தெரியும் பிர்அவ்ன் திருந்துவானா கடலில் மூழ்கி சாகடிப்படுவானா? என்று. இருந்தாலும் அல்லாஹ் மனிதர்களுக்கு இதன் மூலம் காட்டும் வழி காட்டுதல் என்ன? எவ்வளவு பெரிய கொடுங்கோலனாக இருந்தாலும் அவனிடம் நாம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான்.

பிர்அவ்ன் மாதிரி எவ்வளவு பெரிய கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் படிப்பினை பெறலாம். 

நமது அறிவுரையை ஏற்கலாம். நமது நல்லுபதேசத்தை ஏற்று நல்லுணர்ச்சி பெறலாம்.  அல்லது அல்லாஹ்வை அஞ்சலாம், இதுதான் அல்லாஹ் நமக்கு இட்டுள்ள கட்டளை

திருமறைக் குர்ஆனில் அதிகமாக சொல்லப்பட்ட வரலாறே இந்த வரலாறு தான். ஆகவே முஸ்லிம்கள் குர்ஆனை படியுங்கள். அதன்படி செயல்படுங்கள். எதிர்கட்சிகளை விமர்சித்துதான் தங்கள் கட்சிகளை வளர்க்க வேண்டும் என்பவர்கள் கூற்றை அலட்சியப்படுத்துங்கள்.

நேற்று விடுதலையான நெல்லை கண்ணன் அவர்களை பல அமைப்பினர் சந்தித்துள்ளனர். அவர்களில் பக்திமானாக தோற்றமளித்த ஒருவரிடம் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது. 

நான் அந்தக் கடவுளிடம் உங்கள் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னேன். வேண்டுகோள் வைத்தேன். அதை யாரும் செய்த மாதிரி தெரியவில்லை. ஜோலிய முடிப்போம் என்பதை மட்டும் கட்டியாக பிடித்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார். 

நான் எழுதியுள்ள வழி காட்டல் யாவும் குர்ஆனில் உள்ளதுதான். எதுவும் என் சொந்த கருத்து கிடையாது. 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.