2:25. ஆறுகளா? நீரருவிகளா? சூழ்ந்து ஓடுமா? (கீழே) கீழ் பகுதியில் ஓடுமா?

எதையும்  மேலோட்டமாகப்  படிப்பதை விட சிந்தித்து ஆய்ந்து படிப்பதே சிறந்தது. அல்லாஹ்வும் அப்படித்தான் கட்ளையிட்டுள்ளான். ஆகவே குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தையையும் மேலோட்டமாக படிப்பதனால் எந்த பயனும் இல்லை. இதில்  10 வித மொழி பெயர்ப்பு வெளியீடுகளை தந்துள்ளோம்.

அவை வெளியிடப்படுவதற்கு முன்   அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள்படி நுாற்றுக் கணக்கான  மவுலவிகள் நேரடியாகப் பார்த்து  சரி கண்டுள்ளார்கள். அவை வெளியான பின் .10,000(பத்தாயிரத்)துக்கும் மேற்பட்ட  மவுலவிகள்  பார்த்து  சரி கண்டுள்ளார்கள் என்பதை நினைவில் கொண்டு படியுங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/01/225.html


பஷ்ஷிரி  என்பதற்கு நற்செய்தி கூறு, நன்மாராயம் கூறு,  நல்லதைப் பிரசங்கிக்கவும். எனவும்.

ஸாலிஹாத்தி   என்பதற்கு    நல்லறங்கள்,   நற்கருமங்கள்,  நற்செயல்கள்   எனவும்..  தமிழாக்கம் செய்ததில் வார்த்தைகள்   மாறி  இருந்தாலும்  மூலப் பொருள்,  கரு  மாறுவது  இல்லை.  எல்லாமே ஒரே பொருள்தான் தருகின்றன. 


2:25.ல் உள்ள தஃஹ்திஹா  என்ற வார்த்தையை அப்துல் ஹமீது பாகவி, அன்வாருல் குர்ஆன்,  ஜான்,  பஷாரத்,  KSR,   போன்றவர்கள் மொழி பெயர்ப்பு செய்யாமல் விட்டுள்ளார்கள். ஏன் மொழி பெயர்க்காமல்  விட்டார்கள்  என்பதற்கு  யாருமே எந்த விளக்கமும் சொல்லவில்லை.

மற்றவர்கள் தஃஹ்திஹா  என்பதற்கு  சூழ்ந்து  என்றும்  கீழ்ப்பகுதியில்  என்றும்  மொழி பெயர்த்துள்ளார்கள்.  சூழ்ந்து என்பதன்  பொருள்  வேறு.  கீழே  என்பதன்  பொருள்  வேறு.


நஹாரு என்பதற்கு ஆறுகள் என்று பெரும்பாலான மவுலவிகளும்  நீரருவிகள் என்று சில  மவுலவிகளும்  தமிழாக்கம் செய்துள்ளார்கள்.  ஆறுகள் என்பதன் பொருள் வேறு.  நீரருவிகள் என்பதன் பொருள் வேறு.


சொர்க்கத்தில் உணவு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு  இந்த சொர்க்கத்தில் வழங்கப்பட்டது'' என்ற பொருள்பட சிலரும் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" பூமியிலுள்ள கனிகளைப் போல் என்று சிலரும் மொழி பெயர்த்துள்ளார்கள்.


Zஸ்வாஜுன்  என்பதற்கு   ஜோடிகள், துணைகள் என்ற இரு பாலருக்கும் பொதுவான வார்த்தையை சிலரும் துணைவியர், மனைவியர் என்ற ஒரு பாலருக்கு மட்டுமான வார்த்தையை சிலரும் மொழி பெயர்ப்பாக வழங்கி உள்ளார்கள்.

இதில் எந்த மொழி பெயர்ப்பையும் எந்த மொழி பெயர்ப்பாளர்களையும் குறைவுபடுத்தியோ விமர்சித்தோ நாம் எழுதவில்லை. படிப்பவர்கள் ஆய்வுடன் படித்து சிந்தித்து அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதி உள்ளோம்.

முதஷாபிஹன் என்ற மிக முக்கியமான பிரபலமான இலக்கிய நயம் கொண்ட ஒன்றைப் போல் ஒன்று  என்ற பொருள் தரும் வார்த்தையும் இந்த 2:25.ல் இடம் பெற்றுள்ளது.   இதற்கு  ஒத்தது,  ஒப்பானதுபோன்றது  தோற்றமுடையது   என்று இதில் தமிழாக்கம் செய்துள்ளார்கள். 


4:157 வது வசத்தில் உள்ள 

 شُبِّهَ لَهُمْ‌

ஷுப்பிஹ லஹும் என்பதும் முதஷாபிஹ் என்பதில் இருந்து வந்தது தான். அதற்கு 

(அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; - ஜான்

அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். - பாகவி

ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, - (சவூதி)

அவர் (போன்று ஒருவர்)  ஒப்பாக்கப்பட்டார்- (பஷாரத், மலிவு பதிப்பு,)

மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. (P.J)

அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. (IFT)


இப்படியாக மொழி பெயர்ப்புகள் உள்ளன.



6:99. ல் உள்ள

 مُتَشَابِهٍ‌
முதஷாபிஹின்
 என்பதற்கு 



ஒன்று போலவும்  (ஜான்)

ஒன்றுபோலும் (பாகவி,சவூதி)

ஒன்றோடொன்று ஒப்பானவையாகவும் (IFT)

(தோற்றத்தில்ஒரே வகையாகவும் (பஷாரத்)

தோற்றத்தில்ஒரே மாதிரியாகவும் (மலிவு பதிப்பு)


(தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும் - P.J.

என்று மொழி பெயர்ப்புகள் உள்ளன.

6:141  ல் உள்ள 

مُتَشَابِهًا
முதஷாபிஹன் என்பதற்கு

ஒன்றுபோலும் (ஜான், பாகவி,சவூதி)

தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் (IFT)

(தோற்றத்தில்ஒன்று போலவும் (பஷாரத்மலிவு பதிப்பு,)

(தோற்றத்தில்) ஒன்றுபட்டும் - P.J.

என்றும் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

3:7. ல் முதஷாபிஹாதுன்

مُتَشٰبِهٰتٌ‌ؕ 

என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு 


பல பொருள்களைக் கொண்ட வேறு (சில வசனங்களும்) இருக்கின்றன – பஷாரத்,

பல பொருள்களைக் கொண்டவையாகும் – சவூதி, மலிவு பதிப்பு

(பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்;  - ஜான்

(உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. -பாகவி 

முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். –IFT


இரு கருத்தைத் தருகின்ற –P.J.

என்று மொழி பெயர்த்துள்ளார்கள். 3:7 ல் முதஷாபிஹத்தான வசனங்களும் இருப்பதாகக் கூறிய அல்லாஹ்தான்  39:23 ல் ஒட்டு மொத்த குர்ஆனையும் 
 مُّتَشَابِهًا 
முதஷாபிஹன் என்கிறான். முதஷாபிஹாத் என்றால்  பன்மை  முதஷாபிஹ் என்றால்  ஒருமை.  இந்த ஒருமையில் சொல்லப்பட்டுள்ள 39:23ன்  மொழி பெயர்ப்புகள் உங்கள் பார்வைக்கு.


அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும்,          ------       இருக்கின்றன;    ஜான்

அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. (IFT)

ஒன்றை மற்றொன்று ஒத்ததாக (பாகவி, பஷாரத், மலிவு பதிப்பு,சவூதி)


அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும்ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும்உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம்தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.

இனி 2:25. வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை பார்ப்போம்.

وَ -     

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  


بَشِّرِ - பஷ்ஷிரி

நற்செய்தி கூறு - நன்மாராயம் கூறு  - நல்லதைப் பிரசங்கிக்கவும்


 الَّذِيْنَ-  ல்லதீ(ரீ)ன   

அவர்கள்  எவர்கள்- சிலர்


 اٰمَنُوْا - ஆமனுா 

நம்பிக்கை கொண்டார்கள்



 وَ -     

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  


 عَمِلُوا -ஃஅமிலுா 

செய்தார்கள்


الصَّالِحَاتِ-  (அ)ஸ்ஸாலிஹாத்தி  

நல்லறங்கள் - நற்கருமங்கள்- நற்செயல்கள்


أَنَّ - அன்ன
நிச்சயமாக

لَهُمْ - லஹும்
அவர்களுக்கு

جَنَّاتٍ- ஜன்னாதின்
சொர்க்கச் சோலைகள் - சுவனச் சோலைகள் - சொர்க்கப் பூங்கா

تَجْرِي- தஜ்ரி
ஓடுகிறது-ஓடும்

مِن -மின் 

இருந்து From –லிருந்து


 تَحْتِ - தஃஹ்தி
கீழ் 

 تَحْتِهَا - தஃஹ்திஹா
அதற்கு கீழ் - அவற்றின் கீழ் – அவைகளுக்கு கீழ் - அதன் கீழ்ப்பகுதியில்


الْأَنْهَارُ- (அ)ல் அன்ஹாரு
 ஆறுகள் - நதிகள் 

كُلَّمَا-குல்லமா
போதெல்லாம் - அப்போது 

رُزِقُوا -ருZஸிஃகூ 


உண்ண (புசிக்க)க்  கொடுக்கப்பட்டார்கள் 


مِنْهَا -மின்ஹா
அதிலிருந்து  அங்கிருந்து - அவற்றிலிருந்து


مِن -மின்
இருந்து

 ثَمَرَةٍ - த(ஸ)மரதின்   
கனி - பழம்

  رِزْقًا - ரிZஸ்ஃகன் 
உணவு

قَالُوا -ஃகாலுா 
கூறினார்கள் - சொன்னார்கள்


هَٰذَاالَّذِي - ஹாதா(ரா)ல்லதீ(ரீ)

இதுவே -இத்தகைய இதைத்தான் - இது தானே


رُزِقْنَا-ருZஸிஃக்னா 

உணவவாக அளிக்கப்பட்டோம்


مِن قَبْلُ -மின் ஃகப்லு 

இதற்கு முன்னர் - முன்னரும்


وَأُتُوا- வஉதுா 

கொடுக்கப்பட்டார்கள் - கொடுக்கப்பட்டிருந்தது


بِهِ - பிஹி

இது 

مُتَشَابِهًا - முதஷாபிஹன்
ஒப்பானது - போன்றது

وَ-  
மேலும்

لَهُمْ- லஹும் 
அவர்களுக்கு

فِيهَا -Fபீஹாா 

அதில்


أَزْوَاجٌ- Zஸ்வாஜுன் 

துணைகள் - துணைவியர் மனைவியர் - ஜோடிகள்


مُّطَهَّرَةٌ - முதஹ்ஹரதுன்
தூய்மையான - தூயவர் -  துாய -பரிசுத்தமான

وَ-வ 
மேலும்

هُمْ -ஹும்  
அவர்கள்

فِيهَا -Fபீஹாா

அதில்


خَالِدُونَ -காலிதுா(ன)ன்.

நிரந்தரமாக (என்றென்றும்) இருப்பார்கள்  

2:25 وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ۙ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

வ பஷ்ஷிரி  ல்லதீ(ரீ)ன   ஆமனுா    ஃஅமிலுா   ஸ்ஸாலிஹாத்தி  அன்ன லஹும்  ஜன்னாதின்  தஜ்ரி  மின் தஃஹ்திஹா ல்அன்ஹாரு குல்லமா ருZஸிஃகூ  மின்ஹா மின் த(ஸ)மரதின்   ரிZஸ்ஃகன்  ஃகாலுா  ஹாதா(ரா)ல்லதீ(ரீ)  ருZஸிஃக்னா  மின் ஃகப்லு  வ உதுா பிஹி  முதஷாபிஹன்  வ லஹும்  Fபீஹாா  Zஸ்வாஜுன்ம்  முதஹ்ஹரதுன்வ்  வ ஹும்    Fபீஹாா  காலிதுா(ன)ன்.


1. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக! சூழ்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காகவே உள. அவர்களுக்குச் சுவனத்தின் ஏதேனும் ஒரு கனி உண்ணக் கொடுக்கப்படும் போதெல்லாம், "முன்னரே இது நமக்குக் கொடுக்கப் பட்டிருந்ததே!" என்று எண்ணுவார்கள். ஆனால் (தோற்றத்தில்) அதை ஒத்ததுதான் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டது. அவர்களுக்கு அங்குத் தூய துணைகளும் உளர். மேலும் அவர்கள் அங்கே என்றென்றும் வாழ்ந்திருப்பர். (அதிரை ஜமீல்)


2. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். P.J)2:25.


3,4,5.(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டுஅவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தனஇன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டுமேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (  3இம்தாதி,  4.அன்வாருல் குர்ஆன், 5.ஜான்,)



6.(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அப்துல் ஹமீது பாகவி)



7.மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்குகீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும்அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.  (IFT)



8. (நபியே!) இன்னும் விசுவாசங்கொண்டுநற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_அவர்களுக்கு நிச்சயமாக சுவனங்கள் உண்டுஅவைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் என நன்மாராயங் கூறுவீராக. அவற்றிலிருந்து அவர்களுக்கு ஒரு கனி உணவாகக் கொடுக்கப்படும்போதெல்லாம், “முன்னர் இதைத்தான் நாங்கள் கொடுக்கபட்டோம்” எனக் கூறுவார்கள். அது (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக் கூடியாதாகயிருக்க அவர்கள் கொடுக்கப்பட்டார்கள். (ஆனால் அவை ருசியில் மாறுபட்டவையாக இருக்கும்). மேலும்அவற்றில் பரிசுத்தமான மனைவியரும் அவர்களுக்குண்டு. இன்னும் அவர்கள் அவற்றில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள். (சவூதி)



9. (நபியே!) (இவ்வேதத்தின் மீது) ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களே அத்தகையோருக்கு சதாவும் நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். சொர்க்கம் நிச்சயமாக இருக்கின்றது என நற்செய்தி கூறுவீராக!  அவற்றிலிருந்து ஏதேனும் ஒரு கனியை உண்ணக் கொடுக்கப்படும்பொழுதெல்லாம் இது எமக்கு இதற்கு முன்னர் வழங்கப்பெற்ற அதே(பழம்) தானே எனக் கூறுவர். தோற்றத்தில் ஒப்பான (சுவையில் வகை வகையான)வற்றை அவர்கள் கொடுக்கப்படுவார்கள்.  அங்கு அவர்களுக்கு துாய்மையான துணைவியரும் உள்ளனர்.  மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாகத் தங்கி இருப்பர் (பஷாரத்)

10. இன்னும் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்  செய்வோருக்கு அதன் கீழ் பகுதியில் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். சுவனச் சோலைகள் நிச்சயமாக அவர்களுக்கு உண்டு என்று (துாதரே) நீர் நற்செய்தி கூறுவீராக!  அவற்றிலிருந்து அவர்களுக்கு கனி வர்க்கத்திலிருந்து (ஏதேனும்) உணவாக  வழங்கப்படும் போதெல்லாம் இது எத்தகையதென்றால் இதற்கு முன் நமக்கு உணவாக வழங்கப்பட்டதே தான் என்று (வியப்போடு) கூறுவார்கள். (ஆனால்) அ(ந்த உணவான)தை(த் தோற்றத்தில்) ஒன்றையொன்று ஒத்து (சுவையில் வேறுபட்டு) இருப்பதையே அவர்கள் வழங்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு அவற்றில் துாய்மையான துணைவியரும் உண்டு – அவர்கள் அவற்றில் நிரந்தரமாக (த் தங்கி) இருப்பார்கள். (மலிவு பதிப்பு)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.