கோடீஸ்வரருக்கு ஒரு நியாயம் கோட்டாறாருக்கு ஒரு நியாயமா? ஜ.உ.சாவின் தலைவரே என்ன தயக்கம்?


P.AK. அவர்களே தாங்கள் ஆரம்பத்தில் இமாமாக பணியாற்றிய திருவிதாங்கோடு அப்துல் ஷமீம், கோட்டாறு இளங்கடை தவ்பீக் ஆகிய  இருவரை கர்நாடக போலீசார் உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து 14-01-2020 மதியம் கைது செய்துள்ளார்கள்.

தமிழக கியூ பிரிவு போலீசார் டெல்லியில் காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோரை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டது திருவிதாங்கோடு அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடை தவுபீக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் களியக்காவிளை போலீஸை கொலை செய்துள்ளதாக செய்திகளை பரப்பி வருகின்றனர்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_16.html


ஆனால் இந்த கொலை பற்றி உங்கள் கெழுதகை நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை தலைவராகக் கொண்ட திமுக வின் முன்னாள் ச.ம.உ.  அப்பாவு அவர்கள் வெளியிட்ட அறிக்கையை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து போகவில்லை. நீங்கள் மட்டும்  அப்பாவு அறிக்கையை  கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ?


திமுக முன்னாள் ச.ம.உ.  அப்பாவு அறிக்கையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பிஜேபி பொன்னாருக்கு எதிராக  கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கலைஞரின் போர்வாள்  ராஜ்யசபா உறுப்பினர் வைகோ அவர்களும் இதை மணற் கொள்ளையர்கள் செய்த கொலை என்றே திட்டமாகக் கூறி உள்ளார். பொன்ராதாகிருஷ்ணன் பற்றி அமைச்சர் ஜெயக்குமாரும் விமர்சித்துள்ளார். அதை முதல்வரும் வரவேற்றுள்ளார்.


போலீசார் வெளியிட்ட பள்ளிவாசல் சி.சி.டி.வி காட்சிகளில் 2 பேர் ஓடுவது 01-01-2020 இரவு 7 மணி என்று காட்டுகிறது. போலீஸ் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது 08-01-2020 இரவு 9 மணிக்கு மேல் என்று போலீசார் செய்தி வெளியிட்டனர்.

தற்போது CAA, NRC க்கு எதிராக தாங்கள் விடுத்த அழைப்பை  ஏற்று முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஒற்றுமையுடன் நாடு முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.  தாங்கள் வேண்டுகோள்படி நடந்து வரும் இப் போராட்டங்களை சீர்குலைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட சமூக விரோதிகள் செய்த சதியாக கூட இந்த கொலை இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

கீழக்கரை கோடிஸ்வரர் NIA வில் கைதானதும் NIA வழக்கை தங்கள் தலைமையிலான அமைப்பினர்கள்  நடத்துவார்கள் என்று அதிரடி அறிக்கை விட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜரத் அவர்களே!  கோடிஸ்வரருக்கு ஒரு நியாயம் கடைக் கோடியினருக்கு ஒரு நியாயம் என்பது தான் உங்கள் ஜ.உ.சாவின் நிலைப்பாடா?

தாங்கள் ஆரம்பத்தில் இமாமாக பணியாற்றிய திருவிதாங்கோடு வாழ்க்கையை நீங்கள் மறந்து இருக்கலாம். உங்கள் சார்பாக என்னிடம் துாது வந்த J.S. ரியாஈ பாஸி, ரஷாதி மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை.

தி.மு.க. முன்னாள் ச.ம.உ. அப்பாவு, வை.கோ. M.P.  ஆகியவர்களை உடனே சந்தித்து அவர்களிடமுள்ள ஆதாரங்களைப் பெறுங்கள். அதிரடி நடவடிக்கையில் இறங்குங்கள்ஷமீம், தவ்பீக் ஆகிய முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றுங்கள்

பீ.ஜே.பி.யின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் தான் என்பதை நிரூபிக்க உங்களுக்கு பயமாக இருந்தால், குறைந்தது.  காவலர் வில்சன் கொலைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதையாவது நிரூபியுங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உள்ள அச்சத்தை நீக்கி  சி.சி.டி.வி காட்சிகளில் 2 பேர் ஓடுவது 01-01-20 இரவு 7 மணி தான் என்ற ஆதார கடிதத்தையும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம்  பெற்று வெளியிடுங்கள். சமுதாயத்தின் மீது படிந்துள்ள கரையை அக்கறையுடன் நீக்குங்கள்.

   




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.