கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?


ஆஷுரா இண்டர் நேஷனல் டிராவல்ஸ் நடத்தி விசா மோசடி வழக்கில் சென்னை சென்ரல் ஜெயிலில் ஜட்டியுடன் நின்றவனின் கூட்டத்தக்குத்தான் அரபக மன்னர்களின் அருமை புரியுமா

தூண்டிவிடும் எந்தத் தலைவனாவது ஒருநாள் சிறை வாசத்தை அனுபவிக்க தயாராக இருக்கிறானா?
முஸ்லிம் ஆட்சியாளர்களை குறிப்பாக அரபு நாட்டு மன்னர்களை திட்டி எழுதுவதே ஜிகாத் என்று பலர் காலம் காலமாக  களம் இறங்கி இருக்கிறார்கள். 

கடந்த ஆண்டு வரை ஆயிரக் கணக்கில் கைதான பல ஜிகாத்திகளை சாதாரண வழக்குகளில்  பதிந்து  அவரவர் தாய் நாடுகளுக்கு அனுப்பி வைத்த அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் அரபக மன்னர்கள்.  இதையெல்லாம் அறியாத அரைகுறைகள்.  அரபு நாட்டு மன்னர்களை இழிவாக எழுதுவதையே தொழிலாகக்  கொண்டு உள்ளார்கள்.  

கடந்த ஆண்டு ஜனவரி பத்து அன்று ஆயிரக்கணக்கில் கடல் கடந்த நாடுகளில் தமிழ் முஸ்லிம்கள் கைதானார்கள்.  இலங்கை சம்பவம் நடந்ததும் தமிழ் தவ்ஹீதுவாதி்கள் தான் காரணம் என்று முதன் முதலில் சவூதி பத்திரிகை செய்தி போட்டது. அதை இந்திய டி.வி. செய்திகளில் சொன்னார்கள். 

உடனே இலங்கை புத்த அரசு நாங்களே யார் என்று சொல்லாத, கண்டு பிடிக்காத நிலையில் முஸ்லிம்கள் என்று இந்திய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன என்று நாடகம் போட்டது.  முஸ்லிம் ஆட்சியாளர்களை மன்னர்களை நம்பாத முட்டாள்களான டிராவல்ஸ் நடத்தி விசா மோசடி செய்தவர்கள் போன்றவர்கள் அதை பரப்பினார்கள். புத்த நாடுகளில்  முஸ்லிம்களை கொன்று குவித்த புத்த அரசின் நாடகச் செய்திகளை பரப்பி முஸ்லிம்களை ஏமாற்ற துணை நின்றார்கள்.  

அரபு நாடுகளில் வேலைக்கு சென்றவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய தடை அந்த அடிப்படையில் தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது தான் அரபக அரசும் சம்பந்தப்பட்டவர்களும்  வெளியில் சொன்ன செய்தி. 

இந்த செய்தி அடிப்படையில் மேலப்பாளையம் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரியில் 25 ஆண்டுகளாக வேலை செய்து வரும்  தென்காசி சுலைமானை அனுகினார்கள். அப்போதே அவர் சொல்லி விட்டார். TNTJ  சார்பில் இப்போதும் பிரச்சாரம் நடக்கத்தான் செய்கிறது.  நீங்கள் சொல்லும் ஆட்களுக்கு வேறு கேஸ் என்று. 

வளைகுடா அரபக அரசுகள் பிடிபட்டவர்களுக்கு பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சிறிது காலம் சிறையில் வைத்தது. சட்ட விரோத உண்டி பிஸ்னஸ், அனுமதி இல்லாமல் இஸ்லாமிய பிரச்சாரம், மதரஸா, பள்ளிவாசல் வசூல் போன்ற வழக்காக ஆக்கி பெரும்பாலானவர்களை சொந்த நாடுகளுக்கே அனுப்பி விட்டது.

முஸ்லிம்கள் இல்லை என்று நாடகம் போட்ட இலங்கை புத்த அரசு அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று அரசு ரீதியாக அந்தரங்கத்தில் கேட்டுக் கொண்டு இருந்தது.  இலங்கை சம்பவம் உலகளாவிய சதியில் உள்ளது ஆகவே எங்களிடம் ஒப்படையுங்கள் என்றது உலக சட்டாம் பிள்ளை அமெரிக்கா.

அல்லாஹ்வின் அருளுக்குரிய அரபக அரசுகள் மோடிக்கு உயர் தர விருது வழங்கி கவுரவித்து. தங்கள் முஸ்லிம் சகோதரர்களை இலங்கைக்கோ அமெரிக்காவுக்கோ அனுப்பி விடாமல் இருக்கும் வேலை செய்தார்கள்.  

இந்தியர்களை இந்தியா கேட்கிறது என்ற நிலையை உருவாக்கினார்கள். இந்தியாவில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அல்லாஹ்வின் அருளுக்குரியவர் மற்றும் அரசு அதிகாரிகள் முயற்சியில்  இந்தியா கேட்டுப் பெற்றதான நிலையை உருவாக்கி மிகச் சிறிய அளவிலானவர்களேயே ஒப்படைத்தார்கள்.

அந்த அரபக மன்னர்கள் தலையில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள். இதுவெல்லாம் ஆஷுரா இண்டர் நேஷனல் டிராவல்ஸ் நடத்தி விசா மோசடி வழக்கில் சென்னை சென்ரல் ஜெயிலில் ஜட்டியுடன் நின்றவனின் கூட்ட தெருவில் குரைத்து திரியும் நாய்களுக்கு எப்படித் தெரியும்?  

ஆளும் கட்சியுடன் தொடர்புடனிருந்து இந்த சேவை செய்த அல்லாஹ்வின் அருளுக்குரியவர் பெயரைச் சொன்னால் யாரும் ஜீரணிக்க மாட்டீர்கள். நீங்கள் சமுதாய நல விரும்பி என்றால் இதைப் படித்ததும் அவருக்காக துஆச் செய்து இருப்பீர்கள்.

கண்ணால் காண முடியாத சிறைகளிலும் இருட்டறைகளில் வாழும் சிறைவாசிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பில் 2019 மே மாதம் நாம் எழுதிய பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படியுங்கள். மேலே சொல்லி உள்ள அனைத்தும் அன்றே சூசகமாக எழுதி விட்டேன் என்பதை இப்பொழுது படிக்கும் போது புரிவீர்கள். 

அதற்கு முன்னதாக இன்றைய சூழலை சுட்டிக் காட்டி நமக்கு வந்த செய்திகள் 

களிக்காவிளை உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுளனர்.இன்னும் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று 7 (i)a CLA Act ல்  கைது செய்யப்பட்டும் சிலர் சந்தேகத்தின் பேரில் விசாரணையிலும் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் நெல்லையில் தொடர்ந்து போலீஸ்க்கு எதிராக வன்மத்தோடு பேசி இளைஞர்களை தூண்டி வரும் நபர்களிடம் ஜமாத்தார்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையோடு இருத்தல் நலம், தூண்டிவிடும் எந்தத் தலைவனும் ஒருநாள் சிறை வாசத்தை கூட அனுபவிக்க தயார் இல்லை.


பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க...புதிதாக ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தவும் படுகின்றனர். இளைஞர்களை வன்முறையின் பக்கம் தூண்டும் தலைவர்களின் பேச்சால் நெல்லையில் என்ன நடக்க போகுதோ தெரியல... அல்லாஹ் தான் எல்லாரையும் காப்பாற்றனும்...

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்... தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர்கள் மீதே வழக்கு பதிவு செய்ய முயற்சிப்பதும் அவர்கள் உறவினர்களை விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளை இச்சம்பவத்தில் தொடர்புபடுத்தி விசாரணை வளையத்திற்கு கொண்டுவர முயற்சி நடப்பதாக தெரிகிறது அதனையும் வன்மையாக கண்டிக்கிறோம்

போலீசுக்கு எதிராக தொடர்ந்து பேசி இன்று போலீசையே கொலை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது,

மேடையில் போலீசை பழி வாங்க வேண்டுமென்று பேசுவதை தவிர்க்கவும்

போலீசுக்கு எதிராக தொடர்ந்து பேசியதன் விளைவு இன்று போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது, பொதுக்கூட்ட ஆர்ப்பாட்ட  மேடையில் போலீசை பழி வாங்க வேண்டுமென்று வன்முறையை தூண்டுவது போல பேசுவதை தவிர்க்கவும்
----------------------------------------- இனி 2019 மேயில் எழுதியது

முதல் எச்சரிக்கை;- வெளிநாடுகளில் உள்ளவர்களே யார் வேலை தேடி விஸிட்டில் வந்தாலும் உதவும் நோக்குடன் உங்கள் சிம் கார்டுகளை கொடுக்காதீர்கள். அவனவன் பாஸ்போர்ட் காப்பி மூலமே சிம் கார்டு எடுத்துக் கொள்ளட்டும்.

இருட்டறைகளில் கிடக்கும் உங்களுக்குத்
  தெரியாத  சிறைவாசிகளும்  உருவாக  காரணமானவர்கள்  யார்? காரமாணவர்களுக்கு எதிராக  துஆச் செய்யுங்கள் என நான் சொல்லத் தேவை இல்லை. கடல் கடந்த நாடுகளின்  சிறைகளில் உள்ள வாலிபர்களின் இளம் மனைவிகள், பெற்றோர்கள், தந்தை உயிருடன் இருக்கவே யதீம் ஆகி விட்ட சிறு பிள்ளைகள் இந்த ரமழானில் இரு கரம் ஏந்தி இருக்கும். 

எங்களின்  பெயர்களைச்  சொல்லி  துஆச்  செய்யுங்கள்  என்று  வேண்டுகோள்  வைத்துள்ள தமிழக சிறைகளில் உள்ள 44 ஆயுள்  சிறைவாசிகளின்  பெயர்களைக் கண்டோம். அவர்கள் பெயர்களைச் சொல்லி   துஆச் செய்வோம். நாம் துஆச் செய்துள்ள  44 ஆயுள்  சிறைவாசிகள் எங்கு இருக்கிறார்கள்? எந்த சிறையில் இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன வழக்கு? என்று எல்லாராலும் தெரிய முடியும்.

குடும்பத்தாரும் நண்பர்களும் போய் பார்க்க முடியும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளை என பல சிறைகளில் நானே போய் பார்த்து இருக்கிறேன். அப்படிப்பட்டவர்களே எந்த  அளவுக்கு   மனம்  பாதிக்கப்பட்டு  இருந்தால்  பெயர்  சொல்லி  துஆச்  செய்யுங்கள்  என்று   பகிரங்க  வேண்டுகோள்  வைத்திருப்பார்கள்?

சிறைக் கொடுமை என்றால் சிறையில் செய்யப்படும் கொடுமைகள் என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். சிறையே ஒரு கொடுமைதான். சிறையில் சும்மா இருப்பதே ஒரு கொடுமைதான். இதை எத்தனை பேர் அறிந்துள்ளார்கள்.

சிறையில் இருப்பவர்களுக்கே எந்த சிறையில்? இருக்கிறோம்?  எந்த ஊர் சிறையில் இருக்கிறோம்? என்பது தெரியாது. காலையா? மாலையா? தெரியாது. இரவா? பகலா? தெரியாது. ஒரே இருட்டறைதான். அவர்கள் மன நிலை எப்படி இருக்கும்?

அதே மாதிரிதான் இவர்கள் மனைவி மக்கள் நிலையும். அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வு இருண்டு விட்ட இருட்டறை வாழ்வுதான்.  

தாய் நாட்டு சிறைகளில் இருப்பவர்களின் குடும்பத்தவர்கள் என்ன வழக்கு என்ன விஷயம் என்று ஊர் உலகில் சொல்லி அழுது பாரத்தை இறக்கி வைக்க முடியும். 

கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் மேற்சொன்ன இருட்டறைகளிலும் கிடப்பவர்கள் பற்றி அவர்களது குடும்பத்தாராலோ நண்பர்களாலோ விக்கவும் முடியாத கக்கவும் முடியாத நிலை. ஈவு இரக்கம் உடையவர்கள் இந்த நிலைய எண்ணிப் பார்ப்பார்கள்.

கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் இருட்டறைகளில் கிடக்கும் இந்த  சிறைவாசிகளும்  உருவாக  காரணமானவர்கள்  யார்? தாய்நாட்டு சிறைகளில் வாலிபத்தைக் கழிக்க எந்த மாதிரி பிரச்சாரகர்கள், மைக் மாவீரர்களான  தொண்டை தொழிலாளிகள்  காரணமோ அவர்களும்  அதே மாதிரி உருவாகி விட்ட பிரச்சாரகர்களும்  மைக் மாவீரர்களான தொண்டை தொழிலாளிகளும் தான் காரணம். ஜும்ஆ மேடைகளில் நின்று கொண்டு சம்பந்தமில்லாமல் ஆஷிபா என்று காட்டு கழுதைகள் போல் கத்துவானுக.


விஷமிகளான இந்தக் கோழைகளின் நோக்கம் தன்னை வீரமிக்க பேச்சாளன் என்று காட்டுவதே. மைக் கிடைத்தவுடன் காக்கா வலிப்பு வந்தவன் மாதிரி வெறி பிடித்து கத்தினால் அவன்கள் மாவீரன்கள் சிறந்த பேச்சாளன்கள். அவன்களை இளம் ரத்தங்கள் விரும்பும். 

இவர்களைக் கொலை செய்தாலும் தப்பில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. உடலில் குண்டை கட்டி இறங்கி விடலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று உணர்வுகளை துாண்டி வார்த்தை விளையாட்டில் தொண்டைத் தொழிலாளிகள் கத்துவார்கள்.

இந்த நாய்களின்  கத்தலால் உணர்ச்சி வசப்பட்டவன்  மாட்டியதும். சொல்லத் தோன்றுகிறது என்றுதான் சொன்னேன். செய்யச் சொல்லவில்லை. எண்ணம் ஏற்படுகிறது என்று தான் பேசினேன் என்று சொல்லி தப்பித்து விடுவார்கள். 

மேற்கொண்டு விடுபட்டவர்களையும் காட்டிக் கொடுப்பார்கள். பிடிபடாதவர்களை பிடித்துக் கொடுத்தும் இந்த தொண்டைத் தொழிலாளிகள் தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

இந்த மாதிரி தொண்டைத் தொழிலாளிகளைத்தான் அழைத்து மீண்டும் மீண்டும் பேச வைக்க இளைய தலைமுறையினர் வலியுறுத்துவார்கள். பிறகு அந்த இளைய சமுதாயத்தின் ஒரு பகுதி சிறைவாசிகளாக ஆகி விடும். 

மைக் மாவீரர்களான எந்தத் தொண்டை தொழிலாளிகளெல்லாம் கடந்த காலங்களில் இளைஞர்கள் சிறை செல்ல காரணமாக இருந்தார்களோ அத்தனை மைக் மாவீரர்களும் இலங்கை சம்பவத்திற்குப் பிறகு மாற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். எதை வீரம் என்று துாண்டி விட்டார்களோ அதை பைத்தியத்தின் செயல் என்று பல்டி அடித்து பேசி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இறை வழியில் பயன்படுத்த பேங் வட்டி வாங்குவது ஹராம் ஆனால் பேங்கையே கொள்ளை அடிக்கலாம் என்று சொன்ன மாதிரி. கடல் கடந்த நாடுகளில் கண்ணால் காண முடியாத சிறைகளிலும் இருட்டறைகளிலும் கிடக்கும் சிறைவாசிகளுக்கு மைக் மாவீரர்களான தொண்டை தொழிலாளிகள் கொடுத்த பத்வா கஞ்சா கடத்தலாம் என்பது.

எந்த மாதிரி நாய்கள் இந்த மாதிரி பத்வாக் கொடுத்தார்கள். மன்னிக்க வேண்டும் இந்த மாதிரி பத்வாக் கொடுத்தவன்களை தாஇகள் என்று நல்லவர்கள் சொல்ல மாட்டார்கள். நன்றி கெட்ட நாய்கள் என்றுதான் சொல்வார்கள்.

கடல் கடந்த நாடுகளின் இருட்டறை சிறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கிடக்க எந்த மாதிரி நாய்கள் காரணம் என்று என்னால் பெயர் சொல்லி எழுத முடியும். இயக்க வெறி பிடித்த கூட்டம் ஒட்டு மொத்தமாக குரைக்கும். அதனால் செய்தியை மட்டும் பதிகிறேன்.

கடைசியாக இறை வழியில் பயன்படுத்த கஞ்சா கடத்தலாம் என்ற பத்வா பெற்று கைதானவர்கள் எல்லாம் தெரு நீள தாடி உடையவர்கள். இவனிடம் கேட்டால் அந்த இயக்கத்துக்காரன் காட்டிக் கொடுத்தான் என்கிறான். அவனிடம் கேட்டால் அவன்கள்தான் எங்களை முஸ்லிமாகக் கூட மதிக்காமல் நடந்தார்கள் என்கிறான்.

வேலை தேடி விஸிட்டில் வந்தவனுக்கு உதவும் நோக்குடன் தன் சிம் கார்டு போனைக் கொடுத்ததால் மாட்டியவர்களும் உள்ளார்கள். அது போன்ற அப்பாவிகளை காப்பாற்றலாம் என்றால். தப்பி ஓடிய தெரு நீள தாடிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றன. பெரிய தாடி வைத்ததால் பிடித்து விட்டார்கள் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. இலங்கை சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாட்டினரின் தாயக அளவிலும் விசாரணைக்கு ஏற்பாடாகி விட்டது என்ற நிலை வந்த பிறகே இதை பகிரங்கமாகப் பதிகிறேன்.

துாண்டி விட்டு விட்டு பல்டி அடித்து விட்ட ஒவ்வொருவன் மீதும் துாண்டி விட்ட ஒவ்வொரு இயக்கத்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக, யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன் என்று துஆச் செய்யுங்கள் என்று நான் சொல்லத் தேவை இல்லை. 

கடல் கடந்த நாடுகளின்  சிறைகளில் உள்ள வாலிபர்களின் இளம் மனைவிகள், பெற்றோர்கள், தந்தை உயிருடன் இருக்கவே யதீம் ஆகி விட்ட சிறு பிள்ளைகள் என எல்லோரும் ரத்தக் கண்ணீர் சிந்தி இந்த ரமழானில் இரு கரம் ஏந்தி இருப்பார்கள். இவர்களின் பிரார்த்தனை அவர்களை சும்மா விடாது.

இனிமேல் எவனாவது மைக் கிடைத்தவுடன் காக்கா வலிப்பு வந்தவன் மாதிரி வெறி பிடித்துக் கத்தினால் அவன்களை செருப்பால் அடியுங்கள்.  அவன்களை மாவீரன்கள் சிறந்த பேச்சாளன்கள் என எண்ணாதீர்கள். அவன்கள்தான் உங்கள் சகோதரர்களை இருட்டறையில் தள்ளிய ரகசிய கூலிகள், யூதக் கைக் கூலி, அமெரிக்க கூலிப்படை என்று விளங்குங்கள். 

தொண்டைத் தொழிலாளிகள் உங்களிடமும் கூலி வாங்கி விடுவான், காட்டிக் கொடுத்தும் காசு பார்த்து விடுவான். 

இனிமேலும் மைக்கில் உணர்வுகளை துாண்டி விடுபவர்களை வைத்து பேச வைத்தால் பேச வைப்பவர்கள் மீது யா அல்லாஹ் உன பிடியை இறுக்குவாயாக!

மீண்டும் எச்சரிக்கிறோம், வெளிநாடுகளில் உள்ளவர்களே யார் வேலை தேடி விஸிட்டில் வந்தாலும் உதவும் நோக்குடன் உங்கள் சிம் கார்டுகளை கொடுக்காதீர்கள். அவனவன் பாஸ்போர்ட் காப்பி மூலமே சிம் கார்டு எடுத்துக் கொள்ளட்டும்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.