இந்த விஷயங்களில் அம்மா அம்மாதான்.

வன்னியர்கள் அந்நியர்கள் ஆவோம் என்ற எச்சரிக்கையை மீறி  வீரப்பனை வீழ்த்தியதில் அம்மா அம்மாதான். 
ராஷ்ட்ரபதிகளையெல்லாம் காலுக்கடியில் தரையில் இருக்க வைத்த சங்கராச்சாரியாரின் சங்கர மடத்தில் சமமான உயர நாற்காலி போட வைத்து சமமாக இருந்ததில் அம்மா அம்மாதான். 

யார் என்னை நெருங்க முடியும் என்று இருந்த அந்த சங்கராச்சாராச்சாரியாரை  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சிறையில் போட்டதில் அம்மா அம்மாதான். அந்த அம்மா ஆட்சி செய்த அடுத்த அதிரடிதான் கீழே உள்ள செய்தி. 
வாட்ஸப்பில் அனுப்பிய மேலப்பாளையம்  பெட்டி ஞானியாருக்கு நன்றி


முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் செய்த கல்யான் ராமன் கைது
எனது புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறை நடவடிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.

கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவுச் செய்திருந்தார். இதனை சுட்டிக் காட்டி நமது புகார் அளிக்கப்பட்டது.

நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைதுச் செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அது குறித்து வெறுப்பு பிரச்சாரப பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைதுச் செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண் ராமன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.