ராஜா உசேனின் இந்நிலைக்கு யார் காரணம்? யார் மூல காரணம்?

கலங்கிய கண்களோடும் கனத்த இதயத்தோடும் என்ற தலைப்பில் உள்ளது 91 90433 80204  syead Ahamed அவர்கள் “மேலப்பாளையம் செய்தி ”என்ற வாட்ஸப்  குரூப்பில் பதி்ந்தது. 

முஸ்லிம் சிறைவாசிகளின் நிலைமை....! என்ற தலைப்பில் உள்ளது +974 3081 7295  தளபதி ஹாஜி அவர்கள் ”விவாத மேடை” என்ற வாட்ஸப்  குரூப்பில் போட்டோக்களுடன் பதி்ந்தது.

ராஜா உசேனின் இந்நிலைக்கு யார் காரணம்? என்று கேட்டு இரு துறைகள் பற்றி சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் முந்தைய துறை ஒன்று இருக்கிறது. அதுதான் யார் மூல காரணம்?  என்பது. மூல காரணமானவன்களும் இருக்கிறார்கள். மூல காரணமானவன்கள் கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. 

”வாக்கை (வாக்குறுதியை) நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக வாக்கு(குறுதி பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். (திரு குர்ஆன் 17:34) என்பதை விரிவாக ஊருக்கு மட்டும் உபதேசிப்பான்கள்.

பாதிப்புக்குள்ளானவர்களை மீட்க சமுதாயம் திரண்டு எழ வேண்டுமா?  இன்றைய இளைய சமுதாயமும்  வருங்கால  சமுதாயமும் இனி பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டுமா? உண்மையை போட்டு உடையுங்கள் விடிவு காலம் ஏற்படும்.

...  தயவு தாட்சண்யம் இன்றி வெளிப்படையாக விவரித்து அறிவித்து விடுங்கள் (அல் குர்ஆன் 15;94)



கலங்கிய கண்களோடும்
கனத்த இதயத்தோடும்

இந்த பதிவு .. படியுங்கள் பரப்புங்கள்
மதுரை ராஜா உசேன் (எ) ராஜா உசேன்
சுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் சிறையில் சிறைவாசியாக இருக்கின்றார் ..
முதலில் மதுரை சிறையில் இருந்தவரை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார் ..
பிறகு பாளையங்கோட்டை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் ..
பிறகு புழல் சிறையிலிருந்து
வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் ..
வேலூர் சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் .
கடலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்க்கு இன்று    05-01-2016 அழைத்து வரப்பட்டார் ..
எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தாலும்
எவ்வளவு சித்திரவதைகளை சிறைதுறை
செய்தாலும் கலங்காத வீரன் என்றால் அது
ராஜா உசேனாக தான் இருப்பார் .
அப்படி பட்டவர் இன்று நீதிமன்றத்திற்க்கு
அழைத்து வரப்பட்ட போது நான் கலங்கி
நின்றேன் ...
ஒரு 60 வயது எய்ட்ஸ் நோயாலி போல
தளர்ந்த நடையோடும்
சுருங்கிய விழிகலோடும்
ராஜா உசேன் வந்தார் ..
எதிரிகளை கூட சபிக்க கூடாது என்ற
இஸ்லாமிய மரபில் வாழ்ந்து வரும் நான்
என்னையும் அறியாமல் யா-அல்லாஹ் இந்த சகோதரனை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை நாசமாக்கு என சபித்துவிட்டேன் என்றால் பாருங்கள் ராஜா உசேன் நிலை எப்படி இருக்கும் என பாருங்கள் .
சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள ராஜா
உசேனை 24 மணி நேரமும் தனி செல்லில்
அடைத்து வைத்து அறையை பூட்டியே வைத்துள்ளதாகவும் . காலையும் , மாலையும்
ஏதோ ஊசி போடுகின்றனர் என்றும் அந்த ஊசியால் என்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ,
நான் யாரிடம் சொல்ல
எப்படி முறையிட
எனக்கு தெரியவில்லை
என சொல்லி கண்கலங்கிய
போது நாங்களே கலங்கி விட்டோம் .
ராஜா உசேனின் இந்நிலைக்கு யார் காரணம்
என உளவுதுறையை கேட்டால் சிறைதுறை
என்றும் சிறைதுறையை கேட்டால் உளவுதுறை
என்றும் காரணம் கூறி தப்பிக்கின்றனரா ?
அல்லது சாகடிக்க இரண்டுதுறையும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனரா ?
அல்லாஹ்வே அறிந்தவன் ..
தமிழக அரசு உடனே தலையிட்டு மதுரை ராஜா உசேனை சென்னை புழல்சிறைக்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் வழக்கறிஞர் புகழயேந்தி தலைமையில் இந்திய தேசிய லீக் கட்சியும் , தமிழ்த்தேச மக்கள் கட்சியும் இணைந்து சிறைதுறை தலைவர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் ..
அன்புடன்
இந்திய தேசிய லீக் கட்சி
தமிழ்த்தேச மக்கள் கட்சி


முஸ்லிம் சிறைவாசிகளின் நிலைமை....!
20 ஆண்டு கால சிறைவாழ்க்கையில்....
சிறைத்துறையின் அடுத்தகுறி ராஜா உசேனா..?
ஓ.... சமுகமே...
சபுர் ரஹ்மானையும், தஸ்தகிரையும் இழந்தது போதும்.
முஸ்லிம் சமுதாயமே ஒன்றினையுங்கள்
ராஜா உசேனின் ஜனாஸா தொழுகைக்காக அல்ல
49 முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக....
(குறிப்பு)
சிறைவாசம் கழித்து வெளிவரும்போது அவர்களின்நிலை.....
இதேபோல் தவரான மருத்துவ அனுகுமுறையால்
எதற்க்கு எவ்வித மருத்துவமே என்று அறியாமல்
தேவையற்ற மருந்துமற்றும் ஊசிகளை போட்டு கொடிய நோய்க்கு ஆளாக்கி
சில நாட்களுக்கு முன்பு #சைனாஅப்பாஸ் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது...


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.