*பாய்'களுக்குள் என்ன சண்டை?

[1/21, 6:54 AM] ‪+91 98943 59604‬: "சந்தி சிரிக்கிறது
இயக்கங்களின்  சண்டை ."
நாங்கள் தான் 'ஷிர்கை' ஒழிப்பவர்கள் என எண்ணும் சிலர்,
தான் சார்ந்த இயக்கம்  நடத்தப்போகும் மாநாட்டிற்கு அழைக்கிறோம் என நினைத்து,
"கப்ரு வணங்கிகளே!"
"கப்ரு முட்டிகளே!"
வாருங்கள் எங்கள் மாநாட்டிற்கு என பேஸ்புக்கில் அழைப்பு விடுகின்றனர்.
இதை படிக்கும் அவர்கள் இவர்களை திட்ட, இந்த சண்டை விவாதமாகி இறுதியில் அவர் இவர் குடும்ப பெண்களை திட்ட,
இவர் அவருடைய குடும்ப பெண்களை பற்றி தரைகுறைவாக பேசும் நிகழ்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
    "இது ஓரு பக்கம்."
    "மற்றொரு பக்கம்"
எங்கோ ஓர் ஊரில் ஜனாஸா தொழ வைப்பதில் ஆன சண்டை,
தீர்வே இல்லாமல் வலுத்துக் கொண்டே சென்று, இறுதியில் பெண்கள் ஜனாஸாவை தூக்கிய அவலம், இதுவரை நமக்கு மட்டுமே தெரிந்தது.
நாம் அனைவரும் இந்த அவலத்தை எண்ணி வேதனையும் பட்டோம்.
ஆனால் இன்று தாங்கள் தான் 'சுன்னத் ஜமாஅத்' என நினைத்து கொண்டிருக்கும் சிலர்,
'தவ்ஹீத் ஜமாஅத்'தினரை கண்டிக்கிறோம் என்று, இந்த அவலத்தை ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். 
இந்த விவாதங்களையும், போஸ்டர்களையும் பார்க்கும் மாற்றுமத நண்பர்கலெல்லாம்,
*பாய்'களுக்குள் என்ன சண்டை?
*இஸ்லாத்தில் இரண்டு முஸ்லிம்கள் உள்ளார்கள் போல!
*யாரென்று தெரியாத நமக்கு வெள்ளத்தில் உதவினார்கள்,
இன்று அண்ணன், தம்பியாக இருக்கும் இவர்களே அடித்து கொள்கிறார்களே!
      "மேலும்"
*நாம் யாரிடமாவமது இஸ்லாத்தில் ஜாதி இல்லை, அனைவரும் சமம் என தாஃவா செய்தால்,
உங்களுக்குள் ஜாதி சண்டை இல்ல பாய்!
ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக 'இயக்க சண்டை' இருக்கே பாய்.!
என கூறும் போது செருப்பால் அடித்தாற் போல் உள்ளது.
இன்னும் இஸ்லாமிய எதிரிகள் கைகொட்டி சிரித்து,
முஸ்லிம்களே அடித்துக் கொள்வதால் நம் வேளை இலகு என பூரிப்படைகின்றனர்.
கண்ணியத்திற்குரியவர்களே!
*எதிரிகள் நம் 'தலை'யை வெட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
  "நாம் தலையில் தொப்பி போடலாமா? வேண்டாமா? என சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.
*எதிரிகள் நம் கையை வெட்ட காத்துக் கொண்டிருக்கிறான்.
  " நாம் விரலை ஆட்டலாமா? வேண்டாமா? என சர்ச்சை செய்து கொண்டிருக்கிறோம்.
*அல்லாஹ் இஸ்லாம் தான் நேரான வழி என்று கூறியுள்ளான்.
நாம் இஸ்லாத்தில் எது நேரான வழி என விவாதம் செய்து கொன்டிருக்கிறோம்.
ஒன்றை நினைவில் கொள்வோம்!
"நபி(ஸல்) அவர்களின் இறுதி நேரத்தில்,
'வாருங்கள் நீங்கள் என்றுமே வழிதவறாத அளவிற்கு ஒரு மடலை எழுதி தருகிறேன். என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அது என்னவென்று கூறுவதற்குள்,
ஸஹாபாக்களில் சிலர் அது சம்பந்தமாக சர்ச்சையில் ஈடுபட்டு  கூச்சலும், குழப்பமாய் இருந்ததால், நபி(ஸல்) அவர்கள் "என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்"  என கூறிவிட்டார்கள்.
(புகாரி7366ன் சுருக்கம்)

அன்று ஸஹாபாக்களில் சிலர் ஒருதடவை சச்சரவில் ஈடுபட்டதால், இந்த உம்மத்திற்கு கிடைக்க வேண்டிய நற்செய்தி கிடைக்காமல் போய்விட்டது.
நாம் தினந்தோறும் இப்படி வீண் விவாதங்களிலும், ஒருவர் மற்றவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதிலும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்.
இயக்க சண்டையை விட இஸ்லாத்தின் அடிப்படையான "ஒற்றுமை" எனும் கயிறை பற்றிப் பிடிப்போம்.!

[1/19, 6:57 AM]  பெரம்பலுார் நாஸர் அலிகான்.Naser1: وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!
(அல்குர்ஆன் 3:103)

“தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 7054
ஸஹீஹ் புஹாரி .

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.