மகா மட்டமான பேராபத்தான ஒட்டு மொத்த தீமைகளுக்கும் கருவான கொள்கை எது?

குருடனின் கேள்வி  என்ன? குர்ஆனுக்குரியவனின் பதில் என்ன?


ஷிர்க் வைக்கவும் பித்அத்கள் செய்யவும் அடிப்படைக் காரணங்கள் எவை?

மரக்கிளை கதை வசனகர்த்தாக்களின் கற்பனை வார்ப்புகளா இவை?

-----------------

குர்ஆன் ஹதீஸ்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அது அல்லாத எதையும் பின்பற்றக் கூடாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படையானக்  கொள்கை.

 

இதற்கு மாற்றமாகவும் எதிராகவும் உள்ள தவறான கொள்கைகள் உடையவர்கள் ஏராளமாக உள்ளார்கள்.


அவர்கள், குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்று சொல்லக் கூடியவர்களை வழிகெட்டவர்கள் என்றும்  2:26 வசன ஆதாரப்படி குர்ஆன் அவர்களை வழி கெடுத்து விட்டது  என்றும்  கூறுவார்கள்.


குர்ஆன் வழி கெடுக்கும் என்ற  கொள்கையுடன் பல பிரிவுகளாக உள்ள அவர்கள் குர்ஆன் ஹதீஸுடன்  வேறு வேறானவைகளையும் பின் பற்ற வேண்டும் என்பார்கள்.


குர்ஆன்  ஹதீஸுடன்  பெரியார்களான அஹ்ல பைத் முன்னோர்கள் 12 இமாம்கள் என்று ஆரம்பித்து வைத்தவர்கள் ஷியாக்கள்.

அந்த ஷியாக்களை 72 கூட்டத்தினரும் வழி கெட்டவர்கள் என்றார்கள்.  


ஆனால் குர்ஆன் ஹதீஸுடன் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், ஸலபுகள் போன்றவர்கள் சொன்னதையும் பின்பற்ற வேண்டும் போன்ற கொள்கையுடன் கூடிய 71 கூட்டங்கள் உருவான வழி எது?  



இவர்களால் வழிகெட்டவர்கள் என்று சொல்லப்பட்ட ஷியாக்கள்.  வழிதான்.


இவைதான் ரொம்ப  ஆபத்தான கொள்கை.  


குர்ஆன் ஹதீஸில் இல்லாதவையும் மார்க்கம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற கட்டுக் கதைகளை ஆதாரமாகக் காட்டினார்கள்.

அதனால்  இஸ்லாத்தின் பெயரால் கலப்படங்கள்  அதிகமாக ஆகி விட்டன.


ஷிர்க் வைக்கவும் பித்அத்கள் செய்யவும் அடிப்படைக் காரணங்களே.  குர்ஆன் ஹதீஸுடன் மற்றவற்றையும் கலந்து விட்ட  இந்த ஆபத்தான கலப்பட  கொள்கைகள் தான். 


இருக்கின்ற கொள்கைகளிலேயே மகா மட்டமான கொள்கை, பேராபத்தான கொள்கை ஒட்டு மொத்த தீமைகளுக்கும் கருவாக இருக்கக் கூடிய கொள்கை  எது?


குர்ஆன்  ஹதீஸுடன்  இதுவும் உண்டு / இன்னுமும் உண்டு என்பது தான்.


குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்பதில் உறுதியாக நின்று பிரச்சாரம் செய்பவர்களை ஷிர்க், பித்அத்கள் செய்ய  வைக்க  முடியாது. 


தேவ்பந்தி போன்றவர்கள்  ஷிர்க், பித்அத்களை எதிர்க்கிறோம் என்பார்கள். 

ஆனால் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும்தான் மார்க்கம். வேறு எதுவும்  மார்க்கம்  இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். 

அதனால் அவர்களால் ஷிர்க், பித்அத்களை ஒழிக்க முடிவதில்லை.


ஷிர்க், பித்அத்களுக்கு  எதிரான  தேவ்பந்திகள் பிரச்சாரம் குர்ஆன் ஹதீஸ் என்ற இரண்டுடன் நிற்காது. 

அந்தப் பெரியார்கள், நாதாக்கள், இமாம்கள் மவுலானாக்கள் அப்படி சொன்னார்கள்  என்று சேர்த்தே சொல்வார்கள்.


இந்த தேவ்பந்திகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதாகச் சொல்லும் பரேலவிகள்.  

தேவ்பந்திகளே! உங்களின் அந்தப் பெரியார்கள் அப்படிச் சொன்னார்களா? எங்களின் இந்தப் பெரியார்கள், நாதாக்கள், இமாம்கள் மவுலானாக்கள் இப்படி  சொன்னார்கள்.  


இந்த மாதிரி  அவர்கள் பெரியார்கள் சொல்லுக்கு  இவர்கள் பெரியார்கள்  சொல் பதில் என வாய்ப் பூட்டு போட்டு விடுவார்கள்.


குர்ஆன் ஹதீஸுடன் இன்னுமுள்ளவையும் மார்க்கம் என்று ஒப்புக் கொண்ட அவர்களை அந்த இன்னுமுள்ளவைகளைக் கொண்டே ஷிர்க் வைக்கவும் பித்அத்கள் செய்யவும் வைத்து விட்டார்கள்.  

 

அதனால் தான் எடுத்துச்  சொல்கிறோம். 


நேர்வழி அல்லாஹ்விடமிருந்து தான்  வரும்.  அல்லாஹ்வின் நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் வழி தவறவே மாட்டார்கள். துர்பாக்கியசாலியாகவும் ஆக மாட்டார்கள்.  அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும்  மாட்டார்கள்.

 

அல்லாஹ்வின் போதனையைப் புறக்கணிப்பவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு.  அவர்கள்  நரகவாசிகள். அதில்  நிரந்தரமாக இருப்பார்கள்.


அவர்களை  கியாமத்  நாளில் குருடனாக அல்லாஹ் எழுப்புவான்.

 

குருடனாக எழுப்பப்பட்டவன். 

 

"ரப்பீ - என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று கேட்பான்.


அதற்கு அல்லாஹ் பதில்  சொல்வான்.

 

அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று  மறக்கப்படுகிறாய்.


நமது வசனங்களை ஏற்க மறுத்து பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.


எவன் தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
என்றும் அல்லாஹ் கூறுவான்

 

இவை,  மரக்கிளை கதை வசனகர்த்தாக்களின் கற்பனை வார்ப்புகள்  அல்ல.  


படைத்த இறைவனே குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளவை. அவற்றையே  நாம் எடுத்து எழுதி உள்ளோம். 


முதல்  மனிதராக படைக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களை சொர்க்கத்திலிருந்து கீழே இறக்கியபொழுது அவர்களிடம்  சொன்னவைதான்.

 

எப்படி சொன்னான்?  ஆதமே!  என் கையினால் 
உன்னைப் படைத்தேன். 

உனக்கு கல்வியை - இல்மை நான்தான் கற்றுத் தந்தேன். 

மலக்குகளுக்கு தெரியாதவற்றை எல்லாம் உனக்குச் சொல்லித் தந்தேன்.  

மலக்குகளுடன் போட்டி வைத்து  உன்னை ஜெயிக்க வைத்தேன். 

என்னிடம் பாடம் பெற்றவன் நீ.  

ஆகவே நீயாக சிந்தித்து ஆய்ந்து  செயல்படு என்றானா?


 

இதுவரை வந்துள்ள கோடான கோடி  மக்களுடைய, இனி இறுதி வரை வர உள்ள   கோடான கோடி  மக்களுடைய மூளைகளும் – அறிவும் அவரிடம் இருந்து வந்தவைதான்.  நேரடியாக படிப்பினை பெற்றவரும் அவர்தான்.  ஆகவே என்னிடம் பாடம் படித்த   நீயாக சிந்தித்து ஆய்ந்து செயல்படு என்று சொல்வதற்கு முழுத் தகுதி உடையவர் நமது தந்தை ஆதம்(அலை) தான்.


அவரிடம் தான் அல்லாஹ் சொல்கிறான். 

Fபயிம்மா யஃதியன்னகும் மின்னீ ஹுதன்

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى

என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்  என்று கூறி உள்ளான்.  


மரவெட்டி கிஸ்ஸாக்களான கப்ஸாக்களை  கட்டி விடுபவர்கள் கூறுபவைகள்  நேர்வழிகள் அல்ல.   


அல்லாஹ்விடமிருந்து வந்ததே நேர்வழி  (2;38 20; 123) என்கிறான். 


அல்லாஹ் கூறிய நேர் வழியை ஏற்க மறுத்து புறக்கணித்து.   குர்ஆன் ஹதீஸில் இல்லாதது,  இட்டுக் கட்டிக் கற்பனையாகக் கூறுபவர்களிடம் இருக்கிறது   என்று கூறுபவர்களுக்கு.  குர்ஆன் ஹதீஸ் அல்லாத வழிகளை சொல்பவர்களுக்கு. அந்த வழிகளில்  போகிறார்களே அவர்களுக்குரிய தண்டனைகளைத்தான்.  


அவர்கள் நரகவாசிகள். அதில்  நிரந்தரமாக இருப்பார்கள் 

நெருக்கடியான வாழ்க்கை உண்டு.  குருடனாக எழுப்புவோம். 

என்று  2;39 20;124-127. வசனங்களில் கூறிக் காட்டி  உள்ளான். 


---------------


வமா அலைனா இல்லல் பலாஃகுல் முபீன்

36:17 وَمَا عَلَيْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏


தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை'' 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.