ஆண்டாண்டு கால ஆலிம்களின் ஆதங்கமும் அதற்கான நமது பதிலும்

அபுஅப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி,  இம்தாதி போன்றவர்களை கொலை செய்ய பத்வா கொடுக்கப்பட்டதாக வெளியில் சொன்ன விஷமியைத் தெரியுமா? 

சமீபத்தில் நாம் போட்ட பதிவுகளில் இரண்டு பதிவுகள் ஆலிம்களில் சிலரை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. அதனால் வந்த கோபத்தை எழுத்துக்களாகவும் வாய்ஸ் வார்த்தைகளாகவும் கொட்டி தீர்த்து உள்ளார்கள். தவ்ஹீது ஜமாஅத் என்ற பெயரில் உள்ளோர் பெரும்பாலும் ஹாமித் பக்ரி, அப்துல் ரவூப் பாகவி போன்றவர்கள் உரைகளை கேட்பதே இல்லை. கேட்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். நாம் அப்படி அல்லhttps://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_8.html

39:17,18 வசனங்கள்படி எல்லார் உரைகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஹாமித் பக்ரி உரையில் கூட ஒரு விஷயத்தில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பேசி இருந்தார். உடனே போன் போட்டும் வாட்ஸப்பில் பேசி அனுப்பியும் அந்த ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டிருக்கிறேன். இது உண்மையா இல்லையா என்று அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் மதரஸாவில் தவ்ஹீது தாஇகளின் தரங்கெட்ட லீலைகள் பற்றி லுஹா சொன்னதும் எதிர்த்து நின்றவன் நான். உடனே நம்பத் தகுந்த ஒருவரிடம் பஸ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்ற நோட்டீஸை போட்டார். 

குற்றச்சாட்டுக் கூறியவர் ஆதாரம் வைக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்றார். சண்டாளப்பாவிகள் அனைவருமே அதைப் பரப்பினார்கள். அத்தனை ஆலிம்களும் துணை நின்றார்கள்.
மவுலவி K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி மட்டும் தான். பெருந்தொகை என்றால் எவ்வளவுங்க? ஒரு கோடி வாங்கி இருப்பாராங்க? அப்படி ஒரு கோடி வாங்கி இருந்தாலும் வாங்கத் தகுதியானவர் தாங்க பஸ்லுல் இலாஹி என்று சொல்லி உள்ளார்.

எந்த J.S. ரிபாஈ, இனாயதுல்லாஹ், V.M.S. அன்வர், E.B. செய்யது அலி போன்ற தக்வா ஜமாஅத்தினரும் சேர்ந்து இருந்த நிலையில் அந்த நோட்டீஸை ஊர் முழுக்க வினியோகிக்க துணை நின்றார்களோ, பார்த்துக் கொண்டு இருந்தார்களோ அவர்களிடம் தான் சொல்லி உள்ளார்

இம்தாதி சொன்னதை அந்த தக்வா ஜமாஅத்தினர் தான் என்னிடம் சொன்னார்கள். இப்படி சொன்னதாக மவுலவி K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி இதுவரை என்னிடம் சொன்னது கிடையாது.

அன்றைய தவ்ஹீது ஜமாஅத் தலைவராக இருந்த ஹாமித் பக்ரி உட்பட பல மவுலவிகள் தவ்ஹீது தாஇகளை இலாஹி இழிவுபடுத்தி விட்டார் அதற்கு பதிலடிதான் அந்த நோட்டீஸ் என்று பதில் கூறி பீ.ஜே.க்குத்தான் துணை நின்றார்கள்லுஹா சொல்லித்தான் அந்தக் குற்றச்சாட்டுக்களை எழுதினேன் என்பது 26.06.2002ல் கடையநல்லுாரில் கூடிய அத்தனை பேருக்கும் தெரியும். 

லுஹா சொன்னதாக இலாஹி சொன்னது பொய். நான் அவ்வாறு சொல்லவில்லை. சொல்லி இருந்தால் லுஹாவாகிய என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று லுஹாவிடம் வீடியோ பண்ணி வெளியிட அன்று தான் முடிந்ததா? இன்று தான் முடிகிறதா?

களஞ்சியத்தில் காமக் களியாட்டங்கள் போட்ட தவ்ஹீது மவுலவிகள் ஒருவர் இருவர் என்றால் வீடியோ பண்ணி இருப்பார்கள். தவ்ஹீது தாஇகள் என்ற பட்டாளம் அல்லவா புகுந்து விளையாடியது. பாய்ந்து விளையாடியது.  பந்துகளை தட்டி விளையாடியது. 

அதே ஹாமித் பக்ரிக்கு அதே ஆண்டு அதே பீ.ஜே.யால் தீவிரவாதி முத்திரைக் குத்தப்பட்டது. தவ்ஹீது மவுலவிகள், தாஇகள் அனைவரும் தவ்ஹீது ஜமாஅத்தின் அந்த வார ஜும்ஆ உட்பட எல்லா மேடைகளையும் ஹாமித் பக்ரி தீவிரவாதி என்று உறுதிபடுத்தவே பயன்படுத்தினார்கள்.

பெருந்தொகை என்ற பொய்க் குற்றச்சாட்டுக்கு துணை நின்றவர் பக்ரி என்று பகைமை பாராட்டவில்லை. காரணம்  அது முஃமின்களின் செயல் இல்லை. எதில் தவறு செய்தார்களோ அதில் மட்டும் தான் சம்பந்தப்பட்டவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். அதுதான் குர்ஆன் ஹதீஸ் காட்டிய வழி.

ஹாமித் பக்ரி குற்றவாளி இல்லை, நிரபராதி என்று நோட்டீஸ் போட்டு எனது பெயருடன் முடிந்தவரை பல ஊர் ஜும்ஆக்களில் வினியோகிக்க வைத்தவன் நான்தான். பக்ரி கைதை கண்டித்து மேலப்பாளையத்தில் கண்டனக் கூட்டம் போட வைத்ததும் நான்தான்.

அப்பொழுது துபையிலிருந்த மு.லீக் தலைவர் காதர் மைதீன் அவர்களை சந்தித்து பக்ரி விடுதலைக்கு குரல் கொடுக்க வலியுறுத்தினோம்

ஹாமித் பக்ரி வழக்கு வகைக்கு என்று அனுப்பிய பணத்தை திண்றவர்கள்தான் பக்ரி விடுதலைக்கு பாடுபட்டவர்கள் என்று பக்ரி விளங்கிக் கொண்டார்.

விடுதலையான பக்ரிக்கு வாழ்வாதரத்தில் கெடுதல் செய்தவர்கள் இரண்டு தவ்ஹீது மவுலவிகள். அதில் ஒருவன் மகா விஷமி. என் வீட்டிற்கு பக்ரி உட்பட பல தவ்ஹீது மவுலவிகளுடன் வந்தான். பீ.ஜே. பற்றி குற்றச்சாட்டுக்களை எல்லாரையும் போல் அள்ளி வீசினான். மற்றவர்களை விட பீ.ஜே.யை அதிகமாகவும் கீழ்தரமாகவும் விமர்சித்தான்.

பீ.ஜே.யிடம் போய் இலாஹி உங்களுக்கு எதிராக சதி திட்டம் போட்டான். எல்லா மவுலவிகளும் ஆதரித்தார்கள். இலாஹிக்கு எதிராகவும் உங்களுக்கு (பீ.ஜே.க்கு) ஆதாரவாகவும் நான் மட்டும் தான் இலாஹியை எதிர்த்து பேசினேன் என்று பொய் சொன்ன பொய்யன் அவன்.

ஜிஹாது காலத்தில் (90களில்) நடந்த ஜிஹாது சம்பந்தமான ரகசிய கூட்டங்களில் கலந்து கொண்டு எப்படியெல்லாம் ஜிஹாது செய்ய வேண்டும் என்று பேசினான். 

கோட்டூர் ஜிந்தாவை கொலை செய்வது எப்படி என்பது முதல், பீ.ஜே.யை எதிர்த்த அபுஅப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி,  இம்தாதி, ரபீக் அஹ்மது மற்றும் ஒரு நாடகம் அரங்கேறுகிறது? என்ற தலைப்பில் 01.10.1996. தேதியிட்டு டைப் செய்யப்பட்ட 9 பக்க பிரசுரம் வெளியிட்ட. L.K.S செய்யது அஹ்மது போன்றவர்களை கொலை செய்து விட பீ.ஜே. பத்வா கொடுத்ததார் என்றும். அதை தான் மட்டுமே எதிர்த்ததாகவும் வெளியில் சொல்லி பெருமைப்பட்ட மகா விஷமி அவன்.

இன்றும் திருந்தாத அப்படிப்பட்ட விஷமியான அந்த ஜென்மத்துடன்தான் அறிஞர் பட்டாளங்கள் கை கோர்த்து நிற்கிறது. யா அல்லாஹ் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக செயல்பட்ட அந்த விஷமி வாயிலும் அவனை தலைவனாகவும் மாநில அளவிலும் துாக்கி திரிபவர்கள் கையிலும் புழு புழுவாக புழுத்து சாகச் செய்வாயாக ஆமீன்.

அரபி மதரஸாக்களில் ஆபாச களஞ்சியம் என்று நோட்டீஸ் போட்ட மாதிரி களஞ்சியம் பெண்கள் மதரஸாவில் காமக் களியாட்டங்கள் என்று லுஹா சொன்னதும் அவர்களது செயலை அடையாளம் காட்டுங்கள், அடையாளம் காட்டுங்கள்  என்று கூவு கூவு என்று கூவியவன் நான்.

அப்பொழுது எல்லாரும் வாய்ப்பு இருந்தும் வாய் மூடி பீ.ஜே.யின் காலடியில் கிடந்தார்கள். அந்த ஆள் மக்கள் பலம் இழந்த பிறகுதான் பலஹீனமான பலர் வீரர்கள் போல் வீதிக்கு வந்து அவருக்கு எதிராக கூட்டத்தோடு கூட்டமாக கூத்தடித்து நிற்கிறார்கள்.

எவ்வளவு கத்து கத்தினேன்  ராப்பகலா துாங்காமல் எழுதினேன். ஒருத்தனுமே கண்டு கொள்ளவில்லை. தெளிவாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் துாக்கி பிடித்துத்தான் நின்றார்கள். அவர்கள் சொல்கிறார்கள் இலாஹி இன்று பீ.ஜே.யை துாக்கி பிடித்து நிற்கிறார் என்று.

(நபியே!) என் அடியார்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், சொல்வதை செவிதாழ்த்தி ஆழ்ந்து கவனமாகக் கேட்பார்கள். அவற்றில், மிக அழகானதை - சிறந்த அம்சத்தைப் பின்பற்றுவார்கள். வர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்கள்தான் உண்மையில் அறிவுடையவர்கள் ஆவார்கள். . 39:17,18

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.