குர்பானியில் பீ.ஜே.யின் பொய்யும் அல்லாஹ்வின் சாபமும்


தஃவாப் பணிக்கு என்று தவ்ஹீது அறிஞர்கள் குழு வசூலித்த பணங்கள் எங்கே போயிற்றுதவ்ஹீது அறிஞர்கள் குழு காசடிக்க மோசடி வழியைச் சொன்னவர் யார்? 5 லட்சம் செலவு செய்து ஹஜ் செய்தவர் தனது ஹஜ்ஜின் அமலை 2 லட்சத்து விற்க தயாராக உள்ளார். இந்த அமலை விலை கொடுத்து வாங்க முடியுமா? இந்த மாதிரி அமலை வாங்கியவர்கள் யார்? குர்பானியில் பீ.ஜே. சொன்னது பொய் என்றால் அந்தப் பொய்யை பரப்பிய நம்மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குமா? நாம் பீ.ஜே.யின் ஆதரவாளரா? பீ.ஜே.க்கு எதிராக மாதர் சங்க தலைவி சுகந்தி அவர்களை அணுகியது யார்? முறியடித்தது யார்?
5 ஆண்டுகளுக்கு முன் கூட்டுக் குர்பானி பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தில் அன்று TNTJ தென் சென்னை மாவட்ட நிர்வாகியாகவும் இன்று மாநில நிர்வாகியாகவும் உள்ள அப்துல் றஹீம். அன்று மாநில பொருளாளராக இருந்த சித்தீக் மற்றும் சிலரும் 20 சதவீதம் வரை கமிஷன் அடித்தார்கள். கூட்டுக் குர்பானியை காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் அடிக்கும் அந்த வழக்கம் TNTJயின் இன்றும் உள்ளது.

இதற்கு TNTJயினர் குர்பானியில் பொய் சொல்லும் பீ.ஜே. என்று வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதற்கு பீ.ஜே. விலையை ஆதாரமாகக் காட்டிப்  பேசினாரா? உதாரணமாகக் கூறினாரா? என்று NTF சகோதரர்கள் நம்மிடம் வாதம் வைக்கிறார்கள். அது அவர்கள் நிலை. நமது நிலை அது அல்ல.

தரமான மாடுகளுக்கு என்று வசூலித்து விட்டு. காண்ட்ராக்ட் விட்டு. குர்பானிக்கு தகுதியில்லாத ஒரு வயது கூட ஆகாத கன்றுக்குட்டிகளை அறுத்தார்கள். இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கள் வீடியோக்களாக வந்தது

அதை பரப்பிய நாம் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். தனி மனிதர் லாபம் வைத்து வியாபாரம் செய்யலாம் என்றால் ஜமாஅத்தும் செய்யலாம். ஜமாஅத்தும் வியாபார அடிப்படையில் தான் செய்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும். சேவை போல் காட்டி ஏமாற்றக் கூடாது.

இதில் மிகப் பெரிய குற்றம் கண்டிக்கப்பட வேண்டிய குற்றம். அடையாளம் காட்டப்பட வேண்டிய குற்றம்.  தரமான மாடுகளுக்கு என்று வசூலித்து விட்டு. காண்ட்ராக்ட் விட்டு. குர்பானிக்கு தகுதியில்லாத ஒரு வயது கூட ஆகாத கன்றுக்குட்டிகளை அறுத்தார்கள் என்பதுதான். இப்படி செய்தவர்கள் மீதும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அந்த ஜமாஅத்தினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்.

இதற்கு TNTJயினர் அல்லாஹ்வின் சாபம் கேட்டு பதில் சொல்லவில்லை. இந்த ஆண்டும் காண்ட்ராக்ட்தான் விட்டுள்ளார்கள் என்று அறிகிறோம். தரமானதை தாங்களேஜமாஅத்தே செய்வதாக கூறி கூட்டுச் சேர்த்து விட்டு. காண்ட்ராக்ட் விட்டு தரமற்ற ஒரு வயது கூட ஆகாத கன்றுக்குட்டிகள் அறுக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

TNTJ மீது ஏதாவது குற்றச்சாட்டு வந்தால் முன் பின் ஆராயமல்  அதை அப்படியே பரப்பி விடுவதா? அதுதான் இலாஹியின் வேலையா? கொள்கையா? என்று விமர்சித்துள்ளார்கள். TNTJ அறிஞர்கள் குழுவின் முந்தைய செயல்பாடுகளை ஆராய்ந்து அறிந்தவன் தான் என்ற அடிப்படையில் தான் பரப்பி உள்ளேன். இதோ TNTJ அறிஞர்கள் குழு செய்த மோசடிகள் பற்றிய ஆதாரம்.

பிற மதத்தவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் தஃவா பணியை பீ.ஜே.யை தலைவராகக் கொண்ட முஸ்லிம் டிரஸ்ட் செய்து கொண்டிருந்தது. தவ்ஹீது ஜமாஅத் அறிஞர் குழு ஆலிம்களாகிய நாங்கள் முஸ்லிம் டிரஸ்டுக்கு 65-ஆயிரம் கொடுத்து தஃவாப் பணியை விலைக்கு வாங்கி விட்டோம். இனி பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் தஃவாப் பணி செய்யாது என்று கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்தது தவ்ஹீது அறிஞர்கள் குழு.

ஒருத்தராவது ஏங்க! தஃவாப் பணி என்பது வியாபாரப் பொருளா? பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் விற்கவும், நீங்கள் வாங்கவும். நீங்கள் வாங்கி விட்டதால், இனி அவர்கள் தஃவாப் பணி செய்ய மாட்டார்கள் என்கிறீர்களே. தஃவாப் என்பது மார்க்கப் பணிகளில் ஒன்றல்லவா?

மார்க்கப் பணி என்பது அமல் ஆகும். அமல் என்பது அல்லாஹ்விடம் மட்டுமே நன்மையை நாடி செய்யக் கூடிய ஒன்று. உடலால் ஆன அமல்களாகட்டும். பொருளால் ஆன அமல்கள் ஆகட்டும். எவ்வளவு செலவு செய்தாலும் அதற்குரிய கூலி அல்லாஹ்வால் மட்டுமே தர முடியும்.

யாரும் வந்து கேட்டால் அதற்கு உரியதை வாங்கி கொடுத்து விடுவோம் என்று செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? குர்ஆன், யாஸீன் ஓதி முடிச்சு போட்டு விற்கும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் என கேவலமாக விமர்சித்தீர்களே! அதைவிட இது மகாக் கேவலம் இல்லையா?  அதைவிட  கேடுகெட்ட செயல் இல்லையா?

செய்யும் பொழுது அந்த நோக்கம் இல்லை. செய்து முடித்த பின்; பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதை ஒட்டியாவது ''இது மாதிரி மார்க்கப் பணி செய்தேன். எனக்கு பொருளாதார பிரச்சனை வந்து விட்டது.. எனவே அந்த பணிக்கு நான் செய்த செலவுக்குரியதை தந்து நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். என்று மார்க்க பணியை விற்பனை செய்ய ஆதாரம் உள்ளதா?

எதற்கெல்லாமோ குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கக் கூடிய தவ்ஹீதுவாதிகள் தவ்ஹீது அறிஞர்கள் குழுவை தக்லீது செய்வதால் இது பற்றிக் கேட்கவில்லை.

பிற மதத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது எல்லோர் மீதும் உள்ள பொறுப்புதான். வாழ் நாளெல்லாம் செய்ய வேண்டிய பணிதான். அதை முஸ்லிம் டிரஸ்ட்டோடு சேர்ந்து செய்ய வேண்டியதுதானே! நீங்கள் எல்லோரும் அமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தானே! அப்படி இருக்க ஏன் தஃவா பெயரால் தனி அமைப்பு கண்டீர்கள்?

இப்படி யாராவது ஒரு ஆள் கேட்டார்களா? யாருமே எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. தஃவாப் பணி,  தஃவாப் பணி என விழுந்தடித்து வசூல் பணியில் ஈடுபட்டார்கள்.

தவ்ஹீதுவாதி, தர்காவாதி என எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டுதான் உதவிகளை அள்ளி வழங்கினார்கள். அந்தத் தஃவாப் பணியும் என்ன ஆயிற்று? தஃவாப் பணிக்கு என்று வசூலித்த பணங்கள் எங்கே போயிற்று? என்று யாராவது கேள்வி கேட்டார்களா?

தவ்ஹீது அறிஞர்கள் குழு நோக்கம் என்ன? தஃவா பணி என்று கூறி வசூல் பண்ணினார்கள். வசூலுக்காக ஏதோ ஒரு கிராமத்தில் தவ்ஹீது அறிஞர்கள் குழு மண் தரையில் இருக்கிற மாதிரியெல்லாம் பிலிம் காட்டினார்கள். 

கிராமம்- கிராமமாக நடக்கும் தஃவா பணியை பதிந்து அனுப்ப வீடியோவும் கேமராவும் பெற்றார்கள். தஃவா வுக்கு என்று அந்த கேமரா வாங்கிய பிறகு இது வரை எத்தனை கிராமத்தில் உங்கள் பணிகளை பதிந்துள்ளது

அபிடவிட் பணி லுஹா உடையது என்றீர்களே! சோம்பேறி லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்?  யாராவது கேட்டார்களா? 

தட்டிக் கேட்டு சுட்டிக் காட்டிய ஒரே ஆள் ஃபழுலுல் இலாஹி  மட்டும் தான். தவ்ஹீது அறிஞர்கள் குழு காசடிக்க இந்த தஃவா மோசடி வழியைச் சொன்னவரே பீ.ஜே.தான்  என்று அறிஞர்கள் குழு கூறியது. எந்த பீ.ஜே. அறிஞர்கள் குழு காசடிக்க மோசடி வழியைச் சொன்னதாகச் சொன்னார்களோ அந்த பீ.ஜே.யைக் கொண்டு தனக்கு சம்பந்தம் இல்லை என்று கையெழுத்து பேக்ஸ் அனுப்ப வைத்ததும் ஃபழுலுல் இலாஹி  மட்டும் தான். 

இப்படி தஃவா, அபூதாவூது ஷேர் மோசடி, அபூதாவூது மொழி பெயர்த்து தருவதாக பணம் வாங்கி விட்டு மொழி பெயர்த்து கொடுக்காமல் ஏமாற்றிய மோசடி என பலமோசடிகள் செய்த தவ்ஹீது அறிஞர்கள் குழுவைச் சார்ந்த லுஹாவை தலைவராகவும் M.S. சுலைமானை மேலாண்மைக்குழு தலைவராகவும் கொண்டுள்ள TNTJ   குர்பானியில்  மோசடி  செய்யாது என்பது என்ன உத்தரவாதம்? 

மேலே நான் சொல்லி உள்ள தஃவா பணி விலைக்கு விற்கப்பட்டது. லுஹா, M.S. சுலைமான் போன்ற அறிஞர்கள் குழு இருந்த அமைப்பு விலைக்கு வாங்கியது. அதன் பெயரால் நடந்த மோசடிகளை ஃபழுலுல் இலாஹி  மட்டும் எதிர்த்து நின்றது எல்லாம் பொய் என்று யார் நினைத்தாலும் ஃபழுலுல் இலாஹிக்கு எதிராக எப்படி வேண்டுமாலும் துஆச் செய்யுங்கள். 

தவ்ஹீதுவாதிகளை  ஏமாற்றி  காசடிக்க  மோசடி  வழிகளில்  ஈடுபட்ட அமைப்பில் இருந்த கூட்டுக்கள்ளர்கள் தான் மேலப்பாளையம் லுஹாவும் தென்காசி சுலைமானும் என்று தெளிவாக தெரிந்த பின்பும். அவர்களை  தட்டிக் கேட்காமல், தலைவராகக் கொண்டு செயல்படுவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

பீ.ஜே.க்கு ஆதரவாக இலாஹி என பொய்யை பரப்பும் அறிஞர் குழு ஆலிம் சாவே!  மாதர் சங்க தலைவி சுகந்தி அவர்களை ஒன்றுக்கு பல முறை அணுகியவன் நான். ஜாம்பஜார் போலீஸில் கம்ளைண்ட் செய்த பெண் சுகந்தி மேடத்திடம் நேரில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்தவன். 

மாதர் சங்க தலைவி சுகந்தி மேடம்தான் டெல்லியில் இருக்கிறேன், சென்னையில் இருக்கிறேன் என்று காலம் கடத்தினார்கள்.

சுகந்தி மேடத்திற்கு எல்லா ஆடியோக்களும் அனுப்பப்பட்டு ஒண்ணேகால் வருடம் ஆகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. காரணம் பீ.ஜே.க்கு ஆதரவாக ரகசியமாக செயல்பட்டு வரும் அறிஞர் குழு ஆலிம் தான். ஜாம்பஜார் போலீஸில் இருந்தும் சுகந்தி மேடத்திடமிருந்தும் பீ.ஜே.யை காப்பாற்றி விட்டு விட்டு. இவர்களது மோசடிகளை பீ.ஜே. அடையாளம் காட்டிய பின் எதிர்க்க ஆரம்பித்து விட்ட TNTJ யினர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.