ஹைதர் அலியும் அந்நிய சக்திகளுடனான தொடர்புகளும்-1



த.மு.மு.க. மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி பீ.ஜே.க்கு ஆதரவாக இருக்கிறார். இதை J.S. ரிபாஈ அவர்கள், 2017 செப்டம்பரில் நான் தாயகத்தில் இருந்தபொழுது என்னிடம் சொன்னது. அப்பொழுது J.S. ரிபாஈ .மு.மு.. துணைத் தலைவர் பதவியில் இருந்தார். J.S. ரிபாஈ அவர்களும் .மு.மு.. துணைத் தலைவர் பதவியில் இருந்து கொண்டே அன்சாரி கட்சியான ...வுடன் கள்ளத் தொடர்பில் தான் இருந்துள்ளார். .மு.மு.. தொண்டர்களிடம் தன்னை .மு.மு.. போல் காட்டிக் கொண்டு .மு.மு.தொண்டர்களை J.S. ரிபாஈ ஏமாற்றினார் என்பது தனி விஷயம்.
அப்பொழுதே (2017ல்) .மு.மு.. நகர நிர்வாகிகள் மவுதலி காஜா, தேயிலை மைதீன் போன்றவர்களிடம் சொன்னேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் .மு.மு..வின் அரசியல் பிரிவு ...வுக்கு தி.மு.. சீட் கொடுக்காதுஅதற்கான சதி வேலைகள் நடந்து முடிந்து விட்டது என்று சொன்னேன்

அவர்களிருவரிடம் மட்டும் தான் சொல்ல முடிந்தது. ஏனெனில், ஊரோடு இருந்தால் மவுதலி காஜா அவர்களின் ஆட்டோவிலும் தேயிலை மைதீன் அவர்கள் பைக்கிலும் தான் பெரும்பாலும் வெளியில் செல்வேன். அதனால் சொல்லி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

.மு.மு..வை அழிக்க அந்நிய சக்திகள் கோடிக் கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நிர்வாகிகளாக பதவியில் உள்ளவர்களை பீ.ஜே.யின் பினாமி அமைப்பான ... பக்கம் இழுக்கும் வேலை வேகமாக நடந்து வருகிறது என்று சொன்னேன்

பீ.ஜே.யின் பினாமி அமைப்பு ..பீ.ஜே.யின் கள்ளப் பிள்ளை அன்சாரி என்று கட்சித் தாவிய  J.S. ரிபாஈ அவர்களிடமும் பல முறை சொல்லி வந்துள்ளேன். 

.மு.மு..வை கைப்பற்றுவது அல்லது .மு.மு..வை அழித்தொழிப்பது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். என்பவற்றை மவுதலி காஜா, தேயிலை மைதீன் ஆகியவர்களிடம் சிறுகச் சிறுகச் சொன்னேன்.

சில விஷயங்களைச் சொன்னால் நீங்கள் ஜீரணிக்க மாட்டீர்கள் என்று பீடிகைப் போட்டு அவர்கள் சொல்லுங்கள் என்று ஆர்வமுடன் கேட்ட பிறகே கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னேன்

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாகச் சொல்லவில்லை. ஹைதர் அலி அவர்கள்தான் இந்த உடைப்பு வேலையை செய்து வருகிறார் என்று அறிந்துள்ளதை  ரொம்பவும் யோசித்து யோசித்து தான் சொன்னேன்.

காரணம் 2002ல் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானை விட்டு லுஹாவை அடித்து விரட்டி, அப்புறப்படுத்த பீ.ஜே.யின் முழு ஆதரவுடன் J.S. ரிபாஈ, இனாயதுல்லாஹ், அப்பாஸ் ஹில்மி போன்றவர்கள் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட்டார்கள்

அந்த நேரத்தில் லுஹா M.S. சுலைமான் ஆகியோர் கமாலுத்தீன் மதனிக்கு எதிராக செய்த பொய் சத்தியங்கள், பொய் சாட்சியங்களை கண்டித்ததோடு அவர்கள் செய்தது பொய் சத்தியங்கள் பொய் சாட்சியங்கள் என்று அடையளாமும் காட்டினேன்.

உடனே லுஹா என்னிடம் சொன்ன தவ்ஹீது மவுலவிகளின் செக்ஸ் லீலைகள், பொருளாதார மோசடிகளை கண்டித்து பீ.ஜே.க்கு நான் எழுதிய கடிதத்தை பிரச்சனையாக ஆக்கி திசை திருப்பி தன்னை பீ.ஜே.யின் ஆதரவாளர் போல் நிலைநிறுத்திக் கொண்டார்.

அன்று அந்தக் கடிதக் கடிதத்தை நீங்கள் பீ.ஜே.க்கு எழுதி இருக்காவிட்டால் அன்றே 2002லேயே லுஹா துாக்கி வீசப்பட்டிருப்பார், என்று J.S. ரிபாஈ, இனாயதுல்லாஹ், V.M.S. அன்வர், அப்பாஸ் ஹில்மி  போன்ற தக்வா ஜமாஅத்தார்கள் பின்னாளில் சொன்னார்கள். அதே மாதிரி ஹைதர் அலி விஷயமும் ஆகி விடக் கூடாது என்று நிதானமாக செயல்பட்டேன்.

இல்லை என்றால், தவ்ஹீது மவுலவிகளுக்கு எதிராக விபச்சாரம் மற்றும் பண மோசடிகள் கூறி காய்கள் நகர்த்திய லுஹா. பல்டி அடித்து உள்ளத்தில் விஷயத்தை வைத்துக் கொண்டே உதட்டில் தேனாய் பீ.ஜே.யை  கடைசி வரை நபிமார்களுக்கு சமமாக புகழ்ந்து லுஹா உச்சத்துக்கு வந்தார் அல்லவா. அந்த மாதிரி ஹைதர் அலியும் ஜவாஹிருல்லாஹ்வை புகழ்ந்து  இருப்பார்.

லுஹாவின் பின்னால் போய் எனக்கு எதிராக செயல்பட்ட அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் போல் த.மு.மு.க.வினரும் எனக்கு எதிராக ஆகி ஹைதர் அலியை உச்சந் தலையில் வைத்து ஆடி இருப்பார்கள்.

ஹைதர் அலி அவர்கள் உகாண்டா பயணத்தின் பின்னணி பற்றி நான் ஒரு சிலரிடம் சொன்னபொழுது என் மீது கடும் கோபம் கொண்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரான குணங்குடி ஹனீபா அவர்கள் இப்படியெல்லாம் தவறான தகவல்களையெல்லாம் சொல்லாதீங்க அத்தா என்று கோபப்பட்டார்.

இன்னொரு போராளி இது திடீர் பயணம் அல்ல. திட்ட மிட்ட பயணம்.  அமைப்பு ரீதியான பயணம். பீ.ஜே.க்கு எதிரானவரான உகாண்டா வஹீத்  ஏற்பாடு செய்த பயணம் என்றார்.

உள் ஒன்றும் புறம் ஒன்றுமான இந்த மாதிரி பயண ஏற்பாடுகளெல்லாம் செய்தவன் தான் நான். எனக்குத் தெரியாததையா? நீங்கள் தெரிந்து விட்டீர்கள் என்றேன். 

இப்பொழுது அவர்கள் அனைவரும் புரிந்து வருகிறார்கள். மதுரை ராஜா உசேன் போன்றவர்களை போலீஸில் ஒப்படைத்தவர் ஹைதர் அலி என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த மதுரை ராஜா உசேன் அவர்களுக்கு லுஹா மூலம் பணம் கொடுக்கப்பட்டு வந்தது. 

மதுரை ராஜகோபலன் கொலை வழக்கிலிருந்து பீ.ஜே.யை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் பீ.ஜே. சாதாரண ஆலிம் அல்ல. முஜ்தஹிது - ஆய்வாளர். அவரது அறிவு அவர் வெளியில் இருந்தால்தான் சமுதாயத்துக்கு பயன்படும். ஆகவே பீ.ஜே.யை காப்பாற்ற வேண்டும் என்று ஜாக்கிலிருந்து விலகி காரைக்காலை மையமாக வைத்து ஜிஹாதில் ஈடுபட்ட தவ்ஹீதை தொழிலாகக் கொண்ட மவுலவிகள் சொன்னார்கள்.

அந்த அளவுக்கு தவ்ஹீது வியாபார மவுலவிகளுக்கு பீ.ஜே. மீது நல்ல எண்ணமெல்லாம் கிடையாது. பீ.ஜே.யை காப்பாற்றா விட்டால் தவ்ஹீது தொழிலாகக் கொண்ட மவுலவிகளும் சேர்ந்து கம்பி எண்ண வேண்டி வரும் என்பதால் சொன்னார்கள்.

ஆக தவ்ஹீது வியாபார மவுலவிகளைக் காப்பாற்ற கொலை வழக்கிலிருந்து பீ.ஜே.யை காப்பாற்ற வேண்டும்.  பீ.ஜே.யை காப்பாற்றணும் எனில் பாக்கரை முதலில் காப்பாற்ற வேண்டும். 
பாக்கரை காப்பாற்ற வேண்டும் என்றால் ராஜா உசேன் அவர்களை சரண்டர் அடையச் சொல்ல வேண்டும். மறுத்தால் காட்டிக் கொடுக்க வேண்டும். இதுதான் முடிவு என்பதையெல்லாம் 2002ல் தான் லுஹா என்னிடம் சொன்னார்.

பி.ஜே.யின் உத்தரவுப்படி மதுரை ராஜா உசேன் அவர்களை அன்றைய உளவுத் துறை அதிகாரி அலெக்ஸாண்டர் அவர்களிடம் கொண்டு போய் ஒப்படைத்தவர் யார்? பி.ஜே.யின் பினாமியும் - ஒற்றருமான ஆலி ஜனாப் ஹைதர் அலி அவர்கள் தான்.

ஹைதர் அலி பீ.ஜே.யின் ஒற்றன் இல்லை என்று கடுமையாகக் கூவக் கூடியவர்களில் அப்பாவிகள் தவ்பா செய்ய வேண்டும். உண்மையை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டே பதவி பித்துப் பிடித்து போகின்றவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி எக்கேடு கெட்டும்  அழிந்தொழியட்டும்.

அப்பாவிகள் யார் மீதோ உள்ள, கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளூர் நிர்வாகத்துடனான மோதலிலும்  தான் ஹைதர் அலி ஆதரவாளர்களாக ஆகி உள்ளார்கள். ஆகவே தேவையற்ற சத்தியம் செய்தும் பொய்களைச் சொல்லியும் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக  அப்பாவிகள்   ஆகி விடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.