ஒழுக்கங்கெட்டவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை பிறருக்கு பிரச்சாரம் செய்யலாமா?


ஒழுக்கங்கெட்டவர்களுக்கு மார்க்க விளக்கம் கூறும் தகுதி கிடையாதா? என்கின்ற மாதிரி கேள்வி. அதற்கு அறிஞர்கள் குழு அளித்துள்ள அறிவார்ந்த(?) பதில் என்ன? விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
எந்த மனிதனாக இருந்தாலும் அவனிடம் சில தீய செயல்கள் இல்லாமல் இருக்காது. எந்த மனிதராக இருந்தாலும் அவரிடம் சில நற்செயல்கள் இல்லாமல் இருக்காது

https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_30.html
ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாது. 

தீய செயல்கள் செய்யும் ஆலிம்ஸாக்கள் அல்லது தாஇக்கள் (மார்க்க பிரச்சாரகர்கள்)வர்களிடமுள்ள அந்த தீய செயல்களை கண்டித்து பிறருக்கு உபதேசம் செய்யக் கூடாது. அந்த  தீய செயல்களால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்கள் பிரச்சாரம் செய்யக் கூடாது.
வர்களிடமுள்ள அந்த தீய செயல்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யாமல் அவர்கள் செய்யாத தீமைகளுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்யலாம்.
அது மாதிரி ஆலிம்ஸாக்கள், தாஇக்கள் சிலர் சில சுன்னத்துகளைச் செய்வதில்லை பேணுவதில்லை (என்று வைத்துக் கொள்ளுங்கள்) அவர்கள் பேணாத செய்யாத சுன்னத்களை செய்யுங்கள் என்று அவர்கள் மக்களிடம் போதிக்கக் கூடாது.
ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சுன்னத்களையும் செய்யும்  நன்மைகளையும் மக்களுக்கு அவர்கள் பிரச்சாரம் செய்யலாம். தற்குத் தடை இல்லை. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்தே இதை அறிய முடியும்.
எந்த தவறைச் செய்கிறாரோ அதைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதிதான் அவருக்கு இல்லை. தானே கடைப்பிடித்து ஒழுகும் விஷயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு தகுதி உள்ளது என்பதை எல்லா மனிதனும் தவறு செய்பவனே என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்து அறியலாம்.
இந்த மாதிரி அறிவார்ந்த(?) அறிஞர்கள் குழு மார்க்க தீர்ப்பு – பத்வா வழங்கி உள்ளது. அது பல வலைத்தளங்களில் இன்றும் உள்ளது.
இந்தக கூற்றுப்படிதான் அறிவார்ந்த(?) அறிஞர்கள் குழு பிரச்சாரத்துக்கு ஆள் அனுப்பி கொண்டிருக்கிறார்களா
1. இன்ன பெண்கள் கல்லுாரியில் முதல்வராக இருக்கும் இன்னவர் தன்னிடம் ஓதிய மாணவியை மனைவியாக ஆக்கிக் கொண்டவர். மாணவிகளுக்கு இரட்டை அர்த்தத்தில் படம் நடத்தியவர்.
2.இன்ன தலைவர், விபச்சார விடுதி வழியாக நான் பல முறை சென்றும் எந்த விபச்சாரியும் என்னை அழைக்கவில்லையே என்று மனதால் வருந்தி வாயாலும் சொல்லி வருத்தப்பட்டவர். பெண்கள் கல்லுாரியில் வேலைக்கு வந்த விதவைப் பெண்ணின் அழகை ரசித்து ருசித்து பிற ஆண்களிடம் பேசியவர்.
3.….  பெண்கள் கல்லுாரியில் உஸ்தாதாவுடன் உறவாடிய மன்மதர்.
4. ….  பெண்கள் கல்லுாரியில் மாணவியை மடியில் வைத்து முத்தம் கொடுத்தவர்.
5---- பெண்கள் கல்லுாரியில் ஆலிமாவுக்கு அழகிய பிண்ணி கட்டி விட்டு அழகு பார்த்தவர்.
6------- பெண்கள் கல்லுாரியில் குளித்து விட்டு வந்த பெண்ணுக்கு தலை துடைத்து விட்ட தலை சிறந்த ஆலிம்.
7------- இமாமாக இருந்த பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த வீட்டுப் பெண்ணுடன் தப்பாக நடந்தவர்.
8----- எதிர்த்த வீட்டில் இருந்த மாமி மகளும் அடுத்தவனின் மனைவியுமான 2 பிள்ளைகளுக்கு தாயானவளை தலைவரின் உதவியுடன் தாரமாக்கிக் கொண்டவர்.
ஆகவே இந்த மாதிரியான மூத்த அறிஞர்களை பாலியலுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு அழைக்காதீர்கள், அழைத்தாலும் அனுப்ப மாட்டோம் என்று செயல்படுகிறார்கள். 

அதனால்தான் பாலியலுக்கு எதிராக அறிஞர்கள் குழுவின் மூத்தவர்கள் பேசாமல் இளையவர்களை ஏவி விட்டுள்ளார்கள் என்று அவர்கள் செயல்பாடுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன. 
அறிஞர்கள் குழு அறிஞர்கள் இருந்த அவையில் ஒரு அறிஞர்   சுருட்டு குடித்துக் கொண்டு தாஇகளாக இருக்கிறார்கள். தாஇகளாக இருப்பவர்கள் சுருட்டு குடிக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
இவர் அறிஞர்கள் குழுவின் எந்த அறிஞரை குறி வைத்து பேசினாரோ அந்த அறிஞர் எழுந்தார். தாஇகளாக இருப்பவர்கள் இரவு 11 மணிக்கு மேல் புளு பிலிம் பார்க்கலாமா? பள்ளி வாசலில் திருட்டுக் கணக்கு எழுதலாமா? எனவே இதற்கும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேசினார். அவ்வளவுதான் சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த அறிஞர்கள் குழு அறிஞர்.
இப்பொழுது சுருட்டும் திருட்டும் ஒன்றாகி விட்டன. மாநில அளவில் பெரிய ஆளாக மூத்த அறிஞர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுருட்டும் திருட்டும் மோதிக் கொண்ட அதே அவையில், தாஇயாக இருக்கும் அறிஞர்கள் குழு அறிஞர் ஒருவர் பெண்கள் மதரஸாவில் உள்ள அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார் என்ற குற்றச்சாட்டு வந்தது. 

விசாரணைக் குழுவில் நிரூபணமும் ஆனது. அந்த அறிஞரும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே என்ன தீர்ப்பு? என்று கேட்கப்பட்டது. 

இந்த விவகாரத்திற்கு அறிஞர்கள் குழு கூடி அளித்த தீர்ப்புதான் இன்றும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. அறிஞர்கள் குழு அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா?

“தவ்ஹீது ஜமாஅத்தின் இந்த தாஇ சுன்னத் ஜமாஅத் மவுலவி--- யை போய் சந்தித்து அவருடன் நட்பாக இருக்கிறார் நமக்கு எதிராக ஆகி விட்டார் என்று தெரிந்தால், அந்நிய பெண்ணிடம் தவறாக நடந்தார். பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நீக்கப்பட்டார் என அறிவித்து செய்தி வெளியிடுவோம்.

சுன்னத் ஜமாஅத் மவுலவி--- யை போய் சந்திக்காமல் அவருடன் நட்பு வைக்காமல் நமக்கு எதிராக ஆகாமல் ஒதுங்கி விட்டால் அவரின் பாலியலை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
இதுதான் குர்ஆன்(?) ஹதீஸ்(?) அடிப்படையில் மட்டுமே செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் அறிஞர்கள் குழு அளித்த மகாத்தான தீர்ப்பு
இவர்கள்  அல்லாஹ்வின் அருளுக்குரிய அறிஞர்களா? அல்லாஹ்வின் சாபத்துக்குரிய அறிஞர்களா? 
ஆக அல்லாஹ்வின் சாபத்துக்குரிய இந்த அறிஞர்கள் விபச்சாரத்துக்கு எதிராக எல்லாம் நடவடிக்கை எடுக்கவே மாட்டார்கள். 

அவர்களுக்கு எதிராக ஆகி விட்டால், அவர்களது பண மோசடிகளை அம்பலப்படுத்தி விட்டால். பாலியல் பாலியல் என்று பாவாத்தி திரிவார்கள். இது தான் இவர்கள் வரலாறு அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த தீர்ப்பைப் பெற்ற அறிஞர்கள் குழுவின் அந்த அறிஞர் சுன்னத் ஜமாஅத் மவுலவி--- யை போய் சந்திக்காமல், அறிஞர்கள் குழுவின் பண மோசடிகளை வெளியில் சொல்லாமலும் அறிஞர்கள் குழுவுக்கு   எதிராக ஆகாமலும்  ஒதுங்கி  இருந்ததால் அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது பாலியல் மூடி மறைக்கப்பட்டது. 
பெண்கள் மதரஸாவில் விஷம விளையாட்டு பண்ணியவர்களை ரமழான் மாதத்தில் அழைத்து கவுரவிக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டவர்களும் வளைகுடாவில் இருக்கிறார்களே! 

அவர்கள் சார்பில் அறிஞர்கள் குழுவின் அந்த அறிஞரையும் அழைத்து கவுரவித்தார்கள். 

வளைகுடாவில் வாழும்  அறிஞர்கள் குழு அடிவருடிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

இப்படிப்பட்டவர்கள் உள்ள அறிஞர்கள் குழுதான், மக்களுக்குச் சொல்வதை தான் செய்யாமல் இருப்பது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும் என்கிறார்கள். இப்படிக் கூறும் அவர்களின் பத்வாவுக்கு திருக்குர்ஆன் 61:2,3 வசனங்களை ஆதாரமாகக் காட்டி உள்ளார்கள்.
இந்த வசனத்தின் உண்மை விளக்கம் என்ன? இந்த வசனங்கள் இறக்கி அருளப்பட்ட காரண காரியங்கள். வரலாறு என்ன? என்பதை முன்பே ஆதாரத்துடன் விளக்கி விட்டோம்
சுருட்டும் திருட்டும் பாலியலும் ஒன்றாகித்தான் அறிஞர்கள் குழுவில் ஐக்கியமாகி உள்ளன. அத்துடன் நாம் பட்டியலிட்டுள்ள 8 வகையான அறிஞர்களின்  மீதான குற்றச்சாட்டுக்களும் பொய் என எண்ணுபவர்கள் எனக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் துஆச் செய்யுங்கள். 
கண்டிப்பாக துஆச் செய்யுங்கள். அப்பொழுதுதான் விபச்சார குற்றத்திற்காக எதிர்க்காமல் தங்கள் சுய நலத்துக்காக எதிர்த்து திரிபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடு அழிவார்கள். 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.