தலைவர் என்பது பொறுப்பா பொம்மை பதவியா? இஸ்லாத்தின் பார்வையில் என்ன?


உலகத்தில் ஏதாளமான சமுதாயங்கள் - மதங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பல கடவுள்கள் இருக்கின்றார்கள். அது மாதிரி பல தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது மதத்தில் தலைவர் என்றால் யார் எப்படி இருக்க வேண்டும். சமுதாயத்திற்கும் தலைவருக்குமான உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் கிடையாது.
அவர்கள் வைத்துள்ள அமைப்புகளில் ஒரு அமைப்புக்குள்ளேயே எண்ணிலடங்கா தலைவர்கள் இருப்பார்கள். பிரிந்த பின் நான் தான் சரியான தலைவர் என்று சொல்லக் கூடிய காட்சிகள் பல சாட்சிகளாக உள்ளன. அது சாதி அமைப்புகளாக இருந்தாலும் அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள்.

தலைவர் இருக்கவே ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி போன்றவற்றில் மூத்த தலைவர் (முஸீபத் தலைவர்) துணைத் தலைவர்கள் இருப்பார்கள். துணைத் தலைவர்களில் மூத்த துணைத் தலைவர். செயல் தலைவர். என அடுத்தக் கட்ட தலைவர்கள் இருப்பார்கள்.

இதைப் பார்த்து விட்டு அந்தக் காபிரான பிற மத அமைப்புகள் மாதிரி நமது முஸ்லிம் அமைப்பும் இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக்  கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் காட்டிய வழி இவர்களுக்குத் தேவை இல்லை. ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு அவர்களை பின்பற்றக் கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்றால் ஒரு தலைவர்தான் இருப்பார். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றக் கூடியவர்கள் நாங்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவரைத்தான் தலைவராக தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்ய வேண்டும் என்றவுடன் வாடகை மண்டபத்தில் போட்டி ஆட்களை கூட்டி கும்மி அடிப்பது. தலைமை அலுவலகத்தில் கூடியதாக பொய்ச் செய்தி போடுவது அல்ல

தலைவர் இல்லை என்று சொன்னால் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஒருவர் தலைவராக இருந்தால் அவருக்கு கீழ்தான் செயல்பட வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தில் தலைவர்தான் முழு அளவுக்கு அதிகாரம் படைத்தவராக அதிகாரம் உடையவராக இருப்பார். இஸ்லாம் காட்டிய சமுதாய அமைப்பில் செயலாளரூ பொருளாளரூ என்ற பதவிகள் எல்லாம் கிடையாது.

தலைவர் எண்ணினால் அவருக்கு நம்பிக்கையானவரை பொருளாளராக நியமித்துக் கொள்ளலாம். இன்ன இன்ன செயல்பாடுகளை இன்ன இன்னவர்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று செயலாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.   

அதிகாரம்பவர் எல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் யாரிடம் இருக்க வேண்டும்? தலைவரிடம் தான் இருக்க வேண்டும்.

தலைவரை வாய்க்கு ஈஸியா அமீர் என்று சொல்ல யாரும் தயங்குவதில்லை. அமீர் என்பது எதில் இருந்து வந்தது? அம்ர் என்பதிலிருந்து வந்தது என்பதை விளங்கி உள்ளார்களா? என்றால் இல்லை.

அம்ர் என்றால் என்ன அர்த்தம்?  ஆர்டர் - அதிகாரம்உத்தரவு என்று அர்த்தம். அமீர்  - தலைவர் என்றால் கட்டளை இடுபவர். ராணுவத்தில் தளபதி எப்படி கட்டளை இடுவாரோ அது போல் தான் தலைவர் கட்டளைகள் கம்பீரமாக  இருக்க வேண்டும். கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படும் ராணுவ வீரர்கள் போல் அமைப்பினர் - மக்கள் இருக்க வேண்டும்.

எந்த சமுதாயமாகஅமைப்பாக இருந்தாலும் சரி ஒரு தலைவனுக்கு கட்டுப்படாமல் போனால் ஒரு காலத்திலும் உருப்படாது. வெற்றி பெறவே முடியாது.

ஒரு தலைமையின் கீழ் ஒரு தலைவரின் கீழ் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம், எத்தனை கோடி பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. பத்து பேர் இருந்தாலும் ஒரு தலைவரின் கீழ் தான் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு ஆக வேண்டும். இதுதான் முக்கியம்.

தலைவரே அமீர் ஸாஹிபே என்றெல்லாம் வாய் நிறைந்த வார்த்தைகளால் அழைப்பார்கள். நிறைந்த மனத்துடன் ஏற்று முஸ்லிமாக இருந்து அழைப்பதில்லை. முனாபிக்குகளாக இருந்தே அழைத்துள்ளார்கள். அதனால் தலைவர் பொறுப்பை  பொம்மை பதவியாக கருதி விட்டார்கள்.

3 ஆண்டுகளுக்கு ஒரு தலைவரு, 5 மாதங்களுக்கு ஒரு தலைவரு என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இல்லை. ஏதாவது ஒன்று என்றால் ராஜினாமா செய் என்பார்கள். இதுவெல்லாம் இஸ்லாமா? முஃமின்களின் பண்பா?

நான் அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அவர் அமீர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா என்று சவால் விட்ட சண்டாளன் மூளையில் உருவானது இந்த 3 ஆண்டுகள் சிந்தனை.

தலைமை என்பது பதவி அல்ல பொறுப்பு. பொறுப்புகளை பொறுப்பாகப் பார்க்காமல் பதவியாகக் கொண்டு செயல்பட்டவர்கள், செயல்படுபவர்கள் தான் நான் ராஜினாமா செய்கிறேன் அவரையும் ராஜினாமா செய்யச் சொல். இரண்டு தரப்பையும் ராஜினாமா செய்யச் சொல் என்ற விஷமப் பிரச்சாரம் செய்தார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதே நாவுகள் தான் ரசூல்(ஸல்) அவர்கள் கடைசி வரை அவர்கள்தான் தலைவராக இருந்தார்கள். அதன் பிறகு அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் இறக்கும் வரை அவர்கள்தான் தலைவராக இருந்தார்கள் என்று பிரச்சாரம் செய்தன.

யார் மீதாவது நடவடிக்கை என்று வருமானால் இஸ்லாத்தின் பார்வையில் தலைவர் யார் தெரியுமா? தலைமைக்கு எப்படி கட்டுப்பட வேண்டும் தெரியுமா? தலைவர் என்பது அலங்கார பதவியா? என்று வாய்கிழிய பேசுவார்கள்.

போடியத்தை பிடித்து இழுத்துக் கொண்டும் மைக்கை தட்டிக் கொண்டும் மேடையே சரிந்து விழும் வண்ணம் காலால் உதைத்தும் தட்டியும் குதித்தும் பேசுவார்கள். மன்னிக்கவும் கத்தோ கத்து என்று கத்துவார்கள்.

அப்படி பேசியவர்கள் விஷயத்தில் தலைவர் தலைவராக செயல்பட ஆரம்பித்து விட்டால். அவிழ்த்து விடும் பொய்களுக்கு பஞ்சம் இருக்காது. போட்டி பொதுக்குழு செயற்குழுக்கள் என கூட்டத்தைக் கூட்டுவார்கள். நடுநிலை வேஷதாரிகளான பதவி பித்தர்களை தேடிப் பிடித்து பதவி கொடுப்பார்கள்.

நடுநிலை வேஷம் போட்ட வேஷதாரிகளான கள்ளப் பயல்களையெல்லாம் களப் போராளிகள் என்று நற்சான்று கொடுத்து வாழ்த்து போடுவார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் தேவடியாள் குடில்களுக்குப் போய் தேவடியாள்களுடன் கூத்தடித்து கும்மாளம் அடித்து கேவலப்பட்டவனாக இருப்பான்.

அதே போல் இன்னொருத்தன் ஊமைபோல் இருந்து எருமை போல் சாணி போடும் சனியனான விஷமி. அவன் என்ன செய்வான்? தலைமைக்கு கட்டுப்பட்டவன் போல் நடிப்பான். நடித்துக் கொண்டே அவனது விஷமத்தனத்தை உடன் இருந்து செய்து கொண்டே இருப்பான்

எதிரி அமைப்புகளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு சமயத்தை எதிர் பார்த்து காத்து இருப்பான். சந்தர்ப்பம் வந்ததும் ஓடி விடுவான்.

ஆக மற்றவர்களுக்கு என்று வரும்போது தலைவர் அரபு நாட்டு மன்னர்கள் போல் செயல்பட வேண்டும் என்பார்கள். தனக்கு என்று வரும்போது இந்திய ஜனாதிபதி மாதிரி செயல்பட வேண்டும். இவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் அலங்கார பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அப்படி இருக்காவிட்டால் பொய்யான குற்றச்சாட்டுக்களை அள்ளி விடுவார்கள். யாருக்கோ பினாமியாக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்பீ.ஜே.பி. தலைவர்களை மட்டுமல்ல அயல்நாட்டு உளவாளிகளையும் கள்ளத் தனமாக சந்திப்பார்கள். 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.