மேலப்பாளையம் பள்ளியும் பீ.ஜே.யின் பொய்யும்


அல்லாஹ் பீ.ஜே. வாயாலேயே உண்மையை சொல்ல வைத்து விட்டான். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் பள்ளி TNTJக்கு சொந்தமானது அல்ல அது களவாடப்பட்ட பள்ளி என்பதை 14-07-2019 அன்று பீ.ஜே. வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளார். இதோ வீடியோ ஆதாரம் என்று எனக்கு பலர் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பீ.ஜே.வீடியோவில் பேசி உள்ளது உண்மையா பொய்யா என்பதை பிறகு பார்ப்போம்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_20.html

ஜுலை 26- ஆகஸ்ட் 2002 உணர்வு வார இதழ் பக்கம் 15ல் எச்சி கூட்டி கமிட்டி என்ற பெயரில் போட்டுள்ள விளம்பரத்தை முதலில் பாருங்கள். அதில், மேலப்பாளையத்தின் தவ்ஹீது பிரச்சாரப் பணிகளிலும் மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகப்பணிகளிலும் தன்னை இணைத்துக்  கொண்டு செயல்பட்டு வந்த கா..மு. ஃபழுலுல் இலாஹி வசூலிக்கும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று போட்டுள்ளார்கள்.
இந்த விளம்பரத்தை உண்மை என்று நம்புவர்கள் ஒவ்வொருவரும் ஃபழுலுல் இலாஹியாகிய எனக்கு எதிராக அவரவர் விருப்பப்படி அல்லாஹ்விடம் கண்டிப்பாக கையேந்த வேண்டுகிறேன்.

நான் உருவாக்கிய ஜமாஅத்தில் வந்து இணைந்து விட்டு நான் போய் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய இந்த பொய்யர்களிடம் இணைந்த மாதிரியும். வசூலிக்கும் வேலை செய்து வந்த மாதிரியும் விளம்பரம் போட்ட அதற்கு துணை நின்ற ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் இந்தப் பொய்யர்களை இன்றும் ஆதரித்து நிற்கும் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ் பொதுக்குழு என்ற பெயரால் பொய்க்குழுவில் கூடி எனக்கு எதிராக கையெழுத்துப் போட்ட, துணை நின்ற, மூல காரணமாக இருந்த, இன்றும் இதை உண்மை என்று சொல்கின்ற ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயா! ஆமீன்.

Syed Abuthaalibu அவர்கள் துஆ கேட்டது போல் கண் முன்னால் அவர்கள் அனைவரின் கைகளையும் புழு புழுவாக அரிக்கச் செய்வாயாக! அழுகச் செய்வாயாக! குஷ்ட ரோகிகளாக அலையச் செய்வாயாக ஆமீன்

இதில் ஒரு்த்தனையும் விட்டு விடாதே யா அல்லாஹ் என்று துஆச் செய்து விட்டு பீ.ஜே. சொன்ன விஷயத்திற்கு வருகிறேன்.
 
1990களில் தவ்ஹீது இயக்கத்துக்கு அல்லது தவ்ஹீது பள்ளிக்கு என்றால் யாருமே இடம் தர மாட்டார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் எங்கள் நட்பு, உறவுகளை வைத்து 1993, 1994 ஆகிய இரு வருடங்களில் இரண்டு தவணையாக பள்ளிக்காக இடம் வாங்கினோம். அந்த இரண்டு பத்திரங்களிலும் கா.. பஸ்லுல் இலாஹியாகிய என் பெயர் இருக்கிறது.

01-07-2002ல் கூடிய போலி கமிட்டி பொய்யர்கள் என்னிடம் வந்து சேர்ந்தார்களா? நான் போய் போலி கமிட்டி பொய்யர்களிடம் சேர்ந்தேனா? யார் யாரிடம் வந்து சேர்ந்தார்கள் என்பதற்கு இரண்டு மூல பத்திரங்கள் ஆதாரமாக உள்ளன.
 
ஃபழுலுல் இலாஹியாகிய என் தாயாரிடம் பொய் சொல்லி ஏமாற்றி என் வீட்டில் இருந்த பள்ளி ஒரிஜினல் மூல பத்திரங்களை வாங்கிச் சென்ற லுஹா தம்பி பூலி காஜா மைதீன் மீதும் யா அல்லாஹ் சாபத்தை இறக்குவாயாக! பள்ளியை திருட பத்திரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும் என்று யோசனை சொன்ன படுபாவி மீதும் யா அல்லாஹ் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.
 
நான் காயல்பட்டிணம் தாவூது காகாவிடம் கடன் கொண்டு பள்ளிக்கு என்று இடம் வாங்கினேன். தவ்ஹீது ஜமாஅத்துக்கு சொத்து என்று வந்த பிறகு தான், லுஹா தன் மனைவியை பிரிந்து சவூதியில் வேலை செய்ய முடியவில்லை ஆகவே எனக்கு ஊருடன் இருக்க வழி செய்யுங்கள், வேலை போட்டுத் தாருங்கள் என்று கேட்டு என்னிடம் வேலைக்குச் சேர்ந்தார்.

ஜாக் சார்பாக சவூதியில் இருந்து வந்திருந்த அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி ஆகிய அரபிகளை என் வீட்டில் நடந்த விருந்துக்கு அழைத்திருந்தோம்

அதில் சேக் மன்சூர், கல் அப்துல் காதர், குன்னா ரசூல், M.A.S. பிரதர்ஸ், மறைந்த காலித் ஸாஹிப், சிபகதுல்லாஹ் போன்றவர்களையும் வைத்து லுஹாவை எங்கள் ஊர் தாஇயாக சவூதி மர்க்கஸ் சார்பாக தாருங்கள் என்று தமிழில் கோரிக்கை வைக்கச் செய்தோம்.

அதை அரபியில் நானும் கமாலுத்தீன் மதனி அவர்களும் எடுத்துச் சொன்னோம். இப்னு கலாம் ரசூல், (TNTJ ஆம்ளன்ஸ் டிரைவர்) கூளி இக்பால் போன்றவர்களும் என்னிடம் வேலை போட்டுக் கேட்ட லுஹாவும் சபையில் இருந்தார்கள்.

மாத சம்பளம் 4500 என்று பேசி முடித்தோம். லுஹாவை வேலைக்கு சேர்க்கும் முன்பாக, தவ்ஹீது கேஸட்கள், புக்குகள் கொடுத்து வாங்க என்று 1986 முதல் ஒருவர் பின் ஒருவராக 3 பேருக்கு சம்பளம் கொடுத்து வைத்திருந்தேன்

லுஹாவுக்கு அரபி சம்பளம் தராவிட்டாலும் நாம் தனிப்பட்ட முறையில் சம்பளம் கொடுப்போம் என்ற முடிவில் தான் லுஹாவை வேலைக்குச் சேர்த்தேன்.

எந்த பிரச்சாரப் பணியும் செய்யாமல் 3 மாதமாக சும்மா இருந்தார். சிறந்த முறையில் பிரச்சாரப் பணி செய்வதாக பொய்க் கூறி அரபியிடம் சம்பளம் கேட்டு போன் போடும்படி லுஹா என்னிடம் சொன்னார்(TNTJ ஆம்ளன்ஸ் டிரைவர்) கூளி இக்பால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

உணர்வில் போட்டுள்ள நிர்வாக விரோத நடவடிக்கை என்பது என்ன? M.I.சுலைமான், அப்துல் றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலிகள் மதரஸா பெண்களுடன் தப்பாக நடந்தார்கள்

தவ்ஹீது ஜமாஅத் கூட்டங்களுக்கு வந்த பெண்களை மேடையில் இருந்தவாரே தவ்ஹீது தாஇ தப்பாகப் பார்த்தார். தவ்ஹீது ஜமாஅத் பொருளாளர் அன்வர் பாஷா கள்ளக் கணக்கு எழுதி உள்ளார். இந்த மாதிரி இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை ஷம்சுல் லுஹா என்னிடம் சொன்னார்.

முதல் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருந்த நான் பீ.ஜே.க்கும் ஹாமித் பக்ரிக்கு கண்டித்து கடிதம் எழுதினேன். கமாலுத்தீன் மதனி மனைவியை சம்பந்தப்படுத்தி லுஹாவும், M.S. சுலைமானும் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து செய்த பொய் சத்தியங்களையும் பொய் சாட்சியத்தையும் அடையாளம் காட்டினேன்.

நான் குற்றவாளி என்றால் ஃபழுலுல் இலாஹியாகிய எனக்கு எதிராக அவரவர் விருப்பப்படி அல்லாஹ்விடம் கண்டிப்பாக துஆச் செய்யுங்கள் என்று 2002லிருந்து நான் வேண்டுகோள் வைத்து வருகிறேன். 

அதே மாதிரி லுஹா வேண்டுகோள் வைக்க தாயரா என்று சவால் விட்டும் வந்துள்ளேன். இப்பொழுதும் சவால் விட்டுச் சொல்கிறேன்.

தவ்ஹீது மவுலிகள் களஞ்சியம் பெண்கள் மதரஸாவில் உள்ள பெண்களுடன் தப்பாக நடந்தார்கள் என்பது உட்பட இலாஹியிடம் லுஹா 2002ல் கூறியதாக உள்ளவை உண்மை என்றால், யா அல்லாஹ் TNTJ தலைவராக உள்ள ஷம்சுல்லுஹாவாகிய என் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் என்று லுஹா ஜும்ஆ மேடையில் துஆச் செய்யட்டும். 

TNTJ ஜமாஅத்தினரே 2002ல் தவ்ஹீது ஜமாஅத் மவுலிகளை மதரஸா மாணவிகள், உஸ்தாதாக்கள், ரகீபாக்களுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டு கூறிவிட்டு 2002லேயே பல்டி அடித்து இருந்தால் ஷம்சுல்லுஹாவாகிய என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று துஆச் செய்யுங்கள் என்று லுஹா அறிக்கை விடட்டும்.

இதைச் செய்யாமல், கூலிக்கு மாரடிக்கவும் கமிஷன் அடிக்கவும் வசூல் செய்யவும் சம்பளம் பேசி சுன்னத் ஜமாஅத்திலிருந்து விலகி வேலைக்கு வந்து விட்டு. பிறகு சுன்னத் ஜமாஅத்துக்கு போய். பிறகு தவ்ஹீது ஜமாத்திலும் வந்து இணைந்த வேடதாரியை தலைவராகக் கொண்டுள்ள அனைவர் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.

நம்பிய எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து என்னிடமிருந்து பள்ளி மோசடியும் பண மோசடியும் செய்த ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்.


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளைவிட மிகக் கேவலமானவர்கள் கெட்டவர்கள் உண்மையை விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். 8:22.  


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.