#அடிமட்ட_ததச_அடிமை Vs #ஹைஜம்ப்_புல்புல்_லுஹா

#அடிமை: ஹலோ மாநிலதலைவ ரா?
#மா_தலைவர் : ஆமா நானேதான் என்ன சந்தேகம் கேளுப்பா?
#அடிமை: அந்த ஜமாத் காராங்க குர்பானிக்கு ஆடு மாடு தாரேனு சொல்லுராங்க...
#மா_தலைவர்: ஒகே ஒகே வாங்கு வாங்கு
#அடிமை: ஜக்காத் பணம் தாராங்க ...
#மா_தலைவர்: ஒகே ஒகே வாங்கு வாங்கு
#அடிமை: தங்க நகை வெள்ளி கொலு"சும்மா" தாராங்க ...
#மா_தலைவர்: வாங்கு வாங்கு
#அடிமை: அவங்க இன்னைக்கு வாலிபால் விளையாட்டு வச்சு விளையாட கூப்பிராங்க ..
#மா_தலைவர்: அபிஸ்டு அபிஸ்டு வாயை களுவுட.
ஆவாள் கூட விளையாடகூடாது டா அவாள் கூட விளையாடினா எனக்கு ரத்த தொதிப்பி வந்துவிடும்
அவங்க நம்மளை குதவளையை அறுத்தவங்க. அவங்க ஷிர்க் செய்யகூடுயவங்க
அவங்க. நம்ம ஜமாத்தை அழிக்க துடிகிறவங்க. அவங்க முனாபிக்குள் ஹாபீர்கள்
இவங்க கூட சேர்ந்தால் விளையாடினா ஒன்றா இருந்து உணவு உண்ணால்
நீயும் ஜமாத்தை அழிக்ககூடியவனும் ஒன்னு அவ பக்கத்துலே இருக்காதே
சரியா.
அடிமை: செல்லை ஆப்செய்துவிட்டு யோசிக்கிறான்
அவங்க பணம் நகை ஆடு மாடு இடம் வாங்கி கொள்ளும்போது நம்ம ஜமாத்துக்கு பைலாவுக்கு பிரச்சணை இல்லை
அவங்க கூட விளையாடினா பேசினா பழகினால்
மாநில தலைவருக்கு ரத்த கொதிப்பு வறுகிறது ஏன்
இவர்கள் கூறுவது உண்மைலே இஸ்லாமிய கொள்கையதானா
நாம் இன்னும் இந்த ஜமாத்தில் இருக்கனுமா
பணம் பொருள் இந்த ஜமாத்துக்கு கொடுக்கனுமா
அப்படி கொடுத்தா நம்மளை ஒரு பணம் ஈட்டும் ஒருவிதமான வங்கியாகவே வேலைவாங்கும் நிலையிலே நம்மை ஆள்படுத்துவாங்க.
நாம் ஏன் இவங்களிடம் கொடுத்து கொடுக்க சொல்லனும்
நாமே நண்மையை நேரடியாசெய்துவிட்டால் போதும்தானே
அனுதாபி நடக்கதுவங்கினான்.....
தொடரும் வீச்சு:!

-----------------------------------------------------------------------------------------------------------------------
[14/08, 6:29 pm] அப்ரஹ்மான்கநல்லார்: # ஆணவம்_இம்மையிலு
ம்_மறுமையிலும்_
அழிவைத்_தரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான்.
பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான்.
பிறகு ”நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே?
ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு ”நானே அரசன்.
அடக்குமுறையாளர்கள் எங்கே?
ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர)
நூல்: முஸ்ம் 4995
நாளை மறுமை நாளில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆணவம் கொண்டவர்களை பார்த்து கடும் கோபத்தோடு கேட்பான் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்
ஒரு சிலர்கள் தான் என்ன தவறை செய்திருந்தாலும், அதை மறுத்தே பழகுகிறார்கள். தக்க ஆதாரத்தோடு நிரூபித்தாலும் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முன்வர மாட்டார்கள். இத்தகையோர் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு ஆணவமே தலையாய காரணம். ஒரு சில போலி மார்க்க அறிஞர்களிடம் பொதுமக்கள் ஏதேனும் தவறை சுட்டிக்காட்டினால் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாது. அரபி படித்து கரைத்து குடித்த, 60 கலைகளை? கற்றறிந்த எங்களுக்குதான் எல்லாம் தெரியும், புரியும் என்று பிதற்ற ஆரம்பிப்பார்கள். தன்னிடம் எந்த தவறும் இல்லை என்று சாதிப்பார்கள்.
வேறு சிலரிடம் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தவறானது என் பதை நிரூபித்தால் “ம்ஹூம் எங்களுக்கு, எங்கள் முன்னோர்களுக்கு தவறு நிகழுமா…?”
நாங்களெல்லாம் எவ்வளவு பெரிய ஆய்வாளர்கள் தெரியுமா எங்கள் ஆய்வில் தவறு ஏதும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று குதிக்க ஆரம்பிப்பார்கள். இவைகள் அனைத்திற்கும் அவர் களிடம் உள்ள ஆணவமே காரணம். இதுபோன்ற ஆணவம் கொண்டு, தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களுக்க
ு சொர்க்கம் செல்ல இயலாதென்று இறைத்தூதர் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறி னார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண் டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்பு கிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்பு கின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்ப தும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
அறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : முஸ்லிம் (147)
ஆகவே அசத்தியத்தில் அழிந்து போனவர்களில் அதிகமானவர்கள், பெருமையடித்து ஆணவத்தால் தட்டழிந்தவர்கள்தான் என்பதை மேற் கண்ட ஆயத்துக்கள் அடையாளம் காட்டுகின்றன. இதற்கேற்ப மறுமை யிலே நரகத்தில் கருகும் குற்றவாளிகளைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்…
ﺗِﻠْﻚَ ﺍﻟﺪَّﺍﺭُ ﺍﻟْﺂﺧِﺮَﺓُ ﻧَﺠْﻌَﻠُﻬَﺎ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﻟَﺎ ﻳُﺮِﻳﺪُﻭﻥَ ﻋُﻠُﻮًّﺍ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻟَﺎ ﻓَﺴَﺎﺩًﺍ ﻭَﺍﻟْﻌَﺎﻗِﺒَﺔُ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦ ﺳﻮﺭﺓ ﺍﻟﻘﺼﺺ
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
(அல்குர்ஆன் 28:83)
ﻭَﺇِﺫَﺍ ﻗِﻴﻞَ ﻟَﻪُ ﺍﺗَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﺃَﺧَﺬَﺗْﻪُ ﺍﻟْﻌِﺰَّﺓُ ﺑِﺎﻟْﺈِﺛْﻢِ ۚ ﻓَﺤَﺴْﺒُﻪُ ﺟَﻬَﻨَّﻢُ ۚ ﻭَﻟَﺒِﺌْﺲَ ﺍﻟْﻤِﻬَﺎﺩُ
"அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.
திருக்குர்ஆன் 2:206
ﺍﺩْﺧُﻠُﻮﺍ ﺃَﺑْﻮَﺍﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ۖ ﻓَﺒِﺌْﺲَ ﻣَﺜْﻮَﻯ ﺍﻟْﻤُﺘَﻜَﺒِّﺮِﻱﻥَ
நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். ஆணவம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 40:76
ﻓَﺄَﻣَّﺎ ﻋَﺎﺩٌ ﻓَﺎﺳْﺘَﻜْﺒَﺮُﻭﺍ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺑِﻐَﻴْﺮِ ﺍﻟْﺤَﻖِّ ﻭَﻗَﺎﻟُﻮﺍ ﻣَﻦْ ﺃَﺷَﺪُّ ﻣِﻨَّﺎ ﻗُﻮَّﺓً ۖ ﺃَﻭَﻟَﻢْ ﻳَﺮَﻭْﺍ ﺃَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻘَﻬُﻢْ ﻫُﻮَ ﺃَﺷَﺪُّ ﻣِﻨْﻬُﻢْ ﻗُﻮَّﺓً ۖ ﻭَﻛَﺎﻧُﻮﺍ ﺑِﺂﻳَﺎﺗِﻨَﺎ ﻳَﺠْﺤَﺪُﻭﻥَ
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.
திருக்குர்ஆன் 41:15
21356 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺰِﻳﺪُ ﻋَﻦْ ﻫَﻤَّﺎﻡٍ ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ ﻋَﻦْ ﺳَﺎﻟِﻢِ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﺍﻟْﺠَﻌْﺪِ ﻋَﻦْ ﻣَﻌْﺪَﺍﻥَ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﻃَﻠْﺤَﺔَ ﻋَﻦْ ﺛَﻮْﺑَﺎﻥَ ﻣَﻮْﻟَﻰ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﻣَﻦْ ﻓَﺎﺭَﻕَ ﺍﻟﺮُّﻭﺡُ ﺍﻟْﺠَﺴَﺪَ ﻭَﻫُﻮَ ﺑَﺮِﻱﺀٌ ﻣِﻦْ ﺛَﻠَﺎﺙٍ ﺍﻟْﻜِﺒْﺮِ ﻭَﺍﻟْﻐُﻠُﻮﻝِ ﻭَﺍﻟﺪَّﻳْﻦِ ﻓَﻬُﻮَ ﻓِﻲ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺃَﻭْ ﻭَﺟَﺒَﺖْ ﻟَﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔُ ﺭﻭﺍﻩ ﺍﺣﻤﺪ
ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி),
நூல் : அஹ்மத் (21356),திர்மித
ீ(1497)
மனிதரிடம் நல்ல காரியங்கள் இருக்கவேண்டும் என்று கட்டலையிடும் இஸ்லாம் பல விசயங்கள் இருக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விசயங்கள் இருக்கக்கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புகமுடியாமல் போய்விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாமல் போனால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார். அந்த மூன்று காரியங்கள்: 1. தற்பெருமை, 2.மோசடி, 3.கடன்
தற்பெருமை
எவனிடம் தற்பெருமை குடிகொண்டுவிடுமோ அவன் அழிவின் விழிம்பிக்கு போய்விட்டான் என்று கூறலாம். அவனிடம் நற்காரியங்கள் அனைத்து நீங்குவதற்கும் நல்செயல்கள் வராமல் இருப்பதற்கும் இந்த தற்பெருமை காரணமாக அமைந்துவிடும்.
ஆணவம் என்ற ஒற்றை கெட்ட குணம் நம்முடைய மறுமை வாழ்க்கையை அளித்து நாசமாக்கிவிடும்.
என்பதை மேற்கண்ட வசனங்களில் மூலமாகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை மூலமாகவும் நமக்கு படிப்பினை இருக்கிறது.
இந்த ஆணவப்போக்கு நம்மில் யாருக்கேனும் இருக்குமேயானால் அதை விட்டு விலகி இறைவனிடத்தில் தவ்பா செய்து நாளை மறுமையில் வெற்றி அடையக்கூடிய நன்மக்களாக மாற வேண்டும்.
[14/08, 6:29 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ஆட்கள்_தேவை
காலியாகி வரும் ததஜ கிளைகளுக்கு இன்சியல் பிராப்ளம் வந்துவிடக்கூடாத
ு என்பதற்காக மிக்சர் சாப்பிடும் நிர்வாகிகள் தேவை.
# தகுதி :
தலையாட்டுவது, அல்லாஹ் அக்பர் சொல்லுவது.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு 50 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பக்கத்து மாநிலங்களிலிருந
்தும் வரவழைக்கப்படும்.
# பணி
கிளை இருக்கும் பகுதியில் யாருமே ததஜவில் இல்லையென்றால், அங்கு அவர்கள் தொழுது வரும் பள்ளியை இடித்து விடுவது.
அப்படி பள்ளி இருந்தாலும் பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுவது.
குறிப்பு: குர்ஆன் ஹதீஸை பின்பற்றவோ, பரப்பவோ அவசியமில்லை. சினிமா படம் பாடல்களை பாடி பரப்பிக் கொள்ளலாம். Musicaly ல் பாடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
[15/08, 5:27 pm] அப்ரஹ்மான்கநல்லார்: P. Jainulabideen - பீ.ஜே
பீஜே ஒரு கோடி ராயல்டி கேட்டாரா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் பீஜே அவர்கள் தனது நூல்களை ஒப்படைக்க ஒரு கோடி ரூபாய்கள் ராயல்டி கேட்டதாக கலீல் ரசூல் இழிவுபடுத்தும் தோரணையில் பேசி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துப் பேசியுள்ளார்.
ஜமாஅத்தை வைத்து பீஜே அவர்கள் எந்த பொருளாதார ஆதாயமும் அடையவில்லை என்பதை கலீல் ரசூலும் இப்போது ஜமாஅத்தை அனுபவித்து வருபவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனாலும் பீஜேயின் மீது வெறுப்பை விதைத்தால் தாங்கள் உத்தமர்களாக கருதப்படலாம் என்ற கெட்ட நோக்கத்தில் தான் இவ்வாறு மாநில நிர்வாகிகள் பொதுக்குழுவில் விஷக்கருத்தை விதைத்துள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.
தமுமுகவில் இருந்து பிரிந்த போது எந்த நிதியாதாரமோ கிளைகளோ கட்டமைப்போ இருக்கவில்லை.
அந்த நேரத்தில் ஜமாஅத்துக்கு பீஜேயின் சீடிகள் விற்பனை மூலம் தான் பெரிய அளவில் வருவாய் கிடைத்தது.
மேலும் ஜமாஅத்துக்குச் சொந்தமில்லாத உணர்வு பத்திரிகை பீஜேயின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதில் இருந்து கிடைக்கும் வருமானமும் ஜமாஅத்தின் நிதியாதாரத்துக்கு உதவிகரமாக இருந்தது.
மேலும் ரமலானிலும் மற்ற நாட்களிலும் பீஜேயின் உரைகளை தனியார் தொலைக்காட்சியில் பீஜே தனிப்பட்ட முறையில் ஒளிபரப்பினால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதன் விளம்பர வருவாயை அவரே எடுத்துக் கொண்டு இருக்க முடியும். ஆனாலும் இதன் வருவாய் ஜமாஅத்துக்குச் சேரட்டும் என்று அவர் சொன்னதால் அதன் மூலம் கிடைத்த வருவாய் ஜாமாஅத் முடங்கிவிடாமல் இருக்க உதவியது.
இப்படி பல வகைகளில் தானே எடுத்துக் கொண்டாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள முடிந்த நிதிகளை ஜமாஅத்துக்கு கிடைக்கச் செய்தார்.
இன்று ஜமாஅத்துக்குப் பல கோடி ரூபாய்கள் இருப்பு உள்ள நிலையில் இது சின்ன வருவாயாகத் தோன்றலாம். ஆனால் அன்றைக்கு இருந்த நெருக்கடியான சூழலில் இந்த நிதியும் இரண்டு நல்ல மனிதர்களின் நன்கொடையும் தான் ஜமாஅத்தைத் தூக்கி நிறுத்தியது.
அப்படிப்பட்ட மனிதன் மீது ஒரு கோடி ரூபாய் ராயல்டி கேட்டதாக கள்ள ஐடி புகழ் கலீல் ரசூல் பழி சுமத்தி உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்கி உள்ளனர்.
பீஜேயிடம் இது குறித்து ஒட்டு மொத்த மாநில நிர்வாகம் பேசவில்லை. கலீல் ரசூலும் சாதிகும் தான் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை அவர் நிர்வாகத்தில் தன்னிஷ்டத்துக்கு தவறாக சொல்லி உள்ளார். அதையே மாநில நிர்வாகத்திலும் சொல்லி உள்ளார்.
பொய் சொல்வதற்கு பேர் பெற்ற அந்த ஒருவர் சொன்னதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள்.
முதலில் ராயல்டி என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு நூலை எழுதுவதற்காக பல நாட்கள் அல்லது மாதங்கள் உழைத்து எழுதுகிறார். அதை அவர் வெளியிடாமல் ஒரு நிறுவனத்தில் வெளியிடக் கொடுத்தால் அதற்காக அதன் மொத்த விலையில் பத்து சதவிகிதம் ராயல்டி வாங்கிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது.
ஜமாஅத் அறிஞர்கள் அனைவரும் இவ்வாறு ராயல்டி வாங்கிக் கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளனர். ஜமாஅத் சார்பில் வெளியிட்ட சில நூல்களுக்கும் ராயல்டி கொடுத்து வருகின்றனர்.
இதை மனதில் வைத்துக் கொண்டு கலீல் ரசூல் சொன்ன விஷயத்துக்கு வருவோம். திருச்சி செயற்குழுவில் பீஜேயின் நூல்களை அறிஞர் குழு சார்பில் வெளியிடுவோம் என்று அறிவித்தார்கள். இப்படி அறிவிப்பதற்கு முன் இது குறித்து யாரும் பீஜேயிடம் பேசவில்லை.
ஒரு நூலை ஒருவர் எழுதினால் அதன் வெளியீட்டு உரிமை அவரைச் சேர்ந்தது. அதை மற்றவர்கள் வெளியிட உரிமை இல்லை. அதிகாரமும் இல்லை. இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட அறியாமல் இப்படி அறிவித்தனர்.
இப்படி அறிவிப்பு செய்த பிறகுதான் பீஜேயிடம் இது பற்றி பேசவேண்டும் என்று கூறி பீஜேயின் வீட்டுக்கு கலீல் ரசூலும் சாதிக்கும் வந்தனர்.
அப்போது நடந்த பேச்சு வார்த்தை குறித்து தான் கலீல் ரசூல் பொய்களைக் கூறி உள்ளார்.
மூன் பப்ளிகேசன் ஸ்டாக்கில் உள்ள நூல்கள், வழக்கமான ஜமாஅத் வழங்கும் ராயல்டி அடிப்படையில் அனைத்து நூல்களையும் நீங்களே வாங்கிக் கொள்ளலாம். இதற்கு ஒரு கோடிக்கு மேல் ஆகும்; ஸ்டாக்கை கணக்குப் பார்த்து அதை தீர்மானித்துக் கொள்வோம் என்று தான் பீஜே தரப்பில் கூறப்பட்டது.
மூன் பப்ளிகேசன் ஸ்டாக் நூல்கள் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்.
திருக்குர்ஆன் தமிழாக்கம் பத்தாயிரம் பிரதிகள் கையிருப்பில் இருந்தால் ஒரு பிரதிக்கு 400 என்ற அடிப்படையில் அதற்கான தொகை 10000×400=4000000 நாற்பது லட்சம் ரூபாய்கள் ஆகலாம்
முஸ்லிம் அல்லாதவர்களுக்காக திருக்குர்ஆன் மலிவுப் பதிப்பு 200 ரூபாயில் போடப்பட்டது. இந்தப் பிரதிகள் பத்தாயிரம் ஸ்டாக் இருந்தால் 10000×200=20000
00 (இருபது லட்சம் ரூபாய்கள்) ஆகலாம்.
90 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் உள்ளன. 90 தலைப்புகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தலைப்பில் 2000 நூல்கள் கையிருப்பாக இருந்தால் 180000 ஒரு லட்சத்து எண்பதாயிரம் பிரதிகள் ஆகிறது.
பல தரப்பட்ட விலைகளில் நூல்கள் உள்ளன. சராசரியாக ஒரு பிரதிக்கு 30 ரூபாய்கள் என்று வைத்துக் கொண்டால் 180000×30=5400000 (ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய்கள்) ஆகும்.
உத்தேசமாக இந்தக் கணக்குப் படி ஒன்றே கால் கோடிக்கு நெருக்கமாக இருப்பு இருக்கும் போது பீஜே ஒரு கோடி எப்படி கேட்டிருப்பார்?
மேலும் ராயல்டி என்பது குருட்டாம் போக்கில் ஒரு கோடி இரு கோடி என்று அறிவுடைய யாரும் சொல்ல மாட்டார்கள்.
அப்படிச் சொன்னால் அறிவுடைய யாரும் அதைக் கேட்டுக் கொண்டு போக மாட்டார்கள்.
எப்படி ஒரு கோடி என்று கேட்டிருப்பார்கள். அப்படி கலீல் ஏன் கேட்கவில்லை. அந்த அளவுக்கு விவரமற்றவரா?
அத்துடன் உங்கள் பெயரை நீக்கி விட்டு அறிஞர் குழு என்று போடுவோம் என்று கலீல் கேட்டார்.
இது அறிவீனமானது; செயற்குழுவில் நீங்கள் அறிவித்த பின்னர் நாக்கைப் பிடுங்குவது போல் முக நூலில் கேட்கிறார்கள். யார் பெத்த பிள்ளைக்கு யாருடைய இன்ஷியலைப் போடுவது என்றும் மக்கள் கேட்கிறாரகள் என்று பீஜே கூறியிருக்கிறார்.
அறிஞர் குழு அதை எழுதாமல் இருக்கும் போது அறிஞர் குழு எழுதியதாக பொய் சொல்லி தாவா செய்ய அனுமதி உண்டா என்றும் பீஜே கேட்டிருக்கிறார்.
அவர்கள் சென்ற பின்னர் வீட்டில் குடும்பத்தார் மஷ்வரா செய்து நாம் எல்லா புத்தகங்களையும் ஜமாஅத்தில் விற்று விட்டால் பித்னா செய்வார்கள். எனவே இந்த டீலிங் வேண்டாம் என்று முடிவு செய்து மறுநாள் காலையில் போன் போட்டு சாதிக் அவர்களிடம் மொத்தமாக நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம்; ராயல்டி அடிப்படையிலும் வேண்டாம் என்று பீஜே தரப்பில் சொல்லப்பட்டு விட்டது.
ஆனால் சில மாதங்கள் கழித்து பொதுக்குழுவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் மீண்டும் ராயல்டி அடிப்படையில் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக பேசிய போது பீஜேயின் மைத்துனர்கள் இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி விட்டார்கள். காசுக்காக எல்லா உரிமையையும் விட்டுக் கொடுத்தார்கள் என்ற அவப்பெயர் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
ஆனால் ராயல்டியாக பீஜே ஒரு கோடி கேட்டார் என்று நிர்வாகிகள் திட்டமிட்டு பீஜே பெயரைக் கெடுக்க புளுகியுள்ளனர்.
பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கம் உருது மொழியில் வெளியிட தவ்ஹீத் ஜமாஅத்தில் கொடுத்துள்ளார்கள். அதற்காக பீஜே ஒரு பைசாவும் ராயல்டி கேட்கவில்லை. ஜமாஅத் தான் அதன் முழு ஆதாயத்தையும் அடைந்து வருகிறது.
பீஜேயின் நூல்களை இலவசமாக வெளியிட சவூதி ஜாலியாத்தில் இருந்து அனுமதி கேட்டார்கள். இதற்காக ராயல்டி கொடுக்கும் வழக்கம் சவூதி ஜாலியாத்தில் இருந்தாலும் பல லட்சங்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தும் ராயல்டி ஏதுமில்லாமல் பீஜே அனுமதி வழங்கினார்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் பொய்யான காரணம் கூறி பீஜேயை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியது போல் எப்படியாவது பீஜே மீது வெறுப்பை ஊட்டி தங்களை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே ஒரு கோடி ராயல்டி மேட்டர்.
ஒரு கோடி கேட்டார்; கட்டுபடியாகாது என்று கூறி விட்டோம் என்று கலீல் கூறியது உண்மை என்றால் அத்துடன் பேச்சுவார்த்தை மூடிந்து இருக்க வேண்டும்.
அதன் பிறகு மீண்டும் கேட்டோம்; தர மறுத்து விட்டார்கள் என்கிறார்.
கலீல் துவக்கமாக சொன்னது உண்மையானால் இரண்டாவது தடவை பேச வேண்டி வருமா?
பீஜே கேட்ட தொகைக்கு ஜமாஅத் மறுத்தது உண்மை என்றால் அடுத்த பேச்சு வார்த்தை மூன் பப்ளிகேசன் சார்பில் தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் ஜமாஅத் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்தது?
ஜமாஅத் தரப்பு ஒரு கோடிக்கு மறுத்து விட்டால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஜமாஅத் அழைத்திருக்க முடியாது.
பீஜே தான் அழைத்து இருக்க வேண்டும்.
ஆனால் ஜமாஅத் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
அப்படியானால் பீஜே ஒரு கோடி ராயல்டி கேட்கவும் இல்லை; ஜமாஅத் தரப்பில் மறுக்கவும் இல்லை. அதனால் தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள்.
கலீலின் முரண்பாட்டை வைத்து உண்மையைக் கண்டறியலாம்.
சிந்தித்து ஆராயும் ஜமாஅத் சகோதாரர்கள் எப்படி இதை நம்பினார்கள்? என்பது தான் வியப்பாக உள்ளது.

[15/08, 5:57 pm] ‪+966 53 349 4340‬: அப்போ பொய் சொன்னது கலில் ரசூல் ஆ..

PJ வன்னு தெரியல...🤷🏽‍♂

[15/08, 8:00 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ஜமாஅதை விட்டு யார் போனாலும் கவலையில்லை "எங்களுக்கு கொள்கையே" என்று தம்பட்டம் அடித்த ததஜ...
ஜமாஅதை விட்டு விலகுவதாக அறிவித்த ஆட்களுக்கு அதாவது.. உங்களை வேண்டாம் என்று உதறித்தள்ளிய எதிரிகளுக்கு. "பதவி"
"பணம்" என்ற எலும்பு துண்டை போட்டு மீட்டு...
மீண்டும் சமாத்தில் இணைந்து நிர்வாகத்தில் அமரவைத்த கொடுமை...
அடே! உறுதியற்ற உதவாக்கரைகளை வைத்து எத்தனை காலம் ஓட்டப்போகிறீர்க
ள் பார்ப்போம்..
TNTJ பொழப்பு நாய் பொழப்பு ஆகிவிட்டதே
# கரூர்_குளித்தலை
_பரிதாபங்கள் ..
[16/08, 5:42 am] அப்ரஹ்மான்கநல்லார்: ஜமாஅத்தை_பாதுகா
க்க_பொய்_சொல்லல
ாம்_என்பதை_நடைம
ுறைப்படுத்திய_த
வ்ஹீத்_ஜமாஅத்தினர் ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள வெள்ள நிவாரனப்பணியில் களம் இறங்கியிருக்கிறது.
அண்டை மாநிலம் என்று கூட பாராமல் பாதிக்கப்பட்டவர
்களுக்கு உதவி செய்வதற்காக சென்றிறுப்பது பாராட்டுக்குறியதே...
ஆனால் அந்த பணிகளை போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தும்போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்களுடைய பணிகளை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் செய்த வெள்ள நிவாரணப் பணிகளின் போட்டோக்களை போட்டு பெறுமையடித்துக்
கொள்வதுதான் வேதனைக்குரிய விஷயம்...
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் பதிவு செய்திருக்கும் போட்டோவில் உள்ளவர்கள் தற்போது
# ஜமாஅத்திலேயே_இல்லை
,அவர்கள் #நடவடிக்கை_எடுக்
கப்பட்டவர்களும் கூட.
பையை தூக்கிக்கொண்டு வருபவர் #யாசிர்,பாட்டியை கையைப்பிடித்து அழைத்து வருபவரின் பெயர் # இம்தியாஸ் .
(நான் கேரளாவுக்கு போகாமலேயே அந்த தற்போதைய இடத்தை போட்டோ எடுத்து போட்டிருக்கிறேன்...)
# பொய்யர்கள் #அழிவார்கள்
.பொய்யர்களுக்கு துணை போனவர்களும் அழிவார்கள்.பொய்யர்களை தன்பக்கம் வைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பவர்களும் அழிவார்கள்.
[16/08, 4:18 pm] ‪+91 86100 27127‬: நபிவழி செல்கிறோம் என்று சொல்பவர்கள்..... கூட்டு குர்பானி எப்படி கொடுக்கிறார்கள். நபிவழி ஆதாரம் தர முடியுமா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.