TNTJ முன்னாள் மாநில பொருளாளர் பேரணாம்பட்டு அன்வர் பாஷா அவர்கள் இறந்து விட்டார்கள்.

கருணாநிதி மரணத்தை ஒட்டி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மைகளை மட்டுமே எழுதுவோம் என்றார்கள். தேவையற்ற அவர்களது பத்வா விமர்சித்த எம்மை கருணாநிக்கு ஈமான் கொண்ட கூட்டத்தை சார்ந்தவன் என்றார்கள். அப்படிபப்ட்டவர்கள் அன்வர் பாஷா அவர்கள் மரணத்தை ஒட்டி எழுதுவதை ஜீரணிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலுார் மேற்கு மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சார்ந்தவர் P. அன்வர் பாஷா. த.மு.மு.க.வின் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டுக்கு சொந்தமான உணர்வு வார இதழின் பப்ளிஷராக இருந்தவர். TNTJவின் முன்னாள் மாநில பொருளாளர் 10.08.2018 மாலை 7 மணி அளவில் இறந்து விட்டார்.

அன்வர் பாஷா அவர்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக என்று துஆச் செய்வோம். அதே நேரத்தில் நிகழ்கால பிரச்சனையில் அன்வர் பாஷா பங்கை அறிந்து இனியாவது மற்றவர்கள் திருந்த வேண்டும். அதற்காகவே இந்த வரலாற்றுக் குறிப்பு.

பீ.ஜே.க்கு பினாமியாக இருப்பதையும், சிங்கி அடிப்பதையும் பீ.ஜே.க்காக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்வதையும் தொழிலாகக் கொண்டவர்கள் பலர். அதில் ஒருவராக இருந்தவர்தான் அன்வர்பாஷா அவர்கள். பீ.ஜே. இருக்கும் அமைப்புகளில் அன்வர் பாஷாவுக்கு பீ.ஜே. முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பாக பொருளாளர் பதவி கொடுப்பார் அல்லது கொடுக்க வைப்பார். ஏதாவது ஒரு உட்பிரிவு மூலம் அன்வர் பாஷாவிடம் பொருளாதாரத்தை கொடுக்க வைப்பார் பீ.ஜே.

பி.ஜெ.யின் பினாமிகளில் ஒருவரான இந்த அன்வர்பாஷா 1990 களிலிருந்து பீ.ஜே. சிபாரிசில் தவ்ஹீதுவாதிகளிடம் வியாபாரத்தின் பெயரால் ஷேர் சேர்த்தார். பணம் வாங்கி விட்டு இழுத்தடித்தார். விவகாரம் ஆனதும் பீ..ஜே.யும் அவரிடம் நீங்கள் கொடுத்த பணத்தை விட அவர் ஜமாஅத்துக்கு வழங்கியது அதிகம் என்று 15 லட்ச விஷயத்தில் இன்று சொன்னது போல் அன்றும் சொல்லி ஏமாற்றினார்.

இவர் ஷேர் சோ்த்து இழுத்தடித்து பாதிக்கப்பட்டவர்கள் துபையிலும் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கம்ளைண்ட் செய்தார்கள். இது 1994, 95ல் நடந்தது. அது பெரிய பிரச்சனையாக ஆனபோது இந்த பிரச்சனை சம்பந்தமாக  நான் பீ.ஜே.யிடம் பல முறை பேசினேன். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்தது.

ஷேர் சேர்ந்தவர்களில் பொதக்குடி அப்துல் ஸமது அவர்களும் ஒருவர். பொதக்குடி அப்துல் ஸமது பெயரை மட்டும் ஏன் குறிப்பிடுகிறேன் தெரியுமா? கம்ளைண்ட் செய்தவர்கள் பெரும்பாலும் இன்றும் பீ.ஜே.யின் பக்தர்களாகவே உள்ளார்கள். அப்பல்லோ ஹனீபா பஞ்சாயத்து, 28 நிமிட ஆடியோ என எல்லாவற்றையும் மறுத்தவர்கள்தான் அவர்கள்.

இந்த அன்வர் பாஷாதான் ஆற்காடு டீச்சர் விவகாரம் வந்தபொழுது பீ.ஜே.யைக் காப்பாற்ற ஆற்காடு டீச்சர் எல்லாரிடமும் சகஜமாக பழகுவார் (அன்வராகிய)  என்னிடமும் சகஜமாக பழகுவார் என்று வீடியோவில் சாட்சி சொன்னார். இந்தக் அன்வரை வைத்துதான் பல அமைப்புகளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை பீ.ஜே.  அரங்கேற்றினார். அதில் ஒன்று செயலாளர் பொருளாளருக்குத் தெரியாமல் ஜாக் பணத்தை அமீர் எஸ்.கே. தொழிலில் முதலீடு செய்தார் என்பது.

அமீர் என்றால் முழு அதிகாரம் படைத்தவர் என்று 1994ல் பீ.ஜே. விளக்கியபடி, ஜாக்கில் உள்ளவர்கள் அமீர் முறையை ஏற்று உள்ளனர். அந்த அடிப்படையில் செயலாளர் பொருளாளர் என்பது நாட்டு நடப்புக்காக உள்ளதுதான். 

இதை அறிந்துதான் ஆரம்பத்தில் டிராமாவுக்காக - நடிப்புக்காக கணக்கு கேட்ட பீ.ஜே. கூட ஜாக் பொருளாளரிடம் கணக்கு கேட்டதாக சொல்லவில்லை. அமீர் என்ற முறையில் கமாலுத்தீன் மதனி இடம்தான் கணக்குக் கேட்டதாகக் கூறினார். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களும் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்பவர்களும் பீ.ஜே.க்காக பொய் சாட்சி கூறினார்கள்.

எஸ்.கே. யாரிடம் கொடுத்தாரோ அந்த அன்வரிடம் தன் பெயரில் எழுதி வாங்கவில்லை. ஜாக் பெயரில்தான் எழுதி வாங்கி உள்ளார். ஜாக்குக்காக என்று எஸ்.கே. சொல்லாது இருந்தால் இந்த அன்வருக்கு தெரியாது. ஜாக்குக்காக யாரோ கொடுத்ததை எஸ்.கே. தன் பெயரில் முதலீடு செய்து விட்ட மாதிரியும். சம்பந்தப்பட்டவர் வந்து கேட்கும் போது சமாளித்த மாதிரியும் ஒரு மாயையை ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டார்கள்.

அந்த வீடியோவில் பிராடு பீ.ஜே, இன்று இறந்து விட்ட அன்வர், ம.ஜ.க. மாநில தலைமையில் உள்ள டாபர் மாமா ஏ.எஸ். அலாவுதீன், லுஹாவால் செக்ஸ் குற்றச்சாட்டுக்குள்ளான அப்துர்றஹ்மான் பரதேசி ஆகியோர் நடித்துள்ளார்கள். இதோ அந்த வீடியோ லிங் பார்த்துக் கொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=pPBXvPhfyHs&feature=youtu.be




ஆதாரம் என்பது வவுச்சரும் ஆதாரம் தான். சம்பந்த பட்டவரிடமிருந்து எழுதி வாங்குவதும் ஆதாரம் தான். வவுச்சரை விட சம்பந்தப் பட்டவரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி இருப்பது தான் கூடுதலான பலன் தரும் ஆதாரம். இதை வைத்து மோசடியாளராக காட்ட. என்னிடம் வவுச்சர் வாங்கினியா நீ என்று இன்று இறந்து விட்ட அன்வர் கேட்கிறார். எஸ்.கே.யை மோசடியாளராகக் காட்ட விரும்பும் பீ.ஜேயால் மோசடியாளர் என்று நிரூபிக்க முடியவில்லை. அதனால் எதுவும் நடக்கும் என்று கூறி முடிக்கிறார்கள்.

இன்று இறந்து விட்ட அன்வர் பாஷா பீ.ஜே.க்காகவோ அவர் இருந்த இயக்கத்தக்காகவோ என்ன செய்து இருந்தாலும் அவை கை கொடுக்குமா? அல்லாஹ்வுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நியாயத்தை நிலைநாட்ட பாடுபட்டிருந்தால் அது மறுமையில் பயன் தரும்.

பதவி,  வருவாய்,  மாதசம்பளம், வியாபாரம்  மற்றும் கமிஷன் நோக்குடன் மக்களை ஏமாற்றி இஸ்லாமிய இயக்கத்தை பிழைப்பாக ஆக்கி விட்டவர்கள் இனியாவது திருந்துங்கள்.

பள்ளித் திருடர்களாக இருந்தாலும் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதியவர்களாக இருந்தாலும் பள்ளிவாசலில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களாக இருந்தாலும்  யாராக இருந்தாலும் அவர்கள் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். 

பதவிக்காக பள்ளியை திருடியவர்களும் அதை பிழைப்பாக ஆக்கி விட்டவர்களும் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதியவர்களும்  பள்ளிவாசலில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களும் அன்வர் பாஷா மாதிரி ஒரு நாள் இறந்து போகக் கூடியவர்களே! 
   كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள் 55;26

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.