ஜுமுஆ உரையை நீட்டி தொழுகையை சுருக்குவது யார் வழி?

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே? என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். கூறியவர் ;- அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) புகாரி 1577

நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.
அறிவிப்பவர் ;- ஜாபிர் பின் சமுரா (ரலி) புகாரி 1571
 :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறிவிட்டார் என்று குறிப்பிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ என்று (பிரித்துக்) கூறுவீராக! என்றார்கள்
அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாக புகாரி 1578 

இன்று பெரும்பாலானவர்கள் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தாலும் பரவாயில்லை. ஜுமுஆ தொழுகையை சுருக்குவோம் ஜுமுஆ உரையை நீட்டியே தீருவோம் என்ற முடியில் உள்ளார்கள்.

நிர்வாக முடிவு என்ற பெயரால் குர்ஆன் ஹதீஸுக்கு மாறு செய்வதில் ஒவ்வொரு நிர்வாகிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜுமுஆ தொழுகையை நீட்டி உரையைச் சுருக்ககுவது நபி வழி என்றால்  அதற்கு மாறு செய்து ஜுமுஆ உரையை நீட்டி ஜுமுஆ தொழுகையை சுருக்குவது யார் வழியில் உள்ளார்கள். சொல்லவும் வேண்டுமா? 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.