தொழில் அதிபர் அன்வர் பாஷா அண்ணனுக்காக பொய் சாட்சி அளித்த காட்சி

முன்னதாக தலைப்புக்கு அப்பால்பட்ட ஒரு செய்தி. பேங்கில் போட முடியாத பணத்திலிருந்து அதாவது கணக்கில் இல்லாத  பணத்திலிருந்து எல்.எம். ஷேக் என்ற கோடீஸ்வரரான பீ.ஜே.யின் நண்பருக்கு தவ்ஹீது ஜமாஅத்திலிருந்து பல லட்சங்கள் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நான் திருப்பித் தருகிறேன் என்று பீ.ஜே. சொல்லி விட்டார் என்பது செய்தி. கோடீஸ்வர நண்பர் கடனுக்கு பொறுப்பு ஏற்ற மாதிரி ஏழை நண்பர் லுஹா மனைவி மருத்துவ செலவுக்கு ததஜவிலிருந்து கொடுத்த 20 லட்சத்தையும் பீ.ஜே. பொறுப்பு எடுத்து ததஜவுக்கு திருப்பி  கொடுப்பாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------  
பொய் பித்தலாட்டக்காரர்கள் யார்? என்ற தலைப்பில் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுடன் நடந்த விவாதத்தில் பீ.ஜே. செய்த பொய் பித்தலாட்டங்கள் ஏராளம். பேச்சுக்கும் எழுத்துக்கும் லட்சங்கள் வரை பணம் வாங்கியவர். கள்ள ஐ.டி மாதிரி கள்ள பெயரிலும் சொந்த பெயரிலுமாக  உணர்வு இதழில் இரட்டை வருமானம் பார்த்தவர். பணமே வாங்கவில்லை என்று அந்த வாதத்தில் அடித்துப் பேசினார்.

மேடையில் பேசிய பீ.ஜே.க்கு பத்தாயிரம் வரை பணம் கொடுத்தாக ஒவ்வொரு கூட்டத்துக்கும் எனது கணக்கில் பற்று எழுதி என்னிடம் பணம் வாங்கியவர் லுஹா. அந்த லுஹா முன் வரிசையில் இருந்து பீ.ஜே.யின் இந்த பொய்களுக்கு சாட்சியாகி உள்ளார். அதில் மிக முக்கியமானது பேரணாம்பட்டு அன்வர் பாஷா அவர்கள் ஸ்பெஷலாக அழைக்கப்பட்டு அளித்த சாட்சியம்.

இஸ்லாம் பற்றி ஷேக்ஸ்பியர், காந்தி, கென்னடி போன்றவர்கள் சொன்னதை தொகுத்து புத்தகமாக போடுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பற்றி நேரு, அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் சொன்னவற்றை தொகுத்து போடுகிறார்கள். அப்படி போடுபவர்களை கூப்பிட்டு ஷேக்ஸ்பியர் உன்னிடமா சொன்னார்? நீ ஷேக்ஸ்பியரை பார்த்து இருக்கிறாயா? என்று எந்த முட்டாளும் கேட்க மாட்டான்.

உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடுங்கள் - நபிகள் நாயகம் என்று ஒருவர் புத்தகம் போட்டால், போட்டவரைப் பார்த்து உன்னிடமா நபிகள் நாயகம் சொன்னார். நபிகள் நாயகத்தை நீ பார்த்து இருக்கிறாயா? என்று எந்த அறிவாளிகளும் கேட்க மாட்டார்கள்.  செய்தி உண்மையா பொய்யா என்றுதான் பார்ப்பார்கள். அசத்தியம் அழிகிறது என்ற தலைப்பில் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில்  பீ.ஜே. பற்றி நான் உட்பட பலர் கூறியதை தொகுத்து போட்டுள்ளார்.

பீ.ஜே. கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல் என்று S.U. உஸ்மான் அவர்களிடம்  அன்வர் பாஷா கூறி உள்ளதையும் போட்டுள்ளார். இதோ அதற்குரிய ஆதாரமான S.U. உஸ்மான் படத்துடன் கூடிய பைல்.

இதை திசை திருப்பி அன்வர்பாஷாவிடம், பீ.ஜே. கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல் என்று ஸைபுத்தீன் ரஷாதியிடம் சொன்னீர்களா என்று கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல் பீ.ஜே. கேட்கிறார். அன்வர் பாஷா ஸைபுத்தீன் ரஷாதியை பார்த்ததே இல்லை என்கிறார். வேறு யாரிடமாவது இப்படி சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்கிறார். இல்லை என்று பொய் சத்தியம் செய்து பொய் சாட்சியமும் செய்கிறார் அன்வர் பாஷா. https://www.youtube.com/watch?v=jJc-kxTWC3A&feature=youtu.be 


பீ.ஜே. ஒரு அயோக்கியன் என்று 2018 ஆகஸ்டு 5 ஈரோடு பொதுக்குழுவில் பிரகடனப்படுத்திய கலீல் ரசூல் பக்கத்தில் இருக்கிறார், 2013லேயே கலீல் ரசூல் மைண்ட் வாய்ஸ்  பீ.ஜே. ஒரு அயோக்கியன் என்று சொல்லி இருக்கும்.

லுஹா மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லி இருக்கும். நீ என்ன பெரியதாக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி விட்டாய். நான் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்தே அண்ணனுக்காக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவன் என்று சொல்லி இருக்கும்.

பொய்யும் புரட்டும் துணையாகக் கொண்டு பிழைத்தவரெல்லாம் போவாங்க மூலைக்கு மூலை துாக்கி எறிவோம் தலைகுனிவாக ஆவாங்க இன்ஷாஅல்லாஹ்

மேலும் விபரம் அறிய கீழ் காணும் தலைப்பை கிளிக் செய்யவும்
https://mdfazlulilahi.blogspot.com/2018/01/blog-post_9.html 

ஈமானியர்கள் யார்? பேமானியர்கள் யார்? அபூஜஹ்லை விடக் கடுமையானவன் யார்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.