த.மு.மு.க. முதல் பேரணிக்கு தலைமை தாங்கிய அமீர் யார்? அபுதாபியில் பி.ஜே. கூறியது உண்மையா?

ததஜ காரன் திருந்த மாட்டான். வருமானம், பிழைப்பு, பதவி, வரட்டுக் கவுரம் இவைதான் அவர்களை அங்கே கட்டிப் போட்டுள்ளது. நாம் அடையாளம் காட்டுவது வருங்கால மக்களுக்காக.


பி.ஜே. அபுதாபியில் சத்தியம் செய்து பேசி உள்ள வீடியோவை முதலில் பார்க்கிறீர்கள். அதில் அவர் என்ன சொல்கிறார்? 
https://www.youtube.com/watch?v=G0LxMRiS1RE&t=4s 





அதாவது ஆரம்ப காலத்திலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை நாமெல்லாம் சேர்ந்து ஆரமபிக்கும்பொழுது அது சமுதாய பணி செய்வதோட மறைமுகமாக தவ்ஹீது பிரச்சாரத்திற்கும் உறுதுணையாக இருக்கும். தவ்ஹீது சகோதரர்கள் பாதிக்கப்படும்பொழுது அது வந்து களத்தில் இறங்கி குரல் கொடுக்கும் அப்டீங்கிற வாக்குறுதியோடுதான் இயக்கத்த நாம உருவாக்கினோம் ஆரம்பித்தோம்.


அப்போது தவ்ஹீது சகோதரர்கள் மாத்திரம் இருந்த காரணத்தினாலே அதை அப்ப ஏற்றுக் கொண்டார்கள். பிறகு தவ்ஹீது அல்லாதவர்கள் வந்து இணைந்த பிறகு அந்த தவ்ஹீதுக்கு பக்க பலமாகத்தான் இது ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறந்து விட்டு இது வந்து கலிமாச் சொன்ன அனைவருக்குமான இயக்கம் என்கிற மாதிரியான ஒரு டைப்பில் போயி தவ்ஹீது சகோதரர்களுக்கு எதிராக ஒரு நிலைக்கு போயிட்டாங்க. என்று அபுதாபியில் சத்தியம் செய்து சொல்லி உள்ளார்.


அதற்கு பதில் அளிக்கும் விதமாக, .மு.மு.. நடத்திய முதல் பேரணியில் பி.ஜே. பேசி உள்ளதையே இணைத்துள்ளோம் பாருங்கள். என்ன பேசி உள்ளார்?

இந்த அவல நிலையில் இருந்து மீள வேண்டும் என்று சொன்னால் நமக்கிடையே உள்ள கட்சி வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் அத்தனையும் மறந்து விட்டு. நாமெல்லாம் முஸ்லிம்கள், நாமெல்லாம் ஒரே கொள்கையை பின்பற்றக் கூடியவர்கள். ஒரே தலைவரின் வழி நடப்பவர்கள். ஒரே வேத புத்தகத்தை வாழ்க்கையின் வழி காட்டியாக கொண்டவர்கள் என்பதை உலகறியச் செய்வதற்காகத்தான். அத்தனை வேறுபாடுகளையும் மறந்து இங்கே குழுமி இருக்கின்றோம், என்கிறார்.

அடுத்து தவ்ஹீதுக்காக உருவான அமைப்பு என்று பி.ஜே.  சொல்லி உள்ள அமைப்பின் தலைவரான ஹனீபா தலைமை ஏற்று பேரணியை நடத்தி தர வேண்டுகோள் வைக்கிறார்இங்கே ஹனீபா என்று நான் குறிப்பிடுவது .மு.மு.. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்களைத்தான். அசோகா ஓட்டலுக்கு மாறு வேஷத்தில் செட்டில்மண்டுக்காக பணம் கொண்டு போன அப்போலோ ஹனீபா ஞாபகம் வந்து விடக் கூடாது.   


இன்றைக்கு குணங்குடி ஹனீபா என்றால் அவரது பெரிய தாடிதான் நம் கண் முன் வரும். 


(அத்தாவும் அவரது குடும்பத்தாரும் மன்னிக்க வேண்டும்) தவ்ஹீதுக்காக ஆரம்பிக்கப்பட்டதாக பி.ஜே. சொல்லி உள்ள அமைப்பின் அன்றைய ஹனீபாவை பாருங்கள். தாடியை மழுங்க சிறைத்து விட்டு இரு துருவங்களைப் பார்த்து நிற்கும் நீண்ட நெடிய மீசை. இது மட்டுமா?


தவ்ஹீதுவாதிகளுக்கு தலைமை தாங்கிய அவரது இஸ்லாமிய நிலை எப்படி இருந்தது?

அஸ்ஸலாமு அலைக்கும் அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்பதைக் கூட எழுதி வைத்துதான் படித்துக் காட்டினார். அதன் பிறகு அந்த பேரணி இறுதியில் பி.ஜே. சொல்கிறார்.

நம்முடைய இஸ்லாமிய சமூக அமைப்பு ஒரு தலைவருக்கு கட்டுப்பட வேண்டும். அமீருக்கு கட்டுப்பட வேண்டும். அமீர் ஒழுங்காக இருக்கும் வரை அமீருடைய உத்தரவுக்கு அப்படியே கட்டுப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே நம்முடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய அமீர் அவர்கள் குணங்குடி ஹனீபா அவர்கள். எனவே அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்கிறார்.


பி,ஜெ. அன்று அறிமுகப்படுத்திய  தவ்ஹீது? அமைப்பின் அமீர்  அவர்கள் எப்படி இருந்தார்? எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே என்பதைக் கூட எழுதி வைத்தும் ஒழுங்காக சொல்ல முடியாதவராக இருந்தார். முதல் பேரணிக்கு அடித்த வால்போஸ்ட்டரில் அல்ஹாஜ் பாக்கர் என்று தவ்ஹீது? படி அச்சிட்டு உள்ளதையும் பாருங்கள். எல்லாமே வேஷம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

எல்லாமே வீடியோ ஆதாரத்துடன் தந்துள்ளோம். சந்தர்ப்பவாதியை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். சமதாயத்திற்கு அடையாளம் காட்டுங்கள்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_54.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.