முபாஹலா பின் வாங்கியது யார்? நெல்லிக்குப்பம் தாஜுதீன் அவர்கள் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதம்.

முபாஹலா செய்ய மேலப்பாளையம் வந்ததாகவும் பழுலுல் இலாஹியாகிய நாம் வரவில்லை என்றும் பி.ஜே. தனது ஆன் லைனிலும் போட்டு வைத்துள்ளார். ஆங்காங்கே பேசியும் வருகிறார். அந்த கிளிப்புகளை பலர் பரப்பியும் வருகிறார்கள். 

பின் வாங்கியது யார்? என்பது சம்பந்தமாக நெல்லிக்குப்பம் தாஜுதீன் அவர்கள் 18.9.05 அன்று பி.ஜே.க்கு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதையே பதிலாக உங்கள் முன் வைக்கிறேன்.

நெல்லிக்குப்பம் தாஜுதீன்  அவர்கள் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதம்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.18.9.05

            அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க. சொத்துக்களை அநியாயமாக அபகரித்து அனுபவித்து வரும் பி.ஜைனுல்ஆபிதீன் அவர்களே! 

   நீங்கள் களவாடிய பத்திரி-க்கையில் பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும் என்று எழுதியுள்ள பித்தலாட்ட செய்தியைக் கண்டேன். 

 இதற்கு முன் பகிரங்க அழைப்பு என்ற உங்களது பிராடுகள், பித்தலாட்டங்கள் அடங்கிய அழைப்பு வெளியிட்டிருந்தீர்கள். 

 உடனே, 14-09-2005 அன்று நீங்கள் பேச இருக்கும் மேலப்பாளையம் பசார் திடல் பொதுக் கூட்ட மேடைக்கே மனைவி மக்களுடன் முபாஹலா செய்ய வந்து விடுகிறேன் என்றார் பழுலுல் இலாஹி. 

தொடை நடுங்கிப் போய்விட்ட நீங்களும் உங்கள் அணியினரும் அந்த பொதுக் கூட்டத்தையே ரத்து செய்து விட்டீர்கள். 

  முபாஹலா செய்ய தெம்பு இல்லாத நீங்கள் எந்த வகையிலும் பழுலுல் இலாஹி முபாஹலாவுக்கு வந்து உங்கள் மானத்தை வாங்கி விடக் கூடாது என்பதற்காக அடுத்தக் கட்ட சூழ்ச்சியை செய்தீர்கள். 

            நாங்கள் தயார் என்று லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டீர்கள். அதில் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடையவர்களும் முபாஹலாவுக்கு வந்தால்தான் முபாஹலா  பூச்சாண்டி காட்டி வரும் உங்கள் அணியும் 14ஆம் தேதியன்று முபாஹலாவுக்கு வரும் என அறிவித்தீர்கள். 

அந்தரங்கமாக பொதுக் கூட்டத்தை ரத்து செய்தீர்கள். பகிரங்கமாக நாங்கள் தயார் என்ற நோட்டீஸ் நாடகம் போட்டீர்கள்.

     அதன் மூலம் முபாஹலாவுக்கு ஒப்பந்தம் தேவை இல்லை என்பதையும் ஒப்புக் பொண்டு விட்டீர்கள். 

    நீங்கள் செய்த அந்த சூழ்ச்சி நோட்டீஸை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நம்பிக்கையில்  பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும் என்று பித்தலாட்டம் செய்துள்ளீர்கள். 

   நாங்கள் தயார் என்ற நோட்டீஸை போட்டதே நீங்கள்தானே. அதுவே உங்கள் பகிரங்க அழைப்பிலிருந்து நீங்கள் பின் வாங்கி விட்டீர்கள் என்பதற்குரிய ஆதாரம் அல்லவா. 

 பின் வாங்கிய நீங்கள் புதிதாக சில குற்றச்சாட்டுகளைக் எழுதியிருந்தீர்கள். உங்கள் குற்றச்சாட்டுகள் எதற்கும் அஞ்சாத பழுலுல் இலாஹி உங்கள் புதிய குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சவில்லை. 

  உங்கள் புதிய குற்றச்சாட்டு இந்திய தேசிய பிரச்சனைகளை ஒட்டி இருந்ததால் அதிகாரிகளுக்கு முன்னிலையிலும் முபாஹலா பண்ணத் தயார் என்றார். 

  நாங்கள் என்ன சொன்னாலும் டி.ஜி.பி. கேட்பார் என்று பேசி வருகிறீர்களே அந்த டி.ஜி.பி. தலைமையிலேயே முபாஹலாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். பயந்து விட்டீர்கள் நீங்களும் உங்கள் அணியினரும். 

  முபாஹலா என்ற பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள். அத்துடன் நின்றீர்களா? நாங்கள் டி.என்.டி.ஜே. சார்பில் ராஜ் மஹாலில் நோன்பு கூட்டம் நடத்தப் போகிறோம். பழுலுல் இலாஹி என்பவர் முபாஹலாவுக்கு வந்து எங்கள் கூட்டத்தில் கலாட்டா செய்வார் என அஞ்சுகிறோம் என்று போலீஸில் புகார் செய்துள்ளீர்கள்.

            அந்த அடிப்படையில்தான், 14-09-2005 அன்று டி.என்.டி.ஜே. சார்பாக நடைபெற உள்ள மார்க்க சொற்பொழிவு கூட்டத்திற்கு என்னால் எந்வித இடையூறும் வராது எனவும் அப்படி எதுவும் சம்பவம் நடந்தால் அதற்கு நானே பொறுப்பு என பழுலுல் இலாஹியிடம் போலீஸார் எழுதி வாங்கினார்கள். 

       14ஆம் தேதியன்று பழுலுல் இலாஹி வீட்டை விட்டு வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக அவர் வீட்டு வாசலில் போலீஸார் வந்து நின்றார்கள். அல்லாஹ்வின் அருளால் பழுலுல் இலாஹி குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி காரில் நெல்லை முழுவதும் தனியாக பவனி வந்தார். 

    ஆனால் நீங்கள்  உங்கள் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், பின்னால் ஒரு போலீஸ் ஜீப் என்றுதானே ராஜ் மஹால் வந்து சென்றீர்கள். முபாஹலாவிலிருந்து பின் வாங்கிய பித்தலாட்ட பி.ஜே.யே 1986லிருந்து வரிசையாக ஒவ்வொன்றுக்கும் முபாஹலா செய்ய பழுலுல் இலாஹி தயாராகவே உள்ளார். 

    பிராடு பித்தலா ட்டங்கள் செய்யாமல் முபாஹலாவுக்கு நீங்கள் தயாரா? தயார் என்றால் முபாஹலா செய்ய சென்னைக்கே வருவார் பழுலுல் இலாஹி. 

      உலக அண்ணன் அமெரிக்க வழியில் அண்ணன் பி.ஜே. அணியின் செயல்பாடுகள் தொடருமானால் அமெரிக்காவை அலங்கோலப்படுத்திக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் தண்டனையை நீங்கள் மட்டுமல்ல லுஹா உட்பட உங்கள் அணியினர் அனைவரும் எதிர் பார்த்து காத்து இருங்கள். 

   முஸ்லிம்களின் கூட்டமைப்புகளுக்கு எதிராக பொய் சொன்ன பொய்யர்கள் மீதும் பொய் சத்தியம் செய்த பொய் சத்தியர்கள் மீதும் பொய் சாட்சி சொன்ன பொய் சாட்சிகள் மீதும் யா அல்லாஹ் உனது  சாபத்தை இறக்குவாயாக

   முபாஹலாவிலிருந்து பின் வாங்கி யார் பொய்யை பரப்புகிறார்களோ அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக என பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்:நெல்லிக்குப்பம் தாஜுதீன்
00971 50 2077067


மேலும்   பி.ஜே, வளைகுடா வாழ் கொள்கைச் சகோதரர்களுக்கு என்று மெயில் அனுப்பி இருந்தார். அதையும் பாருங்கள். 

அதில் இறுதியாக,  அவரது பொய் முகத்தைத் தோலுரித்து காட்டும் வகையில் இது சம்பந்தமான விஷயங்கள் முழுமையாகத் திரட்டப்பட்டு சிடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாயகத்திலிருந்து தங்கள் இடத்திற்கு வரும் நபர்கள் இருந்தால், அவர்கள் நேரடியாக தலைமையில் வந்து பெற்றுச் செல்லலாம். அல்லது அவர்களின் உள்ளூர் முகவரியைத் தந்தால் கூறியரில் அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்!

எல்லா நிகழ்ச்சிகளையும் உடனடியாக ஆன் லைனில் அப்லோடு செய்யக் கூடியவர் இன்று வரை அப்லோடு செய்யவில்லை.  அந்த தயாரிக்கப்பட்ட  சி.டி.யாவது யாருக்காவது கிடைத்ததா? என்றால் இல்லை. உண்மையாக இருந்தால்தானே அப்லோடு செய்யவும் சி.டி.யாக கொடுக்கவும் முடியும். அதுவும் நடந்த நிகழ்ச்சியை அப்படியே வீடியோவாக தருகிறோம் என்று சொல்லவில்லை. அதுவும் தயாரிக்கப்பட்ட சி.டி.தானாம்.   பி.ஜே. வளைகுடாவுக்கு அனுப்பிய இ.மெயில். 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.