கத்தாரை நினைவூட்டி விட்ட மஸ்கட்

மஸ்கட்டில் நேரடி நிகழ்ச்சி இல்லை நேரலை நிகழ்ச்சிதான். இருந்தாலும் பழைய வரலாறு ஒன்றை இங்கு நினைவுக்கு தருகிறேன்.

பி.ஜே. தனது கத்தர் பயணத்தை கடைசி வரை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் அபகரித்து நடத்தி வரும் பத்திரிக்கையில் கூட இறுதி கட்டத்தில்தான் விளம்பரம் போட்டார். அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருந்தார். 

கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.

கத்தரில் உள்ள அவரது சகாக்கள் பி.ஜே. வழியிலேயே வார்த்தை மோசடிகள் செய்து விஸா எடுத்து விட்டனர். எப்படியோ விஸா எடுத்து விட்டோம். எனவே அதே மோசடி வழியில் நிகழ்ச்சிகளையும் நடத்தி விடுவோம் என்ற தெம்பில் பிறரை மதிக்காமல் அல்லாஹ்வை மறந்து ஆட்டம் போட்டனர். 

கத்தர் கூட்டம் முடிந்து துபை போய் தடை செய்யப்பட்ட அதே கிரசண்ட் வளாகத்தில் பேசுகிறார். அதை முடித்து விட்டு வி.ஐ.பி. விஸாவில் இலங்கை போய் நிறுத்தப்பட்ட இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியையும் அதே இடத்தில் நடத்துகிறார். 

பிறகு சந்திரிகாவை சந்தித்துப் பேசி விட்டு அங்கிருந்து இலங்கை அரசு மரியாதையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றெல்லாம் தோஹா கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.

பி.ஜே. கனவு கண்டு கொண்டிருந்தார்.

அமானித மோசடியாளர். பி.ஜே.  அபகரித்துள்ள பத்திரிக்கையில் விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலேயே பி.ஜே.தோஹா கத்தருக்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டு விட்டது. 

ஐம்பத்தைந் தாயிரம் ரூபாய் வாடகை கட்டிடத்தில் குளு குளு ஏ.ஸி வசதியுடன் கூடிய கூட்டத்தில் இருக்கும்போதே இந்த சூடான செய்தி பி.ஜே.க்குப் போய் சேர்ந்து விட்டது. 

குளு குளு ஏ.ஸி வசதியுடன் கூடிய சென்னை விஜய் ஸ்ரீ மஹாலில்  இருந்த போதிலும் இந்த சூடானச் செய்தியால் சூடாகி சோர்ந்து போய் மூடு அவுட்டாகி விட்டார் பி.ஜே

எனவே அந்த பொதுக்குழுவில் அறிவிக்க இருந்த த.த.ஜ. சார்பில் தேர்தலில் போட்டி இடுவதற்கென தனி அரசியல் கட்சி என்ற திட்டத்தை போஸ்ட் மார்டம் செய்து விட்டார். 

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பி.ஜே. இந்திய அதிகாரிகளின் விசாரணைக்குள்ளானார். போகிற நாடுகளிலெல்லாம் பிரச்சனைக்குள்ளாகி வருகிறீர்களே என்று விசாரிக்கப்பட்டார். எனவே கத்தர் பயணம் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம் என்று பி.ஜே. கனவு கண்டு கொண்டிருந்தார். 

அதனால் சாதாரணமான விஸிட் விஸாவாக எடுத்து விடாமல் சட்டப்பூர்வமாக அவ்காப் அனுமதியுடன் கூடிய விஸா எடுக்கக் கூறி இருந்தார். பி.ஜே.யின் கத்தர் பயணக் கனவை என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும் அவருடன் உள்ள மவுலவிகளும் ரகசிய கூலிகள்தானே. அந்த மவுலவிகள் மூலம் பி.ஜே.யின் கத்தர் பயணச் செய்தி வெளியாகியாகமலா இருக்கும். வெளியாகி விட்டது.

பி.ஜே.யிடமிருந்து மன்னிப்புக் கடிதம் வராவிட்டால் அனுமதி தர மாட்டோம்.

செய்தி வெளியான வேகத்தில் கத்தரிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற அறிஞர் யூசுப் கர்ளாவி அவர்களை லூசு என்று இழிவுபடுத்திப் பேசியவர் பி.ஜே. என்ற விபரம் கத்தர் அவ்காபுக்குப் போய் சேர்ந்து விட்டது. பி.ஜே.யின் கத்தர் வருகைக்கு அவ்காப் பெர்மிஷன் பெற கத்தர் டி.என்.டி.ஜே.யினர் சென்றுள்ளார்கள். 

எங்கள் நாட்டிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற பேரறிஞர் யூசுப் கர்ளாவி அவர்களை இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார் இந்த ஜைனுல் ஆபிதீன். அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு ஜைனுல் ஆபிதீனிடமிருந்து கடிதம் வர வேண்டும் என்று கத்தர் அவ்காபில் கூறி விட்டனர். 

கத்தர் டி.என்.டி.ஜே.யினரோ பி.ஜே. அப்படி பேசவே இல்லை என பொய் சாட்சி சொல்லிப் பார்த்தார்கள். பி.ஜே.யின் இந்தப் பேச்சு பற்றி தகவல் கொத்தடுத்தவர் மீது கத்தர் அவ்காபுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்துள்ளது. அதனால் பி.ஜே. அவ்வாறு பேசியுள்ளது உண்மைதான் என்று உறுதியாகக் கூறியதுடன், ஜைனுல் ஆபிதீனிடமிருந்து மன்னிப்புக் கடிதம் வராவிட்டால் அனுமதி தர மாட்டோம் என்று கூறி விட்டனர். குறுக்கு வழியில் பிழைப்பு தேடுவதில் வல்லவர்களான டி.என்.டி.ஜே.யினர் இதாரத்துத்; தஃவா வல் இர்ஷாத்தில் போய் பெர்மிஷன் சீல் வாங்கி விஸா எடுக்க முடிவு செய்து அங்கு சென்றனர்.

கத்தர் டி.என்.டி.ஜே.யினரின் அதிரடிப் பொய்.

அவர்களோ, Q.C.P.I.  (கத்தர் கமிட்டி .பார் பிரசென்டேஷன் ஆஃப் இஸ்லாம்) பரிந்துரை செய்தால்தான் நாங்கள் பெர்மிஷன் தருவோம் என்று கூறி விட்டனர். Q.C.P.I. . முதீர் சொல்லித்தான் நாங்கள் இங்கு வந்தோம் என கத்தர் டி.என்.டி.ஜே.யினர் அதிரடிப் பொய் சொல்லி உள்ளனர். 

Q.C.P.I. முதீர் சொல்லி வந்துள்ளதாகச் சொன்னதும் இதாரத்துல் தஃவா இர்ஷாத்தின் பெர்மிஷன் சீல் அடித்து கொடுத்து விட்டனர். அவ்காப் அனுமதியின்றி, Q.C.P.I.  பரிந்துரையின்றி சூழ்ச்சிகளால் அதிரடிப் பொய்யால் விஸா எடுத்து விட்ட மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர்.

கத்தர் டி.என்.டி.ஜே.யினர். பி.ஜே. அபகரித்துள்ள பத்திரிக்கையில் பிரம்மாண்டமான விளம்பரம் வந்தது. விளம்பரத்தைப் பார்த்த சமுதாய நல விரும்பிகள் கத்தரிலுள்ள மிக முக்கியமான உயர் அதிகாரிக்கு பி.ஜே. யார் எப்படிப்பட்டவர் என்பதற்குரிய சகல ஆதாரங்களையும் பேக்ஸ் பண்ணினர். 

தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜே.தான் என்பதை அறிந்த உடனேயே  அந்த அதிகாரி பி.ஜே. கத்தருக்குள்ளேயே நுழையக் கூடாது என்ற தடை உத்தரவு போட்டு விட்டார். இனி எந்த ரூபத்திலும் கத்தருக்குள் பி.ஜே.யால் நுழையவே முடியாது.

இந்த நிலையில் பி.ஜே. தனது வரட்டுக் கவுரவத்தைக் காக்க எப்படியாவது கத்தருக்கு போய் விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக யூசுப் கர்ளாவி அவர்களிடமே நான் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுகிறேன் என்றும் கூறி இருக்கிறார். 

யாரிடம் மன்னிப்புக் கேட்டாலும் என்னதான் தலை கீழாக நின்றாலும் இனி எந்த ரூபத்திலும் கத்தருக்குள் பி.ஜே.யால் நுழையவே முடியாது. அப்படியொரு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

19-6-2005 அன்று போடப்பட்டுள்ள இந்த தடை எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? என்பதை அறிய முடியாத, அறியத் தெரியாத கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கத்தரிலுள்ள அப்பாவி தமிழ் முஸ்லிம்கள் மீது அநியாயமாக பழி சுமத்தி திரிகின்றனர். 

உண்மை நிலை இவ்வாறிருக்க மற்ற பகுதியில் உள்ள டி.என்.டி.ஜே.க்கள் பி.ஜே.க்கு உடல்நிலை சரி இல்லாததால் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட செய்தி வந்ததும்  பி.ஜே. இலங்கைக்கே செல்லவில்லை என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்த டி.என்.டி.ஜே.க்கள் கத்தரில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மமதைக்கும் அகம்பாவத்திற்கும் அல்லாஹ் கொடுக்கும் மரண அடிகள் தொடரும்.

யூசுப் கர்ளாவி இடம் மன்னிப்புக் கேட்கத் தயாராகி விட்ட பி.ஜே.க்கு வேண்டுகோளும் எச்சரிக்கையும். பி.ஜே. அவர்களே! உங்களால்; அநியாயமாக இழிவுபடுத்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அனைவருடனும் சமாதானம் ஆக வேண்டும். 

இல்லை என்றால் நான் என்ற உங்கள் மமதைக்கும் அகம்பாவத்திற்கும் அல்லாஹ் கொடுக்கும் மரண அடிகள் தொடரும். கத்தர் தடை சாதராணமானது அல்ல. கத்தர் செல்ல திட்டமிட்டு நீங்கள் செய்த சகல முஸ்தீபுகளையும் முறியடித்தவன் அல்லாஹ். 

அவனை அஞ்சுங்கள். அப்துல் மஜீத் மஹ்ழரியிடம் ரகசியமாக மன்னிப்புக் கேட்டு விட்டு ஹாமித் பக்ரியை கூட்டி வாருங்கள் என்று சொன்ன மாதிரியான இரட்டை வேடங்களெல்லாம் இறவனிடம் எடுபடாது. அல்லாஹ் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் நல்ல புத்திகளை கொடுக்கத் துஆச் செய்கிறோம். வஸ்ஸலாம்.         

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.