2:74 தஃகீத் சொற்களை மொழி பெயர்க்காமல் விட்டார்களா? ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி, தென்காசி E.M. அப்துர் ரஹ்மான் நூரி போன்றவர்கள்

இந்த :74   வசனத்தில்  எத்தனை தஃகீத் சொற்கள் உள்ளன.  எத்தனை பேர்  மொழி பெயர்க்காமல்  விட்டுள்ளார்கள்?

தஃகீது சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டவர்.  யூதக் கைக்கூலி என்று  தமிழக மௌலவிகளால்  விமர்சிக்கப்பட்டார். 


கடந்த காலங்களில்  யாருமே தஃகீது சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டதில்லை என்றும் அடித்துப் பேசினார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/274.html

இந்த   2:74 வசனத்தில்  வஇன்ன  என்பதில் இன்ன என்பது   தஃகீத் சொல். இது 3 இடங்களில் இடம் பெற்றுள்ளது. 


லமா என்பதில் ல(லாம்) என்பது   தஃகீத் சொல்.  இதுவும்  3 இடங்களில் இடம் பெற்றுள்ளது. ஆக இந்த வசனத்தில் ஆறு (6)  இடங்களில்  தஃகீத் சொற்கள் இடம் பெற்றுள்ளன.   


இந்த 6ல் எத்தனை பேர் எத்தனை தஃகீது சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.


6ல் 5  தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல் விட்டவர்கள்.

1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி. 
2.அவரது கொள்ளுப் பேரன் உமர் ஷரீப்,   
3.பஷாரத், .
4.அன்வாருல் குர்ஆன்,   
5.தாருஸ்ஸலாம்-ரியாத் 


------------------

6ல்  ஆறையும்   மொழி பெயர்க்காமல் விட்டவர்கள்.
1. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
2. றஹ்மத் அறக்கட்டளை 
3.அதிரை ஜமீல் 


---------------

6ல் 4  தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல் விட்டவர்கள்.

1. ஸலாமத், 
2.ஃபஹத் வளாகம் மதீனா 

------------------

6ல் 3  தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல் விட்டவர்கள்.

1.ஜான் டிரஸ்ட், 
2.திரீயெம், 
3.மலிவு பதிப்பு,   

--------------


இப்பொழுது சொல்லுங்கள்  தஃகீது சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டவர்  யூதக் கைக்கூலி என்றவர்கள். 


யாருமே  தஃகீது சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டதில்லை என்று அடித்துப் பேசியவர்கள் நிலை என்ன? 


காரைக்கால் ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி, தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, பாஜில் பாகவி போன்றவர்கள் உட்பட நாம் எடுத்துக்காட்டி உள்ள 13 தர்ஜமாக்கள் 13. 


அந்த மொழி பெயர்ப்பு  பணியில்  ஈடுபட்ட இந்தியா,  ஸ்ரீலங்கா  மௌலவிகள்  100க்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல் தான்  விட்டுள்ளார்கள். 


எதனால்  தஃகீத் சொற்களை  மொழி பெயர்க்காமல்  விட்டார்கள் என்ற விளக்கங்களை அவர்கள் சொல்லவில்லை. 


விளக்கம் சொல்லி உள்ள  பீ.ஜே.யை மட்டும் விமர்சிக்கிறார்கள்.  பீ.ஜே. காயல்பட்டிணத்தில் அளித்த விளக்க வீடியோ இணைப்பில் உள்ளது. 





இன்ன, அன்ன போன்றவற்றை.  வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க இயலாது.

இன்ன, அன்னவுக்கு   நிச்சயமாக  என்ற பொருள் கிடையாது என்பதை பல  முறை விளக்கி விட்டோம்.  



ஆகிய தலைப்புகளிலும் இன்ன, அன்ன   பற்றி  விளக்கி உள்ளோம். 


இந்த வசனத்தில் நான்கு இடங்களில் வாவு இடம் பெற்றுள்ளது.  இது பற்றியும்  2:5  2:38 2:39 2:40. ஆகிய  வசனங்களின்  சொல்லுக்கு சொல்லில் விளக்கி உள்ளோம்.  

و   வாவுக்கு  இன்னும் மேலும் என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று  விளங்கி  உள்ளவர்கள்  கருத்துப்படி  நாம் இணைத்துள்ள 15 தர்ஜமாக்கள் அத்தனையிலும்  4 இன்னும் மேலும் இருக்கின்றதா? என்று ஆய்வுடன் படியுங்கள்.  


و   வாவு   இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும்.


ஒரு வார்த்தையின்  துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராதுஒரு வார்த்தையின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும்என்ற  விளக்கப்படியே உள்ளதை புரிவீர்கள்.






ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّـهِ ۗ وَمَا اللَّـهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿٧٤﴾

ثُمَّ து(ஸு)ம்ம 

பின்னர் பின்பு  பின்னும் - பிறகு


قَسَتْ - ஃகஸத் 
இறுகிவிட்டன--  கடினமாகி  விட்டன - கல்லாகி விட்டன

قُلُوبُ   ஃகுலுாபு
உள்ளங்கள்

كُم -கும்
உங்கள்


قُلُوبُكُم - ஃகுலுாபுகும் 
உங்கள் உள்ளங்கள்


مِنْ بَعْدِ   -  மி(ன்)ம் பஃஹ்தி
பின் - பின்னர் – பிறகு - மீண்டும்

ذَٰلِكَ - தா(ரா)லிf 
இதன் -அதன் - அதற்கு - இதற்கு - அது - இது - இந்த  - 


 مِنْ بَعْدِ ذَٰلِكَமின்ம்பஃதி 

 இதன் பின்னர் 

فَهِيَ Fபஹிய 
அவை

كَالْحِجَارَةِ - கல்ஃஹிஜாரதி 
பாறையைப் போன்று - கற்கள் போல 

أَوْ அவ் 
அல்லது

أَشَدُّ - அஷத்து 
மிகக் கடினமானவை

قَسْوَةً ஃகஸ்வதன்
இறுக்கத்தால் -கடினத்தன்மையால்

---------

وَإِنَّ - வஇன்ன 


مِنَ الْحِجَارَةِ - மினல்ஃஹிஜாரதி  
கற்களில் - பாறைகளில்

لَمَا -  லமா
திட்டமாக எது

يَتَفَجَّرُ - யதFபச்சரு 
பீறிடுகிறது - பொங்கி வழிகிறது

مِنْهُ - மின்ஹு
அதில்

الْأَنْهَارُ - 
ஆறுகள் - நதிகள் 

------------


وَإِنَّ - வஇன்ன



مِنْهَا - மின்ஹா 
அவற்றில்

لَمَا -  லமா
திட்டமாக எது

يَشَّقَّقُ - யஷ்ஷஃக்கஃகு 
பிளக்கிறது

فَيَخْرُجُ - Fபயஃக்ருஜு
வெளியேறுகிறது

مِنْهُ மின்ஹு 
அதிலிருந்து

الْمَاءُ அல்மாஃ
தண்ணீர்

-------------

وَإِنَّ - வஇன்ன
இன்னும் நிச்சயமாக


مِنْهَا மின்ஹா 
அவற்றில்

لَمَا லமா
திட்டமாக எது

يَهْبِطُ -  யஹ்பிது 
விழுகிறது

مِنْ خَشْيَةِ மின் ஃகஷ்யதி  
பயத்தால்

اللَّـهِ அல்லாஹி 
அல்லாஹ்வுடைய

------------

وَمَا - வமா
இல்லை

اللَّـهُ - அல்லாஹி  
அல்லாஹ்

بِغَافِلٍ - பிஃகFபிலின் 
கவனிக்காதவனாக - கவனமற்றவனாக - மறந்துவிட்டது

عَمَّا ஃஅம்மா 
எதைப்பற்றி

تَعْمَلُونَ - தஃமலுான 
செய்கிறீர்கள்

மொழிப்பெயர்ப்புகள் : 


இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. - (PJதொண்டி) 

இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.  = ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டனஅவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டுஇன்னும்சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டுஇன்னும்திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்உருண்டு விழக்கூடியவையும் உண்டுமேலும்அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. - ஜான் டிரஸ்ட் 


பிறகு,உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகிவிட்டன.அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் மிகக் கடின மானவையாக உள்ளன.

நிச்சயமாக கற்களில் நதிகள் பீறிடக்கூடியவையும் திட்டமாக உண்டு.

நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் ( உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக  அவற்றில் உண்டு. அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பற்றி கவனமற்றவனாக இல்லை. - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)





அப்பால் உங்களுடைய இதயங்கள் இதற்குப் பின்னும் (கல் நெஞ்சாகி) கடினமாகி விட்டன; அவை, கற்பாறையைப் போல் அல்லது இறுக்கத்தால் (அதைவிட) மிகக் கடினமாக இருக்கின்றன (ஏனென்றால்) கற்பாறையிலும் அதிலிருந்து தானாக ஆறுகள் வெடித்து பாய்ந்தோடிக் கொண்டிருப்பவைகளும் உண்டு; நிச்சயமாக அதில் விரிசல் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து தண்ணீர் வெளிப்படக்கூடியதும் உண்ட;. நிச்சயமாக அதில் அல்லாஹ்வின் பயத்தால் (உருண்டு) கீழே விழக்கூடியதும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி பாராமுகமானவனல்லன். =(அல்-மதீனா அல்-முனவ்வரா)



ஆனால் இத்தகைய சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் மிகக் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன; இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை. -  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)




இவ்வளவுக்குப் பின்னரும் உங்கள் உள்ளங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப்போல், - அல்ல; அல்ல - அதை விடவும் அதிகக் கடினமாகி விட்டன. (ஏனெனில்) சில கற்பாறைகளின் வழியே நதிகள் சலசலத்தோடுவதுண்டு. பிளவுபட்டுத் தண்ணீர் வெளிப்படக் கூடியபாறைகளும் உள்ளன. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் ஆடிப்போய் விழக்கூடிய கற்பாறைகளும் உள. அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி மெத்தனமாக இல்லை.- - (அதிரை ஜமீல்)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.