இந்திய தேசிய லீக் கட்சி (INLP) மாநில தலைமையினரும் ராமநாதபுரம் ரைசுத்தீனும்

சாகும் வரை நான்  நன்றி மறக்க மாட்டேன் என்று சொன்னபடி நடந்து கொண்ட நன்றி உள்ள நல்ல மனிதர் மெளலவி ஹுசேன் அல்தாபி அவர்களே!. நீங்கள்  வெளியிட்ட ஆடியோ  அறிவுள்ள  மக்களிடம் மட்டும்  எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
மடையர்கள் மடத் தனமாகமாகத்தான் விளங்கிப் பேசுவார்கள். அது பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உள்ளத்தில் கோளாறும் வழிகேடும் இருப்போர் அல்லாஹ்வின் வசனங்களிலேயே குழப்பத்தை நபடி அலைவார்கள் (3:7.) எனும் போது மனிதன் நான் எம்மாத்திரம்?

ஹுசேன் அல்தாபி அவர்களே!. ததஜவிலிருந்த நீங்கள். வேலூர் இப்ராஹிம் கட்சியில் நெல்லை மாவட்ட தலைவராக ஆனீர்கள்..  பிறகு, ராமநாதபுரம்  ரைசுதீன் அவர்களின் நண்பர் தடா றஹீம் தலைமையிலான INLP கட்சியில் சேர்ந்தீர்கள். 




வெளிரங்கமாக ரைசுதீனை எதிர்ப்பதாக வேடமிட்டுத் திரிபவர்கள் பலர். தங்கள் சொந்தத் தேவைக்கு அந்தரங்கமாக ரைசுதீன் அவர்களை தொடர்பு கொள்வார்கள். உங்கள் பீ.ஜே.பி. சோர்ஸை பயன் படுத்தி உதவி செய்யுங்கள் என்று வேண்டி நிற்பார்கள். இதை நான் உங்களிடம் கூறினேன். அதை வெளியிட்டுள்ளீர்கள். அதாவது   ரைசுதீன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வேலையை செய்துள்ளீர்கள்.


நீங்கள் சேர்ந்துள்ள INLP தலைவர் தடா றஹீம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார். எதற்காக இருக்கிறோம் என்று தெரியாமல் 6 மாதம் சிறையில் இருந்தார். யார் தயவில் வெளியே வந்தார்? இது பற்றி அப்போதே எழுதி உள்ளேன்.  புதிதாக INLPல்  இணைந்துள்ள, பதவி பெற்றுள்ளவர்களுக்கு இது தெரியாது அதனால்  மீண்டும் எழுத வைத்து விட்டீர்கள். நன்றியுள்ள நீங்கள். 


எதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமலே சிறையிலிருந்த தடா றஹீம் அணுகியது ரைசுதீன் அவர்களைத் தான். வேலூர் இப்ராஹிம் மருமகன் மௌலவி அலீம் அல் புகாரி மூலமும் வழக்கறிஞர் நைனா முஹம்மது  மூலமும் ரைசுதீன் அவர்களை தொடர்பு கொண்டார்.  

எனக்கு உதவி செய்யுங்கள் ரைசுதீன் பாய். டிபார்ட்மெண்டில் சொல்லுங்கள்    அதிகாரிகளிடம்  பேசுங்கள். நான் எந்த தப்பும் செய்யவில்லை.  எதற்கு என்னை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் வைத்து இருக்கிறார்கள் என்று கேட்டு சொல்லுங்கள் என்றார்.  


நுங்கம்பாக்கத்தில் உள்ள கீழக்கரைக்காரர் வீட்டிற்குள்  இறங்கி தடா றஹீம் பசங்க பண்ணியது சம்பந்தமான பழைய கேஸ். அது துாசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. காரணம் தடா றஹீம் அமைப்பின் மாநில நிர்வாகியாகியான  இன்னவர். தடா றஹீம் பணம் கேட்பதாக ஒருவரை மிரட்டி உள்ளார். 

அந்த ஆள் அவரது இன்புலன்ஸை பயன்படுத்தி தடா றஹீமை பழைய வழக்கில் குண்டாஸ் போட்டு உள்ளே தள்ள வைத்து விட்டார். என்பது போன்ற விபரங்களை கேட்டு சொல்லப்பட்டது. தடா றஹீம் பெயரால் பணம் கேட்டு மிரட்டிய INLPன் அந்த மாநில நிர்வாகி நீக்கப்பட்டார் என்றில்லாமல் கவுரமான முறையில் வெளியேற்றப்பட்டார். 

இந்த வழக்கு சம்பந்தமாக மவுலவி அலீம் அல் புகாரியும் வழக்கறிஞர் நைனா முஹம்மதுவும் தினமும் ரைசுதீன் அவர்களிடம் தொடர்ந்து பேசினார்கள். பீ.ஜே.பி. ரைசுதீன் தான் டிபார்ட்மெண்டில் பேசி INLP தலைவர் தடா றஹீமை குண்டர் சட்டத்தில் இருந்து ரிலீஸ் பண்ணி கொடுத்தார்.   


பாராளுமன்ற தேர்தலில் பீ.ஜே.பியை எதிர்க்கக் கூடியவர் என்று சொல்லப்பட்ட TTV தினகரன் அணியில் தடா றஹீம் இருந்தார்.  ரைசுதீன் பீ.ஜே. பி.யில் இருந்தார். தினகரன் அணியில் இருந்த INLP தலைவர் தடா றஹீம் ரைஸை தொடர்பு கொண்டு தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தது சம்பந்தமாகச் சொன்னார்..

அதை ஒட்டி INLP மாநில நிர்வாகி தடா றஹீமிடம் சண்டை போட்டது  சம்பந்தமான கட்சியின் அந்தரங்கச் செய்திகளையும் எதிர் அணியில் அதுவும் பீ.ஜே.பி. அணியில் இருந்த ரைசுதீன் அவர்களுக்கு  போன் போட்டு  சொன்னார். தடா றஹீம். அந்த அளவுக்கு நீங்கள் (உசேன் அல்தாபி) தலைவராக ஏற்றுள்ள தடா றஹீமின் நெருங்கிய நண்பர் தான் ரைசுதீன்.  ஆக எல்லாருமே ரைசுதீனுடன் தொடர்பில் தான் இருந்துள்ளனர்  இருக்கின்றனர்.



சென்னையில் ஒரு வழிப்பறி கொள்ளை நடந்தது. அதில் கைது செய்யப்பட்ட தொண்டி கலந்தர்  என்பவர் அளித்த வாக்கு மூலத்தில் வழிப்பறி கொள்ளைக் கூட்ட கேங் லீடர். இந்திய தேசிய லீக் கட்சி (INLP) மாநில நிர்வாகியான ..... என்ற ஜிகாத்திதான் என்று வாக்கு மூலம் கொடுத்தார்.  அது உண்மைதான் என்பதை 6_9_2019 அன்று நாம் சந்தித்த மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளி முஹல்லா சிறைவாசி பத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் இதையும் இன்னுமுள்ளதையும் ஒப்புக் கொண்டார். 

ஏற்கனவே ஒரு ஆயுள் கால அளவு சிறையில் இருந்த இந்திய தேசிய லீக் கட்சி (INLP) மாநில நிர்வாகியான அந்த ஜிகாத்தி மீண்டும் வழிப்பறி கொள்ளையை ஒட்டி பாதித்து விடக்கூடாது என்று அல்லாஹ்வின் அருளுக்குரியவர் ரைசுதீன் அவர்களை தொடர்பு கொண்டார். காப்பாற்றி விடச் வேண்டினார்.  ரைசுதீன் அவர்கள் முயற்சியால் INLP ஜிகாத்தி காப்பாற்றி விடப்பட்டார். ரைசுத்தீன் தான் அவரை காப்பாற்றி விட்டார் என்பது அந்த ஜிகாதிக்கே தெரியாது.  



ஒரு காலத்தில் அவர் செய்த தியாகத்தை மதித்து கண்ணியப்படுத்தி பெயரை குறிப்பிட்டு எழுதவில்லை.  2019 ல் மட்டும் அந்த ஜிகாத்தி  ரைசுதீன் அவர்கள் முயற்சியால் இரண்டு முறை காப்பாற்ப்பட்டிருக்கிறார்.  



நன்றியுள்ள  மெளலவி உசேன் அல்தாபி அவர்களே நீங்கள் TNEJ  நெல்லை மாவட்ட தலைவராக இருந்த போது, வேலூர் இப்ராஹிமை வைத்து கூட்டம் ஏற்பாடு செய்தீர்கள்.  நீங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தை ஒட்டி உங்கள் மீதும் சம்பந்தமில்லாத அன்றாடங் காய்ச்சிகள், மாணவர்கள் உட்பட    பலர் மீது வழக்கு பாய்ந்தது.  

உங்கள் மீதான அந்த வழக்கு விஷயமாக நெல்லை மதுரை என அலைந்து வழக்கை முடித்துக் கொடுத்தவர் ராமநாதபுரம் ரைசுதீன். இந்தச் செய்தி பகிரங்மாக வெளியாகவில்லை என்பதால் வெளியிட வைத்து நன்றி செலுத்தியுள்ளீர்கள். 

உங்கள் வழக்கு விஷயமாக நெல்லை மதுரை என அலைந்து வழக்கை முடித்துக் கொடுத்த ராமநாதபுரம் ரைசுதீன்அவர்களின் போக்கு வரத்து செலவு அவர் ஏற்பாடு செய்த வக்கீல்களுக்கு நீங்களும் வேலுார் இப்றாஹீமும் பணம் எதுவும் கொடுத்தீர்களா என்பதையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்


RSS ன் கைகூலி முகவை ரயீசுத்தினுடன் தற்போது வரை தொடர்பில் இருப்பதுடன் அவனை நல்லவனாகச் சித்தரிக்க முற்பட்டு பதிவுகளிடும் பழ்லுல் இலாஹி. வேலூர் இபுராஹீமை RSS ல் இணைய வைத்ததே  மேற்படி இலாஹி தான் இதற்க்கான இலாஹியின் ஆடியோ உள்ளது 

இப்படியாக எழுதி ஆடியோ உங்களிடம் பேசப்பட்ட ஆடியோ வெளியாகி உள்ளது. இதன் உண்மைத் தன்மையை அறியாத, புரியாத அறிவு ஜீவிகள் அந்த ஆடியோ எனக்கு எதிரானது என்று எண்ணி பரப்பி விட்டார்கள். அதன் மூலம் அவர்களை அவர்களே ஏமாற்றிக் கேவலப்படுத்திக் கொண்டார்கள். 


தேர்தல் நேரத்தில் தேர்தலைப் பயன்படுத்தி சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமான கோரிக்கையுடன் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை சந்திக்க மறுத்தவர் வேலூர் இப்ராஹிம். அவர்  இப்போது தன் தேவைக்கு பீ.ஜே. பி.யாக மாறி விட்டார் என்று வேலூர் இப்ராஹிம் பற்றி குறை கூறித்தானே பேசி உள்ளீர்கள் என்று விபரமுள்ள மக்கள் நன்றி தெரிவித்தார்கள். 

ஆக அறிவுள்ள மக்களிடம் நீங்கள் வெளியிட்ட ஆடியோ எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது.. அந்த நன்மை, நன்றி மறக்க மாட்டேன் என்று கூறிய உசேன் அல்தாபி அவர்களே உங்களையே சேரும்.  


  





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.