பாபா பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ள உண்மை.


பழனி பாபா (தில்க உம்மதுன் கத்கலத்) சென்று விட்ட சமுதாயம்.  அவருக்குரிய நற்கூலியை அல்லாஹ் கொடுப்பானாக ஆமீன் என்று துஆச் செய்வதுதான் நமது நிலை. அவரை விமர்சிப்பதாக விஷமிகள் விஷமப் பிரச்சாரம் செய்து திசை திருப்புவார்கள். அதனால் இந்த முதல் விளக்கம்.  
22-02-2020 அன்று மேலப்பாளையத்தைச் சார்ந்த ஒரு மவுலவியிடமிருந்து பார்வேடு மெஸேஜ் வந்தது. அவருக்கு சென்னையிலிருந்த ஒரு மவுலவி பார்வேடு மெஸேஜ் அனுப்பி உள்ளார். அதில் உள்ள முக்கிய செய்தி இதுதான்.



ஷஹித் பழனிபாபா அவர்கள் ஒரு போதும் ஆயுத கலாச்சாரத்தை ஆதரிக்கவில்லை. 1992 ஆம் ஆண்டு தலைமறைவாக இருந்த ஷஹித் இமாம் அலியை, பாபாவின் வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு அறிவுருத்தினார்கள். ஆனால்,  சகோ. இமாம்அலி சரண் அடைய ஒப்புக்கொள்ளவில்லை  என்ற செய்தியை ஒருவர் ததஜவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதுதான் உண்மை.


சவூதி, ஒமான், கத்தார் குவைத், என எல்லா வளைகுடா நாடுகளிலும். மலேசியா, சிங்கப்பூர், புருணை போன்ற நாடுகளிலும் ஜிகாத் கமிட்டி பெயரால் செயல்பட்டவர்கள் 1980, 90களில் பாபா பற்றி பொய்களை பரப்பி வசூல் வேட்டையாடினார்கள். என்ன மாதிரி  பொய்கள்?

பாபா தான் அங்கு  குண்டு வைத்தார். இங்கு குண்டு வைத்தார். அந்தக் கொலை செய்தார். இந்தக் கொலை செய்தார். மேலும் ததஜ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  1993 RSS அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும்  இமாம் அலி போன்றவர்கள்  பாபாவிடம்தான் தலைமறைவாக இருக்கிறார்கள்.  இந்த மாதிரியான பொய்களை பரப்பி வசூல் வேட்டையாடினார்கள்.

அப்போது இது பொய் பாபா இந்த மாதிரி ஜிஹாது எல்லாம் செய்யவில்லை என்று கூறினேன். அதாவது பாபா பற்றி அன்றே நற்சான்று கொடுத்துள்ளேன்.  

அவர் தனது கம்பீர குரலில் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டிடும் பேச்சுக்கள் மட்டுமே பேசுவாரே தவிர,  யாரையும் ஜிஹாதில் ஈடுபடுத்த மாட்டார்ஜிஹாதில் ஈடுபடவும் மாட்டார். அவர் மேடை பேச்சை கேட்டு விட்டு ஜிகாத் பண்ணப் போறேன் என்று யாராவது நேரில்  போனால். அந்த இளைஞர்களிடம் பாபா என்ன சொல்வார்?  

போய் உன் தாய் தகப்பனை கவனி அதுதான் நீ செய்யும் ஜிஹாத் என்று அனுப்பி விடுவார் என்ற உண்மைகளைக் கூறினேன். அதாவது பாபாவுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பே நற்சான்று கூறி உள்ளேன்.

எனது இந்தக் கூற்றைப் பொய்படுத்தி பல ஊர் இளைஞர்கள் என்னிடம் விவாதங்கள் செய்தும் சண்டை செய்தும் இருக்கிறார்கள். இதோ ஆதாரங்கள் என  பொய்களைக் கொண்டு வருவார்கள்.   

இந்தக் கடிதம் அன்பு ததஜ. சகோதரர்களே...ஓர் அன்பு வேண்டுகோள் ! என துவங்கி ததஜவுக்கு எழுதப்பட்டுள்ளதால் ததஜ  LBK  மைதீன் அவர்களிடம் விசாரித்து கொள்ளட்டும். ஆதாரங்கள் என கொண்டு வந்தவர்களில் அவரும் ஒருவர்.   

லெப்பைக்குடிகாடு மைதீன் அவர்களை லுஹாவுக்கு நன்கு தெரியும்.  ம.ஜ.க.   மாநில இணைப் பொதுச் செயலாளராக உள்ள மேலப்பாளையம் J.S. ரிபாயி நாகூர், நாகை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான போது அவருடன் கைதானவர்  LBK  மைதீன்.

அந்த மைதீன் அவர்களும் அவரைப் போன்று சிகாத் கமிட்டியில் இருந்தவர்களும் லெப்பைக்குடிகாட்டை RSS காரர்கள் தாக்க திட்டமிட்டுள்ளார்கள். சிகாத் கமிட்டியில் உள்ள பாபாவின்  பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் உடனே பணம் தேவை. 

மஞ்சக்கொல்லையை RSS காரர்கள் தாக்க உள்ளார்கள் உடனே பணம் தேவை. இப்படி அடிக்கடி ஒவ்வொரு ஊர் பெயராலும் சிகாத் கமிட்டி கடிதத்துடன் வசூலுக்கு அலைவார்கள். அதை நம்பாதீர்கள் என்றதோடு பொய் என்று நிரூபிப்பேன்.  இதனால் ஜிஹாதுக்கு என்று   சிகாத் கமிட்டி பாபா பெயரில் வசூலில் ஈடுபட்டவர்கள் என் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள்.  

எவனோ ஒரு முழுமையான கயவன்  ஜிகாத் கமிட்டி தலைமை அலுவலகத்தில் இருந்துகொண்டு பாபா பெயரில் வசூலித்து தின்று கொண்டு இருந்திருக்கிறான் என்பதை ததஜவுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் உறுதிபடுத்துகிறது. 

வீடியோ ஆதாரம் என்று கொண்டு வருவார்கள்.  பாருங்கள் பாபா எப்படியெல்லாம் சிறையிலே இருந்துகொண்டு செய்தி அனுப்பி உள்ளார் என்பார்கள்.  எவனோ முழுமையான கயவன்  ஒருவன்  பாபா மாதிரி வேஷம் போட்டு ஏமாற்றி உள்ளான்.

ஜாமீனில் எடுக்க சொல்லுங்கள்.  வக்கீல்  வையுங்கள் என்பதெல்லாம் கிரிமினல் குற்றமா? சிறையில்  போய் பார்க்கக் கூடியவர்களிடம் சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய  வார்த்தை. எவ்வளவோ சட்டங்களை மேடையில் பேசும் பாபா. சர்வ சாதாரணமாக பேசக் கூடியதைப் பற்றி தெரியாமலா இருப்பார். 

மிகச் சாதாரண இந்த வார்த்தையை ஒரு சிறு பேப்பரில் எழுதி மாத்திரைக்குள் திணித்து அனுப்பிய மாதிரி உள்ளது. நீங்களெல்லாம் முட்டாள்கள் என்று அறிந்து வைத்துள்ள முழுமையான கயவன்கள் தான் இப்படி பாபா பெயரால் ஏமாற்றி உள்ளார்கள். இப்படி 27  ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறிய உண்மைகள் ததஜ கடித பதிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


பாபா பெயரால் சமுதாயத்தை ஏய்த்துப் பிழைப்பு நடத்தியவர்கள், பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் நர்கிஸ் பானு அயோக்கியதனங்கள் ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் வெளியே வந்து விடும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று. 

இமாம் அலி போன்றவர்களை இரண்டு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தான் அவர்கள் முன்பு இருந்த இயக்கம் சார்பில் பங்களாதேஷ் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள் என்று முழுமையான கயவன் ஒருவன் சொல்லித் திரிந்தான்.  அந்த முழுமையான கயவனின் இந்தக் கூற்றும் ஒரு நாள் வெளியே வரும். இன்ஷாஅல்லாஹ்.

அந்தக் கடிதத்தில் உள்ளபடி அன்பு ததஜ சகோதரர்களே... உங்கள் துஆவில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 

பாபா பெயரால் சமுதாயத்தை ஏய்த்துப் பிழைப்பு நடத்தியவர்கள், பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் மீதும்

சிறைவாசிகளின் பிள்ளைகள் ஸ்கூல் செலவுகளுக்கு என பணம் கொடுத்தவரை கொலை செய்ய பணம் கொடுத்தார்அவர்தான் எங்களை இயக்குகிறார் என்று மாட்டி விட்டவனின் மீதும்அவனது கூட்டத்தார் மீதும் 


இந்த மாதிரி அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீதும் 

1980களிலிருந்து இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும்

ஏவி விட்டு  காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும்

காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும்அவனது கூட்டத்தார் மீதும் 

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் 

அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  

அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.