பாளை ரபீக்கை மேடையில் ஏற்றக் கூடாது என்பதுதானே உங்கள் நோக்கம்?


15 ஆண்டுகளுக்கு முன் லுஹா பேசிய மாதிரி பாளை ரபீக் பேசினார் என்று எழுதியது நாம் அல்ல.  மேலப்பாளையம் பஜார் மாடுகள் தான் எழுதி இருந்தார்கள்..  அதைத்தான் எடுத்து எழுதி இருந்தேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பாளை ரபீக்கும் அவரது பண்பான(?) பேச்சுக்களும் எப்படி இருந்தன என்பதை நேற்று வெளியிட்டு விட்டோம். அதைப் பார்த்த முஸ்லிம்கள் மட்டும் முகம் சுலித்துள்ளார்கள்.

பாளை ரபீக்கை ஆதரிக்கக் கூடியவர்கள். அவரது அந்தப் பேச்சுக்களை விரும்புபவர்கள் கடினமாக நம்மிடம் பேசினர். பாளை ரபீக்கையும் அவர் பின்னால் உள்ள குரூப்பையும் சர்வ கட்சியோ ஜமாஅத்துல் உலமா சபையோ முற்றுகை போராட்டத்துக்கு அழைக்கவுமில்லை எந்த ஆலோசனையும் அவர்களிடம் கேட்கவுமில்லை. அவர்களை அறவே அணுகவுமில்லை.

https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_21.html

அதற்கு காரணம் பாளை ரபீக்குடைய நாகரீகமற்ற பேச்சுக்கள்தான். குறிப்பாக  பெண்கள் கூடி உள்ள கூட்டத்தில் ஆண்குறி ஆண் குறி என்று பேசுவது. ஜும்ஆ மேடைகளில் கூட விஜயகாந்த் வழியில் நாக்கை துருத்தி காட்டுவது. போலீஸை கேவலப்படுத்தி சவால் விட்டு பேசுவது. இது போன்ற காரணங்களால்  நல்ல  மக்கள் நாகரீகமானவர்கள் ரபீக்கையும்  அவரது குரூப்பையும் விரும்பவில்லை. அதனால் அழைக்கவே இல்லை. 

நெல்லை காவல்துறை இதுவரை எல்லா போராட்டங்களுக்கும் சிறந்த முறையில் நல்ல ஒத்துழைப்பு நல்கி உள்ளார்கள். அதை கெடுத்து முஸ்லிம்களுக்குகேடு செய்யும் நோக்கத்துடன் பல ஷய்த்தான்கள் செயல்பட்டுள்ளனர்.  அதில் ஒரு பெரிய ஷய்த்தான்  குரூப் என்ன செய்தது? துாத்துக்குடி மாதிரி ஆக்க எவ்வளவு பெரிய கேடு விளைவிக்க எண்ணியது என்பதை கடைசியில் தருகிறேன்.


லட்சக்கணக்கான பெண்களும் பெரியவர்களும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் காலில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்துள்ளார்கள்.  முற்றுகை போராட்ட நிகழ்ச்சி நல்ல முறையில் நிறைவு பெறும் நேரத்தில் ஒரு சிறு  கூட்டத்துடன் மேடைக்கு அருகில் வந்து நின்ற பாளை ரபீக். அவருக்கே உரிய பாணியில்  அசிங்கமாக பேசி உள்ளார். 

அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகளை தவிர்த்து மற்றவைகளை பதிவு செய்கிறோம். நான் முஸ்லிம் இல்லையா? என்னை ஏன் கூப்பிடவில்லை? நான் கலிமா சொல்லவில்லையா?  இது என்ன கூட்டம் என்று துடியாக துடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி உள்ளார்.  12 மணிக்கு நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய நிலையில் அ.ம.மு.க. ஹைதர் அலி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். 

இந்த நிலையில் வம்படியாக பாளை ரபீக்கை அவரது ஆதரவாளர்கள் மேடையில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். ஸ்டேஜில் நின்றும் பாளை ரபீக் தனக்கே உரிய பாணியில் ஆடியுள்ளார். அசிங்கமாக பேசக் கூடிய  பாளை ரபீக்கை பேச விடக்கூடாது என்பதற்காக ஒரு உஸ்மானி  ஹைதர் அலி பேச்சை இடை மறித்து கோஷம் போட்டுள்ளார்.

பாளை ரபீக் மைக் கேட்டு வம்பு செய்து மேடையிலேயே கலாட்டா செய்யும் அளவுக்கு சென்று விட்டார். பாளை ரபீக்குக்கு மைக் கொடுக்கவில்லை எனில் கூட்டத்தில் கலவரம் செய்ய தயார் நிலையில் ஒரு கூட்டம்.


இந்த இக்கட்டில் தான் நம்மை நம்பி வந்த மக்கள் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டுமே என்று. (பாழாப்போன) பாளை ரபீக்கை பேச விடுங்கள் வேறு வழியில்லை என்று இன்னொரு உஸ்மானி கூறி உள்ளார்.  கடைசியாக வேறு வழியின்றி பாளை ரபீக்கிடம் மைக்கை கொடுக்கும் போதே நாகரீகமாக பேசுங்கள் என்று கூறி உள்ளார்கள்.  எனக்கு என்ன அவ்வளவு கட்டுப்பாடா? என்று கத்தி உள்ளார். அவர் பேசிய அழகிய(?) உரையை நேற்று வெளியிட்டு விட்டோம்.

முற்றுகை போராட்ட ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு என ஒரு கட்டுப்பாடு வைத்து செயல்பட்டுள்ளார்கள். பாளை ரபீக்கை ஆட விட்டு பார்க்க விரும்புபவர்கள் தனியாக நிகழ்ச்சி நடத்தி ஆட விட்டு பார்க்கட்டும். ஏன் வம்படியாக இவர்கள் மேடையில் ஏறி அசிங்கப்படுத்த வேண்டும்? 

பாளை ரபீக் முஸ்லிம் இளைஞர்களை ஏவி விட்டு காட்டிக் கொடுக்கும் மாட்டி விடும் கூட்டத்தை சேர்ந்தவர் என்கிறார்களாம். அவரே மேடையில் சொல்லிக் காட்டி உள்ளார். அதை மறுக்கவும் மாட்டோம். உண்மை என்று கூறவும் மாட்டோம். ஆனால் கடைசியில் உள்ளவாறு துஆச் செய்வோம். துஆச் செய்ய சொல்வோம். பாளை ரபீக் போன்றோர் பேச்சை ஆதரிப்பவர்கள் அவர் போன்றவர்களை நம்புபவர்கள் அந்த மாதிரி துஆச் செய்யட்டும்.


வக்பு நிலம் சம்பந்தமாக ஜிகர்தண்டா ரசூலை அமைப்பிலிருந்து வெளியேற்றினீர்களே? என்று  மேலப்பாளையம் சமானியன் வாட்ஸப்பில் எழுதியது சம்பந்தமாக கண்ணியத்திற்குரிய சில்லான் குடும்பத்தைச் சார்ந்த (ஜிகர்தண்டா) ரசூல் அவர்கள் அளித்துள்ள பதில்.


நான் ஜான் பாய்க்கு உதவி செய்யத்தான் போனேன்.  அவரும் நானும் டீல் பேசினோம்.  நான் செலவு பண்ணிக் கொள்கிறேன். அவர் செலவு பண்ண முடியாது என்றார்.  

வஃக்பு லேண்ட் தான்.  வக்ப் லேண்ட் என்றால் வர மாட்டேன் என்று சொன்னேன்  அவரிடம்.  அவர் எப்படியாவது எடுத்து தாருங்கள் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்றார்.  அதனால் நானும் பீரும் சேர்ந்து செலவு பண்ணிக் கொள்கிறோம். நீங்கள் ஒரு லட்சம் செலவு பண்ணினால் எங்களுக்கு இரண்டு கொடுத்து விடுங்கள்  நாங்கள் அலைகிறோம் என்று அலைந்தோம்.  

கடைசியில் ஒரு நாடார் இடத்தை ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார். அந்த நாடார் வந்து மாமா நான் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறேன். நல்லா இருப்பீங்க மாமா என்றார்.   உடனே நான் MH பீரிடம் நான் இதை விட்டு விலகி கொள்கிறேன் எனக்கு இது திருப்தியே படவில்லை. 

நான் ஹலாலாக சம்பாதித்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறேன் அதனால் இது வேண்டாம் என்று விலகி வந்து விட்டேன். நான் விலகியதும் ரசூல் பாய் விலகியதால் நானும் விலகிக் கொள்கிறேன் என்றார்.  

நானும் தனிப்பட்ட முறையில் 32 ஆயிரம் செலவு செய்து உள்ளேன். பீரும் 32 ஆயிரம் செலவு செய்து உள்ளார்.  பாளை ரபீக்தான் எங்களிடம் ஒப்படைத்தார்.  எனவே  பாளை ரபீக்கிடம் பொறுப்பையும்  டாக்குமெண்டுகளையும் கொடுத்து விட்டு நாங்கள் விலகிக் கொள்கிறோம்.  எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.  என்று முடித்து விட்டோம் இதுதான் விளக்கம். 

இவ்வாறு  ஜிகர்தண்டா  சில்லான் ரசூல் அவர்கள் பேசி அனுப்பி உள்ளார்கள். மேலும் ஜான் பாய் ஐந்து பேர் சாட்சியாக பேசியதாக ஒரு ஆடியோ வந்தது. சாட்சியாக இருந்த ஐந்து பேர் யார்? என்ற பெயர்  விபரம் வரவில்லை. ஜான் பாய் ஏற்கனவே பாளை ரபீக்கை குறை சொல்லி விட்டு மீண்டும் த.மு.மு.க.வில் இணைய முயன்றவர். நேரில் விசாரிக்க ஜான் பாய் போன் நம்பர் நமக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் பேசியதாக வந்ததை வெளியிடவில்லை.

. 
போராட்டங்களை பொறுப்பு எடுத்து நடத்துபவர்களுக்குத்தான் பிரச்சினையும் பின் விளைவுகளும் தெரியும். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய சில நாய்கள் இந்த போராட்ட நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் மோடி உருவ பொம்மையை எரிக்க திட்டம் போட்டு செயல்பட்டுள்ளார்கள்.  

அந்த உருவ பொம்மை இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் தடுத்து  உள்ளார்கள். வேறு வகையில் கயவன்கள் கூட்டத்திற்குள் ஊடுறுவி விடாமல் இருக்கவும் பாதுகாப்பு வளையம் அமைத்து செயல்பட்டுள்ளார்கள். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி என்பார்களே அது போல் இருந்துள்ளார்கள். 

போலீஸுக்கு எதிராக மேடையில் சவால் விட்டு கர்ஜிப்பவர்கள். பேசுவதற்கு முன்போ பின்போ ரகசியமாக. என்ன செய்ய அப்படி பேசினால்தான் வரவேற்பு இருக்கு தப்பா எண்ணாதீர்கள். எங்க பொழப்பு அந்த மாதிரி என மண்டியிட்டு விட்டுத்தான் பேசுவார்கள். அதை இல்லை என்று மறுப்பவர்கள் கீழ் காணும் துஆவைச் செய்யட்டும். 


1980களிலிருந்து இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும்

ஏவி விட்டு  காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும்

காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் 

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் 

அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  

சிறைவாசிகளின் பிள்ளைகள் ஸ்கூல் செலவுகளுக்கு என பணம் கொடுத்தவரை கொலை செய்ய பணம் கொடுத்தார். அவர்தான் எங்களை இயக்குகிறார் என்று மாட்டி விட்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் 

இந்த மாதிரி அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.