காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராகவும் சிறைவாசிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பது போல் நாடகம் ஆடி வருபவர்கள் யார்?


மேலப்பாளையம் இரண்டாவது கோவையாக மாறலாம். என் காலடியின் கீழ் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள். நான் உத்தரவிட்டால் பல தலைகள் என் காலடியில் விழும் என்று கர்ஜித்த தொண்டைத் தொழிலாளியான மைக் மாவீரன் யார்?



சமீபத்தில் எமது பதிவில் வந்து ஒரு ததஜ மூக்கை நுழைத்தார். உளவுத்துறை அறிவித்த காசுக்காக காட்டிக் கொடுத்து உளவுத்துறையிடம் காசு வாங்கிய ஒவ்வொருவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று பதில் போட்டேன்


யாராவது ஆமீன் என்றோ அல்லது அது மாதிரியோ துஆச் செய்தார்களா? இல்லை. ஒரே ஒரு ஆலிம் மட்டும் வாட்ஸப்பில் ஆமீன் என்றார். தாயகத்தால் இருந்தபொழுது அந்த ஆலீமை போய் பார்க்க எண்ணி இருந்தேன் முடியவில்லை.


அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் மாட்டி விட்டு பொய் சாட்சி சொல்லி தண்டனை வாங்கி கொடுத்து காசு வாங்கியவர்களுக்கு எதிராக சாபம் கேட்க மாட்டோம் என்றுள்ள மற்றவர்களெல்லாம் யார்


தனிப்பட்ட விரோத குரோதத்தினால் ஒருவரை மட்டும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதுதான் உண்மை. குர்ஆன் ஹதீஸ் கொள்கை என்பதெல்லாம் அவர்களுக்கு கிடையாது. 


TNTJயினர் காட்டிக் கொடுத்தவர்கள் இல்லை, அதுவும் அரசு அறிவித்த காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் இல்லை, சுய லாபத்துக்காக காட்டிக் கொடுத்தவர்கள் இல்லை என்பது உண்மையானால். காட்டிக் கொடுத்த அனைவர்களுக்கும்  எதிரானவர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்?


காட்டிக் கொடுத்த அனைவருக்கும் எதிராக இவர்களது செயல்பாடுகளும் இவர்கள் கேட்கும் துஆ சாபமும் இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா இல்லை.


காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராகவும் சிறைவாசிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பது போல் நாடகம் ஆடி வருபவர்கள் TNTJயினரும் அந்த அமைப்பை போன்றவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் தான்


அவர் மீது சாபம் உண்டாகட்டும். அவன் மீது சாபம் உண்டாகட்டும் என்று ஒருவருக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சாபம் கேட்டு வருபவர்கள்  TNTJயினரும் அவர்களை ஆதரிப்பவர்களும்.


அந்த TNTJயினர் ஒருவரை கொலை செய்வதற்காக 13 லட்சம் பேரம் பேசி முஸ்லிம் அல்லாத கூலிப் படையை அணுகினார்கள். அதுவும் TNTJ தலைமையில் உள்ளவர்கள். 

13 லட்சத்தை கூலிப் படைக்கு ஏன் கொடுக்கிறீர்கள்? அந்த 13 லட்சத்தை எங்களுக்கு தாருங்கள் என்று பேரம் பேசி கூலிப் படையாக ஆனார்கள் TNTJ.  தொண்டர்கள் என்போர். அப்படிப்பட்டவர்களை  கொண்ட இயக்கம் தான் TNTJ.

அதனால்தான் 13 லட்சத்துக்கு ஆசைப்பட்டு முஸ்லிமை கொலை செய்யச் சென்ற கூலிப்படையினருக்கு எதிராகவும் துஆச் செய்ய தயங்குகிறார்கள். 





ஜனாப் ……..  வின் மேடைப் பேச்சு மற்றும் கொத்பா பிரசங்கம் யாவும் வாலிபர்களின் மனதில் தீவிரவாத எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.   உதாரணமாக அவர் பேசும்போது

1. மேலப்பாளையம் இரண்டாவது கோவையாக மாறலாம்.

2. என் காலடியின் கீழ் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள். நான் உத்தரவிட்டால் பல தலைகள் என் காலடியில் விழும்.


இது போன்ற வசனங்களைப் பேசி வாலிபர்களின் உணர்வுகளைத் துாண்டி மேலப்பாளையத்தில் தீவிரவாதத்தை உண்டு பண்ணுகிறார்.

பள்ளியின் பெயரால் வசூலித்து தன் சொந்த காரியங்களுக்கு செலவு செய்கிறார். பல தீவிரவாத அமைப்புகளை ஏற்படுத்தி அதன் விளைவாக பல கொலைகள் நிகழவும் மூல கர்த்தாவாக இருக்கிறார்.


இது இணைப்பில் உள்ள கடித காப்பியில் உள்ள வாசகங்கள். இது யாரைப் பற்றிய விமர்சனம்? யார் மீதான குற்றச்சாட்டு என்பது கடிதத்தில் இருக்கிறது. என்றாலும் கடிதத்தைப் பார்க்கமலே ஸோ அன் ஸோ யார் அது ஷம்சுல் லுஹா தான் என்று பெரும்பாலானவர்கள் புரிந்து விடுவார்கள்.

இந்தக் கடிதம் எழுதியதில் ஸலபி, குன்னா ரசூல், காஜா பாய், உஸ்மான் என பலருக்கு பங்கு உண்டு என்றாலும், முக்கிய பங்கு காலித் ஸாஹிப், மோத்தை சிபகதுல்லாஹ், தண்டன் சேக் மன்சூர் ஆகிய மூன்று பேருக்குத்தான். பெரும் பங்கு உண்டு.

ஒருவர் தான் குற்றவாளி மற்றவர்களெல்லாம் சுத்தவாளி என்று வாதம் வைப்பவர்கள் தெரியாமல் வாதம் வைத்தால் அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. 

தெரிந்து கொண்டே, சமுதாய இளைஞர்களின் வாழ்வைக் கெடுத்த மைக் மாவீரர்களான தொண்டைத் தொழிலாளிகளை நல்லவர்களாகக் காட்ட முயற்சி செய்தால். அவர்களை அடையாளம் காட்டும் கட்டாயம் நமக்கு ஏற்படும். 

இதை படித்த சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் மாட்டி விட்டு பொய் சாட்சி சொல்லி தண்டனை வாங்கி கொடுத்து காசு வாங்கியவர்களுக்கு எதிராக துஆச் செய்ய தயங்க மாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.