எல்லாரும் தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்ளோ எப்படிங்கோ மோசடி செய்வாங்கோ?


கடலில் மூழ்கி விட்டதா TNTJயினர் கப்பல்? ஒரு லட்சம் தந்தால் மாதா மாதம்  20  (இருபதுஆயிரம் ரூபாய் லாபம் உங்களுக்கு என்றார்களே தந்தார்களா?  M.S. சுலைமான் தன்னிடம் ஓதிய மாணவியை மனைவியாக்கி விட்டார். இதை இலாஹி இப்பொழுது எழுதி  முபாஹலாவுக்கு அழைத்துள்ளது சரி இல்லை. இது பீ.ஜே.க்கு சாதகமாக உள்ளது என்று, பீ.ஜே. மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டவர்கள். எனக்கு தெரிந்த பிரமுகரிடம் சொன்னதை அறிந்தேன்.


ஓரிறைக்கொள்கையை  வைத்து தங்கள் பிழைப்பையும் சொகுசான வாழ்க்கையையும் வளமாக்கிக்கொண்டவர்களால் உங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்றும் ஒரு சகோதரர் எழுதி இருந்தார். எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்காகவோ எனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்காகவோ நான் அவர்களை எதிர்க்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலப்பாளையம் ஏழைகளிடம் வீட்டையும் நகையையும் விற்கச் சொல்லி லாபம் தருவோம் என்று நம்பிக்கையூட்டி 50 கோடியை மோசடி செய்தார்களே அது எனக்கு ஏற்பட்ட இழப்பா? எனக்கு செய்த துரோகமா?


02.09.19 அன்று திரும்ப செல்ல வேண்டும் என்ற முடிவுடன் 19.08.19 அன்று தாயகம் வந்துள்ளேன். ஏற்கனவே 2005 செப்டம்பர் 14 அன்று முபாஹலா நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள் தான் லுஹாவை தலைவராகவும் எம்.எஸ். சுலைமானை மேலாண்மைக்குழு தலைவராகவும் கொண்டுள்ள TNTJ.


அன்று முபாஹலா நடந்து இருந்தால் மூலம் M.I. சுலைமான், M.S. சுலைமான்,  J.S.ரிபாயி,  அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள்  மீது லுஹா விபச்சாரக் குற்றச்சாட்டு கூறியதும் அவர்கள் விபச்சாரமும் நிரூபிக்கப்பட்டிருக்கும். தவ்ஹீது மவுலவிகள் விபச்சாரமும் முடிவுக்கு வந்திருக்கும்.


14.09.2005 அன்று முபாஹலா இல்லை என்று லுஹா போலீஸில் எழுதிக் கொடுத்தார். பிறகு இலாஹி பின் வாங்கியதாக பொய்களை பரப்பினார். இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றேன்.


அதன் பிறகு நான் தாயகத்தில் இருக்கும்பொழுதெல்லாம் வாய் மூடி இருப்பார்கள். புறப்பட்டு போய் விட்டேன் என்றதும் எடுபிடிகளைக் கொண்டு முபாஹலா அழைப்பு விடுப்பார்கள்.


துபை விஸாவை கேன்சல் செய்து விட்டு ஷார்ஜா விஸாவுக்காக ஓவரில் இருக்கிறேன் என்று அறிந்ததும். உடனே முபாஹலாவுக்கு புறப்பட்டு வாருங்கள் பிளைட் டிகட் எங்களுடையது என்று 2011 டிசம்பரில் நாடகம் போட்டவர்கள் TNTJயினர்.


துாத்துக்குடி கப்பலில் வந்து இறங்கும் இரும்பு சாமானை வாங்கி விற்கும் வியாபாரம் என்றும் மருத்துவ தொழிலுக்கான உபகரணங்களை விற்பனை என்றும் கார்க்கோ தொழில் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக TNTJயினர் சொல்லி ஷேர் சேர்த்தார்கள்.


 
ஒரு லட்சம் தந்தால் மாதா மாதம்  20  (இருபது) ஆயிரம் ரூபாய் லாபம் என்று TNTJயினர் ஷேர் வசூலித்து 50 கோடி வரை கொள்ளை அடித்தார்கள். இதை அறிந்த நான் இது வியாபாரம் அல்ல. மோசடி திட்டம் என்று 2011 ஏப்ரலில் ஊரிலிருந்தபொழுது தவ்ஹீவாதிகள் என்போரிடம் நேரில் சொன்னேன்.

வீட்டையும் நகையையும் விற்று பங்கு சேர்ந்துள்ள பெண்களிடமும் சொன்னேன். எல்லாரும் தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்ளோ. எப்படிங்கோ மோசடி செய்வாங்கோ? லுஹா ஆலிம்ஸா கூட அந்த வியாபாரி காரில்தானே போரார் வர்ரார் என்றார்கள். 2011மே மாதம் அரபகம் வந்து விட்டேன்.


2011 ஜுன் மாதம் செய்தி வருகிறது. TNTJயினரிடம் பங்கு சேர்த்து விட்டர்களில் ஒருவரும்  லுஹா வீட்டுக்கு அருகில் உள்ளவருமானவரின் பையனை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்  துாக்கிச் சென்று விட்டார்கள். கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். 

TNTJயினரிடம் பங்கு சேர்த்து விட்டு ஏமாந்த லுஹா வீட்டுக்கு அருகில் உள்ள இன்னொருவர் தற்கொலை முயற்சி என்று ஊரே குளுங்கியது பரபரப்பானது. உடனே லுஹா முபாஹலாவுக்கு தயாரா என்று திசை திருப்பினார்.


அதனால் தான் இம்முறை தாயகம் வரும் முன். 12.08.19 அன்று ஒரு முபாஹலா அழைப்பு விடுத்தோம். எங்கள் வீட்டு திருமணம் முடிந்த மறுநாள் 26.08.19 அன்று மீண்டும் நினைவூட்டி முபாஹலா அழைப்பு விடுத்தோம். 

19.09.19 வரை முபாஹலாவுக்கு யாரும் வரவில்லை. 20.0919 அன்று அரபகம் வந்து விட்டேன்.  இதன் மூலம் M.I. சுலைமான், M.S. சுலைமான்,  J.S.ரிபாயி,  அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி, போன்ற தவ்ஹீது மவுலவிகள் மற்றும் தாஇகள் பற்றியும் லுஹா விபச்சாரக் குற்றச்சாட்டு என்னிடம் நேரில் சொன்னார். 

அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள் பெண்கள் மதரஸா விபச்சாரம் பற்றி எனக்கு ஆள் மூலம் மறைமுகமாக தகவல் தந்தார் என்பது உறுதியாகி விட்டது. இதில் J.S.ரிபாயி நீங்களாக மற்றவர்கள் அனைவரும் TNTJ தான் உள்ளார்கள். 


நன்மையை ஏவு தீமையை தடு. நீதியைநியாயத்தை நிலைநாட்டு  என்பதுதான் இஸ்லாம். தீமை யாரிடமிருந்தாலும் அந்த தீமையை ஒழிக்க பாடுபட வேண்டும்


அநியாயம் எங்கிருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அதுதான் முஸ்லிம்களின் கடமை. இன்னவரிடமுள்ள தீமையை மட்டுமே எதிர்ப்பேன். இன்னவர் இருக்கும் அமைப்பை மட்டுமே எதிர்ப்பேன் என்பது அவரவர் மனோ இச்சையைச் சார்ந்தது. இது அல்லாஹ்வோ அவனது துாதரோ காட்டிய வழி அல்ல.


12.08.19, 28.08.19 ஆகிய தேதிகளில் விடுத்த முபாஹலா சவாலில். லுஹா மானத்தை கப்பல் ஏற்ற வைத்து விட்டீர்கள். 

பொய்யும் பொய் சாட்சியமும் சொன்னவர்கள் மானத்தை அல்லாஹ் கப்பல்  ஏற்றிக் கொண்டிருக்கிறான்.  

நான் துபை போன பின் கப்பலுக்கு  போன மச்சான் பாட்டு பாடக் கூடாது என்றுள்ள கப்பல்  கப்பல்  என்ற வார்த்தைகளை பிளாக்கரில் புளு கலரில் ஹை லைட் பண்ணி உள்ளேன். அதற்கு காரணம். கப்பல் வியாபார  பெயரால் கோடிக் கணக்கில் மோசடி செய்த கும்பல்  TNTJயினர்தான் என்பதை உணர்த்தத்தான்.

அன்று கப்பல் பெயரால் கோடிகளை அடித்தார்கள். இப்பொழுது அனாதை இல்லம் முதியோர் இல்லம் பெயரால் கோடிகளை சுருட்டி உள்ளார்கள். இவை  எனக்கு ஏற்பட்ட பாதிப்பும் அல்ல. எனக்கு செய்த துரோகமும் அல்ல. சமுதாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு. சமுதாயத்துக்கு செய்த துரோகம்.

பொது மக்களிடம் வசூலித்து விட்டு பொது மக்களிடம் கணக்கு காட்டாமல் ஏமாற்றுகிறார்கள் என்று பிற அமைப்புகளை விமர்சித்தவர்கள் தான் TNTJயினர். 

ஆகவே பொது மக்களிடம் வசூலித்து விட்டு பொது மக்களிடம் கணக்கு காட்டாமல் பொதுக்குழுவில் கணக்கு காட்டியவர்கள் மீதும் அதுவும் கள்ளக் கணக்காக காட்டியவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.