மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் பள்ளியில் வைத்து PJ, ஹாமித் பக்ரி, S.K.மதனியிடம் பேசிக் கொண்டது என்ன?


JAQH அரபு நாடுகளில் நிதி உதவி பெறக்கூடாது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தாலும் அதன் பின்னர் மேலும் பிரச்சனைகள் உருவாயின.... தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பன போன்ற பிரச்சனைகள் உருவாயின என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்க் காரணங்களை தவ்ஹீது வரலாறு என்ற பெயரால் எழுதி உள்ளார் TNTJயின் இன்றைய தலைவர் லுஹா

https://mdfazlulilahi.blogspot.com/2018/11/pj-sk.html

தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பதற்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து எந்த ஆதாரத்தையும் இவர்கள் காட்டவில்லை. இவர்கள்தான் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்றக் கொள்கையை நிலை நாட்டக் கூடியவர்களாம். ஜாக்கிலிருந்து விலக 1994 அக்டோபரில் பீ.ஜே. சொன்ன காரணம்.


''தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று தாஇகள் உருவாகிவிட்டார்கள். சொல்லப்பட வேண்டிய எல்லா மஸாயில்களும் சொல்லப்பட்டு விட்டது. மிக முக்கிய தீமையான ஷிர்க்கை தெளிவுபடுத்தி விட்டோம். நாட்டு சூழலில் இனி நம்மீது உள்ள கடமை ஜிஹாதுதான். 

நானே ஸ்பாட்டுக்கு போவேன்ஷஹீதாவேன்அல்லது பிடிக்கப்படுவேன். எதுவும் நடக்கலாம். அதனால் ஜாக் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதனால்தான் விலக உள்ளேன் என்றார்.

(நானே ஸ்பாட்டுக்கு போவேன்ஷஹீதாவேன் என்று சொன்னால், இப்படிச் சொல்லி யாரையாவது பலி ஆக்கப் போகிறார் என்று அர்த்தம். இதை இப்பொழுது எல்லோரும் தெரிந்து கொண்டோம் என்பது தனி விஷயம்.) 

இப்படி என்னிடம் சொன்ன இடம் மதுரை அவனியாபுரம் மஸ்ஜித் முபாரக் பள்ளி. மேற்கண்டவாறு 

பீ.ஜே. என்னிடம் சொன்னபொழுது உடன் இருந்தவர்கள். வரலாறு என்ற பெயரால் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்களை எழுதியுள்ள மேலப்பாளையம் பூலி ஷம்சுல்லுஹா, அவரது மச்சான் பருத்தி முஹம்மது அலி றஹ்மானி, கூலி இக்பால் ஆகியோர் உடன் இருந்தனர்.  

இதை மறந்து மறுத்தால் அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள் வேண்டும் என்றே மறுத்தால், அல்லாஹ் அவர்களை பிடிக்க வேண்டிய விதத்தில் கடும் பிடியாகப் பிடிப்பானாக! ஆமீன்.


27-11-1994ல் ஜாக் ஷுராவிலிருந்து பீ.ஜே. ராஜினாமா செய்தது ஜிஹாது செய்யத்தான். ஜிஹாதில் ஈடுபடும்பொழுது தனக்கு ஏற்படும் பாதிப்பு தவ்ஹீது அமைப்பான ஜாக்குக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்குத்தான்  ராஜினாமா நாடகம் போட்டார். இந்த உண்மையை அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்களை எழுதியுள்ள லுஹா உட்பட 37 ஜாக் மவுலவிகள் கலந்து கொண்ட 01-05-1997 தேதிய ஜாக் மவுலவிகள்  கூட்டத்திலும் பீ.ஜே. சொல்லிக் காட்டினார். இதோ ஆதார ஆடியோ கிளிக் செய்து கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=a_9bLQ9Y4xs&feature=youtu.be



PJ, பக்ரி  SKமதனியிடம்  சொன்னது  என்ன?  என்பதை 37 ஜாக் மவுலவிகள் சாட்சியாக பீ.ஜே.அளித்த வாக்கு மூலம் கேட்டீர்கள்.


.2002ல் எனக்கு எதிராக வெளியிட்ட வீடியோவில் 1994 லேயே ஜாக் நடவடிக்கை சரியில்லை என்று வெறுத்து வெளியேறியதாக பொய் சொன்ன .பீ.ஜே. 37 மவுலவிகள் சாட்சியாக மேலும் சொன்னது என்ன?


திர்மிதி வெளியிட்டுத் தருகிறேன் என்று அல்-ஜன்னத்தில் வாங்கிய 25,000 (இருபத்தி ஐந்தாயிரம்) ரூபாயை இன்று வரை 01-05-1997 வரை நான் கொடுக்கவில்லை என்பதுதான்.


ஜாக்கிலிருந்து விலகுவதற்கான காரணங்களில் கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கு தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்க் காரணங்களை TNTJயின் இன்றைய தலைவர் லுஹா எழுதி உள்ளார்

எந்த பீ..க்காக இப்படி  பொய்களை எழுதினாரோ அந்த பீ.ஜே. மூலமே அல்லாஹ்வின் சாபம் இறங்கி 13 கோடிக்கு மேல் மோசடி செய்தார். 30 மாணவர்களை வைத்துக் கொண்டு நுாற்றுக்கணக்காணவர்களிடம் ஸ்பான்சர் வாங்கினார். கணக்கு கேட்டால் அழுதார் என கேவலப்பட்டு கிடக்கிறார்.


27-11-1994ல் ஜாக் ஷுராவிலிருந்து பீ.ஜே. ராஜினாமா செய்தது ஜிஹாது செய்யத்தான். கொள்கைப் பிரச்சனை இல்லை. அதனால்தான் அதன் பிறகும் நடந்த 1998 வரையிலான ஜாக் நிகழ்ச்சிகளில் பீ.ஜே. கலந்து கொண்டார். அதன் விபரம்  தருகிறோம். 

17-12-94.ல் இந்திய மதசார்பின்மை ஓர்-ஆய்வு.

18-12-94.ல் சினிமா மெட்டுகளில் மவ்லிது கட்டுகள்.

13-03-95.ல் இஸ்லாத்தில் பொருள் திரட்டும் முறையும் செலவு செய்யும் வரையும். (இஸ்லாமிய பொருளாதாரம்.)

01-07-95.ல் பொது சிவில் சட்டமும் புதுச் சதித் திட்டமும்.

23-02-96.ல் அல் குர்ஆன் ஒளியில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்.

31-08-96.ல் பொய்யான ஆன்மீகமும் போலி ஷய்குகளும்.

02-08-97.ல் நான்கு மத்ஹபுகளும் நவீன பரச்சனைகளும்.

இவை மேலப்பாளையம் JAQH  சார்பில் மட்டும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

09-05-97.ல் பல்சமயத்தவர்கள் பங்கு கொண்ட இஸ்லாமிய கருத்தரங்கு.

21-05-98.ல் அல்-குர்ஆன் அறிவியல் உலகில் ஓர் அற்புதம்.

இவை கடையநல்லூர்.  JAQH  சார்பில் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

எதனால் எதிர்க்கிறார்கள்? (உடன்குடி 28-01-95.)

குர்ஆன் கூறும் மனித நேயம். (நாகூர் 29.04.95.)

குற்றச் சாட்டுகளும்- பதில்களும். (கோவை 26-01-96.)

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம். (கோட்டாறு. 31-03-96.)

மாற்றுமத நண்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம்(சன்டிவி வீரபாண்டியன் கலந்து கொண்ட திருவல்லிக்கேணி நிகழ்ச்சி 11-05-97.)

21.01.1995ல் JAQH.ன் சார்பில் எஸ்.கே.தலைமையில் நடந்த திருக்குர்ஆன் விளக்க மாநாடு.

22.01.1995 மாலை எஸ்.கே.தலைமையில் நடந்த தடா எதிர்ப்பு பேரணி.

அன்று இரவு அ.திமு.க தி.மு.க. ம.தி.மு.க. என சர்வகட்சியினர் எஸ்.கே. தலைமையில் கலந்து கொண்ட மனித நேய கூட்டம்.

15.01.1995ல் நடந்த JAQH மாநில செயற்குழு.

15.08.1996ல் சென்னை பெரியார் திடல் நிகழ்ச்சி. 
.
இப்படி தமிழ்நாடு முழுவதும் ஜாக் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பீ.ஜே. கமாலுத்தீன் மதனியை பப்ளிஷராகக் கொண்டு மக்களால் ஜே.ஏ.கியூ.ஹெச்.ன் மாத இதழ் என்று அறியப்பட்ட அல் ஜன்னத்தின் ஆசிரியராக 1998 முடிய இருந்தார்.  

ஜிஹாது செய்வதற்காகவே பீ.ஜே. ஜாக்கை விட்டு ஒதுங்கினார் என்ற உண்மையை மறைத்து பொய்களை எழுதியவன் மீதும் அதை பரப்பியவர்கள் மீதும் பொய்யனை தலைவனாக ஏற்றுள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன். 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.