விபச்சாரகனை பள்ளிவாசலின் தலைவராக நாம் ஏற்றோமா? பள்ளிவாசல்களை உருவாக்க முதன்மையானது எது?

விபச்சாரகனை பள்ளிவாசலின் தலைவராக  வைத்திருக்கலாமா? அந்தப் பள்ளிக்கு உதவலாமா?  ஏகத்துவ இயக்க தலைவராக விபச்சாரகனை  எப்படி வைத்துள்ளீர்கள்? உங்களிடம் நியாயம் கேட்கிறோம் என்று வித  விதமான கேள்விகள் நமக்கு வந்த வண்ணம் உள்ளன.  நாம் எவனது விபச்சார செயல்களையும் ஆதரித்து நின்றது கிடையாது. ஒரே இயக்கத்தைச் சார்ந்த 2 பேர் ஒருவர் மீது ஒருவர் விபச்சார குற்றச்சாட்டுகள் கூறி சண்டை போட்டுக் கொண்டதை மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தேன். சண்டை போட்டுக் கொண்ட இருவரில் ஒருவர் மெஸன்ஜரில் கேட்டுள்ளது தான் உங்களிடம் நியாயம் கேட்க வேண்டும் என்ற  இந்த ஸ்கிரீன் ஷாட்.

https://mdfazlulilahi.blogspot.com/2018/11/blog-post_30.html



இருவரது விவகாரங்களை 5 பேர் போனில் சொன்னார்கள். இரு மவுலவிகள் நேரில் என் வீட்டுக்கு வந்து சொன்னார்கள். மற்றவர்கள் வாட்ஸப்பில் தகவல்கள் அனுப்பினார்கள். எவனாக இருந்தாலும் தப்பு பண்ணினால் கண்டிக்கத்தான் வேண்டும் என்றோம்  நாம்.



அல்லாஹ்வின் சாபத்துக்குரிய சில பொய்யர்கள் நான் பீ.ஜே. யை நல்லவர் என்று சொல்லி பீ.ஜே. ஆதரவாளராக ஆகி விட்டதாக பரப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.


பீ.ஜே. அறிவாளி, வல்லவர்  ததஜ மவுலவிகள் எல்லாம் கூ முட்டைகள் அவுச்ச முட்டைகள். பொறித்த முட்டையில் எல்லா சரக்கும்  கலந்து இருக்கும். சரக்கு இல்லாத அவுச்ச முட்டைகள்  என லுஹா போன்றோரை 1989களிலிருந்து நேரிலேயே  சொல்லி வந்திருக்கிறேன் என்று  தான் நான் பலரிடமும்  சொன்னேன், சொல்லிக் கொண்டிருக்கிறேன்.


செய்திகளை செய்தியாக  பார்க்கத் தவறிய சில சகோதரர்கள் அவசரப்பட்டு NTF கொடியையே நான்தான் வடிவமைத்து கொடுத்துள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மூத்த சகோதரர் காக்கா என்ன ஆச்சு நீங்கள் என்ன  NTF கொள்கை பரப்பு செயலாளரா? என்று கேட்டுள்ளார்.



மைக்கை ஆப் பண்ணுங்கள். எல்லாரும் செல் போனை  சுவிட்ச் ஆப் செய்யுங்கள்  லைவை நிறுத்துங்கள் என்று நாடகம் போடும் விபச்சார நடிகர்களைத்தான் சமுதாயம் நம்பும். இந்த மாதிரி விபச்சார நடிகர்கள் பற்றிய இன்னுமுள்ள விபரங்களை அடுத்தடுத்து எழுதுவோம்.  இன்ஷாஅல்லாஹ்.



விபச்சார குற்றச்சாட்டுகள் கூறி சண்டை போட்டுக் கொண்ட இருவரையும் விசாரித்தவரிடமும் செய்திகள் கேட்டு தெரிந்து கொண்டேன். இவை யாவும் தாயகத்தில் இருந்த 10 நாட்களில் சந்தித்தவை. விபச்சார குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் இயக்கத்தில் நான் உறுப்பினரும் இல்லை. அவர்  எந்தப்  பள்ளிக்கு  தலைவர்  என்பதும்  நமக்குத்  தெரியாது.


அப்படி இருக்க விபச்சாரகனை தலைவராகக் கொண்ட   அந்தப்பள்ளிக்கு  எப்படி உதவி இருப்பேன்?  விபச்சாரகனை பள்ளிவாசலின்  தலைவராக எப்படி ஏற்றிருப்பேன்? சம்பந்தமே இல்லாத குற்றச்சாட்டாக அல்லவா இது இருக்கிறது.



2ஆவது டீஸர் வெளியான  27.04.2018 அன்று பள்ளிவாசல் விஷயத்தில் நமது நிலை என்ன? என்பது பற்றி  நாம் ஆற்றிய உரையிலேயே விளக்கம் உள்ளது.  அதையே இங்கு  விரிவான பதிலாகப்  பதிகிறேன்.


உலகம் முழுவதும் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக கோடிக் கணக்கில் பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் கட்டி இருக்கிறார்கள். நாமும் உருவாக்கி இருக்கிறோம்

பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வின் வீடு என்று விளங்கி வைத்திருக்கிறோம். அந்த  அல்லாஹ்வின் வீடு எதற்காக இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது?


அல்லாஹ்வின் வீடுகளான பள்ளிவாசல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்எப்படி பராமரிக்க வேண்டும்?

இந்த விபரங்களை அல்லாஹ்வின் வீடுகளை உருவாக்கக் கூடியவர்கள். உருவாக்கி இருக்கக் கூடியவர்கள். இறை இல்லங்களுக்கு உதவியதால். இறை இல்லக் கொடை வள்ளல்கள் என்று பட்டம் பெற்றவர்கள். இப்படியாக அனைவருமே, ஒட்டு மொத்த முஸ்லிம்களுமே முழுமையாக அறியாமல் தெரியாமல் புரியாமல் இருக்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது.


பள்ளிவாசல்கள் எதற்காக? அதில் என்ன என்ன செய்ய வேண்டும்? என்பதை அறியாத காரணத்தால், பள்ளிவாசல்கள் என்றால் அது தொழும் இடம் என்ற ஒரு விஷயத்துடன் பெரும்பாலானவர்கள் முடித்துக் கொள்கின்றார்கள்.


பள்ளிவாசல்களை உருவாக்க முதன்மையானது எது?  முதலில் எது இருக்க வேண்டும்?

ஜமாஅத்தா? இயக்கமா? பணமா? பதவி வெறியும் பதவி  ஆசையும் பிடித்த நிர்வாகிகள் என்ற பதவி  பித்துப் பிடித்தக் கூட்டமா? எது என்பது பற்றி அல் குர்ஆனில் அல்லாஹ் அழகாகச் சொல்லிக் காட்டி உள்ளான்.

لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى

பள்ளிவாசல் இறையச்சத்தின் அடிப்படையில் அமைக்கப்பட   வேண்டும் -  நிறுவப்பட  வேண்டும் - அடிகோலப்பட வேண்டும் என்று தான்  அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்.


பள்ளிவாசல் என்றால் அதை உருவாக்கும் தனி நபரோ, அமைப்போ, முஹல்லா ஜமாஅத்தோ, அதன் கட்டிடப் பிரம்மாண்டமோ அல்ல. 

பள்ளிவாசலின் அடித்தளம் - அடிப்படை - அஸ்திவாரம் என்பது தக்வா தான்- இறையச்சம்  தான். அல்லாஹ்வுக்காக என்ற உள்ளத்தின் சுத்தம்தான். 


அல்லாஹ் சொல்லும் தக்வாவை- இறையச்சத்தை உளத் துாய்மையை மென்மேலும் அதிகரிக்கச் செய்யக் கூடியதாக அந்தப் பள்ளி இருக்க வேண்டும்.

வேறு எந்தவிதமான உள் நோக்கமும் அடிப்படையில் - அஸ்திவாரத்தில் இருக்கவே கூடாது. 

பதவி வெறியும் ஆசையும் பித்தும் பிடித்த  கூட்டத்திற்கு நிர்வாகிகள் என்ற பெயரால் பதவி கொடுத்தல் எனும் திட்டம் கூடவே கூடாது. அல்லாஹ்வுக்காகத்தான் பள்ளிவாசல்கள் உருவாக்க வேண்டும்



இன்னவருக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்றோ. நாங்கள் யார் தெரியுமா? என்று சவால் விடுவதற்காக, பெருமை அடிப்பதற்காக, முஸ்லிம்களிடம் பிரிவினையை காட்டுவதற்காக பள்ளிவாசல்களை அமைக்கக் கூடாது.  


இந்த நோக்கில் ஒரு கூட்டத்தை- ஜமாஅத்தை உருவாக்கி பள்ளி  அமைப்பார்களேயானால் கட்டுவார்களேயானால் அவர்கள் தகுதியற்றவர்கள் இஸ்லாமிய விரோதிகள் என்று அல்லாஹ் பிரகடனப்படுத்தி விட்டான்.


எனவே எவன் ஒருவன் தன்னை அடையாளம் காட்டிக்  கொள்ள, தனது இருப்பிடத்தைக் காட்டிக்  கொள்ள, தன்னை ஜமாஅத் தலைவர் என்று சொல்ல வேண்டும். அதற்காக தனக்கு பள்ளி தலைவர் பதவி வேண்டும் என பள்ளி அமைப்பு பணிகளில் ஈடுபடுவானேயானால் அவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் நிச்சயமாக இறங்கும். 


விபச்சாரகன் தனக்கு  பதவி வேண்டும் என்ற சுயநல நோக்கில் கட்சிகளை கட்டமைக்கலாம். இஸ்லாமிய சிந்தனையே இல்லாமல் இஸ்லாமிய அமைப்பு என பெயர் தாங்கிய அமைப்புகளை உருவாக்கி அதற்கு தலைவராக ஆகலாம். அல்லாஹ்வின் பள்ளிக்கு தலைவராக ஆகக் கூடாது. 



பள்ளிவாசல்களை உருவாக்கியவர்கள். உருவாக்கக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் இதை அல்லாஹ்வுக்காக உருவாக்கி இருக்கிறோம். அல்லாஹ்வுடைய அச்சத்துடன் – தக்வாவுடன் உருவாக்கி இருக்கிறோம். வேறு எந்த நோக்கமும் நமக்கு இல்லை. என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். 


எவனாவது தனது மனைவி அல்லாத அந்நிய பெண்ணை தொட்ட விபச்சாரகன் அல்லாஹ்வின் பள்ளிக்கு தலைவனாக ஆகி இருந்தால் அவன் மீதும் அவனது மனைவி மக்கள் மீதும். நிர்வாகிகள் என்ற பெயரால் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் கூட்டணி இயக்கத்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை அழித்தொழிப்பாயாக! ஆமீன்.


இப்பொழுது புரிந்திருப்பீர்கள். விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் கூறி சண்டை போட்டுள்ளவர்கள் விஷயத்தில் நமது நிலை என்ன என்று. இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் மனமுருகி துஆச் செய்யுங்கள். 

யா அல்லாஹ் தனது மனைவி அல்லாத அந்நிய பெண்ணை தொட்ட விபச்சாரகன் எவனாவது அல்லாஹ்வின் பள்ளிக்கு தலைவனாக ஆகி இருந்தால் அவன் மீதும் அவனது மனைவி மக்கள் மீதும். நிர்வாகிகள் என்ற பெயரால் பதவிக்காக அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் கூட்டணி இயக்கத்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தோழிப்பாயாக! ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.