TNTJ பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் சுன்னத் ஜமாஅத் மவுலவிகளுக்கு போனது எப்படி?

கடந்த காலங்களில் நம்மை திட்டியவர்களில் பலர் அதை எழுதுங்கள் இதை எழுதுங்கள் என்கிறார்கள். மஸ்ஜிதுர்றஹ்மான் மூலப் பத்திரம் உங்கள் வீட்டில் இருந்தது. அதை உங்கள் தாயாரிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாங்கிச் சென்ற லுஹா தம்பி பூலி காஜா பற்றி எழுதுங்கள்


என்ன பொய் சொல்ல வேண்டும், எப்படி பொய் சொல்ல வேண்டும் என்று ஆலோசனை சொன்ன ஷய்த்தான்கள் பற்றியும் எழுதுங்கள் என்கிறார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட இது போன்றவை எனது பிளாக்கரிலும் முக நுாலிலும் உள்ளனஎனவே எழுதப்படாதவற்றை எழுதுவோம் என்றேன்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/tntj.html

நீதியை நிலை நாட்டுவதுதான் இஸ்லாம் என்பதை மறந்து செயல்படுவது மனித இயல்பு. அதனால்  இயக்க வெறி என்பது எல்லா இயக்கத்திலும் உள்ளது. ஒரு சிலரை தவிர. பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாம் மிகப் பெரிய ஒரு தீமையை எதிர்க்கிறோம் என்பதால் மற்றவர்களை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

பி.ஜே.யிடம் ரகசியமாக பணம் வாங்கி செயல்படுபவர்கள். எந்த எந்த இயக்கத்தில் உள்ளார்கள். யார் யார் புரோக்கர்களாக உள்ளார்கள் என்பதை அடையாளம் காட்டி இருந்தால் எல்லா இயக்க நண்பர்களும் எம்மை  எதிர்த்து இருப்பார்கள்

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மு.லீக் தலைவர் காதர் மைதீன் ஆகியவர்கள் பி.ஜே.யிடம் விலை போகாத மகாத்தான தலைவர்கள் என்பதை முன்பே அடையாளம் காட்டி பலரிடம் சொல்லி இருக்கிறோம்.

காமில்பாய் அவர்கள் 2017 செப்டம்பரில் அப்பொழுது ஜமாஅத்துல் உலமா தலைவராக இருந்த அப்துர்றஹ்மான் ஹஜரத் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்

அப்பல்லோ ஹனீபாவை  விசாரிக்க வேண்டும் என்று. சீக்கிரம் கூட்டமைப்பை கூட்டி விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க பல ஆலிம்களை சந்தித்தேன். போனிலும் பேசினேன்.

சுன்னத் ஜமாஅத் மவுலவிகளை சந்திக்க  மஸ்ஜிதுர் ரய்யானின் அன்றைய தலைவர் இப்றாஹீம் மஹ்ழரி அவர்கள் பெரிதும் உதவினார். அப்பல்லோ ஹனீபாவுக்கு எதிராக ஹஜரத் செயல்பட மாட்டார் என்பது பரவலான கருத்தாக  இருந்தது.

ஷைகுல் ஹதீஸ், வாப்பா, ஹஜரத் என்பது போன்ற கண்ணியமான வார்த்தைகளை தவிர அவரது பெயரை யாருமே சொன்னதில்லை. அந்த அளவுக்கு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக அப்துர்றஹ்மான் ஹஜரத் இருந்ததை அறிய முடிந்தது

இப்படிப்பட்ட மதிப்பிற்குரிய ஷய்குல் ஹதீஸ் அவர்கள் உலமாசபை தேர்தலில் தோற்றதற்கு காரணம்? அப்பல்லோ ஹனீபாவின் கூடா நட்புதான்.

லால் பேட்டையில் இருந்து சென்னை செல்லவும் சென்னையில் உயர்தர ஹோட்டல்களில் தங்கவும். உடன் வரக் கூடியவர்களுக்கும் உணவு உட்பட எல்லா செலவுகளையும் அப்பல்லோ ஹனீபாவே செய்கிறார் என்று பரவலாகச் சொன்னார்கள். அந்த நேரத்தில் கூடிய மாவட்ட உலமா சபை கூட்டங்களிலும் சில ஆலிம்கள் பேசி இருக்கிறார்கள்.

கூட்டமைப்பு கூடினால் அதற்கும் அப்பல்லோ ஹனீபாவே செலவு செய்கிறார். இப்படி செலவு செய்வதற்கு அப்பல்லோ ஹனீபாவுக்கு அவ்வளவு வசதி கிடையாது. யாரோ ஒரு நல்லவர் இவரிடம் கொடுத்து சமுதாய அமைப்புகளுக்கு செலவு செய்யச் செய்கிறார் என்று பாக்கர் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் என்னிடம் சொன்னார்கள்.

நான் புரிந்து கொண்டேன். அந்த யாரோ ஒருவர் யார் என்பதை தெளிவாக அறிய முற்பட்டேன். அப்பொழுது அது பி.ஜே. என அறிய முடிந்தது. பி.ஜே. தந்த பணத்தைதான் உங்களுக்கு செலவு செய்கிறேன் என்று மதிப்பிற்குரிய ஷய்குல் ஹதீஸ் அவர்களுக்கு சொல்லி இருந்தால் ச்சீ என்று அந்த இடத்திலேயே காரி துப்பி இருப்பார்கள்ஷய்குல் ஹதீஸ் அவர்கள்.

கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் பி.ஜே.க்கு எதிராக களம் கண்டு விடக் கூடாது என்பதற்காக பி.ஜே.யால் நியமிக்கப்பட்ட பினாமி ஆவார்   அப்பல்லோ ஹனீபா. பி.ஜே. தரும் பணங்களைத்தான் கூட்டமைப்புக்கு செலவு செய்கிறார் என்று தெரிந்து இருந்தால் அப்பொழுதே பெரும்பாலான அமைப்பினர் காலில் கிடப்பதை கழட்டி  அப்பல்லோ ஹனீபாவுக்கு பாடம் புகட்டி இருப்பார்கள்.

28 நிமிட ஆடியோ விஷயமாக ஊடகத்தில் எழுதக் கூடாது என்பதற்காக ஊடக நிருபருக்கு 5 லட்சம். ஊடகத்தாருக்கு 35 லட்சம் என்று பேரம் பேசி செட்டில்மெண்ட் செய்த புரோக்கர் அப்பல்லோ ஹனீபா

2 தொலைக்காட்சிகளுக்கு தலா 40 லட்சம் செட்டில்மெண்ட் செய்துள்ளார்கள். தவ்ஹீது பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் எதற்கு போயுள்ளது? இவையெல்லாம் 2017 செப்டம்பரில் நடந்தது.

26.4.18 அன்று மேலப்பாளையத்தில் என் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் ததஜவினர். அது மீடியாக்களில் வந்து விடக் கூடாது என்பதற்காக பி.ஜே.யே பல மீடியாக்களுக்கு தானாக போன் பண்ணி இது பொய்யான செய்தி என்று சொன்னார்.

10 நிமிட ஆடியோ மீடியாவில் வரப் போகிறது என்றதும் பல கட்சிகளிலும் உள்ள பி.ஜே.யின் சிலீப்பர் செல்களான டாபர் மாமாக்களை பம்பரமாக சுழழ வைத்தார்

கடந்த முறை 5 லட்சம் வாங்கிய நிருபரும் பி.ஜே.யின் புதிய டாபர் மாமாவாக மாறினார். லட்சமாக இருந்த பேரங்கள் கோடியாக மாறின. ஏகத்துவத்தைச் சொல்லி வசூலிக்கப்பட்ட ஜகாத், சதகா,  பணங்கள் இப்டி பாழாக்கப்பட்டன.

ஜெரீனா போன்ற விபச்சாரிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பணங்கள் லுாப்ரிகேசன் ஜெல் வாங்கியது எவன் அப்பன் வீட்டு பணம்? பழைய சம்பவம் ஒன்றை மீண்டும் நினைவூட்டி முடிக்கிறேன்.

12-01-2011 அன்று மதுரை மஹபூப் பாளையம் பகுதியில் புல்லட் ராணி குணசுந்தரி ஆகிய விபச்சாரிகள் இருவரும் பர்தா அணிந்து முஸ்லிம் பெண்கள் போல அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கு வலை வீசி இஷாரா  செய்து அழைத்துக் கொண்டிருந்தனர். 

இதனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் கண்டித்து அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர் இதில் விபச்சார தலைவி  புல்லட்ராணி தப்பித்து ஓடிவிட்டார்.  குணசுந்தரியை அவர்கள் நால்வரும் காவல்நிலையத்தில் கொண்டு செல்கின்றனர்.

தனது விபச்சார தொழில் பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் பிடித்து போலீஸிற்கு கொண்டு சென்றதை அறிந்த  புல்லட் ராணி என்ன செய்தார் தெரியுமா?  

மாநில நிர்வாகியால் கூட எளிதில் தொடர்பு  முடியாத மாபெரும் தலைவர் பிஜே.க்கு போன் போடுகிறார். உங்கள் இளைஞர்கள் எங்கள் பெண்ணை பிடித்து செல்கின்றனர் எனவே அவர்களிடம் சொல்லி அந்த பெண்ணை விட்டுவிடச் சொல்லுங்கள் என்கிறார்.

உடனே அந்தத் தலைவர் பிஜே. மஹபூப் பாளையம் பகுதி ததஜவுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அங்கிருந்த பொறுப்புதாரிகள் அந்த ஆட்டோ டிரைவர்கள் எஸ்.டி.பி.ஐ என சொல்கிறார்கள். 

உடனே அந்தத் தலைவர் பிஜே. இதுதான் நல்ல சந்தர்ப்பம் என கருதி புல்லட்ராணியிடம் நீ உடனடியாக அவர்கள் அந்த பெண்ணை கடத்தியதாக புகார் மனு எழுது என்று கூறுகிறார்.

அத்துடன் நிற்கவில்லை. காவல்துறை மற்றும் உளவுத்துறையில் தனது நெருக்கத்தை பயன்படுத்தி அந்த புகார் மனுவை பெற்றுக் கொள்ளவும் பிடித்து வருபவர்கள் மீது வழக்கு பதியவும் பிரஷ்ஷர் கொடுக்கிறார்.

ஆட்டோவில் அழைத்து சென்றவர்கள் காவல்நிலையத்திற்கு செல்லுமுன் அங்குள்ள போலீஸ்காரர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவுந்து விட்டது.  அந்த இளைஞர்கள் ஸ்டேஷன் போய் சொன்னதை போலீஸ் கேட்கவே இல்லை. பின்னர் புல்லட் ராணி வந்து புகார் மனு கொடுக்கவும், போலீஸ் அதை வாங்கிக் கொண்டு இளைஞர்களை கைது செய்தனர். இது நடந்த வரலாறு  



111:1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!


111:2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப் பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது.

111:3வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான்.
111:4விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,

111:5அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.