குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.


அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா?

(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ள வில்லையா?

(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_16.html

1988ஆம் ஆண்டு நாம் வெளியிட்ட மிகச் சிறிய துண்டு பிரசுரம். இவை நமது வசனங்கள் அல்ல. 

புனிதமிக்க ரமழானில் ஹிராக் குகையில் வைத்து அருமை நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட  முதல் அத்தியாயமான ஸுரத்துல் அலஃக்  என்ற அத்தியாயத்திலுள்ள வசனங்கள். 

Comments