பி.ஜே.யால் குற்றம் சாட்டப்பட்ட பழனிபாபா குற்றவாளியா? நிரபராதியா? கோவை பாஸித் யார்?

பி.ஜே.க்கு பஸ்லுல் இலாஹியின் பகிரங்கக் கடிதம்.
பி.ஜே. அவர்களே உங்களுக்கு அல்லாஹ் நீண்ட நெடிய ஆயுளைக் கொடுப்பானாக! என்று துஆச் செய்து கொள்கிறேன். பி.ஜே. அவர்களே உங்களை அடையாளம் காட்டுகிறோமா? எதிர்க்கிறோமா? இதயமே இல்லாத உங்களுக்கு இதய வலியா?
பி.ஜே. அவர்களே கோவை பாஸித் யார்? உங்கள் விருப்பப்படி பழனி பாபா அவர்களை இகழ்ந்தும் உங்களை (பி.ஜே.யை)  புகழ்ந்தும் எழுதப்பட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு, உங்கள் வேண்டுகோள்படி ஒவ்வொரு சிறையாகச் சென்று சிறைவாசிகளிடம் கையெழுத்து  வாங்கி உங்களிடம் ஒப்படைத்தவர் கோவை பாஸித்அந்தக் கடித காப்பிகள் இன்றும் இதே பிளாக்கரில் உள்ளன.  

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_11.html 

பஸ்லுல் இலாஹி யார்? நீங்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை காப்பி எடுத்து வளைகுடா முழுவதும் பரப்பியவர். இன்று பரப்புவது எளிது அதுவும் இலவசமாக. அன்று காசு செலவு பண்ணித்தான்  பேக்ஸ் மூலமும்  காப்பி எடுத்தும் பரப்ப முடியும். 

அந்தக் காலத்தில் காசு செலவு செய்து உங்கள் கூற்றை பரப்பியவன். அது மட்டுமல்ல நீங்கள் தவ்ஹீதை சொல்வதற்காக சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த துபை ஜமாஅத்தின் ஆரம்ப காலத்தவன். அப்படிப்பட்ட நாங்கள் ஏன் உங்களை எதிர்க்க வேண்டும்.

பி.ஜே. அவர்களே உங்களை எதிர்க்கவி்ல்லை. உங்களை அடையாளம்தான் காட்டுகிறோம். அன்று பழனி பாபாவை விபச்சாரகர் என்று கூறி மக்களிடம் பரப்புங்கள் என்றீர்கள். உங்களை நம்பி பரப்பினோம். பாக்கரும் கூட உங்கள் ஆணைப்படி துபையிலிருந்த வந்த சிலரை பெண்கள் காப்பகம் வரை அழைத்துச் சென்றார். பழனி பாபாவை விபச்சாரகராக சித்தரிக்க நீங்கள் செய்த முயற்சிக்கு பாக்கர் பல வகையில் துணை நின்றார். அந்த பாக்கர் ....க் கூட நாகூர் கனி வெளியீட்டில் நீங்கள் விட்டு வைக்கவில்லை.

பழனி பாபா என்னைக் கெடுத்தார் என்று சொல்ல வேசிப் பெண்ணுக்கு காசு கொடுத்து செட்டப் வேலைகளெல்லாம் செய்தீர்கள். அது அப்பொழுது எங்களுக்குத் தெரியாது. அல்லாஹ்வின் அருளால் பழனிபாபா விபச்சாரம் செய்யவில்லை என்று நிரூபணமானது. உங்களால் (பி.ஜே.யால்) குற்றம் சாட்டப்பட்ட பழனிபாபா குற்றமற்றவர் நிரபராதி என்று ஆனது.

பி.ஜே.தான் பெண்கள் விஷயத்தில் தப்பானவர். பிரச்சார மேடைகளில் நின்று பெண்கள் பகுதியைப் பார்ப்பவர் என்று தவ்ஹீது ஜமாஅத் மேலாண்மைக்குழுவில் இருந்த என்னிடம் முதலில் உங்களையும் உங்களை மாதிரியான தவ்ஹீது மவுலவிகளையும் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக் கூறியவர் ஷம்சுல்லுஹாதான்.

பழனி பாபாவை கொலை செய்ய பி.ஜே. பத்வா கொடுத்து  விட்டார் என்ற தகவலை எனக்குத் தந்தவரும் ஷம்சுல்லுஹாதான். பழனி பாபாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய நீங்கள். அவர் கொல்லப்பட்டதும் கேமரா முன் கண்ணீர் வடித்து அழுதீர்கள். வீடியோ பண்ணி பரப்பினீர்கள்.

உண்மையான பாபாவின் தொண்டர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். பதவி பித்து பிடித்த பினாமிகள்தான் பாபாவின் தொண்டன் என்ற வேஷத்துடன் உங்களுடன் இருப்பார்கள்.

குற்றமற்ற நிரபராதியான பழனி பாபாவை விபச்சாரம் செய்தவர் என்று பரப்பிய பாவத்திற்காக அல்லாஹ் வழங்கிய தண்டனை உங்கள் விபச்சாரத்துக்கு உங்கள் வாயையே உங்களுக்கு எதிரான சாட்சியாக ஆக்கியது.

காலையில் ஒரு கடிதம் மாலையில் ஒரு கடிதம் என்ற நாடகம் ஏன்? என்ன நெருக்கடி என்பது எங்களுக்குத் தெரியும். உண்மை இனி உறங்காது. சமுதாயம் இனி சிறைபடாது.  

வெளியிடப்பட்ட ஆதாரங்கள் உண்மையாக இருக்க பொய்யர்கள் உங்களுக்கு துணை நிற்பார்கள் என்றால். யா அல்லாஹ் பி.ஜே. ஆடியோ விஷயத்தில் பொய்யான தீர்ப்பு வழங்கக் கூடி ஒவ்வொருவனின் குடும்பத்தையும் நாசமாக்குவாயாக! உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழிப்பாயாக என்று உங்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரும் குறிப்பாக சிறையில் உள்ளவர்களும் துஆச் செய்வார்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.