ததஜவினருக்கு ஒரு கோடி பரிசு தவ்ஹீது த.மு.மு.க.வுக்கு முட்டுக்கட்டை?

48 மணி நேரம் யோசித்து அனைவரும் கையெழுத்து போட்டு தந்தார்கள் என்று பி.ஜே. சொல்லி உள்ளது உண்மையா? தவ்ஹீது த.மு.மு.க.வுக்கு முட்டுக்கட்டை என்று சொன்னது உண்மையா? அதனால் பி.ஜே. வெளியேறிதாக சொல்லி வருகிறார்களே இது பற்றி பதில் தாருங்கள்” என்று ஒரு தாஇ 3 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தார். இது பொய் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி இருக்க முடியும். இருந்தாலும் ஆதாரத்துடன் பதில் தர வேண்டும் என்பதற்காகத்தான்  இவ்வளவு கால தாமதம் ஆகி விட்டது.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_62.html




தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து வெளியேறியது போல் பி.ஜே.யும் அவருடன் இருப்பவர்களும் பொய் சொல்லி வருகிறார்கள். இந்த பொய்ப் பிரச்சாரம் 13 ஆண்டு காலமாக நடந்து வருகின்றது. அவர்களின் பொய்யை நிலைநாட்டுவதற்காக தமிழ் கூறும் உலகில் 13 ஆண்டுகளாக விளக்க நிகழ்ச்சிகளை பலவிதங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.


தவ்ஹீது பிரச்சாரம் செய்ய அழைத்தபொழுதெல்லாம் வெளிநாடுகளுக்கு வர மாட்டேன் என்று சொன்னவர் பி.ஜே. அந்த பி.ஜே. இட்டுக் கட்டிய முட்டுக்கட்டைப் பிரச்சாரம் செய்ய என்று வெளிநாடுகளுக்கு பறந்து வந்தார். இட்டுக்கட்டிய முட்டுக்கட்டைப் பிரச்சாரத்தின் முதல் கட்டக் கூட்டங்கள் சென்னை ஆலந்துாரிலும் அடுத்து திருச்சியிலும் நடந்தது. அதை சி.டியாகவும் வெளியிட்டு பரப்பி இருந்தார்கள்.


அந்த 2 நிகழ்ச்சிகளின் சி.டி.க்களே அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு மிகப் பெரிய ஆதாரமாக இருந்தன. நம்மிடம் இருந்த அந்த சி.டி.க்கள் பழுதாகி விட்டன. ஆகவே சைட்டில் இருந்தால் அனுப்பித் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். தமுமுக TNTJ பிரிவினை -மாநில செயற்குழு  என்ற தலைப்பில் 20.04.2004 தேதிய திருச்சி நிகழ்ச்சியை Adirai Thowheed HD,  deenmohameed  ஆகிய இரு தளங்களில்   பதிந்துள்ளார்கள். அந்த லிங்கை சிலர் அனுப்பி இருந்தார்கள். ததஜவினர் பொய்யர்கள் என்பதால் அவர்களை அறியாமல் சொல்லி இருந்த உண்மைகளை நீக்கி விட்டு, அவர்கள் போட்ட நாடகத்தை மட்டும் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.



முக்கிய அறிவிப்பை எழுதியவரே பி.ஜே.தான். அவர் திருச்சி நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் நான் கவனமாக எழுதியது என்பார். அதே நிகழ்ச்சியில் இன்னொரு இடத்தில் நான்தான் உணர்ச்சி வசப்பட்டு எழுதினேன் என்பார். உணர்ச்சி வசப்பட்டவன் கவனமாக எழுத மாட்டான். கவனமாக எழுதுபவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க மாட்டான்.


இரண்டுமே முரண்பாடானவை. ”நான் கவனமாக எழுதியது| என்பது உண்மையானால் உணர்ச்சி வசப்பட்டேன் என்று பி.ஜே. சொன்னது பொய். ”உணர்ச்சி வசப்பட்டு எழுதினேன்| என்பது உண்மையானால் ”நான் கவனமாக எழுதியது| என்று பி.ஜே. சொன்னது பொய்;. இதில் பி.ஜேயின் எந்தக் கூற்றை ஏற்றாலும் பொய்யராக ஆவது யார்


”இந்த வாசகத்தை நான்தான் எழுதினேன். தவ்ஹீது செயல்பாடு என்று எழுதியதை ஜமாஅத் என்ற வார்த்தையை சேர்த்து தவ்ஹீது ஜமாஅத் செயல்பாடு என்று திருத்தினார்கள். தவ்ஹீது என்று நான் குறிப்பிட்டது என்னோடு போகட்டும் என்று எழுதினேன்| என்றார். 

தவ்ஹீது என்றால் பி.ஜே, பி.ஜே. என்றால் தவ்ஹீது என்ற இமேஜ் ஏற்பட வேண்டும் என்று பி.ஜே. திட்டமிட்டு செயல்பட்டுள்ளதை பி.ஜே.யின் இந்த வார்த்தை மூலம் வெளிப்படுத்தி பி.ஜே.யை அல்லாஹ் அடையாளம் காட்டி உள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

பி.ஜே. கவனமாக எழுதியதாகக் கூறும் தவ்ஹீது செயல்பாடு என்ற வாசகம் என்ன பொருள் தரும்தவ்ஹீது கொள்கை சம்பந்தமான செயல்பாடுகள் என்றுதான்  பொருள் தரும். இங்கே தவ்ஹீது கொள்கை பிரச்சனை இல்லை. ”தவ்ஹீது ஜமாஅத்என்று தங்களை கூறிக் கொள்ளும் அ.த.ஜ.கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைமையுடன்தான் பிரச்சனை என்ற பொருளில்தான் ஜமாஅத் என்ற வார்த்தையை சேர்த்தார்கள்.


நரித்தனமும் நரித் தந்திரமும் த.மு.மு.க. தலைமையினரிடம் இருந்திருந்தால் சதித் திட்டத்துடன் அவர்கள் பயன்படுத்தி வரும் தவ்ஹீது ஜமாஅத் என்ற இந்த வார்த்தையை எழுத ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். த.மு.மு.க. தலைமையினர் இயல்பாக எழுதி கொடுத்த கூட்டமைப்பு என்ற வார்த்தையிலேயே உறுதியாக இருந்திருப்பார்கள்.

த.மு.மு.க. அ.த.ஜ.கூட்டமைப்பு ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு மத்தியிலான பிரச்சனையை தவ்ஹீது கொள்கைப் பிரச்சனைபோல் ஆக்கி தவ்ஹீது பெயரால் லாபம் தேடும் திட்டத்துடன் பி.ஜே. இருந்துள்ளார். அதனால்தான் அ.த.ஜ.கூட்டமைப்பு என்ற அமைப்புத் தலைமையுடனான பிரச்சனை என்ற உண்மையை குறிப்பிட்டு த.மு.மு.க. தலைமையினர் எழுதி கொடுத்த ஒப்பந்தத்தை படித்துப் பார்த்த பி.ஜே. என் மண்டையில் களி மண்ணா இருக்கிறது? என்று கேட்டு அதை நிராகரித்துள்ளார். 

இந்த மாதிரி பி.ஜே. அவரை அறியாமல் சொன்ன உண்மைகளை நீக்கி விட்டு பொய்களை மட்டும் பதிவேற்றம் செய்துள்ளார்கள். ஆகவே திருச்சியின் ஒரிஜினல் சி.டி. 2ம் கிடைத்தால் அதனை முழுமையாக பதிவேற்றம் செய்து லிங்கை அனுப்பித் தாருங்கள். அல்லாஹ்வின் பேரருளால் ஆலந்துார் சி.டி. கிடைத்தது. அதில் சொல்கிறார் பாருங்கள். 


(ஏப்ரல்16-22-2004) உணர்வில் வந்திருக்கு வாசித்து விட்டீர்களா? அந்த மேட்டரைத்தான் நான் எழுதி கொடுத்தது... நான்தான் எழுதி கொடுத்தேன், நான்தான் எழுதி கொடுத்தேன் (இப்படி 3 முறை உறுதிப்படுத்துகிறார்)  அப்படியே ஜெராக்ஸ் போட்டிருக்கலாமே என்கிறார்கள். கோபம் வருகிறது. ஜெராக்ஸ் போட்டிருந்தால் குட்டு வெளிப்பட்டிருக்கும். ஆகவே  இல்லை இல்லை கேளுங்க பாவா என கோபத்தை அடக்கி  சமாளிக்கிறார்.

நான் எழுதி தருகிறனே் என்று .... இதில்(உணர்வில்) உள்ள வாசகத்தை எழுதிக் கொடுத்தேன். ... கரக் ஷன் பண்ணி விட்டு இன்னும் ஒரு நாள் டயம் கேட்டார்கள். .. சனிக்கிழமை மஃரிபிலே கொடுத்து இருக்கிறேன் பேப்பரை. சனியிலே இருந்து ஞாயிறு புல்லா அவர்கள் கையில் இருக்கிறது. திங்கள் மஃரிபிலேதான் எனக்கு வந்து கையெழுத்து போட்டு வருகிறது. 48 மணி நேரம் யோசித்துதான் கையெழுத்து போட்டு தந்தாங்க. 

உடனடியா அவசரப்பட்டு போட்டது இல்லை.  48 மணி நேரம் யோசிச்சி கலந்து ஆலோசிச்சி இதை டிஸ்கஸ் பண்ணி விட்டு சொல்கிறார்கள். ... கருதுகிறோம் என்று கையெழுத்து போட்டு தந்திருக்கிறார்கள். அதைத்தான் உணர்வில் போட்டதாக படித்துக் காட்டுகிறார். பி.ஜே. சொல்லி உள்ளது பொய். 3 பேர் தவிர மற்றவர்கள் ஒப்புக் கொண்டு, எல்லாரும் கையெழுத்திட்ட மாதிரி பி.ஜே. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு உண்மையானது என்றால் கையெழுத்துடன் கூடிய ஒப்பந்த பிரதியை போட்டோ பிரிண்டாக உணர்வில் வெளியிடச் செய்யுங்கள் ஒரு கோடி பரிசு தருகிறோம். இல்லை பி.ஜே.யை பொய்யர் என்று அறிவிப்பு செய்யுங்கள்



ஒருகோடி என்றால் கையில் ஒரு கோடி வைத்திருக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. எல்லாரும் கையெழுத்திட்ட மாதிரி பி.ஜே. உணர்வில் வெளியிட்டது  பொய். 48 மணி நேரம் யோசித்து அனைவரும் கையெழுத்து போட்டு தந்தார்கள் என்று பி.ஜே. மக்களிடம் பரப்பி உள்ளது பொய். என்பதை அறுதியிட்டு உறுதிபடுத்தவே சவால். 

பி.ஜே.க்காக  பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லக் கூடிய டீமின் தலைவர் பி.அன்வர் பாஷா முடிவை ஆதரித்தார். மறுநாள் பல்டி அடித்தார். இதுவே பி.ஜே. அன்கோ பிரிவினை திட்டத்துடன் வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.

மக்கள் இயக்கம் நடத்துபவர்கள் மனதில் எந்த ஒரு பிரிவினருக்கும் எதிரான கருத்து இருந்தாலும் அதை எளிதில் வெளியிடுவார்களா? அதுவும் எழுத்துப் பூர்வமாக வெளியிடுவார்களா? சுன்னத் ஜமாஅத்தினரை இழுப்பதற்காக இருக்கும் தவ்ஹீதுவாதிகளை இழக்கும் வண்ணமாக உள்ள தீர்மானத்தில் கையெழுத்திட்டு பகிரங்கப்படுத்துவார்களா? இதில் நடந்துள்ள மெஸ்மரிஸம் என்ன? சிந்திக்க வேண்டிய ஒன்றா இல்லையா?


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.