தவ்ஹீது முட்டுக்கட்டை என்று சொன்னதால் பி.ஜே. வெளியேறினாரா?

செய்தது சரிதான் ஆனால் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லை என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டுள்ளார்கள். நல்ல செயலைத்தான் சரி என்று சொல்ல முடியும். செய்தது நல்ல செயல் என்றால் அந்த நல்ல செயலில் உடன்பாடு ஏற்பட வேண்டும். அதுதான் முஃமின்களின் பண்பு. நல்ல சரியான செயலில் உடன்படாமல் போவது முனாபிக்குகளின் பண்பு. சரியான செயலில் உடன்படாத அந்த ஜமாஅத் முனாபிக்குகளின்  ஜமாஅத். அயோக்கிய ஜமாஅத். விபச்சாரகனை ஆதரிக்கும் ஜமாஅத் என்று அர்த்தம். இதை முதலில் தெரிவித்துக் கொண்டு தலைப்புக்கு வருகிறோம்.

தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து வெளியேறியது போல் பி.ஜே.யும் அவருடன் இருப்பவர்களும் சித்தரித்து வருகிறார்கள். இது உண்மையா இது பற்றி விளக்கம் தாருங்கள் என்று பலர் கேட்டுள்ளார்கள். அது பொய் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். இருந்தாலும் பி.ஜே. பொய்யர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்களையும் தருகிறோம். 

மதரஸா மாணவருடனான லீலை, அதை ஒட்டி நடந்த கொலை. அந்தக் கொலையை ஒட்டி மதரஸா இழுத்து மூடல். அதை மறைக்க அல்லாவாவது குல்லாவாவது என்று நாத்திக வேஷமும் கோஷமும் போட்டது. கொள்கை பிடிக்காமல் தி.க.வுக்கு போனேன் என்றது.  மளிகை கடை நடத்தி அந்நிய பெண்ணுடனான உறவால் கிளியனுார் பகுதியில் இருந்து அடித்து விரட்டப்பட்டது. ஆகிய முந்தைய வரலாற்றை விட்டு விடுவோம். லுஹா என்னிடம் சொல்லி உள்ளவைகளிலிருந்து பார்ப்போம். பி.ஜே.யை தமிழ் கூறும் உலகில் பிரபலப்படுத்தியது அந்நஜாத்.


அந்த அந்நஜாத்திலிருந்து பி.ஜே. விலகினார். அப்பொழுது விலகுவது ஏன்?  என்று அந்நஜாத் நிர்வாகக்குழுவுக்கு கடிதம் எழுதினார். அவர் கைப்பட எழுதியுள்ள  கடிதக் காப்பியை இணைத்துள்ளோம் பாருங்கள்.  அந்தக் கடிதத்தில்,

....ஏற்பட்டுள்ள சிக்கலைத்  தீர்ப்பதற்காகவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள். இந்த நேரத்தில் உண்மையான பிரச்சனை என்னவென்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

அபூஅப்துல்லாஹ்வை பொருத்தவரையில் பிரச்சனையே நான்தான். நானிருக்கும் வரை அவரது பிரச்சனை தீரப் போவதில்லை. இதற்கு அவர் பலருக்கு எழுதிய கடிதங்கள் சான்று. 

என்னைப் பொருத்தவரையில் பிரச்சனையே அபூஅப்துல்லாஹ்தான். அவருடனிருக்கும் வரை என் பிரச்சனை தீராது. இதற்கு அவரிடமும் பல சான்றுகள் இருக்கலாம்.... இப்படியான பிரச்சனைகளால் ராஜினாமா செய்வதாக எழுதியவர் மக்களிடம் எந்த மாதிரி பொய்யை வைக்கச் சொல்லி உள்ளார்.

என் உடல் நிலையின் காரணமாக திருச்சி எனக்கு ஒத்துக் கொள்ளாத காரணத்துக்காக நான் விலகிக் கொள்வதாக அந்நஜாத்தில் நான் அறிவிப்பது போல் அறிக்கை வெளியிட்டு விடலாம். இதனால் வெளி உலகில் பிரச்சனை ஏதும் இருக்காது என்கிறார். பி.ஜே.யுடன் இருப்பவர்களை இப்படித்தான் ஹிக்மத்தாக பொய் சொல்ல வைப்பார். அதற்கு ஜென்டில் மேன் ஒப்பந்தம் என்று சொல்லி எல்லார் தலையிலும் மசாலா அரைத்து விடுவார். அதுதான் அந்நஜாத்திலும் நடந்தது. பி.ஜே. சொன்னபடி போட்டார்கள். 

இந்த அறிக்கை வந்த அந்நஜாத் யாரிடமாவது இருந்தால் வாட்ஸப்பில் அனுப்பி தாருங்கள். பி.ஜே.யின் ஹிக்மத்தால் அன்றைய பலான விஷயங்கள் வராமல் போய் விட்டன. இல்லை என்றால் அபூஅப்துல்லாஹ் பல பலான சான்றுகளை போட்டு இருக்கலாம். 


லுஹா ரிபாஈ ஆகிய 2 பேருடைய பிரச்சனைதான் த.மு.மு.க. உடைய பிளவாக ஆகிவிடும் என்று  பாக்கர் சொன்னதாக சொல்லிக் காட்டும் வீடியோ இதோ. மேலும் அதில் லுஹா துபை போன பிறகுதான் இலாஹி உடைய கடிதங்கள் வருகிறது அண்ணனைப் பற்றி சில விஷயங்களை இலாஹியிடம் சொன்னேன் என்று லுஹா சொன்னார். லுஹா இலாஹியிடம் சொல்லி விட்டு வந்த பிறகுதான் இலாஹி அண்ணன் மீது வேறு மாதிரியான குற்றச்சாட்டுக்களை வைக்கிறான் என்றும் பாக்கர் சொல்லிக் காட்டி உள்ளார். பி.ஜே, லுஹா என எல்லாரும் இருக்கிறார்கள். 

பாக்கரின் இந்தக் கூற்றை லுஹா உட்பட யாரும் மறுக்கவில்லை. பி.ஜே. மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உட்பட பல அசிங்கங்களை, பி.ஜே. விருப்பப்படி அன்வர் பாஷா எழுதிய கள்ளக் கணக்குகளை பணத் திருடல்களை இலாஹியிடம் சொன்னவர் லுஹா என்பதற்கும் இந்த வீடியோ சான்று கூறுகிறது. 



அந்நஜாத் பத்திரிக்கை மூலம் பிரபலமான அவர் அதிலிருந்து ஓராண்டில் வெளியேறினார். அப்பொழுது ஹிர்னியா ஆபரேஷனுக்காக விடுப்பில் செல்வதாகக் கூறி திருச்சி தனது உடல் நிலைக்கு ஒத்து வரவில்லை என்றுதான் முதலில் காரணம் கூறினார். பிறகு அமானித மோசடியே தனது விலகலுக்கு உண்மையான காரணம் என்றார். 

துபை ஐ.ஏ.ஸி. மதுரையில் வாங்கிய புரட்சி மின்னல் பத்திரிக்கையை விட்டு விட்டு அல்ஜன்னத் பத்திரிக்கைக்கு ஆசிரியராகப் போனார். துபை ஐ.ஏ.ஸி. புரட்சி மின்னலை வாங்கும் முன்பே அல்ஜன்னத் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்க ஒப்புக் கொண்டதே காரணம் என்று முதலில் கூறினார். பிறகு துபை ஐ.ஏ.ஸியின் நான் என்ற அகம்பாவ-முதலாளித்துவ போக்கே காரணம் என்றார். 

தான் ஆள் வைத்து செய்ய இருக்கும் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு போன்ற செயல்களால் தனக்கு ஏற்படும் பாதிப்பு தவ்ஹீது அமைப்பான ஜாக்குக்கும் ஏற்படக் கூடாது என்பதே விலகியதற்கு காரணம் என்று முதலில் கூறினார். பின்னாளில் ஜாக்கில் நடந்த ஊழல்களே தன் விலகளுக்கு காரணம் என்றார். 


ஹாமித் பக்ரியை தலைவராக வைத்து பி.ஜே. நடத்திய கல்விச் சங்கத்தை கலைக்கக் கூறினார். கல்விச் சங்கம் கடனில் மூழ்கியதே கலைக்கக் கூறியதற்கு காரணம் என்று முதலில் கூறினார். பிறகு தீவிரவாத செயல்களே கலைக்கக் கூறியதற்கு காரணம் என்றார். 

கூட்டமைப்பின் தலைவராக இருந்த ஹாமித்பக்ரியை மேளாண்மைக்குழுவில் சேர்த்தார். ஒருவரே நீண்ட நாள் தலைவராக இருக்கக் கூடாது என்பதே காரணம் என்று முதலில் கூறினார். பிறகு தீவிரவாதிகளுடனான தொடர்பே தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றியதற்கு காரணம் என்றார்.

இப்படி முன்னுக்குப் பின் முரணானாக பி.ஜே.ன் கூற்றுக்கள் பற்றி தொகுத்தால் அவற்றை பல புத்தகங்களாகவும் பல வால்யூம்களாவும்தான்  வெளியிட வேண்டும். இவற்றில் எது உண்மையான காரணம் எது உண்மைக்கு முரணானது என்று கேட்டால் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்ற சவாலுடன் முடித்துக் கொள்வார். 
அபூ அப்துல்லா மாதிரி  எதிர் தரப்பு அவரது சவாலை ஏற்றால் அதை கண்டு கொள்வதே இல்லை. அல்லது ஒப்பந்தம் என்ற பெயரால் சில பைத்தியங்களை அனுப்பி நாடகம் போட்டு முடிப்பார். ஒப்பந்தம் போட பி.ஜே. அனுப்பிய கலீல் ரசூல் போன்றவர்களளை  பைத்தியங்கள் என்று சொன்னவரும் பி.ஜே.தான்

பி.ஜே. விடுத்த சவாலை ஏற்று அபூ அப்துல்லா ஒரே மேடையில் மக்கள் மன்றத்தில் சந்திக்கத் தயார் என்றார்.   பி.ஜே. கடைசி வரை கண்டு கொள்ளவே இல்லை. பி.ஜே. இடம் உள்ள மீடியா பலத்தால் அவருடைய கூற்று மட்டும் எளிதில் மக்களை சென்றடைந்து விடுகிறது. 

கொள்கைப் பிரச்சனையால் விலகவில்லை. அவரது துாண்டுதல்களால் நடந்த கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு போன்ற செயல்களால் அவருக்கு இருந்த இக்கட்டுகள் நீங்கி விட்டன. அவரை காப்பாற்றியவர்களை கழட்டி விட்டு த.மு.மு.க.வை கைப்பற்ற முயன்றார். அது தோழ்வியானது. ஆகவே அவருக்கே உரிய வழக்கமான பொய்களை அரங்கேற்றினார். இதுதான் உண்மை. 

இதற்கு ஆதாரமாக பிரிந்த உடன் பி.ஜே. ஆலந்துாரில் நடத்திய கூட்ட பேச்சு, திருச்சியில் நடத்திய செயற்குழு பேச்சுகக்கள் உள்ளன. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரிஜினல் சி.டி. இருந்தால் அப்லோடு பண்ணி அனுப்பித் தாருங்கள்.  தவ்ஹீது முட்டுக்கட்டை என்று சொன்னதாக உள்ளது பொய் என்பதற்கு அதிலிருந்தே ஆதாரங்களை கிளிப் கிளிப்பாக எடுத்து தருகிறேன்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.