காணாமல் போன பணம் எது அரபி தந்ததா? அஜமி தந்ததா? தீவிரவாதி லிஸ்டில் இருந்தது யார்?

இந்த வீடியோவில் லுஹா என்ன சொல்லிக் காட்டுகிறார் தெரியுமா?  அஹ்மது அல் அஹ்மது என்ற அரபி பி.ஜே.யை சந்திக்க துடித்தார். அப்பொழுதுதான் உத்தமபாளையம் சம்பவம் நடந்தது. அதனால் அரபியை பார்க்க முடியாது (என்று பி.ஜே. சொல்லி விட்டார்).

பி.ஜே. குறுக்கிட்டு, நம்மை தீவிரவாதி லிஸ்டில் வைத்திருக்கிறாங்க.  வெளிநாட்டவர்களை சந்தித்தோம் என்று சொன்னால் லஷ்கரே தையிபா என்பாங்க. அதனால் பாரின் ஆட்களை கூட்டி வராதீங்கன்னு சொல்லி இருக்கேன் என்ற உண்மையை அவரை அறியாமல் சொல்லி விட்டார்.

பி.ஜே. தன்னை அறியாமல் உண்மையை ஒப்புக் கொண்டாலும் அவருடன் உள்ளவர்கள் அதை மூடி மறைப்பார்கள். அதற்கு ஆதாரம்தான் அடுத்து வரும் குரல்கள். வெளிநாட்டவர்களை சந்திக்க மாட்டேன் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் என்று திசை திருப்புகிறார்கள். உடனே அவரும் ஆமாம் பாரின் ஆட்களை சந்திக்க மாட்டேன் என்று கொள்கையாக வைத்திருந்தேன் என்று கூறுகிறார். 

இது உண்மை என்றால் அதைத்தானே முதலில் பி.ஜே. கூறி இருப்பார். ஆக பி.ஜே. தீவிரவாதி லிஸ்டில் இருந்தார் என்பது உண்மை. அவரைக் காத்துக் கொள்ளவே த.மு.மு.க.வில் அடைக்கலம் ஆனார். இந்த உண்மை  இந்த வீடியோவில் வெளிப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் சம்பவம் நடந்தபோதுதான் கமாலுத்தீன் மதனி போன்றவர்கள் அஹ்மது அல் அஹ்மது என்ற அரபியை சந்திக்கிறார்கள். வெளிநாட்டவர்களை சந்தித்தோம் என்று சொன்னால் லஷ்கரே தையிபா என்பார்கள் என்ற பயம் அவர்களுக்கு ஏன் வரவில்லை. காரணம் அவர்கள் தீவிரவாதியாக இருக்கவில்லை. 

பாரின் ஆட்களை சந்திக்கக் கூடாது என்று கொள்கையாக வைத்திருந்ததாக சொல்வது உண்மை இல்லை.  இதே அஹ்மது அல் அஹ்மது என்ற அரபியையும் அவருடன் வந்த சுலைமான் குனைனி என்ற அரபியையும்  1994ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் ஆபீஸில் வைத்து பி.ஜே. சந்தித்துள்ளார். 

அது மட்டுமல்ல அந்த இரு அரபிகளிடமும் பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்கு பண உதவி கேட்டு லுஹா கடிதம் அனுப்பி இருந்தார். இந்த உண்மைகளை மறைப்பவர்களை அல்லாஹ் தன் கருணையை விட்டு அப்பாற்படுத்துவானாக! 



இந்த மாதிரி வீடியோக்கள் நாம் தயாரித்தது அல்ல. நாம் பதிந்து வெளியிட்டதும் அல்ல. மற்றவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணன் ஆணைப்படி அவர்களால் பதியப்பட்டவைதான். எல்லாமே ஆன் லைன் அண்ணனில்தான் உள்ளன. அவற்றிலிருந்துதான் ஆதாரங்களை  எடுத்துப் போடுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்களே உண்மைப்படுத்துவதையும் மற்றவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் எடுத்த வீடியோ அவர்களையே  இழிவு படுத்துவதையும் வீடியோ ஆதாரத்துடன்  பாருங்கள்.

24.12.2008 அன்று கிரீன் பேலஸ் ஹோட்டலில் சுமூகத் தீர்வுக்கான  கலந்துரையாடல் என்ற பெயரில் ஒரு கூட்டம்  கூட்டப்பட்டது. அதில் லுஹாவுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் பி.ஜே.க்கு வந்தது. அதனால் லுஹாவை துாய்மைப்படுத்தி பேசினார். லுஹாவை துாய்மைப்படுத்தி பி.ஜே.  பேசி உள்ளது பொய் என்று நாம் சொல்ல மாட்டோம். 28.08.2001 அன்று அவர் எழுதிய ஒரிஜினல் கடிதத்தைப் பாருங்கள். பி.ஜே. கிரீன் பேலஸ் ஹோட்டலில்  பேசியது சந்தர்ப்ப வாதம் பொய் என்று அந்தக் கடிதம் சொல்லும்

ஜமாஅத்தின் அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிந்து நடைபெறுவதே முறையாகும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. 

மவுலவி ஷம்சுல்லுஹா அவர்களுக்கு பல மாதங்கள் எந்த ஊதியமும் வழங்கப்படாதது இதனால்தான் உங்களுக்கு தெரியாமல் போனது. 

அவ்வப்போது கணக்குகள் சரி செய்யப்படாததால் அவரால் கணக்குகளைச் சரியாக பராமரிக்க இயலவில்லை. 

(கமாலுத்தீன் மதனி எப்படி மற்ற மவுலவி பெயரால் வெளிநாட்டு நிறுவனத்தில் பணம் வாங்கி விட்டு பி.ஜே.க்கு கொடுத்தாரோ அது போல் லுஹா) 

பள்ளிவாசல் நிதியைப் பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார். ஏராளமான மேலப்பாளையம் சகோதரர்கள் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள். மேலும் பலவிதமான அவதுாறுப் பிரசுரங்கள் வெளி வர இருந்ததை தற்காலிகமாக நான் தடுத்து விட்டேன்.   


காணாமல் போன பணம் சம்பந்தமாக லுஹா வீடியோவில் சொல்லி உள்ள விளக்கத்தையும் பாருங்கள். பனைக்குளம் சாகுல் ஹமீது என்பவருக்கு எழுதிய 13 பக்க கடிதத்தின் 6 வது பக்கம் என்ன எழுதியுள்ளார். 

கா.அ.மு.ப.இ. (பழுலுல் இலாஹி) குறிப்பிடுவது போல் நான் அவரிடம் ஒண்ணரை இலட்சம் கோரியது உண்மைதான். அந்தப் பற்றாக்குறை அஹ்மது அல் அஹ்மது தந்த பணத்தில் அல்ல. மாறாக அஹ்மது அல் அஹ்மது  அல்லாமல் உள்ளூர் வெளியூர் மக்களிடம் இருந்து வந்த நன்கொடையில் ஏற்பட்டதாகும். ....

அப்போது ( B.A. பட்டதாரியான லுஹாவாகிய) எனக்கு முறையான கணக்கு தெரியாததுதான். இந்தத் தொகையை பழுலுல் இலாஹியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். ... இப்படி நீளும் கடிதத்தையும் பாருங்கள். 


இந்த வீடியோவில் லுஹாவுக்கு அருகில் இருப்பவர்தான் பனைக்குளம் சாகுல் ஹமீது என்பவர். அவருக்கு எழுதிய கடிதத்தில்தான் காணாமல் போன பணம் அரபு நாட்டு பணம் அல்ல என்று எழுதி உள்ளார். 


 
ஆகவே உங்கள் உதவிகளை ஏழை எளியவர்களுக்கு கொடுங்கள். மருத்துவத்திற்கு வசதியற்ற நோயாளிகளுக்கு கொடுங்கள்.  


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.