இந்திய சுதந்திரம் பற்றி சமுதாய துரோகி ரகசிய பாபா பேச்சும் பி.ஜே.யின் பதிலும்

முஸ்லிம்கள் போராடியதால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற பொருள்பட இஸ்லாமிய விரோதி ரகசிய பாபா  பேசி உள்ளான். முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்துப் பேசிய துரோகிக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த சமுதாய துரோகி ரகசிய பாபா என்ன பேசி உள்ளான் என்பதை பார்ப்பதற்கு முன் முஸ்லிம்களின் தியாகத்தைப் பார்ப்போம்.


இந்திய சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் பற்றி த.மு.மு.க. அமைப்பாளராக இருந்தபொழுது பி.ஜே. அவர்கள் 17.08.1998 அன்று சென்னையில் ஆற்றிய உரையில் அருமையான பதில் விளக்கம் உள்ளது. அதையே ரகசிய பாபாவுக்கு பதிலாகத் தொகுத்து தருகிறோம்.

1.இந்திய சுதந்திரத்திற்கு முக்கியமான காரணகர்த்தாக்களாக திகழ்ந்தவர்கள். நமது முன்னோர்கள் (முஸ்லிம்கள்)

2.மலபாரில் (முஸ்லிம்) மாப்பிள்ளாக்கள் அவர்களுடைய கிளர்ச்சி இல்லை என்றால் இந்த நாடு விடுதலை அடைந்து இருக்காது. (முஸ்லிம்)  மாப்பிள்ளாக்கள் உடைய புரட்சி இல்லை என்றால் வெள்ளையர்களை விரட்டி இருக்க முடியாது.

3.ஆயுதம் தாங்கி போராடினார்களே அது யாரு? ஆயுதம் தாங்கி ரயில்களை கவிழ்த்தவர்கள் யாரு? வெள்ளையர்கள் இந்த நாட்டிலே நடமாடுவதற்கே பீதி அடைந்தார்களே அந்த நிலையை உருவாக்குனது யாரு? எங்க அப்பன் பாட்டன். ஹைதர் அலி, திப்பு சுல்தான், அஹ்மதுல்லாஹ் ஷா, சிப்பாய்கள், மாப்பிள்ளாமார்கள். ( ஆகிய முஸ்லிம்கள்)

4.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய ராணுவம் என்று அமைத்தால் கூட அதனுடைய தளபதியாக இருந்தது ஷானவாஸ்கான். (என்ற முஸ்லிம்)

5.தளபதியாக இருந்து களத்தில் இறங்கி வெள்ளையர்களை ஆயுதத்தைக் கொண்டு நேருக்கு நேர் சந்தித்த தளபதி யாரு? ஷானவாஸ்கான். முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்களும்தான் ஆயுதம் தாங்கி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்கள்.   …..

6.வெள்ளைக்காரன் எதனால் இந்த நாட்டை விட்டு போனான் என்று சொன்னால். அவனுக்கு ரோட்டில் நடக்க முடியவில்லை. டிரைனில் போனால் சுட்டுக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. இந்த மாதிரியான அதிரடியான நடவடிக்கைகளிலே ஈடுபட்டதன் மூலமாக அரண்டு போய்தான். சுதந்திரம் கொடுத்து விட்டு போனான்.

இப்படியாக த.மு.மு.க. அமைப்பாளராக இருந்தபொழுது  பி.ஜே. அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் பற்றி பேசி உள்ளார்கள். இனி சமுதாய துரோகி ரகசிய பாபா என்ன பேசி உள்ளான் என்று பார்ப்போம்.





வெள்ளைக்காரன் எல்லா நாட்டை விட்டும் போய்க்கிட்டே இருந்தான். அங்கே இருந்து கொண்டு நிர்வாகம் பண்ணுவதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒவ்வொரு நாடாக வெளியேறிக் கொண்டே இருந்தான். பிரிட்டிஷ்க்காரன் பாதி உலகத்தை கையில் வைத்து இருந்தான். …..

எவன் போராட்டம் பண்ணி புரட்சி பண்ணி அவன் போனான்? நமக்கு ஏன் பிரிட்டனை மட்டும் பார்ப்போம் நமக்கு முடியாது இனிமேல். காலம் மாறிப் போய் விட்டது பழைய காலம் மாதிரி இல்லை என்று விட்டு விட்டு ஓடுகிற ஒரு கண்டிஷனில் இருக்கும்பொழுது, குருவி உட்கார பனம்பழம் விழுந்துச்சு என்பாங்க பாருங்க.

பனம்பழம் என்கிறது மண்டையை விட பெரியதாக இருக்கும். பனை மரத்துப் பழம். அதை ஒரு சிட்டுக்குருவி தள்ள முடியுமா? தள்ள முடியாது. ஆனால் அது கனிந்து இப்பவா அப்பவா என்று இருக்கிறது. அப்ப போய் சிட்டுக்குருவி உட்கார்ந்தது என்று வையுங்கள். கீழே விழுகிறது நம்ம பார்த்தால் என்ன தெரியும்?

சிட்டுக்குருவி பனம்பழத்தையே தள்ளி விட்டதே என்று நினைப்போம். இது உட்காரா விட்டாலம் விழுந்து விடும். குருவி போய் உட்காரா விட்டாலும் அது பழுத்து போய் இப்பவா அப்பவா என்று இருக்கிறது. ஒரு செகண்டு முன்னே பின்னே ஆகி இருக்கிறது. அவ்வளவுதானே தவிர,

இதுதான் ரோலு என்கிறான். வரலாற்றை நாம் பக்தியில் பார்ப்போம். இந்தியாக்காரன் எப்படி பார்ப்பான் ஏய் நம்ம இந்திய தேசம் அப்படின்னு பார்ப்பான். ஒவ்வொரு மதத்துக்காரனும் அப்படி பக்தியிலே பார்ப்பான். வரலாற்றிலே பக்தியை வெளியே கழட்டி வைத்து விட்டு நான் ஒரு ஆய்வாளராகச் சொல்கிறேன். எல்லா நாட்டுக்கும் எப்படி சுதந்திரம் கிடைத்துச்சு?

எல்லா அரபு நாட்டை விட்டும் ஏன் போனான். துருக்கியை விட்டு ஏன் போனான்? எல்லா நாட்டையும் விட்டு ஓடி போய் விட்டானே. ஆப்கானிஸ்தானை விட்டெல்லாம் ஏன் போனான். உலகத்தை எல்லாம் கையிலே வைத்திருந்தவன் ஒவ்வொரு நாடா (விட்டு) ஓடிக்கிட்டு இருந்தான்லே. ஓடிக்கிட்டு இருக்கிறவன் இதை விட்டும் ஓடிப் போய் இருப்பான்.

இந்தியாவில் மட்டும் இந்த போராட்டத்தைக் காரணம் காட்டினீர்கள் என்றால் மற்ற நாட்டில் இப்படி நடக்கவே இல்லையே. ஒன்றும் நடக்காமலே ஓடிப் போய் விட்டானே….  நேதாஜி போன்ற ஒருவரோ வராவிட்டாலும் கூட இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தே இருக்கும். அவன் வைச்சிக்கிட விரும்பவில்லை. அவன் நினைத்து இருந்தான் என்று சொன்னால் இவர்களுக்கு பயந்து கொண்டு ஓடவும் தேவை இல்லை. இதெல்லாம் நான் கேட்கவில்லை. வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளாக இருக்கலாம். கான்செப்ட் இதுதான்.

இப்படியாக சமுதாய துரோகி ரகசிய பாபா பேசி உள்ளான். இந்த சமுதாய துரோகி ரகசிய பாபா யார்? என்று தெரிவதற்கு முன்னால். முதலில் உள்ள வீடியோ. .மு.மு.. தலைவர்கள் சேகரித்துக் கொடுத்த குறிப்புகளைக் கொண்டும்  ரகசியமாகக்  கொடுத்த பணத்திற்காகவும் பி.ஜே. செய்த கர்ஜனை.

இந்திய சுதந்திரம் பற்றி பேச த.மு.மு.. தலைவர் வரலாற்றுக் குறிப்பும்  கொடுத்து ரகசிய கூலியும் கொடுத்ததால் எப்படி கர்ஜித்துள்ளார் என்ற வீடியோவை முதலில் தந்து விட்டோம்.

இரண்டாவதாக உள்ளது 01.07.2012 அன்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி. அதில் முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்து இஸ்லாமிய விரோத சக்திகளின் கூற்றை உண்மைப்படுத்தி பேசி உள்ளவரும் பி.ஜேதான். இந்தக் கூற்றை பரப்புவதற்காக முஸ்லிம் விரோதிகளி்டம்  ரகசியமாக எவ்வளவு கூலி வாங்கி உள்ளாரோ இந்த ரகசிய பாபா
http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_26.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.