மாதம்தோறும் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.

F says: ஸலாம் உச்சிலி புகாரி துபை வந்தான் வந்து சேர்ந்த விபரம் தெரியவில்லை

Ramadan Kareem says: வ அலைக்கும் ஸலாம்

F says: கராச்சியில் சரீப் அலி என்ற அவனது சொந்தக்காரன் உள்ளான்

Ramadan Kareem says:என்ன ஓரே காணா போனவரா வருகிறார்கள்

F says: கேட்டு சொல்ல முடியுமா?

Ramadan Kareem says: அவர் போன் நம்பர் இருக்கிறதா சரீப் அலி போன் நம்பர்

F says: என்ன செய்ய நம்ம ஊரிலிருந்தால் தேடி வந்து சொல்லிவிடுகிறார்கள் கேட்டு விட்டுள்ளேன் வந்ததும் டைப் செய்கிறேன்

Ramadan Kareem says: எனக்கு சரீப் அலி நம்பர் சொன்னால் துரும்பு துப்பு கிடைத்தால் இரும்பு தொப்பி போட்டு இழுத்து வந்துவிடுவேன் கவலை வேண்டாம்

F says: இரும்பு தொப்பியெல்லாம் போலீஸார் போட மாட்டேன் என கழட்டி விட்டார்கள் நீங்களாவது போடுவேன் என்கிறீர்களே போய் சேர்ந்து விட்டான் என்ற தகவல் வந்து விட்டது நன்றி

Ramadan Kareem says: நமக்கு பயந்து அவரே சரண்டர் ஆகிவிட்டார்

F says: 00971505482294 5482694 கீழே உள்ள நம்பருக்கு போட்டு கேட்கணும் என அவர் தகப்பனார் சொல்கிறார் சிரமம் பாராமல் கேட்டு விடவும்

Ramadan Kareem says: அவருக்கு அவர் வந்த விவரமே தெரியாதாம் அவர் யாரிடமோ கேட்டு சொல்கிறேன் என்று சொல்கிறார்

F says: நன்றி

Ramadan Kareem says: நன்றி எல்லாம் சொல்லாதீங்க அண்ண அது நமக்குள் வேண்டாம்

F says:எனக்கு வேறு ஆளிடமிருந்து போன் வந்து விட்டது அவர் தகப்பனார் குடும்பத்தாரிடம் கேட்கணும் என்கிறார்

Ramadan Kareem says: மேலும் விசாரிக்கவா வேண்டாமா

F says: கைர் ஜெஸாகல்லாஹ்ஹு கைரன் சரீப் இடம் சொல்லி பிலாத் சாமிலோ எங்காவது விசாரித்து கன்பார்ம் செய்து புகாரி வாப்பாவுக்கு சரீபை போன் போடச் சொல்லவும்

Ramadan Kareem says:கண்டிப்பாக, நான் இன்னும் அரைமணி நேரம் கழித்து போன் பண்ணுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்

F says:கைர்

Ramadan Kareem says:போன் பண்ணி இந்த விவரத்தை சொல்லி விடுகிறேன் நோன்பு எப்படி போகிறது
இன்னைக்கு இங்கு நோன்பு 3

F says:எங்களுக்கு 4ஆவது நோன்பு முடிந்து விட்டது ஊரில்2

Ramadan Kareem says:அது என்ன தக்வாவா

F says: கீழாப்பாளையத்தில் 3

Ramadan Kareem says: ரொம்ப மோசம் கீழாபாளையத்திற்கும் பாலக்கால் தெருக்கும் அவ்வளவு தொலைவு இல்லையே

F says:என்னிடம் 2 காலண்டர் இருக்கிறது 2ன்படி எனது நோன்பு சரி 12.10.2007 அன்று பெருநாள்

Ramadan Kareem says: இன்ஷh அல்லாஹ் நாம் சந்த்திக்கலாம். காலண்டர் யார் போடுவது

F says: காலப் போக்கில் எல்லாரும் ஒரு நிலைக்கு வருவார்கள் அதற்குத்தான் இந்த குழப்பம்
உங்களுக்கு அனுப்புகிறேன்

Ramadan Kareem says: இந்த காலண்டர் கொஞ்ச காலத்திற்கு முன் எங்கே போயிருந்தது அப்பவே இதை நீங்கள் சொல்லி இருந்தால் ஏன் இந்த குழப்பம்

F says: என்னிடம் ரொம்ப காலமாக இருக்கிறது பலரிடமும் காட்டி இருக்கிறேன்

Ramadan Kareem says: நாங்கள் இருக்கும் இடத்தில் பிறை பார்த்து டிக்லர் செய்துவிடுகிறார்கள் ஆனால் நீங்க முன்னால் இருந்த இயக்கத்தில் இதை ஒத்துக் கொள்ள விலலையே

F says:சந்தோசம்

Ramadan Kareem says:பிறை பார்க்கணும் என்று கட்டாயம் குர்ஆனில் சொல்லியிருக்கிறதே
அப்ப காலண்டர் போதுமா எல்லாத்திற்கும்

F says:எந்த இயக்கமும் ஒத்துக் கொள்ளவில்லை குர்ஆனில் அப்படி ஒரு வசனமே இல்லை

Ramadan Kareem says:நீங்கள் இப்ப உள்ளவர்களுக்கு அதை சொல்ல வேண்டாமா பிறை வரும் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை நிர்ணயிப்பது என்பது பார்க்க வேண்டும், மேகமூட்ட காரணமாக தெரியவில்லைஎன்றால் கடந்த மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ரொம்ப காலமாக சொல்லி வந்தது நீங்களும் உங்கள் இயக்கமும்

F says:நோன்பு என்றால் என்ன என்ற விளக்கம் கூறி அதை ஜீரணிக்க முடியாமல் ஒரு வாரமாக விவாதம் நடக்கிறது

Ramadan Kareem says:அப்போதே நீங்கள் இருந்த அணித் தலைவர் பீ ஜே க்கு காலண்டர் படி செய்தால் போதும் என்று சொல்லியிருந்தால் நல்ல இருந்திருக்கும் என்ன செய்வது அண்ண காலம் இப்படித்தான்

F says: 10 பக்கம் கடிதம் எழுதினேன் 1999இல் அதை ஹைதுரூஸ் டைப் செய்து தந்தார்அப்பொழுது எனக்கு டைப் செய்ய தெரியாது.

Ramadan Kareem says:ஆனால் மார்க்க வழி முறைகள் எப்படி என்று ஒன்று இருக்கிறது அதை நீங்கள் மேடை ஏத்திய ஆள்கள் மூலம் தெரிந்தோம் கடந்த 3 வருடமாக வராத மாற்றம் இப்பபோது அதை காண்கிறேன் நேரில் சந்தித்தால் மேலும் விளக்கம் பெறலாம் இன்ஷh அல்லாஹ்

F says:வராத மாற்றம் என்பது இல்லை 2005இல் கூட ஊருடன் ஒத்துதான் நோன்பு வைத்தேன்

Ramadan Kareem says:ஏன் அப்படி

F says: அப்பொழுதும் எனது கருத்து இதுதான் என பதிவு செய்து பிரிவினை வேண்டாம் என்பதால் ஜமாஅத்துடன் ஒத்து போகிறேன் என்றேன்

Ramadan Kareem says: காலண்டர் என்பது ஒருவரை பார்த்து ஒருவர் அடிப்பது

F says: இப்பொழுது 5 ஜமாஅத் நெல்லையில் ஒத்து வந்துள்ளது

Ramadan Kareem says: அதில் 30 என்று போட்டிருக்கும் போது 29 ல் பிறை கண்டும் இருக்கிறார்கள அதற்கு என்ன செய்வது

F says: டவுல் காலண்டர் விஞ்ஞான முறையிலானது

Ramadan Kareem says: அவர்கள் எல்லாம் என்ன இஸ்லாமியர்களா ஒரு ஆட்சி இஸ்லாமிய ஆட்சி இல்லை என்றாலே நம்ப வேண்டாம் என்று சொல்கிறது மார்க்கம்

F says: மலிக் பான் என்ற வானிலை ஆராய்ச்சியாளர் உடையது நோன்பு என்றால் என்ன பதில் தாருங்கள்.

Ramadan Kareem says: ஏன் ஒவ்வொரு காலண்டருக்கும் இடையில் எவ்வளவோ மாற்றம்

F says: காலண்டர் மட்டும் அல்ல மாதம்தோறும் பிறை பார்த்து வருகிறார்கள்

Ramadan Kareem says: இதை அவர் மட்டும் சரியாக எழுதியிருப்பார் என்று எப்படி சொல்ல முடியும்

F says: 2004இல் சவூதி மடிவை மலிக் பான் மாற்றினார். அதன் பிறகுதான் அரபி இந்தி மோதல் கடுமையாக ஆனது

Ramadan Kareem says: சவுதியும் இறைவன் வைத்த இடம் அல்ல அவன் தன் ஆட்சிக்குள் வைத்திருக்கும் பிறைதான் இங்கு பிரதானம் காலண்டர் என்பது மாறக் கூடியது

F says: இந்த ஆண்டும் சவூதி அரபி விஞ்ஞானிகளை திருப்திபடுத்தவே ஒரு நாள் பிந்தி உள்ளது

Ramadan Kareem says:எல்லா காலண்டரும் ஒரே போல் இருப்பது அல்ல ஆனால் பிறை 30 முடிந்து விட்டது

F says:டவுல் காலண்டரை மட்டும் அல்ல இனி ஊரில் மாதம் மாதம் பார்க்கச் சொல்லுங்கள் நீங்கள் டவுல் காலண்டரை அறிவீர்கள்

Ramadan Kareem says: ஆனால் அவர்கள் காலண்டரில் பிறை 30 இருந்தாலோ அல்லது 29 இருந்தாலோ பெர்நாள் வைப்பது இல்லை பிறை பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை

F says: வருடத்தில் 3 முறை பிறை பார்ப்பதால்தான் குழப்பம் மாதம்தோறும் பார்த்தால் தெளிவு கிடைக்கும்

Ramadan Kareem says: எப்படி பார்த்தாலும் மற்ற மாதங்களில் பார்க்காவிட்டால் இந்த மூன்று மாத பிறை மாறாதல்லவா

F says: பிறை 2 அல்லது 3நாள் கூட தென்படாமல் போகும்

Ramadan Kareem says: ரஜப் ஷக்பான் பார்த்தால் 3 மாதம் ரமலான் என்பது கண்பர்ம் 29 அல்லது 30
இதில் வித்தியாசம் வரப்போவது கிடையாது நீங்கள் சொல்வது ரஜப் மாத பிறை மட்டும் இந்த குழப்பம் வர சான்ஸ் இருக்கிறது

F says: ஷஃபான் பிறையை 12.8.07 அன்று மேலப்பாளையத்தில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள் அதன்படி 11.9.07 அன்றுடன் ஷஃபான் 30 முடிந்து விட்டது

Ramadan Kareem says: அப்போ ரமலானை ஈசியா சொல்லிவிடலாமே 29 ல் தெரியாவிட்டால் 30 தான் என்று

F says: தொடராக பார்த்து வந்தால் தெளிவு கிடைக்கும் என்பதே நமது அனுபவ நிலை

Ramadan Kareem says: இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி ஏன் சொல்லக் கூடாது பிறை பார்த்தற்கு 2 சாட்சியோ அல்லது கர்ப்பிணி பெண் சாட்சியோ போதுமே

F says: திருவாளர்டம் இந்த டவுல் காலண்டரை பல முறை காட்டி பேசி இருக்கிறேன்

Ramadan Kareem says: அவரை

F says: கர்பிணி சாட்சியர்? இது புதிதாக இருக்கே

Ramadan Kareem says: கர்ப்பிணி பெண் சாட்சியாக இருந்தால் இருவர் தேவையில்லை என்று
கேள்வி பட்டு இருக்கிறேன் ஹதிஸாக இல்லையென்றால் விட்டு விடலாம்

F says:நான் துபையிலிருந்தபடி கம்யூட்டரில் வாத பிரதிவாதம் செய்யும்போது அவர் பார்த்து இருக்கிறார் அதனால் சொன்னே;ன பெரும்பாலும் தவிர்த்தே எழுதினேன் கைர் கர்ப்பிணி சாட்சி 1 போதும் என்பது தவறு

Ramadan Kareem says: திருத்திக் கொள்கிறேன் அப்படி இல்லையென்றால்

rasikow: அஸ்ஸலாமு அலைக்கும் இந்த ரமளானில் மேலப்பாளைய மக்கள் நோன்பு வைப்பதற்கு திணறி திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.. ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு நாட்கள் நோன்பு பிறை பார்த்துவிட்டோம் என்று நோன்பு வைக்கும்பொழுது மக்கள் யாரை பின்பற்றுவது என்ற தெரியாமல் குழம்பிப் போனார்கள்.. இது மேலப்பாளைய மக்களின் ஒற்றுமை சீர் குலைந்ததற்கு உதாரணம்.. இதற்கு அல்லாஹ்வின் முன் வழிகாட்டிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்

F says: அடுத்த லைனில் ரசிகவ் ஞானியார் என்பவர் டைப் செய்துள்ளார்

Ramadan Kareem says: அப்பொழுதும் எனது கருத்து இதுதான் என பதிவு செய்து பிரிவினை வேண்டாம் என்பதால் ஜமாஅத்துடன் ஒத்து போகிறேன் என்றேன் இப்ப ஏன் அதை செய்ய வில்லை சமுதாயத்திற்காக ஒன்றும் சத்தியத்திற்காக மற்றொன்றும் பின்பற்ற மார்க்கம் செர்ல்லவில்லை எங்களை விட நல்ல மார்க்கத்தை அறிந்தவர் என்ற முறையில் இதை நான் கேட்க கடமைப்பட்டுள்ளேன்
இப்படி பார்த்தால் இப்ப இரண்டு நாள் வித்தியாசம் வந்து இருக்கிறது இன்னும் கொஞ்சம் காலம் போனால் வெகுநாட்கள் கணக்கில் வித்தியாசம் வருமே அதை டவுல் காலண்டர் எப்படி நிவர்த்தி செய்யும் (ரொம்ப காலமாக 2, 3 அல்லது 1 நாள் வித்தியாசமே வந்திருக்கிறது என்பது குறிப்பி;டதக்கது)

F says:ஒரு மனிதன் தனித்து நின்று பெருநாள் கொண்டாட முடியாது. பிரச்சாரம் செய்தோம். தவ்பா ஏற்று செயல்பட்டார்கள் அவர்கள் செய்தது சரி என்றேன் அங்கு போக வில்லை. இந்த முறை தக்வா குண்டு தெருவில் நான் பயான் செய்யும் சிறு பள்ளி என ஏற்று விட்டார்கள் நானும் இணைந்து விட்டேன் விரிவாக பேச வேண்டிய ஒன்று இன்ஷh அல்லாஹ் பேசுவோம்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.