ஸூனன் இப்னுமாஜா.


119, நான் அலியைச் சேர்ந்தவன் அலி என்னைச் சேர்ந்தவர். என் சார்பாக (என் கடன்களை) அலியைத்தவிர வேறெவரும் நிறைவேற்றலாகாது'' என்று நபி (ஸல்) கூறியதாக ஹூப்ஷP இப்னு ஜனாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- திர்மிதீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.

120, ''நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் நான் அல்லாஹ்வின் தூதருக்கு சகோதரனாவேன் நான் மிகப் பெரும் உண்மையாளன் பெரும் பொய்யனைத் தவிர வேறு எவரும் எனக்கும் பின் இவ்வாறு கூறமாட்டார்கள். மற்றவர்கள் தொழுவதற்கு முன்னே ஏழு வயதிலேயே நான் தொழுதிருக்கிறேன்'' என்று அலி (ரலி) கூறினார்கள்.

குறிப்பு:- ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

121, முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ஹஜ்ஜூக்கு வந்தபோது மக்கள் அலி (ரலி) அவர்களைப்பற்றி பேசலானார்கள். முஆவியா (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களை ஏதோ குறை கூறினார்! இதைக் கேட்ட ஸஃது (ரலி) அவர்கள் கோபமுற்று ''அலியே! மூஸாவுக்கு ஹாரூன் அமைந்தது போல் நீ எனக்கு அமைந்திருக்கிறாய்! எனினும் எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது'' எனவும் ''நான் யாருக்கு நேசனாக இருக்கிறேனோ அவருக்கு அலியும் நேசராவார்'' எனவும், ''அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் இன்று (கைபர்) (தளபதிக்குரிய) கொடியை வழங்வேன்'' எனவும் நபி (ஸல்) அவர்கள் எவரைப் புகழ்ந்துரைத்தார்களோ அவரையே நீங்கள் குறை கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள் என அப்துர் ரஹ்மான் அறிவிக்கிறார்.

ஸூபைர் (ரலி) அவர்கள் பற்றி!

122, 'குரைளா' கூட்டத்தாருடன் போர் நடந்த நாளில் 'அந்தக் கூட்டத்தினரின் நிலவரங்களை அறிந்து வந்து சொல்பவர் யார்? என்று நபி (ஸல்) கேட்டனர். 'நான்' என்று ஸூபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்? மீண்டும் அதேக் கேள்வியைக் கேட்டபோது 'நான்' என்றார்கள். மூன்றாம் முறையும் அதேக் கேள்வியைக்கேட்ட போதும் 'நான்' என்றார்கள். ''ஒவ்வொரு நபிக்கும் 'ஹவாரிய்யூன் (துணை நிற்பவர்கள்) என்னுடைய உதவியாளர் ஸூபைர் ஆவார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிம், திர்மதீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

123, உஹத் போரின் போது நபி (ஸல்) அவர்கள் (என் தாயும் தந்தையும் உனக்கு அர்பணமாகட்டும் என்று கூறி) தன் தாய் தந்தையரை எனக்கு அர்பணமாக்கினார்கள் என ஸூபைர் (ரலி) கூறினார்கள்.

குறிப்பு:- ''உர்வாவே! உன் தந்தைமார் அபூபக்ரு, ஸூபைர் இருவரும் ''தங்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின்பும் அல்லாஹ், அவனது தூதர் ஆகியோரின் அழைப்பை ஏற்றவர்கள் (என்று இறைவன் 3:172 குறிப்பிடுபவர்களில்) உள்ளவர்கள் என்று ஆயிஷh (ரலி) கூறினார்கள்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிமிலும் இது இடம் பெறுகின்றது.

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) பற்றி!

125, நபி (ஸல்) அவர்களை தல்ஹா (ரலி) கடந்து சென்ற போது ''இவர் பூமியில் (உயிருடன்) நடமாடும் ஷஹீத் ஆவார்'' என்று கூறியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

126, நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவை நோக்கி (33:23 வசனத்தில் தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்றியவர்கள்) என்று குறிப்பிடப்படுபவர்களில் இவரும் ஒருவர்'' என்று கூறினார்கள் என முஆவியா (ரலி) கூறினார்கள்.

127, இதே ஹதீஸ்தான் திரும்பவும் இடம் பெற்றுள்ளது.

128, தல்ஹா (ரலி) அவர்களின் ஒரு கை செயலிழந்து போன நிலையிலும் அதன் துணையால் உஹத் போரில் அல்லாஹ்வின் தூதரைக் காத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று கைஸ் (ரலி) குறிப்பிட்டார்கள்.

குறிப்பு:- புகாரியிலும் இது இடம் பெற்றுள்ளது.

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) பற்றி!

129, ஸஃது இப்னு மாலிக் அவர்களுக்குத்தவிர வேறு எவருக்கும் நபி (ஸல்) தன் பெற்றோர்களை அர்ப்பணித்ததாக நான் கண்டதில்லை உஹத் போரின்போது ''ஸஃதே! என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும்! ஸஃதே! நீ அம்பு எய்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; என அலி (ரலி) கூறினார்கள்.

குறிப்பு:- முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.

130, இதே வார்த்தையை ஸஃது (ரலி) அவர்களே கூறியதாக இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

குறிப்பு:- இதுவும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

131, ''அல்லாஹ்வின் பாதையில் முதன் முதலில் அம்பு எய்த அரபி நானாவேன்'' என்று ஸஃது (ரலி) கூறினார்கள்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.

132, நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்றதில்லை. முதலில் இஸ்லாத்தை ஏற்றிருந்த மூவரில் மூன்றாமவனாக நான் இருந்தேன். அதன் பின் ஏழு நாட்கள் கழித்தே மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று ஸஃது (ரலி) குறிப்பிட்டார்கள்.

குறிப்பு:- புகாரியிலும் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இங்கே கருத்து மட்டும் தரப்பட்டுள்ளது நேரடி மொழி பெயர்ப்பு அல்ல.

பத்து நபித்தோழர்கள் பற்றி!

133, அபூபக்ரு சுவர்க்கத்தில், உமர் சுவர்க்கத்தில், உஸ்மான் சுவர்க்கத்தில், அலீ சுவர்க்கத்தில், தல்ஹா சுவர்க்கத்தில், ஸூபைர் சுவர்க்கத்தில். ஸஃது சுவர்க்கத்தில், அப்துர் ரஹ்மான் சுவர்க்கத்தில், என்று தன்னையும் சேர்த்து பத்து நபர்களை நபி (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டார்கள் என்று ஸயீத் இப்னு ஸைத் (ரலி) கூறியபோது பத்துக்கு ஒன்று குறைகிறதே! அந்த ஒருவர் யார் என்று அவர்களிடம் கேட்டேன் 'நான் என்று கூறினார்கள் என ரியாஹ் இப்னு ஹாரிஸ் குறிப்பிட்டார்கள்.

குறிப்பு:- திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.

134, ஹிரா மலையே! நீ (அசையாது) உறுதியாக இரு! ஏனெனில் அபூபக்ரு, உமர், உஸ்மான், அலி, தல்ஹா, ஸூபைர், ஸஃது, இப்னு அவ்பு, ஸயீத் இப்னு ஸைத், (நபிஆகிய) நான் ஸித்தீக், ஸஹீத் என ஆகியோரே உன் மீது இருக்கிறோம் என்று நபி (ஸல்) கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத் (ரலி) குறிப்பிட்டார்கள்.

அபூஉபைதா (ரலி) பற்றி!

135, நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளை நோக்கி ''உங்களுக்கு முழு நப்பிக்கைக்குரிய உருவரை நான் அனுப்பி வைப்பேன்'' என்று கூறினார்கள். யாரை அனுப்பப் போகிறார்கள் என்று மக்கள் கவனித்தபோது அபூஉபைதா அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அனுப்பிவைத்தனர் என்று ஹூதைபா (ரலி) அறிவிக்கின்றனர்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.

136, ''இவர் இந்த உம்மத்தின் 'அமீன் (மிகுந்த நம்பிக்கைக்குரியவர்) என்று நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி)யைப் பற்றிக் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) பற்றி!

137, எவ்வித ஆலோசைனையுமின்றி ஒருவரை நான் என்னுடைய இடத்தில் நியமிப்பதென்றால் இப்னு மஸ்வூதை நியமித்திருப்பேன். என்று நபி (ஸல்) கூறினார்கள் என அலி (ரலி) குறிப்பிடுகிறார்கள்.

138, ''குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே ஓத விரும்புபவர் இப்னு மஸ்வூது ஓதியவாறு ஓதட்டும்!'' என்று நபி (ஸல்) கூறியதாக அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோர் குறிப்பிட்டனர் என்று 'ஸிர்' அவர்கள் குறிப்பிட்டார்கள்.

139, நான் தடைசெய்தவரை என் ரகசியத்தைக் கேட்கவும் திரையை விலக்கி (உள்ளே வரவும்) உமக்கும் பொது அனுமதி உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்வூது (ரலி) அவர்களுக்கு கூறினார்கள்.

குறிப்பு:- முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.