காரைக்காலில் கா.கி. மானத்தை கப்பல் ஏற்றப் போவதாக சொன்னவர்கள் கா.கி.து. மானத்தை கப்பல் ஏற்றியது ஏனோ?


TNTJ மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது அவர்களுக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


9.8.19 அன்று காரைக்காலில் நீங்கள் ஆற்றிய உரையில் ஷம்சுல் லுஹா மனைவியின் மருத்துவச் செலவுக்கு பொருளாதாரம் வழங்கச் சொன்னது யார் என்ற பகுதி பலர் மூலம் வரப் பெற்றேன்.

அதில், சொல்லக் கூடிய செய்தியை, சொல்லக் கூடியவர்களை டேமேஜ் பண்ணுவதற்காக இவர் எடுக்கக் கூடிய கலையில் முதல் கலை என்ன? பீ.ஜே. தவறை யார் ஏற்றுக் கொள்ளவில்லையோ, யார் முட்டுக் கொடுக்கவில்லையோ, யார் அந்த தவறுக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்கள் மீது பலி சொல் சொல்வதும் முட்டுக் கொடுக்காதவர்களை உடைப்பதும் இவருக்கு கை வந்த கலை.


பீ.ஜே. யாரை துாக்கி விடுவார் தெரியுமா? தனக்கு முட்டு கொடுப்பவர்களை புகழ்ந்து உச்சாணிக் கொம்பில் ஏற்றுவார். யார் பீஜேயின் பாவத்துக்கு முட்டுக் கொடுக்கிறார்களோ, அவர்களை நல்லவர்களாக ஆக்கும் தன்மை உடையவர். கடும் ஆதரவு கொடுப்பார் என்கின்ற மாதிரி சொல்லிக் காட்டி உள்ளீர்கள்.



பிறகு, ஷம்சுல் லுஹா மனைவியின் மருத்துவச் செலவுக்கு என்று யாருக்கும் கொடுக்காத அளவில். அதுவும் பெருந்தொகை கொடுக்க வேண்டும் என்று பீ.ஜே. சொன்னார் என்று கூறி உள்ளீர்கள்.


அடிமட்டத் தொண்டனான ஒரு முஸ்லிம் கிட்னி பாதிக்கப்பட்டு விட்டது. ஆபரேஷனுக்கு 3 லட்சம் தேவை என்று நகர TNTJவை அணுகினான். சாவக் கிடந்த நோயாளியான அவனது படத்தை வைத்தார்கள். 


மாநகரின் 10 மேற்பட்ட இடங்களில் முச்சந்தியிலும் நாற்சந்தியிலுமாக டிஜிட்டல் கட்டவுட் வைத்து நன்கொடை வசூலித்தார்கள். அதற்குள் அவன் இறந்து விட்டான். கிட்னி ஆபரேஷன் பெயரால் வசூலித்த பணத்தை இறந்த பின் அவனது குடும்பத்துக்கு கொடுத்து விட்டோம் என்றார்கள்.  


ஒரு அடிமட்ட முஸ்லிமின் மானத்தை இப்படி டிஜிட்டல் போர்டு வைத்து காற்றில் பறக்க விட்டு வசூலித்தவர்கள். காதும் காதும் வைத்த மாதிரி முதலில் 16 லட்சம். பிறகு 4 லட்சம். பிறகு 3 லட்சம் என லுஹா மனைவிக்கு கொடுத்துளார்கள். 


மாநில பொதுக்குழுவுக்கும் தெரியாமல் செயற்குழுவுக்கும் தெரியாமல் தொண்டர்களுக்கும் தெரியாமல் கொடுத்துளார்கள். இதை நாம் சொன்னபொழுது் இதை பொய்ப்படுத்திய TNTJயினரின் மாநில பொதுச் செயலாளராகிய தாங்களே மீட்டிங் போட்டு ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.


யாருக்கும் கொடுக்காத அளவில் 23 லட்சம் வரை லுஹாவுக்கு பீ.ஜே. கொடுக்க சொன்னார். அப்படியானால் பீஜேவுடைய தவறுகளுக்கு யாரும் கொடுக்காத அளவுக்கு முரட்டு முட்டு, பயங்கரமான முட்டு லுஹா கொடுத்து வந்ததை சொல்லாமல் சொல்லி. பகிரங்கமாக ஆக்கியுள்ளீர்கள்.


அது மட்டுமா? அது அனாதை சிறுவர்களைக் காட்டி வசூலிக்கப்பட்ட அனாதை இல்லப் பணமாமுதியோர்களைக் காட்டி வசூலிக்கப்பட்ட முதியோர் இல்லப் பணமா? என்று தெளிவுபடுத்தாமல், முன்னாள் தலைவர் பீ.ஜே.யை கேள்வி கேட்க வைத்து லுஹா மானத்தை கப்பல் ஏற்ற வைத்து விட்டீர்கள்.


துபை நேரம் இரவு ஒரு மணிக்கு பேஸ்புக்கில் பார்த்து வருந்தினேன். பெருநாள் இரவில் இப்படி லுஹா மானத்தை வாங்குகிறாரே என்று. என்னுடன் இருக்கும் லுஹா தெருக்காரர் சொன்னார். 

இப்படித்தானே புனிதமான ஜும்ஆ மேடைகளில் பலரது மானத்தை வாங்கினார் லுஹா. ஜும்ஆ தொழ போன இடத்தில் அல்தாபிக்கு எதிரான நோட்டீஸை அல்தாபி குடும்பத்தாரிடம் வினியோகித்தது பற்றி எப்படி வருந்தி எழுதி இருந்தார் அல்தாபி?


அது மாதிரிதானே உங்கள் குடும்பத்தாருக்கும் இருந்திருக்கும். ஜும்ஆ தொழ போன இடத்தில் உங்களுக்கு எதிரான நோட்டீஸை உங்கள் குடும்பத்தாரை தேடித் தேடி வினியோகித்ததையும். உங்கள் குடும்பத்தார் மனம் நொந்ததையும் மறந்து விட்டீர்களா? என்று.


ஆம், பீ.ஜே, M.I. சுலைமான், M.S. சுலைமான்,  J.S. ரிபாயி, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள், தாஇகள் எல்லாம் பெண்கள் மதரஸாவில் மாணவிகளுடன் உஸ்தாதாக்களுடன் ரகீபாக்களுடன் விபச்சாரம் செய்தார்கள் என்று லுஹா சொன்னார். லுஹா சொன்னதை ஏற்று விபச்சார தவ்ஹீது மவுலவிகளையும், தாஇகளையும் எதிர்த்து நின்றேன்.


காரைக்காலில் நீங்கள் சொல்லிக் காட்டியது போல் செய்தியையும் என்னையும் டேமேஜ் பண்ணுவதற்கான வேலையை செய்தார்கள். நம்பகமான ஒருவர் நான் டிசம்பர் 6 க்கு பழுலுல் இலாஹியிடம் கொடுத்த  பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்டபோது நாம் அதிர்ச்சி அடைந்தோம் என்று நோட்டீஸ் போட்டார்கள்.


அப்பொழுது லுஹவுக்கு போன் போட்டு கேட்ட என்னிடம்  லுஹா சொன்னார். ”என்னை பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவன் என்று சொன்னியே. வா ஒரே மேடைக்கு கூப்பிட்டு சவால் விட்டு இருக்கிறார். பீ.ஜே.யோடு ஒரே மேடையில் விவாதம் செய்ய வா என்றார்.


லுஹா வாழ்க்கையில் என்னிடம் முதல் முறையாக ஒருமையில் பேசியது இப்போதுதான். நம்பகமான ஒருவர் யார்? பெருந்தொகை எவ்வளவு என்று இன்று வரை சொல்லப்படாத அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்காமல். குற்றச்சாட்டு சம்பந்தமாக பீ.ஜே.யோடு ஒரே மேடையில் விவாதம் செய்ய வா என்றார் லுஹா அன்று.


இன்றோ பீ.ஜே.யோடு ஒரே மேடையில் விவாதம் செய்ய வா வா என்று பீ.ஜே. அணி NTF அழைக்கிறது. லுஹா அணியினரான TNTJயினரோ விவாதத்திற்கு பயந்து தலை தெறிக்க ஓடுகிறீர்கள். பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுகிறீர்கள். வாழ்க்கையின் எல்கைக்கே ஓடி விடுவீர்கள் போல் உள்ளது உங்கள் ஓட்டம்.

என்னை முபாஹலாவுக்கு அழைத்தது லுஹா அணி. நான் வருகிறேன் என்றதும் ரமழான் நிகழ்ச்சி என்று பல்டி அடித்து ஓடியது லுஹா அணி. இது வரலாறு.


பீ.ஜே.யோடு விவாதிக்க ஒரே மேடைக்கு  வா என்று என்னை லுஹா அன்று அழைத்தது சரி என்றால். இன்று பீ.ஜே. லுஹா அணியினரை அழைப்பதும் சரிதான். தெம்பு இருந்தால், திராணி இருந்தால், மானம் - ரோஷம்  - சூடு - சுரணை இருந்தால்  TNTJயினர் NTF அழைப்பை ஏற்று ஒரே மேடையில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். 


.முஹம்மது அவர்களே! காரைக்காலில் எல்லோரையும் போல் நீங்களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் பீ.ஜே.யை துாக்கி எறிந்தோம் என்கிற பொய்யை சொல்லி உள்ளீர்கள். பீ.ஜே. ராஜினாமா செய்து தானாக விலகியதாக இருக்கக் கூடாது. நீக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று மாஸ்கான் சாவடி குடும்பதாருக்கு பலரும் பல வழிகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களில் நானும் ஒருவன்.


எங்களைப் போன்றவர்களின் நெருக்கடிக்கு பயந்து தான் மாஸ்கான் சாவடி குடும்பதார் ததஜ தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார்கள். மாஸ்கான் சாவடி குடும்பதார் கொடுத்த நெருக்கடிக்கு பயந்து தான் ததஜ தலைமை பீ.ஜே. மீது வந்த குற்றச்சாட்டு என்ன என்று பகிரங்கமாக கூறாமல் நீக்கியதாக அறிவித்தது.  


அந்தரங்கத்தில் பீ.ஜே.யுடன் தொடர்பில் இருந்தது ததஜ. பீ.ஜே. நிரந்தர நரகத்துக்குரிய பாவம் செய்யவில்லை என்று தொண்டர்களை எழுத வைத்தது. யாஸீன் விளக்க உரைக்கு பீ.ஜே. கொடுத்த குறிப்புகள் தான் பயனுள்ளதாக இருந்தது என்று அப்துல் கரீம் சொன்னார். அதை கலீல் ரசூல் அவர்கள் பொதுக்குழுவிலும் ஒப்புக் கொண்டார். ஆக ததஜ  பீ.ஜே. எதிர்ப்பது விபச்சாரப் பிரச்சனைக்காக அல்ல. 

விபச்சாரப் பிரச்சனைக்காகத்தான் என்றால் பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்த M.I. சுலைமான், M.S. சுலைமான்அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி, அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி  போன்றவர்கள் மற்றும் துக்கள் (துணை நின்றவர்கள்) மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? 


அன்று JAQH கமாலுதீன் மதனி மனைவியை சம்பந்தப்படுத்தி சொல்லாததை சொன்னதாக சொல்லிய  சண்டாளப்பாவிகள் தான் நீங்கள் இல்லாத TNTJயினர். இன்று சின்னாபின்னமாக போய் விட்டார்கள்.

 

கமாலுதீன் மதனி மற்றும் என்னைப் போன்றவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, தாங்கள் இட்டுக் கட்டிக் கூறிய பொய்களை ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை எனில் இன்னும் ன்னாபின்னா என போவார்கள்.

அரசு அன்று கொல்லும். அல்லாஹ் நின்று கொள்வான் என்ற சொல் வழக்கு நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. பொய்யும் பொய் சாட்சியமும் சொன்னவர்கள் மானத்தை அல்லாஹ் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.

இந்தக் கடிதம் TNTJ மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது அவர்களுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பப்பட்டது. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.