மாணவ, மாணவிகளுக்கான பரிசுப் போட்டியும் இலாஹி இல்லத் திருமணமும்.


சிறுமி  இஸ்ரா ஆற்றும் உரையை ஒட்டி 3 கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் அளிக்கும் மாணவ, மாணவிகள் ஸ்கூலுக்கு கொண்டு செல்ல வசதியான  ஸ்டீல் வாட்டர் கேன் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

K.M. நிஃமத் D/O காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி & சுல்தான் பல்கீஸ் S.A.  துர்ருல் முக்தார் B.E, S/O சுல்தான் அப்துல் ஹமீது & காயங்கட்டி மும்தாஜ் திருமணம் இன்று ஹிஜிரி 1440, துல்ஹிஜ்ஜா, அரபுநாடுகள் பிறை 24, இந்தியா பிறை 23  25-08-2019 ஞாயிறு காலை 10 மணிக்கு இலாஹி இல்லம் முன்பு நடைபெற்றது. 

மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி அவர்கள் மணமக்களும் மணமக்கள் பெற்றோரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற அனுபவ உரையையும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கினார்கள்.
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி திருமணத்தில் எளிமை என்பது சொல்வதற்கு மிக மிக எளிதானது. செயல்படுத்துவதில் எவ்வளவு மிகக் கடிமானது என்ற அனுபவத்தைக் சிற்றுரையில் கூறினார்கள்.

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் T.P.M. மைதீன் கான் M.L.A, சேனாதிபதி மொன்னி மைதீன் பிச்சை Ex MC,  நிஜாமுத்தீன் மஹ்ழரி, மஸ்ஜிதுர் ரய்யான் தலைவர் ஏயன்னா இப்றாஹீம் மஹ்ழரி, அ.தி.மு.க. கூளி ஷம்சுத்தீன், காயங்கட்டி சேக் மைதீன்,  ம.தி.மு.க. தீன்சுடர் ஷம்சு, தி.மு.க. காயங்கட்டி கமால், செய்யது மைதீன்  மற்றும் தி.மு.க, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டார்கள்.

உலகம் எப்படி உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவானது? என்ற தலைப்பில்  சிறுமி  இஸ்ரா பின்த் பழல் இலாஹி ஆற்றிய ஆய்வுரையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

நிராகரிப்பவர்கள் சிந்தித்து பார்த்து விளங்க வேண்டாமா?   நிச்சயமாக வானங்களும் பூமி அனைத்துமே ஒன்றாக ஒட்டி இறுக்கப்பட்டு இணைந்திருந்தன  அவ்விரண்டையும்  நாமே பிரித்தோம்  பிளந்தோம்.


பின்னர் வானத்தை படைக்க நாடினான். அது புகையாக இருந்தது. வானத்தை நோக்கி சொன்னான். பூமியை நோக்கியும் சொன்னான். விரும்பியோ, விரும்பாமலோ (கட்டுப்பட்டு   பூமி பூமியாகவும். வானம் வானமாகவும் ஆக  வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டான்) "விரும்பியே கட்டுப்பட்டோம்'' (என்று அவை கூறின)

இந்த வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள அத்தியாயத்தின் பெயர்கள் அத்தியாயத்தின் எண்கள், வசன எண்கள் என்ன?

புகை என்ற அத்தியாயத்தின் அரபி பெயர் என்ன? அத்தியாயத்தின் எண் என்ன?

ஆகிய 3 கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் குர்ஆன் அறிவுத் திறனையும் அறியும் திறனையும் ஆய்வுத் திறனையும் வளர்க்கும் போட்டி இது. 

ஆகவே ஆய்வுரையை படிக்கக் கொடுத்து பதில் அளிக்கச் செய்யுங்கள். இந்த கேள்விகளுக்கான பதிலை எளிதில் அறிய சிறுமி  இஸ்ரா பின்த் பழல் ஆற்றிய ஆய்வுரையைத் தருகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்ஹம்துலில்லாஹி வஹ்தா வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன் லா நபிய்ய பஃதா

எங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் அதிகமான திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருப்பீர்கள். எல்லா நிகழ்ச்சிகளிலும் குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் செய்திகள் கேட்டு இருப்பீர்கள். ஆகவே நான் வித்தியாசமாக விக்கிப்பீடியாவிலிருந்தும் கூகுலில் இருந்தும் சில செய்திகளை சொல்ல உள்ளேன்.

உலகம் என்றால் பூமி உருண்டை மட்டுதான் நம்மைப் போன்ற பாமர மக்கள் கண் முன்னே வரும். எண்ணத்திலும் தோன்றும். அதிலும் குறிப்பாக  நாம் வாழும் தரைப்பகுதிகள் மட்டுமே எண்ணிலும் கண்ணிலும் வரும்.

விஞ்ஞானிகளிடம் உலகம் என்று சொன்னால் பூமி மட்டும் அல்ல. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், புளூட்டோ, நெப்டியூன் என்றுள்ள கிரகங்கள் எனப்படும் கோள்கள்.

காற்று, மழை, கடல், நட்சத்திரம், வானம் ஆகிய அனைத்தும் ஒட்டு மொத்தமும் உலகம் ஆகும். அதாவது பிரபஞ்சங்கள் எனப்படும் அண்டசராசரங்களும் விஞ்ஞானிகள் எண்ணிலும் கண்ணிலும் வரும்.

இவை எப்படி உருவானது?

இதன் ஆரம்பம் எப்படி இருந்திருக்கும்?

இவைகளின் துவக்கமே இப்படித்தான் இருந்ததா?

இதற்கு முந்தைய நிலை என்று ஒன்று இருந்ததா?

மனிதன் குழந்தையாக பிறப்பதற்கு முன் கருவறையில் இருந்தது போன்ற முந்தைய நிலை உண்டா?

நாம் வாழும் பூமி பூமியாகவே படைக்கப்பட்டதா?

பூமி பூமியாக ஆவதற்கு முன் வேறு ஏதாவது நிலையில் இருந்ததா? 

நாம் மாத மாதமோ ஆண்டுக்கு இரு முறையோ விண்ணை நோக்கி பார்க்கும் சந்திரன் என்ற திங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சந்திரனாகத்தான் இருந்ததா?

அதற்கு முன்பு வேறு ஒன்றாக  இருந்து பிறகு சந்திரனாக ஆனதா?

இந்த மாதிரி முஸ்லிம் அல்லாத விஞ்ஞானிகள் ஆய்வு செய்தார்கள். எந்த மாதிரி ஆய்வு செய்தார்கள்?

அதற்கு பலவிதமான அளவுகோல்களை, கருதுகோல்களை, காரணங்களை வைத்திருக்கிறார்கள். தகுந்த காரணங்களுடன் ஆய்வு செய்து முஸ்லிம் அல்லாத விஞ்ஞானிகள் இறுதியாக அளித்த தீர்வு என்ன? என்று பாருங்கள்.

நாம் உலகம் என்று சொல்லக் கூடிய பிரபஞ்சங்களில் சூரியன், சந்திரன் என்பதெல்லாம் ஆரம்பத்தில் கிடையாது. செவ்வாய், புதன், வியாழன் என்றுள்ள வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கோள்களின் பெயரைத்தானே வைத்துள்ளோம். அந்த கோள்கள் எதுவுமே ஆரம்பத்தில் கிடையாது.

எதையெல்லாம் கோள்கள் துணை கோள்கள் என்று நாம் பார்க்கிறோமோ, அறிந்திருக்கிறோமோ அவை அனைத்தும் சேர்ந்து ஒரே ஒரு பொருளாக ஒரே ஒரு உருண்டையாகத்தான் துவக்கத்தில் இருந்தது. இது வரை விஞ்ஞானம் கண்டறிந்த கோள்களிலேயே மிகப் பெரியது வியாழன்தான். எவ்வளவு பெரியது?

நாம் வாழும் பூமியைவிட  11 மடங்கு பெரியது. 11 மடங்கு எதில் பெரியது?

பருமனில் தான் 11 மடங்கு பெரியது.

எடையைப் பார்த்தால் 318 மடங்கு அதிகம். வியாழனை ஒரு தட்டில் வைத்தால் இன்னொரு தட்டில் 318 பூமியை வைக்க வேண்டும். அவ்வளவு எடை கூடுதலானது  வியாழன்.

வியாழன்  அளவுக்குள்ள ஒரு பொருளில் செவ்வாய்  புதன், வியாழன், வெள்ளி  சனி  புவி, யுரேனசு, நெப்டியூன் என்றுள்ள அனைத்தும் ஒன்றாக திணிக்கப்பட்டு. நன்றாக அழுத்தப்பட்டு அடர்த்தியாக்கப்பட்டு ரொம்ப ரொம்ப டைட்டாக்கப்பட்டது.

உதாரணத்திற்கு சொல்வது என்றால் சிவகாசி பட்டாசு தொழில்சாலைகளில் தயாரிக்கப்படும் வெடிகளில் மருந்துகள் எப்படி அழுத்தி வைக்கப்படுமோ. அதை விட பன்மடங்கு அல்ல. பல்லாயிரம் கோடி மடங்கு  அழுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது எவ்வளவு வருடங்களுக்கு முந்தையது தெரியுமா? 1800 கோடி வருடங்களுக்கு முந்தையது.

இதை கோள்களின் சுழற்சி வேகங்களின் அடிப்படையில் கணக்குப் பார்த்து சொல்லி உள்ளார்கள். வெறும் 1800 அல்ல. 1800 கோடி

 1800  போட்டு  கோடிக்குள்ள  8   சைபர்களைப்  போட்டுக்  கொள்ளுங்கள்அத்தனை  கோடி  வருடங்களுக்கு  முந்தைய  நிலை அது.

ஆக  1800  கோடி வருடங்களுக்கு  முன்னால்  ஒரு  பொருளாக  இருந்தது. ஏதோ  ஒரு  காரணத்துக்காக  திடீரென  வெடித்து  சிதறியது என்கிறார்கள். முஸ்லிம் அல்லாத விஞ்ஞானிகள். 

என்ன   காரணத்துக்காக  வெடித்து   சிதறியது? என்பது முஸ்லிம் அல்லாத அந்த விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.

அதனால்   ஏதோ   ஒரு   காரணத்துக்காக  வெடித்து  சிதறியது  என்று முடித்து விட்டார்கள்.  என்ன காரணத்துக்காக வெடித்து சிதறியது என்பதை பிறகு நான் சொல்வேன் இன்ஷாஅல்லாஹ்.

வெடித்து சிதறியதும் என்ன ஆகுமோ அதுவாக ஆகியது? வெடித்து சிதறியதும் என்ன ஆகும்?

சிறிய பிள்ளைகள் விளையாட்டுக்காக வெடிக்கும் சரவெடி, யானை வெடி, அணுகுண்டு வெடி என்ற இந்த சின்ன வெடிகள் கையடக்க வெடிகள் வெடித்ததும் என்ன ஆகும்?

ஒரு பொருளாக இருந்தது ஒன்றும் இல்லாமல் சிதறி விடும். துாசிகளாக சிதறி உருண்டு ஓடும் புகை வரும்.

ஒரே நேரத்தில் பல வெடிகள் வெடித்தால் மேலத்தெருக்கள் முழுவதும் ஒரே துாசியாக, புகை மூட்டமாக இருக்கும். இன்னும் கூடுதலாக வெடித்தால் மேலப்பாளையமே துாசியாகி புகையில் மூழ்கி விடும்.

100 கிராம் சிவகாசி வெடி வெடித்து இவ்வளவு புகை துாசி என்றால். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, புவி என எல்லாவற்றையும் சேர்த்து அமுக்கப்பட்ட வியாழன் என்ற ஒரு வெடி வெடித்தால் என்ன கதி ஆகி இருக்கும்?

அண்டம் முழுவதும் ஒரே புகை. எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக ஆகி துாசிகள் துணுக்கு மாதிரி உள்ளவை சிதறி உருண்டு ஓட ஆரம்பித்து விட்டன.

இந்த மாதிரி எத்தனை ஆண்டுகள் ஓடியது? 500 கோடி ஆண்டுகளிலிருந்து 750 கோடி ஆண்டுகள் வரை ஓடியது என்கிறார்கள். இந்தக் கணக்கை எப்படி சொல்கின்றார்கள் என்றால் கோள்களின் சுழற்சி வேகத்தை கணக்கிட்டு சொல்கிறார்கள்.

1800 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்தது. 500 கோடி முதல் 750 கோடி ஆண்டுகள் ஓடிய பின்னர். சில துாசிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பல உருண்டைகளாக ஆகின்றன.

முதலில் சிறிய கோலிக்காய் அளவு ஆகிறது. பிறகு கைப் பந்து அளவு ஆகிறது. பிறகு கால் பந்தளவு பெரிதாகிறது. அப்படியே பெரிதாகி நம்ம வீடு அளவு ஆகிறது.

பிறகு மேலப்பாளையம் அளவு நெல்லை அளவு என உருண்டு உருண்டு ஓடிய துகள்கள் கூலங்களாக குவியலாக பெரிதாக ஆகி. ஒரு பக்கம் உருண்டு திரண்டது சூரியானக ஆகியது.

அதை ஒட்டி பூமியாக ஆகியது.

இன்னொரு பக்கம் திரண்டது சந்திரனாக ஆகியது.

இன்னொரு பக்கம் திரண்டது சனியாக ஆகியது.

அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள் வெடித்து சிதறி உருண்டோடிய துகள்கள் ஒன்றாக ஆகின. அவைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களாக துணை கோள்களாக ஆனது. அதனால்தான் எல்லாமே ஒரே மாதிரி ஒரே திசையில் சுத்துகிறது என்கிறார்கள்.

இப்படி ஆய்வு செய்த முஸ்லிம் அல்லாத அந்த  விஞ்ஞானிகள் சுருக்கமாக சொல்லி உள்ள முடிவுகள் என்ன? இரண்டு தான்.

ஒன்று வானம்,  பூமி எல்லாம் ஒன்றாக இருந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு புகையாகவே இருந்தது. ஆக இந்த இரண்டு விஷயங்களைத்தான் முடிவாகச் சொல்லி உள்ளார்கள்.

இப்பொழுது அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்லி உள்ளான் என்பதைப் பார்ப்போம். நிராகரிப்பவர்கள் சிந்தித்து பார்த்து விளங்க வேண்டாமா?   என்கிறான் அல்லாஹ். எதை சிந்திக்க வேண்டாமா என்கிறான்?

 நிச்சயமாக வானங்களும் பூமி அனைத்துமே ஒன்றாக ஒட்டி இறுக்கப்பட்டு இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் பிளந்தோம். என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டமா? என்கிறான்.

எவ்வளவு காலமோ மெனக்கெட்டு பல தலைமுறைகள் பல நுாற்றாண்டுகள் சிந்தித்து பல காரணங்கள் மூலம் பல நுாறு விஞ்ஞானிகள் சேர்ந்து கஷ்டப்பட்டு கண்டு பிடித்து சொன்னதை 1450 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் அல்லாஹ் சொல்லி விட்டான்.


பின்னர் வானத்தை படைக்க நாடினான். அது புகையாக இருந்தது.

அரபு நாட்டுக்கு போனவர்களுக்குத் தெரியும் மம்னுாவ் அல் தத்கைன் என்று போட்டு இருப்பார்கள். அதாவது புகை பிடித்தல் கூடாது என்று. புகை என்று ஒரு அத்தியாயமே அல்குர்ஆனில் இருக்கிறது.

வானத்தை நோக்கி சொன்னான். பூமியை நோக்கியும் சொன்னான். விரும்பியோ, விரும்பாமலோ கட்டுப்பட்டு   பூமி பூமியாகவும். வானம் வானமாகவும் ஆக  வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டான்.

ஏதோ ஒரு காரணத்துக்காக திடீரென வெடித்து சிதறியது என்றார்களே விஞ்ஞானிகள் அதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும்.

 "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின. உலகம் எப்படி உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவானது? என்பதை அல்குர்ஆன் அன்றே சொல்லி விட்டது.

அந்த செய்தி முஸ்லிம் அல்லாத விஞ்ஞானிகளுக்கு சென்றடையவில்லை. அல் குர்ஆன் கூறியதை அவர்கள் அறியாததால் தெரியாததால் அல் குர்ஆனின் பக்கம் அவர்கள் கவனத்தை திருப்பவில்லை.

அதனால் அவரவர்கள் அறிந்த வழியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியில் ஒவ்வொருவிதமாக கஷ்டப்பட்டு  ஆய்வு செய்துள்ளார்கள்.
சிந்தித்தால் விளங்கும் என்கிறான் அல்லாஹ் அவர்கள் சிந்தித்தார்கள் விளங்கி விட்டார்கள்.

நாம் தான் குர்ஆன் கூறுவதை சிந்திக்காமல் குர்ஆனை பட்டுத்துணியால் கட்டி பரக்கத்துக்காக என பரன் மேல் வைத்து விட்டோம்.

இனிமேலாவது சிந்திக்க அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.