பக்கா படிக்கு முக்கா படி அளக்கிறானா?

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்தவைகளெல்லாம் போர்களாஇல்லை. நிச்சயமாக இல்லை. அவற்றை போர்கள் என்று சொல்லக் கூடாது. அறப் போர் என்று சொல்ல வேண்டும். அல்லது தற்காப்பு போர் என்று சொல்ல வேண்டும்.

இப்படி சொல்வதை விட்டு விட்டு வெறுமனே போர் என்று சொன்னால்உலகில் நடந்துள்ள போர்களையெல்லாம் ஓரளவு நமது கண் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த போர்களையும் மனக் கண் முன் நிறுத்த வேண்டும். பிறகு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒப்பிட்டு பார்த்தால் நபி(ஸல்) காலத்தில் நடந்தவையெல்லாம் போர்களே கிடையாது.  என்பதை உணரலாம்.



இதையெல்லாம் உணராமல் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்தவைகளெல்லாம் போர் போர் என்று பிற மதத்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். காலப் போக்கில் என்ன ஆகி விட்டது. முஸ்லிம்கள் என்றால் போர் குணம் உடையவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் என்றால் போர் குணம் உடையவர்கள் என்றாகி விட்டது.


போர் குணம் என்பது அநியாயத்தை எதிர்த்து போரிட வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்பட்டால் அது வரவேற்கத்தக்கது. அதற்காக அரிவாள் கத்தியை தூக்கிக் கொண்டு அலைய வேண்டும் என்பது அல்ல. அநியாயத்தை எதிர்த்து போர் புரிவதற்கு அரிவாள் கத்தியை தூக்கிக் கொண்டு போக வேண்டியது இல்லை. 

உதாரணமாக பொது வினியோகக் கடைகளை எடுத்துக் கொள்வோம். ரேஷன் கடைகள் என்று சொன்னாலே பெரும்பாலும் அளவு, நிறுவைகளில் மோசடி செய்வதில் ஷுஐப்(அலை) அவர்களின் சமுதாயத்திற்குச் சமமாகவே செயல்படுகிறது என்று சொல்லலாம். பெரும் வணிகர்களாயிருந்த மத்யன் வாசிகள் அளவு மற்றும் நிறுவையில் மோசடி செய்து வந்தனர் என்பதை திருமறை குர்ஆன் மூலம் அறிகிறோம்.

.. .. அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலையையிலிருப்பதாகவே நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசடி செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். (11:84) என்று ஷுஐப்(அலை) எச்சரித்துள்ளார்கள்.

அளவு, நிறுவைகளில் மோசடி செய்தவர்களை எதிர்த்து ஷுஐப்(அலை) அவர்கள் போராடி உள்ளார்கள். நாமும் அளவு, நிறுவைகளில் மோசடி செய்தவர்களை எதிர்த்து போராடினால் அதுவும் ஜிஹாதுதான். அது சாதாரண போராட்டம் அல்ல. ஒரு நபி செய்த போராட்டம். இதே போராட்டத்தை நாம் செய்தால் ஒரு நபி செய்த பணியை செய்தவர்களாக ஆகிறோம்.

ரேஷன் கடைகளில் மட்டுமல்ல எங்கு மோசடி நடந்தாலும் கொடியை பிடித்துக் கொண்டு போராட போக வேண்டியதுதான். போராட கொடி தேவையா என்று கேள்வி வரலாம். கொடி தேவையில்லை என்றவர்களெல்லாம் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பதிலாக சொல்ல மாட்டோம். அதற்குரிய ஆதாரங்களை வரலாறு ரீதியாக பின்னர் பார்ப்போம்.

முகத்தல் அளவு, நீட்டல் அளவு, நிறுத்தல் அளவு. இவற்றில் முகத்தல் அளவான பக்கா படிக்கு முக்கா படி அளந்தது. ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. வாங்கும்போது  நல்ல குலுக்கி எடுத்து தலையை தட்டாமல் குப்பா மாதிரி வைத்து வாங்குவார்கள். கொடுக்கும் போது மேலோட்டமாக எடுத்து தலையையும் தட்டி கொடுப்பார்கள்.

மரக்கால், பக்கா, ஒலக்கு, ஆளாக்கு என இருந்ததை நீக்கி லிட்டர் கணக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகும் மோசடிகளை நிறத்த முடியவில்லை. எனவே முகத்தல் அளவை ஒழித்து விட்டு. எல்லாவற்றையும் நிறுத்தல் அளவுக்கு கொண்டு வந்தார்கள். நீட்டல் அளவில் இரும்பு கம்பிகள் உட்பட நிறுத்தல் அளவுக்கு வந்து விட்டன. நீட்டல் அளவில் ஆரம்பத்தில் துணி டேப்கள் இருந்தன. வாங்கும்போது டைட்டாக பிடித்து அளந்து வாங்குவார்கள். கொடுக்கும்போது லுாசாக விட்டு அளந்து கொடுத்தார்கள்.

எனவே இரும்பில் அளவு கம்பி இருக்கணும் என் சட்டம் போட்டார்கள். அதிலும் நேராக அளக்காமல் சரித்து அளந்து திறமைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மீட்டர் அளந்தால் ஒரு கெஜம்(90செ.மீ) இருக்கும். எனவே பெரும்பாலும் நிறுத்தல் அளவுகளாக ஆக்கப்பட்டன. பலம் ராத்தல் ஒழிக்கப்பட்டு கிலோ முறையில் இரும்பு படிக்கற்களை கொண்டு வந்தார்கள்.
Inline image 2
Inline image 4
Inline image 3
Inline image 5
Inline image 6
Inline image 7

வாங்கும் படிக்கற்களின் பின்னால் ஈயத்தை காய்ச்சி ஊத்தி ஒரு கிலோ 100 கிராம் இருக்கும். கொடுக்கும் ஒரு கிலோ படிக்கற்கள் குறையப்பட்டு 900 கிராம்தான் இருக்கும். எத்தனை விஞ்ஞான தராசு வந்தாலும். மனிதனின் மடத்தனமான நுண்ணறிவுக்கு முன்னால் எல்லாமே எல்லா காலத்திலும் தவிடு பொடிதான்.

கஷ்டப்பட்டவர்கள், ஏழைகள், பஞ்சப்பராரிகள் மோசடி செய்தார்களா? இல்லை. நல்ல நிலையில் உள்ள வியாபாரிகள்தான் மோசம் செய்துள்ளார்கள் என்பதை ஷுஐப்(அலை) அவர்கள் (11:84) பிரச்சாரத்திலிருந்து அறிகிறோம். இல்லாமை மோசடி செய்ய வைக்க வில்லை. பொருளின் மீது உள்ள ஆசைகள் பேராசைகள்தான் மனிதனை மோசடி செய்ய வைக்கிறது.

"என்னுடைய சமூகத்தாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாக அளந்தும் நிறுத்தும் கொடுங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (11:85) 

அளவு, நிறுவைகளில் மோசடி செய்பவர்களை பூமியில் குழப்பம் செய்பவர்கள் என்கிறது இந்த வசனம்.

அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிபவர்கள் பற்றி சொல்லும்பொழுது பூமியில் குழப்பம் செய்பவர்கள்(5;33) என்றே கூறப்பட்டள்ளது. இந்த வசனத்தில் பஸாது (குழப்பம்) என்ற வார்த்தைதான் கூறப்பட்டுள்ளது. அதே பஸாது (குழப்பம்) என்ற வார்த்தைதான் நேர்மையற்ற முறையில் அளந்தும் நிறுத்தும் கொடுப்பதை கண்டிக்கும் வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

ஒரு முஸ்லிமிடம் குழப்பம் செய்யாதே என்று சொல்வதைவிட பஸாது பண்ணாதே என்று சொல்லும்பொழுதுதான் அந்த வார்த்தையின் தாக்கம் தெரியும். கனம், வலி புரியும். இந்த அளவுக்கு கொடுமையானது  அளவு, நிறுவைகளில் மோசடி செய்வது. அவர்களை எதிர்த்து போராடினால் என்ன நடக்கும்.

அளவை முழுமைப் படுத்துங்கள் குறைத்து விடாதீர்கள். நேர்மையான தராசு மூலம் நிறுத்து கொடுங்கள். மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள்.. (26;181-183) என்று தெளிவாக அழகிய முறையில் எடுத்துச் சொன்ன ஷுஐப்(அலை) அவர்களைப் பார்த்து அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதுதான் நமக்கும் நடக்கும். என்ன சொன்னார்கள்

ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை(11:91) என்று. நாமும் மோசடியாளர்களை தட்டிக் கேட்டால். கண்டித்தால் ஏய் இவர் என்ன சொல்றாரு பாரு? ஒன்னுமே புரியவில்லையே. இவர் பேசுவது சொல்வது யாருக்காவது தெரிகிறதா? ஏதாவது புரிகிறதா? என்று நக்கலாக கேலி கிண்டல்கள் செய்யத்தான் செய்வார்கள்.

அல்லது என்ன நடக்கும்? கண்டித்தவர்களுக்கு மட்டும் சரியாகத் தருவார்கள். தனக்கு மட்டும் சரியாகத் தந்ததும் வாய் மூடி வந்து விடக் கூடாது. அப்படி வந்து விட்டால் அதுவும் அநியாயம்தான். அது அவன் செய்வதை விட பெரிய அநியாயம்.


அவன் அநியாயத்தை எதிர்த்து போராடியவனாக ஆக மாட்டான். எல்லாருக்கும் சரியாகக் கொடு என்று போரிட வேண்டும். இதற்கு வாள் ஏந்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களை ஒன்று திரட்டி அந்த மக்களை வைத்தே அவர்களது உரிமையை பெற்றுக் கொடுக்கலாம். ஆக உலகில் அநியாயத்தை எதிர்த்து போரிடுவதற்கெல்லாம் வாளை ஏந்திக் கொண்டு அலைய வேண்டிய அவசியம் இல்லை. 


விசுவாசம் கொண்டவர்கள் என்று சொன்னால் இறைவனுடைய வழியிலே அவர்கள் போரிடுவார்கள் என்ற கருத்தில் 4:76ஆவது வசனம் உள்ளது. (ஈமான் எனும்) நம்பிக்கை கொண்டோர் என்று சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் (அல்லாஹ்வுடைய பாதையிலே) இறைவனுடைய வழியிலே போரிடுவார்கள் என்று உள்ளது. இது என்ன போர்



போர் என்று சொன்னால் போர் முனைக்குச் சென்று அந்தக் காலத்தில் வாள் எடுத்து வெட்டுவது. இந்தக் காலத்தில் துப்பாக்கிகளால் சுடுவது பீரங்கி மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவது மட்டும் போர் அல்ல. அநியாயத்தை தட்டி கேட்பது அனைத்தும் போர்தான். போரில் இறந்து விடக் கூடிய ஒருவன் இருக்கிறானே அவன் உயிர் தியாகியாக இருக்கிறான். இந்த உயிரிழப்பு எப்பொழுது ஏற்படும்? உயிரிழப்பு என்பதே ஆயுதமேந்தி போரிடும்பொழுதுதான் ஏற்படும். இது இறுதி நிலை. 



நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் பத்ருப் போர் எனப்படும் சம்பவத்துக்கு முன்பாக 8 சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. யாருமே சாகவில்லை. ஒரே ஒருவர் மட்டும்தான் இறந்து விடுகிறார். இது பற்றிய விபரத்தை பின்னர் பார்ப்போம். ஆக 8 சம்பவங்களிலுமாக சேர்த்து ஒரே ஒருவர் மட்டும்தான் இறப்புக்குள்ளாகிறார்.


இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் 19. கலந்து கொள்ளாத போர்கள் 38 ஆக மொத்தம் 57 போர்கள் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்திருக்கிறது. இந்த 57 போர்களில் ஆயிரம் பேர் கூட சாகவில்லை. இத்தனை போர்கள் நடந்தும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றனவே ஏன்? வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அடுத்தவர்கள் சொல்லி விட்டார்கள். வரலாற்றில் பதிவு செய்து வைத்து விட்டார்கள் என்பதற்காக இஸ்லாமிய போர்கள் என்று யாராவது மதச் சாயம் பூசினால் விபரங்களை விளங்கியுள்ள முஸ்லிம்கள் அதை மறுக்க வேண்டும். இஸ்லாம் என்றாலே போர் என்ற இந்த கருத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இஸ்லாமிய போர் என்று ஒரு போர் கிடையாது. இவை யாவும் அறப்போர்கள். இவையெல்லாம் தற்காப்பு போர்கள். 



இந்து சமுதாய மக்கள் செய்த போர்களை இந்து மதப் போர் என்று மதச் சாயம் பூசி சொல்வதில்லை. கிறிஸ்துவ சமுதாய மக்கள் செய்த போர்களை கிறிஸ்துவ போர்கள் என்று மதச் சாயம் பூசி சொல்வதில்லை. 

ஆகவே ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த போர்களுக்கு மட்டும் இஸ்லாமிய போர்கள் என்று யாராவது மதச் சாயம் பூசினால் உடனே நிராகரித்து விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ளவற்றை மறு பதிப்புகளில் மாற்றி அமைப்பதற்கான முழு முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.

அல்லாஹ் திரு மறையில் சொல்லிக் காட்டுகிறான் (4:76) ”அல்லதீன ஆமனுா யுகாதிலுான பீ ஸபீலில்லாஹ் நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்

”வல்லதீன கபரூ யுகாதிலுான பீ ஸபீலித் தாகூத்” நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுகின்றனர்.

அல்லாஹ் உடைய பாதையில் யார் அநியாயத்தை எதிர்த்து போராடுகின்றார்களோ அவர்கள் விசுவாசிகளாக இருக்கின்றார்கள். யார் ஷைத்தான் உடைய வழியில் போரிடக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் நிராகரிப்பவர்கள் அதாவது காபிர்கள்.

உலகத்திலே நன்மைக்காக. பிறருடைய நலனுக்காக. நம்முடைய உரிமையை பெறுவதற்காக. நாம் போராடக் கூடிய எல்லா போராட்டங்களும். வாள் எடுத்து போராடினாலும். வாயால் போராடினாலும். அந்த அந்த இடத்திற்கு தக்கவாறு காலத்திற்கு தக்கவாறு எப்படி போராடினாலும். இவை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் போராடக் கூடிய போராட்டமாக போரிடும் போராக இருக்கின்றது.

எவை எல்லாம் இறைவனுக்கு விரும்பம் இல்லாத இறைத் துாதர் காட்டாத வழியில் போரிடும் போராக, போராடும் போராட்டமாக  இருக்கின்றனவோ அவை எல்லாம் ஷைத்தானுடைய பாதையாக இருக்கின்றது.

யார் ஷைத்தானுடைய தோழர்களாக, ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கிறார்களோ அவர்களை எதிர்த்து போரிடுங்கள். முஸ்லிம்களை எதிர்த்து போரிடாதீர்கள். இது தான் இஸ்லாத்தின் கட்டளை.

இப்பொழுது யாரும் யாருமாக போரிட்டுக் கொண்டிருக்கிறோம். பெரிய பெரிய இழப்புகளெல்லாம் யாரும் யாரும் மோதிக் கொண்டபொழுது ஏற்பட்டது?

தொடரும் இன்ஷா அல்லாஹ்  

நன்றி மக்கள் உரிமை

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.