பி.ஜே.யின் குடும்ப சொத்துதான் த.த.ஜ.

                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.        26.04.2005

கண்ணியத்திற்குரிய கேப்டன் ஷா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எத்தர்களின் செப்படி  வித்தை என்ற தலைப்பிலான தங்களது ஆக்கம் http://www.pjvstmmk.com  என்ற சைட்டில் கண்டேன். 

ஏகத்துவம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் ஏமாத்து இதழில் ஏடாகூடமாக எழுதியவருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தீர்கள் நன்றாக இருந்தது. அதன் முடிவுரை மட்டும் தவறாக விளங்கி எழுதி உள்ளீர்கள். 

தவறை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பிரபல டிரஸ்டு மோசடியாளரும் தவ்ஹீது வியாபாரியுமான பி.ஜே. மாதிரி பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிதற்றக் கூடியவராக இருந்தால் பி.ஜே.யுடன் வெளியேறி இருப்பீர்கள். த.த.ஜ.வின் தலைமைப்; பொறுப்பாளர்களில்  ஒருவராகவும் அல்லவா ஆகி இருப்பீர்கள்.   
             
பி.ஜே. செய்து வந்த சதி திட்டம்.

ஜமாஅத்துத் தவ்ஹீது என்பது நீங்கள் நினைத்துள்ள மாதிரி த.த.ஜ. அல்ல. அது வெளிநாட்டில் உள்ள ஒரு அமைப்பு. பி.ஜே.யின் வார்த்தைப்படி வெளிநாட்டு நிறுவனம். 

1985லிருந்து அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் ரகசிய கூலியாக இருந்து வருபவர்தான் பி.ஜே. 1985 என்ற உடன் வரலாறு தெரிந்தவர்களின் ஞாபத்திற்கு வருவது இஸ்லாமிய இளைஞர் இயக்கம்தான். 

அந்த இ.இ.இயக்கம் பிறகு இஸ்லாமிய எழுச்சி மையம் (ஐ.ஏ.ஸி) என்றானது. ஐ.ஏ.ஸி. என்றதும் பெரும்பாலானவர்களுக்கு துபையும் அந்நஜாத்தும் நினைவுக்கு வந்து விடும். 

அந்நஜாத்தை துவங்கிய அந்த ஐ.ஏ.ஸி.தான் 2002ல் பி.ஜே.யின் விருப்பப்படி வரலாறு இல்லாதவர்களைக் கொண்டு ஜே.டி.யாக மாற்றப்பட்டது. அல் முபீன் என்று வந்ததை இன்று ஏடாகூடமாக எழுதும் ஏகத்துவம் என்று மாற்றினார்கள் அல்லவா. அப்போதுதான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐ.ஏ.ஸி. என்பது ஜே.டி.யாக மாற்றப்பட்டது. அதாவது 14 ஆண்டு காலமாக பி.ஜே. செய்து வந்த சதி திட்டம் 2002ல் அவருக்கு கை கூடியது.

அந்நஜாத்தில் ஆசிரியராக வேலை செய்ய  1000 ரூபாய் சம்பளம்.

த.மு.மு.க.வை அழிப்பதில் அபுஜஹ்லைவிட மோசமாக இருப்பேன் என்று கூறியவர் இப்பொழுது அவ்வாறே  இருந்து வருவதை அறிவீர்கள். 

அதுபோல் 1988லிருந்து ஐ.ஏ.ஸி.யை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐ.ஏ.ஸி. என்பது இருக்குமானால் இவர் அந்நஜாத்தில் ஆசிரியராக வேலை செய்ய அதுவும் மாதத்தில் 20 நாள் மட்டும் வேலை செய்ய 1000 ரூபாய் சம்பளம் என எழுத்து மூலமாக எழுதப்பட்ட வரலாறு இருந்து வரும். 

அந்நஜாத்தில் 750 ரூபாய்க்கு துணை ஆசிரியராக வேலை செய்ய ஒப்புக் கொண்ட ஷம்சுல்லுஹாவுக்கு வண்டலூர் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் 1000 ரூபாய் சம்பளம் என்றதும் அந்நஜாத்தை விட்டு வெளியேறிவிட்ட வரலாறும் இருந்து வரும். 

லுஹாவைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்பட மாட்டார். 1000 ரூபாய் வேலைக்குச் சேர்ந்தவர் ஆசிரியர் பணிக்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை வாங்குவதாகவும் இல்லை என்று 1986 ஜுன் அந்நஜாத்தில் எழுதினார். 

அதற்குப் பிறகு புரட்சி மின்னல்|... கூலி வாங்கி விட்டு வாங்கவில்லை என்ற அவரது  பொய்யை நிலை நாட்ட ஐ.ஏ.ஸி. ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டுவிட்டார். 

பி.ஜே.க்கு கொடுக்கப்பட்ட ரகசிய கூலிகள்.

மேலப்பாளையம் கூட்டத்தில் பேசியதற்காக கொடுக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கில் எழுதி இருந்தது. அது நீக்கப்பட ஒரே வழி பழுலுல் இலாஹியை ஒளிக்க வேண்டும் என்பதே. 

1988லிருந்து ஐ.ஏ.ஸி.யை இல்லாமல் ஆக்கி விட அவர் செய்த முயற்சிகளில் அவருடனிருந்தே இதோ இதோ என தண்ணி காட்டி அவருக்குரிய ரகசிய கூலி கொடுத்தே ஏமாற்றி வந்தவன் நான். 

எனவே மேலப்பாளையம் கூட்டங்களில் பேசி விட்டு வாங்கிச் சென்ற பணங்களின் கணக்கு அழிக்கப்பட ஒரே வழி பழுலுல் இலாஹி ஒளிக்கப்பட வேண்டும் என காத்து இருந்தார். காய்கள் நகர்த்தினார் வெற்றி பெற்றார். 

பள்ளி பணம் ஒன்னரை லட்சத்தை காணவில்லை என்ற லுஹாவுக்கு மாதச் சம்பளம் போட்டு கழித்துவிட கள்ளக் கடிதம் கொடுத்தார். அதாவது 2002ல் எழுதி 2001 ஆண்டு தேதி போட்டுக் கொடுத்தார். 

அதற்குப் பிறகு மொட்டைக் கடித ஆசிரியர் குழுவைச் சார்ந்த செய்யது இபுறாஹீம் லுஹா விருப்பப்படியெல்லாம் பள்ளி கணக்குகளை திருத்தினார்;. அதாவது பி.ஜே.க்கு கொடுக்கப்பட்ட ரகசிய கூலிகள் கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டு விட்டன. 

போக வேண்டிய ரகசிய கூலி போய்க் கொண்டே இருக்கிறது.

இன்று எங்கு போய் பேசுவதாக இருந்தாலும் த.த.ஜ.என பெயர் மாற்று அப்பொழுதுதான் வருவேன் என்கிறார். முஸ்லிமீன்களையெல்லாம் தன் கூடைக்குள் பிடித்துப் போட்டு த.த.ஜ. என பெயர் வைத்து விட்டார். 

ஜே.டி.யை மட்டும் பெயர் மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார் என்றால் அந்த குளத்திலிருந்து அவருக்கு கிடைக்க வேண்டிய ரகசிய மீன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதாவது என்னைப் போல் யாரோ ஒருவர் மூலம் அவருக்கு போக வேண்டிய ரகசிய கூலி போய்க் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஜம்இய்யத்து தவ்ஹீது என்ற பெயருடன் அவர்களால் இருக்க முடிகிறது. 

தான் திருடி பிறரை நம்பாள் என்பது இதுதானோ.

ஏகத்துவம் இதழை ஜமாஅத்து தவ்ஹீது சார்பில் ஏ.எஸ். அலாவுதீன் சொந்தமாக வெளியிடுகிறார் என்பது 2005 ஜனவரியிலிருந்துதான் வருகிறது. அதுவரை பி.ஜே. மகன் ஜே.முஹம்மது பெயர்தான் இருந்தது. பி.ஜே. மகன் வேலை தேடி துபை வந்த பிறகுதான் இந்தப் பெயர் மாற்றம் நடந்துள்ளது. 

அதிலும் பாரபட்சம் உள்ளதைப் பாருங்கள். பி.ஜே. மகன் பெயர் இடம் பெற்ற காலம் வரை ஜே.முஹம்மது சொந்தமாக வெளியிடுகிறார் என்று மட்டும்தான் இருந்தது. ஏ.எஸ். அலாவுதீன் பெயர் போடும்போதுதான் ஜமாஅத்து தவ்ஹீது சார்பில் என்று சேர்த்து அச்சிடப்படுகிறது. 

த.மு.மு.க.வின் டிரஸ்டுகளையும்  உணர்வு பத்திரிக்கையையும் தான் மோசடி செய்தது போல் அலாவுதீன் மோசடி செய்து விடக் கூடாது என்பதற்காகவே ஜமாஅத்து தவ்ஹீது சார்பில் என்பதை போட்டுள்ளார். தான் திருடி பிறரை நம்பாள் என்பார்களே அது இதுதானோ. அமைப்புகளின் சொத்துக்களை பத்திரிக்கைகளை அபகரிப்பதற்குரிய தகுதியும் உரிமையும் பி.ஜே.க்கு மட்டும்தான் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் போலும்.     

தன் பெயரில் தனி சைட் எதற்கு?

தான் என்பதை நிலை நாட்டுவதற்காக  தவ்ஹீதை வியாபாரமாக்கி அந்த வியாபாரத்தை தன் குடும்பத்திற்கு மட்டுமானதாக ஆக்குவதற்காக தொலை தூர திட்டத்துடன்  என்ன என்னவெல்லாமோ செய்து வந்தவர்தான் பி.ஜே. என்பதை இப்பொழுதுதான் பலர் புரிந்து வருகிறார்கள். 

அந்த தொலை தூர திட்டப்படி பி.ஜே. இப்பொழுது தனது பெயரிலேயே  வெப் சைட் செட் பண்ணி கொண்டிருக்கிறார்.  இவர் கள்ள வெப் சைட் மன்னர் என்பதை மறைக்கத்தான் மற்றவர்களை கள்ள வெப்சைட் கதாநாயகர் என்று எழுதி வந்துள்ளார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. 

தான் ஒரு விளம்பர விரும்பி இல்லை. தனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பன போன்ற மாயை ஏற்படுத்தியவர் இப்பொழுது ஆன் லைண் பி.ஜே.காம் என்று வெப் சைட் செட் பண்ணிக் கொண்டிருக்கிறார். 

அவர் விளம்பர விரும்பி இல்லை சுயநலமி இல்லை என்பது உண்மையானால் அவர் இப்பொழுது இருக்கும் அமைப்பின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுதானே. அமைப்பின் பெயராலான வெப் சைட்டிலேயே இவரது ஆக்கங்கள் அனைத்தையும் இடம் பெறச் செய்ய வேண்டியதுதானே. தன் பெயரில் தனி சைட் எதற்கு? 

ஸைபுல்லாஹாஜா டம்மிதான் - தலையாட்டி பொம்மைதான்.

www.tmmkonline.org     இது த.மு.மு.க.வின் வெப் சைட். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. 7.வட மரைக்காயர் தெரு, சென்னை. 600001, இந்தியா என்ற முகவரியும் 914425247824  என்ற  போன் நம்பரும் ஜவாஹிருல்லாஹ் பெயரும் அவரது ஹாட் மெயில் அட்ரஸும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது மக்கள் அமைப்பு தனி நபர் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு இல்லை என்பதால் அட்மின் நேம்(நிர்வாகி பெயர்) என்ற இடத்தில் அமைப்பின் தலைவர் பெயர் உள்ளது. 

டி.என்.டி.ஜே. சைட்டுக்கு அமைப்பு பெயர் தமிழக முகவரி எதுவும் இல்லாமல் மொட்டையாக ரியாத் சவூதி அரேபியா ஷேக் அப்துல் காதர், போன் 00966-1-4080395 ஈமெயில் sheik_123@hotmail.com    என்றுதான் பதிந்து இருந்தார்கள். ஆன்லைண்பி.ஜே.காம் இதுவும் இப்படித்தான் பதியப்பட்டிருந்தது. 

இந்த உண்மையை நாம் வெளிப்படுத்தப் போகிறோம் என்றதும் திருத்தி உள்ளார்கள். இந்த புதிய திருத்தமும் த.த.ஜ.வின் ஒரிஜினல் தலைவர் மம்மி பி.ஜே.தான் என்பதையும் ஸைபுல்லாஹாஜா வெறும் டம்மிதான் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைதான் என்பதையும் த.த.ஜ. பி.ஜே.யின் குடும்ப சொத்துதான் என்பதையும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதில் கூட ஆர்க்கனேஷன் நேம் என்ற இடத்தில் த.த.ஜ. என குறிப்பிடப்படவில்லை.

எந்த அமைப்பாக இருந்தாலும் அது பி.ஜே.யின் குடும்ப சொத்து.

ஆன்லைன்பி.ஜே.காமுக்கு அட்மின் நேம் என்ற இடத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் என்று போட்டுள்ளார்கள். இது பி.ஜே.யின் குடும்ப சைட் எனவே அதில் அவர் பெயர் உள்ளதை ஆட்சேபிக்க முடியாது. த.த.ஜ. சைட்டுடைய பதிவில் அட்மின் நேம் என்ற இடத்தில் யார் பெயர் இருக்க வேண்டும் ஸைபுல்லாஹாஜாதான் உண்மையான தலைவர் என்றால் அதிகாரம் உள்ள தலைவர் என்றால் அவர் பெயர்தானே இருக்க வேண்டும். 

யார் பெயர் இருக்கிறது அதிலும் அட்மின் நேம் என்ற இடத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் என்றுதான் போட்டுள்ளார்கள். இரண்டுக்குமே 30 அரண்மணைக்காரத் தெரு என்ற முகவரியும் பி.ஜே.யின் புத்தக வியாபார கடையான மூன் பப்ளிகேஷனுடைய மெயில் அட்ரஸும் 914425262216 என்ற  போன்  நம்பரும்தான் கொடுத்துள்ளார்கள்.

எந்த அமைப்பாக இருந்தாலும் அது பி.ஜே.யின் குடும்ப சொத்து மாதிரி இயங்கும் வரைதான் அதை சரியான நிர்வாகம், ஜமாஅத், மக்கள் இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்.

இது வரலாறு.

மாத சம்பளம் வாங்கி விட்டு மே வருமானமும் பார்த்து விட்டு இல்லை என்கிறாரே என்று நிர்வாகி பேச ஆரம்பித்து விட்டால்,

குடும்பச் செலவுக்குத் தேவையானதையெல்லாம் கொடுத்து வருகிறோம் அவ்வப்போது ஏற்பட்ட கடன்களையும் கொடுத்து வந்திருக்கிறோம் இந்த ஜமாஅத்திலிருந்து எனக்கு எந்த லபாமும் இல்லை என பேசுகிறாரே இது சரியா என ஜமாஅத் அமீர் கேட்க ஆரம்பித்தால்,

தொடர் நிகழ்ச்சிகள் பேசியதற்காக 50ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து இருக்க ஒரு பைசா கூட வாங்கவில்லை என சத்தியம் செய்கிறாரே இது முறையா என்று மக்கள் இயக்க தலைவர் சொல்ல ஆரம்பித்தால்

அமானித மோசடி, சவூதி எஜமான விசுவாசம், தவ்ஹீது கொள்கை விரோதி என குற்றம்சாட்டி வெளியேறி விடுவார் இது வரலாறு.



நபிவழி நபிவழி என்று சொல்லிக் கொள்ளும் த.த.ஜ.வினர் கெட்ட  ஷய்த்தானின் பிடியில் சிக்கிக் கொண்டு அவன் வழியில்தான் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கெட்ட ஷய்த்தானின் பிடியிலிருந்து த.த.ஜ.வினர் விடுவிக்கப்பட அல்லாஹ்விடம் துஆச் செய்வோம். அன்புடன். கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி  

கேப்டன் ஷாஅவர்கள் எழுதியுள்ள எத்தர்களின் செப்படி  வித்தை என்ற  ஆக்கம் காண விரும்புவோர் கீழே கிளிக் செய்யவும்.

நமது அடுத்த வெளியீடு:
பி.ஜே.யின் தர்ஜுமாவில் தவறுகளா? 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.