"----அல் கத்தாபை" விஞ்சி நிற்கும் அண்ணன்.

கண்ணியத்திற்குரிய சவூதி வாழ் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்.. பத்தா - ரியாத் தமிழ் தஃவா கமிட்டி சார்பாக வெளியிடப்பட்டுள்ள பிரச்சனைக்கான கேள்விகளும் உண்மை விளக்கமும் என்ற தலைப்பில் யு.ஏ.இ.யில் உள்ளவர்களுக்காக பி.ஜே. பேசியுள்ள சி.டி.க்களை அனுப்பி இருந்தீர்கள். சவூதியில் உள்ள நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து எனக்கு அந்த சி.டி.க்களை அனுப்பியதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் தஃவா கமிட்டி எனும் பெயரால் உள்ளவர்களால் வெளியிடப்பட்டுள்ள அந்த சி.டி.க்களில் என்ன தஃவா இருக்கிறது? வெளியிடப்பட்டுள்ளதோ தஃவா கமிட்டி சார்பாக அதில் உள்ள விஷயங்களோ, தான் வழி தவறியதோடு மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தையும் வழி கெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் தன்னை புனிதப்படுத்தக் கூடியவைகளாகவே உள்ளன. தஃவா என்று சொல்வதற்கு எதுவம் அதில் இல்லை. தமிழ் தஃவா சென்டர் என பெயர் வைத்துள்ள இவர்கள் பற்றி சவூதியில் உள்ள சகோதரர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டு எழுதிய ஒரு விமர்சனத்தைத்தான் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த சி.டி.க்கள் உண்மைப்படுத்தியுள்ளன.

சவூதியில் உள்ள டி.என்.டி.ஜே.காரர்கள் கேட்கிறார்கள்.

அந்த சி.டி.க்களை பார்த்து விட்டு உங்களில் பலர் கேட்டுள்ள கேள்விகளில் முக்கியமானது. 1. தான் சொன்னவைகளெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறிய பி.ஜே. அல்லாஹ்வின் மீது சத்தியமும் செய்துள்ளாரே. ஓவ்வொரு சி.டி.யின் ஆரம்பத்திலும் முடிவிலும் பி.ஜே.யின் அந்த சத்தியத்தை இடம் பெறச் செய்துள்ளனரே. இதற்குப் பிறகுமா அவர் சொல்வதை நம்பக் கூடாது என்கிறீர்கள். 2. தன் மீது குற்றச் சாட்டுக் கூறுபவர்கள் பொது மக்கள் மத்தியில் நேருக்கு நேர் கூற வேண்டும். அதற்கு ஆகும் செலவை தானே வசூலித்துக் கொள்வதாக அந்த சி.டி.க்களில் பி.ஜே. குறிப்பிட்டுள்ளார். இதைச் சுட்டிக் காட்டி பி.ஜே.யின் இந்த சவாலை ஏற்று வர இதுவரை யாரும் தயார் இல்லை. பி.ஜே. பற்றி பழுலுல் இலாஹி கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பொது மக்கள் மத்தியில் நேருக்கு நேர் அவர் கூறுவாரா? கூறத் தயார் என்றால் அதற்கு ஆகும் செலவை பி.ஜே. தானே வசூலித்துக் கொண்டு பகிரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்வார். எனவே பழுலுல் இலாஹி தயாரா? என்று சவூதியில் உள்ள டி.என்.டி.ஜே.காரர்கள் கேட்கிறார்கள் எனவே நீங்கள் தயாரா? ஆகிய இரு கேள்விகள் மிக முக்கியமானவையாகும்.

பி.ஜே. பேசியுள்ள அந்த சி.டி.க்களையே மீண்டும் நிதானமாகப் பாருங்கள்.

இந்த கேள்விகளுக்கும் சி.டி.க்களில் அவர் பேசியுள்ளவற்றுக்கும் முன்பே நாம் பதில் கூறி விட்டோம். அவர் விட்ட சவால்படி நம்மை ஒரே மேடையில் சந்திக்க இயலாத அவர்தான் மக்களின் மறதிகளை பயன்படுத்தி கோயபல்ஸ் தத்துவத்தை நிலை நாட்டி வருகிறார். இருந்தாலும் மீண்டும் பதில் தருவோம் இன்ஷh அல்லாஹ். இந்த சி.டி.க்கள் பற்றி சுருக்கமாக சொல்வது என்றால் ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள சி.டி.க்கள் எப்படி அவரை பொய் சத்தியம் செய்பவர் என்று நிரூபித்ததோ அது போல் அல்ல, அதைவிட பன் மடங்கு கூடுதலான ஆதாரங்களுடன் இந்த சி.டி.க்கள் பொய் சத்தியம் செய்பவர் என்று நிரூபித்துள்ளன. இந்த சி.டி.க்களில் அவரது உரையின் ஆரம்பத்திலும் முடிவிலும் இடம் பெறச் செய்துள்ள சத்தியம் பற்றி இந்த வெளியீட்டில் பார்ப்போம். முதலில் அல்குர்ஆனின் 2:204,205,206 ஆகிய வசனங்களை படியங்கள். படித்து விட்டு பி.ஜே. சத்தியம் செய்வதைப் போட்டுப் பாருங்கள் விளக்கம் கிடைத்து விடும். இன்னும் கூடுதலான விளக்கம் பெற பி.ஜே. பேசியுள்ள அந்த சி.டி.க்களையே மீண்டும் நிதானமாகப் பாருங்கள்.

மக்களை கவரும் வகையில் பேசுகிறார்.

பி.ஜே.யும் கூட்டமைப்பு தலைமையினரும்தான் த.மு.மு.க.வின் செயல்பாடுகளுக்கு பிரச்சனையாக இருந்தார்கள். அதைத்தான் த.மு.மு.க. தலைமையினர் எழுதி கொடுத்தார்கள். அதைப் பார்த்த பி.ஜே. "என் மண்டையில் களி மண்ணா இருக்கிறது" என கேட்டுவிட்டு அதை நிராகரித்தார். அவர் விலகலை எப்படி எழுதினால் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையாக ஆக்க முடியும் என அவரபி உள்ளத்தில் நினைத்து வந்தாரோ அதையே பி.ஜே. எழுதினார். பி.ஜே. விருப்பப்படி பி.ஜே. கைப்பட எழுதியதையே பத்திரிக்கையிலும் பி.ஜே. வெளியிட்டார். அதை வைத்து தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையாக திசை திருப்பினார் பி.ஜே.யின் இந்த திசை திருப்பலைத்தான் மதுக்கூர் ஹாஜா அவர்கள் எடுத்துக் கூறி பி.ஜே. மீது குற்றம் சாட்டுகிறார். மக்களின் மறதியைப் பயன்படுத்தி மனோதத்துவ முறையில் திசை திருப்புவதில் வல்லவரான பி.ஜே. இந்தக் குற்றச் சாட்டையும் திசை திருப்புகிறார். அதற்கு தனது வாக்கு சாதுர்யத்தால் மக்களை கவரும் வகையில் பேசி திசை திருப்புகிறார். மக்களை கவரும் வகையில் பேசி திசை திருப்பும் அந்த பேச்சு பிரச்சனைக்கான கேள்விகளும் உண்மை விளக்கமும் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள முதல் சி.டி.யின் 20 வது நிமிடத்தில் உள்ளது.

இதுதான் பி.ஜே. சத்தியம் செய்து பேசியுள்ள பேச்சு.

பி.ஜே. என்ன பேசியுள்ளார் எப்படிப் பேசியுள்ளார். "அதாவது உணர்வில் வந்த அந்த அறிக்கையை நீங்கள் படிக்கவில்லை. படித்திருந்தால் கவனமாக படிக்கவில்லை. அதில் இருக்கிற வாசகமே எப்படி இருக்கிறது என்று கேட்டால், பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் சைபுல்லாஹ் ஹாஜா தலைமையிலான நல்ல கவனிக்கனும் எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் ஹாஜா தலைமையிலான அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் செயல்படுகளும்தான் இதுக்கு காரணம்ங்ற வாசகத்தை அவங்க திருத்தி அதை நான் ஏற்றுக் கொண்டு அதுலதான் நானும் கையெழுத்துப் போட்டிருக்கிறேன் விளங்குதா? உலகத்துலே உள்ள தவ்ஹீதை எல்லாம் எழுதி நான் கையெழுத்து போடல. சைபுல்லாஹ் ஹாஜா தலைமையில் என்று சொல்லித்தான் பேப்பரில் இருக்கிறது உணர்வு பேப்பர் பாத்தீங்களா?..." இதுதான் பி.ஜே. சத்தியம் செய்துள்ள அந்த சி.டி.யில் பேசியுள்ள பேச்சு.

பி.ஜே.அன்றே அட்ரஸ் இல்லாமல் ஆகி இருப்பார்.

பி.ஜே.யும் சைபுல்லாஹாஜா தலைமையிலான அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் செயல்படுகளும்தான் த.மு.மு.க.வின் செயல்பாடுகளுக்கு பிரச்சனை என்ற உண்மை முக்கிய அறிவிப்பில் எழுதப்படவில்லை. இந்த உண்மை எழுதப்பட்டிருந்தால், இது தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை இல்லை. இரண்டு அமைப்புகளுக்கிடையிலான நிர்வாகப் பிரச்சனை என்பது எல்லா மக்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும். பி.ஜே. அன்றே அட்ரஸ் இல்லாமல் ஆகி இருப்பார். சமுதாயத்தை கூறு போட்டே சுய லாபம் அடைந்து வந்த பி.ஜே. மக்களை ஏமாற்றுவதற்கு வசதியாக எழுதி வாங்க வேண்டும் என்ற முடிவுடன் வந்தார். தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை போல் எழுதி வாங்க வேண்டும் என்ற திட்டமுடன் வந்தார்.

சுதாரித்துக் கொண்டு வார்த்தைகளை விழுங்கி விடுகிறார்.

தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையாக சித்தரிக்க பி.ஜே. என்னத்த எழுத வேண்டும் என அவரது உள்ளத்துலே திட்டமிட்டு வந்தாரோ அதையே நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்து சட சட என எழுதினார். அதையே முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிட்டார். அதனால்தான் அந்த முக்கிய அறிவிப்பை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என எண்ணி ஏமாந்தார்கள். அவர் உள்ளத்துலே திட்டமிட்டு வந்தார் என்பதை நாமாக சொல்லவில்லை. இது பற்றி அவர் பேசும் போது அவரை அறியாமல் என்னத்த உள்ளத்துலே என்ற வார்த்தை அவரது வாயில் வந்து விடுகிறது. சட்டென சுதாரித்துக் கொண்டு வார்த்தைகளை விழுங்கி விடுகிறார். பிறகு ஷஷஅப்படி எழுதும்போது அல்லாஹ் அப்படி அமைச்சிருக்கிறான்' என்று சமாளிக்கிறார். இதை 20.04.2004 திருச்சி கூட்டத்தின் 2 வது சி.டி.யில் 3வது பைலின் 15 வது நிமிடத்தில் பார்க்கலாம்.

இதுதான் சைக்காலேஜ்.

பி.ஜே. தான் சொல்ல வரும் பொய்யை உண்மையாக்குவதிலும் உண்மையை தெரிந்தவர்களின் வாயை மனோதத்துமான முறையில் அடைத்து விடுவதிலும் வல்லவர். சைபுல்லாஹ் ஹாஜா தலைமையில் என்று சொல்லித்தான் பேப்பரில் இருக்கிறது உணர்வு பேப்பர் பாத்தீங்களா?..." என்ற பொய்யை ச(து)பையில் அரங்கேற்றும் முன் மக்களின் மறதியைப் பயன்படுத்தி மனோதத்துமான முறையில் பேசி அனைவர் வாயையும் அடைக்கிறார். எப்படிப் பேசி அடைக்கிறார். உணர்வில் வந்த அந்த அறிக்கையை நீங்கள் படிக்கவில்லை. படித்திருந்தால் கவனமாக படிக்கவில்லை என்று மதுக்கூர் ஹாஜா அவர்களை நோக்கி கூறுகிறார். இப்படி கூறியதும் மதுக்கூர் ஹாஜா என்ன நினைப்பார். இவ்வளவு பேர் மத்தியில் இப்படி உறுதியாகச் சொல்கிறாரே பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் ஹாஜா தலைமையிலான அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் செயல்படுகளும்தான் முட்டுக்கட்டை என்றுதான் உணர்வில் வந்துள்ளதோ. நாம்தான் கவனமாக படிக்கவில்லையோ என்றுதான் நினைத்திருப்பார். இதுதான் சைக்காலேஜ். நாமே சபையில் இருந்தாலும் அப்படித்தான் ஆகி விடுவோம்.

அவரது சத்தியத்தையும் அவரையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மனோதத்துவப்படிதான் ஒவ்வொருவரும் படித்திருந்தால் கவனமாக படிக்கவில்லை என்கிறாரே நாமும் கவனமாக படிக்கவில்லையோ என நினைத்து வாயடைத்து இருந்திருப்பார்கள். இவ்வளவு திறமையாக தெளிவான பொய்களை மக்களை கவரும் வகையில் பேசி சபைகளில் அரங்கேற்றி வருகிறார் அண்ணன் பி.ஜே. அவரது இந்தப் போக்கைப் பார்த்தால் "முஸைலமதுல் கத்தாபை" விஞ்சி விடுவாரே!! முக்கிய அறிவிப்பு, ஏப்ரல் 16-22, 2004 தேதிய "உணர்வு" இதழின் 3வது பக்கத்தில் உள்ளது. அதில் பி.ஜே. இப்பொழுது சத்தியம் செய்து சொல்லி உள்ள சைபுல்லாஹாஜா தலைமையிலான அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் செயல்படுகளும்தான் என்ற இந்த வாசகம் இல்லை. உங்களிடம் பத்திரிக்கை இருந்தால் எடுத்துப் பாருங்கள். இப்பொழுது அவரது சத்தியத்தையும் அவரையும் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள அல்குர்ஆனின் 2:204ஆவது வசனத்தை படியங்கள். அந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை மற்ற மற்ற தர்ஜுமாக்களிலிருந்து தந்தால் மாற்று கருத்துக்கள் கூற வாய்ப்புகள் உண்டு. எனவே பி.ஜே.யின் மொழி பெயர்ப்பிலிருந்தே தருகிறோம்.

இவன் கடுமையான வாதத் திறமை உள்ளவன்.

உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் உள்ளதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான். இவன் கடுமையான வாதத் திறமை உள்ளவன். ( பி.ஜே. தர்ஜுமா பக்கம் 75)
அன்புடன்: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.