தவ்ஹீதுவாதிகள் யார்? தவ்ஹீது வேடதாரிகள் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உள்ளர்த்தம் வெளி அர்த்தம் என பேசும் பிராடு.... என்ற முந்தைய வெளியீட்டை கண்டிருப்பீர்கள். அதில் குறிப்பிட்டிருந்த முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்கு சொந்தமானது என்பதற்கு பி.ஜே. கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என்பதை காண உள்ளோம். 

முன்னதாக துபையில் நடந்தவற்றில் ஒன்றையும் உங்கள் கவனத்திற்கு தருகிறோம். அந்நஜாத் அபு அப்துல்லாஹ் அவர்களிடம் துவங்கி த.மு.மு.க.விலிருந்து விலகி அ.த.ஜ.கூ. என போய் இப்பொழுது த.த.ஜ. என்று நிற்கிறீர்களே! இதிலிருந்து விலகி இனி எங்கே போய் நிற்பீர்கள் என்றும் துபையில் கேட்டார்கள். 

இதுக்கு மேல் கேட்காதீர்கள் என்று கண்கலங்கினார் பி.ஜே. எந்தக் கேள்விக்கும் சரியான நேரடியான பதிலைச் சொல்ல முடியாமல் சுற்றி வளைத்து திசை திருப்பி ஏமாற்ற முயன்று தோற்றுப் போனார் பி.ஜே. 


இதற்குப் பிறகுதான் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு என அழைக்கும்போதே யாரை அழைத்தால் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள், யாருக்கு உண்மை விஷயங்கள் தெரியாது என சலக்ட் பண்ணி அழைக்க முடிவு செய்தார்கள். பிறகு அந்த மாதிரி ஆட்களையே தேடிப் பிடித்து அழைத்தார்கள். 

உதாரணத்திற்கு அதிராம்பட்டிணம் ஜமாஅத் கூட்டம். நடை பெற்றதாக உணர்வில் எழுதி இருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு அதிரை அப்துல்கபூர், அப்துல்ஹாதி போன்ற பழைய ஆட்களை விபரம் தெரிந்தவர்களை அழைக்கவில்லை. காரணம் துபை மதுக்கூர்வாசிகளிடம் பட்ட சூடு.

டிரஸ்டு மோசடியாளர், பொய்யர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அமானித மோசடியாளர் பி.ஜே. முஸ்லிம் டிரஸ்டு பற்றி பொய்யான காரணம் கூறி மதுக்கூர்வாசிகளிடம் மாட்டிக் கொண்டாரல்லவா. அதற்குப் பிறகு தனது ரசிக பெருமக்களை பார்வைக் குறுவிகளாக ஆக்கிக் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகளை அழைத்து விளக்கம் என்ற போர்வையில் எப்படியெல்லாமோ சுற்றி வளைத்து ஏமாற்ற முயன்றுள்ளார். 

வாதத் திறமையுடன் கூடிய வசீகர பேச்சுத் திறமையை பயன்படுத்தி ஏமாற்றும் நோக்குடன் பி.ஜே. பேசிய அந்த பேச்சே பி.ஜே. டிரஸ்டு மோசடியாளர், பொய்யர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 

அபுதாபி முதல் சி.டி.யின் 8வது நிமிடம் 27வது வினாடியில் சொல்கிறார் த.மு.மு.வை நாமெல்லாம் சேர்ந்து ஆரம்பிக்கும்போது அது சமுதாய பணி செய்வதோட மறைமுகமாக தவ்ஹீது பிரச்சாரத்திற்கும் உறு துணையாக இருக்கும். 

தவ்ஹீது சகோதரர்கள் பாதிக்கப்படும்பொழுது அது களத்தில் இறங்கி குரல் கொடுக்கும் அப்படீங்கிற வாக்குறுதியோடுதான் அந்த இயக்கத்தை உருவாக்கினோம். அப்போது தவ்ஹீது சகோதரர்கள் மாத்திரம் இருந்ததாலே அப்போது அதை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார். இது பச்சைப் பொய் என்பதை அபுதாபி சி.டி.யின் 2 ஆம் பாகத்தில் அவரே நிரூபித்துள்ளார்.

அப்படியானால் என்ன அர்த்தம்?

2வது சி.டி.யின் 14நிமிடம் 42வினாடியில் நாகூர் கலவரத்திற்குப் பிறகு பாக்கர், அலாவுதீன், பி.ஜே. ஆகிய 3 பேரை கவர்மெண்ட் குறி வைத்து விட்டதாக சொல்கிறார். பாக்கர் தடாவில் போட்ட பிறகு தவ்ஹீது அல்லாத எல்லாருடைய ஒத்துழைப்பை கேட்டதாகவும் எல்லாரும் சேர்ந்து குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க. பெயரில் செயல்பட துவங்கியதாகவும் 16வது நிமிடம் 37வது நொடியில் சொல்லி உள்ளார். 

இதன் மூலம் முதல் சி.டி.யில் டிரஸ்டு மோசடியை நியாயப்படுத்த பி.ஜே. சொன்னது பொய் என்பதை 2வது சி.டி.யில் அந்த பி.ஜே.யே நிரூபித்து விட்டார். இதில் டிரஸ்டு சம்பந்தமானதாக எழுதினாலும் இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது. 

9நிமிடம் 11வினாடியில் முஸ்லிம் பேரவை ஆரம்பித்தோம். ஆரம்பித்ததும் பார்சல் குண்டு வெடிப்பு நடக்கிறது. எதற்காக ஆரம்பித்தோமோ அதற்கு வேலை வருகிறது பாருங்க  என்கிறார். 

தொடையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியுள்ளார். அதுதானே அர்த்தம். புத்தகம் என்று எண்ணி அந்த அம்மா திறக்கும்போது அது வெடித்து விட்டது என்றும் கூறுகிறார். 

பார்சல் குண்டு என்றுதான் எல்லாரும் கேள்விபட்டுள்ளார்கள். பார்சலை பிரிக்கும்போது குண்டு வெடித்து விட்டது என்றுதான் பத்திரிக்கையிலும் எழுதினார்கள். ஆனால் இந்த அந்தரங்க அமீர் பி.ஜே. புத்தகம் என்று குறிப்பிட்டு கூறி அனுபவசாலி போல் கனமான புத்தகத்தை திறந்தும் காட்டுகிறார். அப்படியானால் என்ன அர்த்தம்?

புரிந்து விட்டடீர்களா? புரிந்து விட்டடீர்களா?

த.மு.மு.க. மூலம் நடந்த ஜனநாயக போராட்டம் பற்றி குறிப்பிட்டு விட்டு 20 வது நிமிடம் 59வது வினாடியில் அது வெற்றி பெற்ற பிறகு இது நல்ல வழியாக இருக்கே இப்படி போயிடலாமேன்னு அப்பதான் (புத்தி) வருது  என்கிறார். 

அப்ப அது வரை அவர் எந்த வழியில் இருந்தார் புரிந்து விட்டீர்களா? அதற்கு முன்பு வரை அவர் இருந்தது நல்ல வழியாக இருக்கவில்லை. நல்ல வழிக்கு எதிரானது கெட்ட வழிதானே. கெட்ட தவறான வழியில் இருந்துள்ளார். அந்த கெட்ட வழியில் அவருடன்  அலாவுதீன், எம்.எஸ். சுலைமான், லுஹா போன்றவர்கள்  இருந்துள்ளார்கள். 

குணங்குடி ஹனீபா, ஜவாஹிருல்லாஹ்  போன்றவர்கள் பி.ஜே. தவறான வழியில் இருக்கும்போது அவருடன் இருக்கவில்லை. ஜனநாயக வழி போராட்டம் என்ற நல்ல வழிக்கு பி.ஜே. திருந்தி வந்த பிறகே அவருடன் சேர்ந்து செயல்பட்டுள்ளார்கள். ஆகிய உண்மைகளும் பி.ஜே.யின் இந்த வாக்கு மூலத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. புரிந்து விட்டீர்களா? 

அதனால்தான் தவ்ஹீது அமைப்புகளில் ஒன்றான ஜாக்குக்கு எதிராக பி.ஜே. அவதூறு வீடியோ வெளியிடும்பொழுது ஏற்கனவே கெட்ட வழியில் பி.ஜே.க்கு துணை நின்ற  அலாவுதீன், அன்வர்பாஷா, லுஹா,எம்.எஸ். ஸுலைமான் போன்றவர்களும் சேர்ந்து கொண்டு அவதூறு பேசும் கெட்ட செயலைச் செய்துள்ளார்கள். 

தவ்ஹீதைச் சொல்லி பிழைப்பு நடத்தாத குணங்குடி ஹனீபா, ஜவாஹிருல்லாஹ்  போன்றவர்கள் அவதூறு பேசும் கெட்ட செயலைச் செய்யவில்லை. தவ்ஹீது அமைப்புக்கு எதிரான அவதூறு வீடியோவில் பேசாத ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் உண்மையான முஸ்லிம்களா? தவ்ஹீது அமைப்பு பற்றி அவதூறுகளைப் பேசி கேவலப்படுத்தி கேஸட் வெளியிட்ட வியாபாரி பி.ஜே.யின் அணியினரா? தவ்ஹீதுவாதிகள் யார்? தவ்ஹீது வேடதாரிகள் யார்? புரிந்து விட்டீர்களா?

முஸ்லிம் டிரஸ்டு என பெயர் வர உண்மைக் காரணம்.

முஸ்லிம் டிரஸ்டு த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டது என்றால் த.மு.மு.க. டிரஸ்டு என்றுதான் துவங்கி இருக்க வேண்டும். த.மு.மு.க.வின் பணிக்காக அதன் செலவினங்களுக்காக உருவாக்கப்படவில்லை. அதனால்தான் முஸ்லிம் டிரஸ்டு என்று பெயர் வைக்கப்பட்டது என்பன போன்ற பொய்க் காரணங்களைச் சொல்லி பி.ஜே. துபையில் சொதப்பினார் என்பதை முந்தைய இதழில் பார்த்தோம். 

உடனே மதுக்கூர் ஹாஜா, ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டால் அதன் சொத்துக்களும் முடக்கப்பட்டு விடும். த.மு.மு.க. செயல்பட துவங்கிய நாளிலிருந்து அது தடை செய்யப்பட்டு விடும் என்ற பரபரப்பு இருந்ததால் அவ்வாறு ஆகி விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம் டிரஸ்டு என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த உண்மை எனக்குத் தெரியும் என்பதால் இதை இங்கு பதிவு செய்கிறேன் என்று முஸ்லிம் டிரஸ்டு என பெயர் வர உண்மைக் காரணம் என்ன என்பதை சொல்லி விட்டு பி.ஜே. கையெழுத்துடன் கூடிய கடிதத்தையும் படித்துக் காட்டினார்.


கலிமாச் சொன்ன முஸ்லிம்களின் கழகத்தைத்தான் குறிக்கிறது.

பி.ஜே. கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்கள். த.மு.மு.க.வுக்கு மாதம்தோறும் எவ்வளவு செலவு ஆகிக் கொண்டிருக்கிறது. இது தவிர எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு செலவு ஆகும் என்ற விபரம் எழுதி உள்ளார்கள். 

இதற்குப் பிறகுதான் இந்தச் செலவை சரி கட்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்துவதற்காக சவூதியில் வாழும் சகோதரர்கள் ஒரு கோடி நிதி திரட்டிடும் ஒரு திட்டம் தீட்டி உள்ளார்கள் என்று எழுதி உள்ளார்கள். 

இந்தச் செலவை சரி கட்ட என்ற வாசகத்தின் தொடரே, தனது பிழைப்புக்காக பிளவுகளை உண்டு பண்ணி அவ்வப்போது தவ்ஹீது வியாபாரி பி.ஜே. துவங்கும் புதுப் புது அமைப்புகளைக் குறிக்காது. கலிமாச் சொன்ன ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பேரியக்கமான த.மு.மு.கவைத்தான் குறிக்கும் என்ற விளக்கத்தைத் தருகிறது. 

பிறகு இடம் பற்றிய விபரங்களையும் விலையையும் எவ்வளவு வாடகை வரும் என்ற விபரத்தையும்; எழுதியுள்ளார்கள். அதன் தொடரிலேயே இது தவிர இன்னொரு இடத்தையும் கழகத்தின் அலுவலகத்திற்கு சுமார் 40 இலட்சம் அளவில் பார்த்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதுவும் டிரஸ்டு மோசடியாளர் பி.ஜே. உண்டு பண்ணி வரும் கலகங்களைக் குறிக்கவில்லை. கலிமாச் சொன்ன முஸ்லிம்களின் கழகத்தைத்தான் குறிக்கிறது.

த.மு.மு.க.வின் சொத்துக்களை பராமரிக்கத்தான் முஸ்லிம் டிரஸ்ட்

(த.மு.மு.க.வின்) இந்தக் கட்டிடங்கள் மற்றும் அவற்றிலிருந்து வரும் வருமானங்களை பராமரிக்க முஸ்லிம் டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது. த.மு.மு.க.வின் சொத்துக்களை பராமரிக்கத்தான் முஸ்லிம் டிரஸ்ட் என்ற விளக்கம் இதில் உள்ளது. 

இன்னும் முத்தாய்ப்பாக உள்ள வாசகத்தைப் பாருங்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவை அவசியம் தேவை என்று கருதும் அன்பர்கள் மிக தாராளமான நிதியுதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றும் எழுதியுள்ளார்கள். 

சேவை அவசியம் தேவை என்ற வாசகம் தனது சுயநலத்துக்காக சமுதாயத்தை துண்டு துண்டாக கூறு போடும் பி.ஜே.யின் சித்து வேலைகளை திருவிளையாடல்களை குறிக்கவில்லை. கலிமாச் சொன்னவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்களை நபி வழியில் ஒன்றுபடுத்தும் த.மு.மு.க.வின் சேவையைத்தான் குறிக்கிறது. 

இதற்கு கீழேதான் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். எந்த செயல்பாடும் இல்லாமல் அமைப்பாளர் என்ற பதவி வைத்துக் கொண்டு தன்னை பாதுகாத்து வந்த பி.ஜே.யும் கையெழுத்திட்டுள்ளார்.   இந்த கடிதக் காப்பி இணைக்கபட்டு  உள்ளது.

ஹிதாயத்துக்காக துஆச் செய்வோமாக.

த.மு.மு.க. என்பது லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமாச் சொன்ன முஸ்லிம்களின் அமைப்பு என்று அது துவங்கப்பட்ட காலம் முதல் மேடை தோறும் பேசி வந்தவர் பி.ஜே. 

அந்த பி.ஜே.யும் அவரை பின்பற்றிக் கொண்டிருப்பவர்களும் த.மு.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்திலிருந்தும் விலகி வெளியேறி விட்டோம் என்று கூறி வருகிறார்கள். 

அப்படியானால் என்ன அர்த்தம்? எனவே அவருக்கும் அவருடன் உள்ளவர்களின் ஹிதாயத்துக்காகவும் துஆச் செய்வோமாக. 

தவ்ஹீது வியாபாரியும் அமானித மோசடியாளருமான பி.ஜே. தனது டிரஸ்டு மோசடிகளை நியாயப்படுத்த வெளியிட்டுள்ள சி.டி.க்கள் பி.ஜே. பொய்யர் என்பதை இன்னும் எவ்வாறெல்லாம் நிரூபிக்கிறது என்பதை அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.

அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.